Posts

Showing posts from April, 2020

யாழ்ப்பாண மாட்டுச்சவாரியின் கதை

Image
(By த. சண்முகசுந்தரம்) சவாரி மாட்டைப் பராமரித்தல் ஒரு தனிக் கலை. அதற்கு உணவு ஊட்டுதல், தட்டிக் கொடுத்தல், கால் பிடித்தல் எல்லாம் தனிக்கலை. "மாட்டின் வெற்றி அதன் உணவில் ' என்பர். பனம் ஒலை வைத்தால் மாட்டின் கால் உழைவைக் கூட்டும் என் பது நம்பிக்கை. அரிசி, கடலை, கொம்புப் பயறு, உழுந்து, சிவப்புத் தவிடு, எள்ளுப்பிண்ணுக்கு என்பன முக்கியமான உணவுகள்.  சவாரிக்கு முதல் நாள் மாட்டின் ஏரியைத் தட்டி, உடலை உருவி, காலைத் தடவிவிடுவார்கள், சவாரி முடிந்ததும் துணியைச் சுடுநீரில் நனைத்து " ஒத்தணம் ' பிடிப்பர். பச்சைத் தேங்காய் மட்டையைச் சூடாக்கி உருவி விடுவர். சவாரியின் போது மாடுபட்ட அடிகாயத்தை ஆறவைக்க வேப்ப நெய், இருப்பை நெய், தேங்காய் நேய், கற்பூரம் என்பனவற்றைக் காய்ச்சிப் பூசுவர். துவரந்தடி அடிகாயம், குத்தூசிக்காயம் என்பனவற் நிற்குச் சிறப்பான கவனஞ் செலுத்தப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் மாட்டுச் சவாரி ஒட் டத்திடல் இருக்கும் கீரிமலை வீதி இறக்கம், அளவெட்டி வீதி, ஈவினை வெளி, கூத்தியவத்தை வெளி என்பன புகழ்பெற்ற போட்டி நிலையங்களுட் சில. யாழ்ப்பாணத்துக் கமக்காரர் மட்டும் சவாரி

யாழ்ப்பாண ராச்சியத்துக்கு ஒரு ராஜா

Image
(By நட்சத்திரன் செவ்விந்தியன்) ஒரு ராஜா சங்கிலியனின் முடிக்குரிய வாரிசு என்று இப்போது உரிமை கோருகிறார். 1964 இலங்கையில் பிறந்து நாவலப்பிட்டி, மொரட்டுவ, கொழும்பு பாடசாலைகளில் கற்று 1987 ஒல்லாந்துக்கு புலம்பெயர்ந்த Raja Remigius Kanagaraja. 6 நூற்றாண்டுக்குமுதல் போர்த்துக்கேயரால் தோற்கடிக்கப்பட்ட ஆரியச்சக்கரவர்த்திகளின் வம்சத்துக்கு இப்போது உரிமை கோருகிறார்.  தென்னாசியாவில் இருந்த சில அரச வம்சங்கள் இந்திய சுதந்திரத்துக்குப்பிறகு இந்திரா காந்தியால் செல்லாதவையாக்கப்பட்டன. ஈழத்தில் காலனியாதிக்க அரசுகளோடேயே அரசவம்சங்கள் அழிந்தன. சங்கிலியனின் உடன் குடும்ப உறுப்பினர்கள் சிலர் போர்த்துக்கலுக்கும் எடுத்துச்செல்லப்பட்டனர்.  இந்த ராஜா கனகராஜாவுக்கு யாழ்ப்பாண சீவியம் இல்லை. 23 வயதில் அவர் ஒல்லாந்துக்கு சாதாரண commoner போல போய் அகதி அந்தஸ்து கோரியிருக்கும் வாய்ப்புக்களே அதிகம். அவரது 20 களில் இவரது உயிருக்கு ஆபத்து இருந்ததாக இவர் கூறும் காரணங்களும் கவனமான ஆய்வுக்குரியது. 6 நூற்றாண்டுகளாக உரிமை கோரப்படாத ஒருமுடியை இப்போது கோருவதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆனால் ராஜா கனகராஜா சற்றும் மனந்தளரா