Posts

Showing posts from March, 2021

சர்மிளா சையித்: Me Too எதிர்ப்புரட்சிக்காரி

Image
  நட்சத்திரன் செவ்விந்தியன்   சர்மிளா சையித் தன் முகநூல்  பதிவில் புதிய சனநாயகக்கட்சி தன் உற்ப்பினரான மு.மயூரனை தற்காலிகமாக கட்சியிலின்று நீக்கியிருப்பதாக அறிவித்தமை பற்றி வெளியிட்ட பதிவு மிக்க சர்ச்சைக்குரியது.  7 பந்திகளைக்கொண்ட அப்பதிவில் 6 பந்திகளில் குறித்த ஒழுக்காற்று  நடவடிக்கை எடுத்த கட்சியை கண்டித்து குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சியை குறிவைத்து தாக்கிய அவரது முக்கியமான வசனங்கள் பின்வருவன.  1. "புதிய மார்க்சிச லெனினிசக் கட்சி உறுப்பினர் மு.மயூரன் பெண்களுடன் முறைகேடாக நடந்துகொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கள் கவனச் சிதறலாக மட்டுமே அமைந்துள்ளது." 2. "....குறிப்பிட்ட நபரைக் களையெடுத்துவிட்டால் இயக்கம்/ கட்சி தூய்மை பெற்றுவிடும் என்பதோ மிகவும் குறைபாடான, தூர சிந்தனையற்ற தீர்மானங்கள்." 3." இவரை நீக்கிவிட்டால் கட்சியின் மீதும் அதன் பொறிமுறைகளின் மீதும் மக்களுக்கு குறிப்பாகப் பெண்களுக்கு நம்பிக்கை வந்துவிடும் போன்று கட்டமைப்படும் விம்பங்கள் மருட்சியானது." 4. " பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராகத் தெளிவான, உடனடி நடவடிக்கைகள் தேவை. இந்த நடவடிக்கையை எடுப

தாவீதும் கோலியாத்தும்: அனோஜனின் கெற்றப்போல் நெற்றியடி

Image
            3 வயதில் தாவீது அனோஜன்                                யாழ் அரியாலை 1995 நட்சத்திரன் செவ்விந்தியன்                             (Cultural Editor/ இலக்கியப் புலனாய்வுப் பிரிவு)                     அனோஜன் பாலகிருஷ்ணன்(28) Post War யாழ்ப்பாணத்திலிருந்து  வந்த மிகச்சிறப்பான மிக அதிகமாக எழுதிக்கொண்டிருக்கிற இளம் எழுத்தாளர். சஞ்சிகையாசிரியர். சுயாதீனமான துணிகரமான விமர்சனங்களை வெளியிட்டு வரும் விமர்சகர். அவரது கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ளமுடியாத கோலியாத் ஷோபாசக்தி தனது Lobby Group/Public Relations ஏஜண்டுகளான நிர்மலா ராகவன் குடும்பத்தை பாவித்து அனோஜனை ஒரு ஜெயமோகனின் சீடராகவும் ஆதிக்க சாதிவெறியராகவும் பொய்ப் பிரச்சாரங்களை சோடித்து முன்னெடுத்து அனோஜனின் குரலை நசுக்க முயல்கிறார். அனோஜன் ராகவன்/ஷோபாசக்தி போல ஆதிக்க வெள்ளாள சாதியைச் சேர்ந்தவரல்லர்.  ராகவனும் நிர்மலாவும் தமது முறையே 28, 31 வயது வரையும் தாங்கள் இப்போது வலதுசாரி பாசிஸ்ட் என்று சொல்கிற பிரபாகரனின் தலமையை ஏற்று இயங்கியவர்கள். ராகவன் "பாசிஸ்ட்" பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராக இருந்து 1981ம் ஆண்டு தனது தலைவன் 

Me Too: ஈழப் பெண்டிர் புரட்சி

Image
  நட்சத்திரன் செவ்விந்தியன்                             பிரதம ஆசிரியர்/jaffnafashion.com   இலங்கையில் ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அதனுடைய ஆண் உறுப்பினர் ஒருவரை அவர் மீதான பாலியல் சம்பந்தமான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்தி வைத்துள்ளது. இது மிக முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்வு. இதனுடைய முக்கியத்துவத்தை இனிவரும் மாதங்களிலும் வருடங்களிலுமே புரிந்து கொள்ளமுடியும்.  மூன்றாம் உலக நாடான தென்னாசிய ஈழம் தென்னாசியாவில் ஒப்பீட்டு அடிப்படையில் பெண்ணுரிமைகளில் சற்று மேம்பட்ட நாடு. உலகில் முதல் முதலாக சனநாயக ரீதியில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பெண் அரசுத் தலைவர் ஈழப்பெண் சிறிமாவோ பண்டார நாயக்கதான். வட இந்தியாவில் ஐரோப்பிய காலனியாதிக்க காலத்திலும் பெண் உடன் கட்டையேறும் சட்டம் இருக்க ஈழ யாழ்ப்பாண தேசவழமைச் சட்டத்தில் கணவனை இழந்த பெண் மறு திருமணம் செய்யும் உரிமை சட்டமாக இருந்தது. கண்டிய சிங்கள சட்டத்தில் ஒரு சிங்களப்பெண் சகோதரர்களான இரு கணவர்களை திருமணம் செய்யும் உரிமை/சட்டம் இருந்தது. (பார்க்க Leonard W

அம்பிகை: ஈழத்து புஷ்பா (புருசன்)

Image
                     " ஆசை அறுபதுநாள்                                          மோகம் முப்பது நாள்"                                       - ஐம்பதில் அம்பிகை அன்ரி    நட்சத்திரன் செவ்விந்தியன்   (Editor in Chief/Jaffnafashion.com) அம்பிகை ஒரு களவாணிக்  குடும்பத்தில் அப்பனுக்குத் தப்பாமல் பிறந்த  மோசடிக்காரி. அம்பிகையின்  அப்பன் நாகேந்திரம் சீவரட்ணம் 1987 க்கு முதல் பப்புவா நியூகினி நாட்டில் இருந்து புலிகளுக்கு பணம் சேர்த்தவர். ஒஸ்றேலியாவுக்கும் வந்து புலிகளுக்காக பணம் சேர்த்தவர்.  1987ல் பப்புவா நியூகினி அரசு சீவரட்ணம் செய்த மோசடிக்காக அவரை அந்நாட்டிலிருந்து நாடு கடத்தியது. புலிகளுக்காக சேர்த்த பணத்தோடு சென்னைக்குப்போன சீவரட்ணம் புலிகளின் குறித்த பணத்தை பாவித்து லண்டனுக்கு முதலீட்டாளர் விசா எடுத்து வந்தார். உசாரான புலிகள் அவரின் சகோதரரான நாகேந்திரம் கருணாநிதியை 1990ல் திருகோணமலையில் கடத்திவைத்து தமக்குச்சேரவேண்டிய முழுப்பணத்தையும் மீட்டனர்.  சீவரட்ணம் பக்கா மோசடிக்கார கிரிமினல். இங்கிலாந்தில் ரூற்றிங் முத்துமாரியம்மன் கோவிலை சிவயோகம் அறக்கட்டளை என்ற பெயரில் ஆரம்பித்தார். அவர் ந

வங்கம் மலிகின்ற மாதோட்டத்தில் கத்தோலிக்க தலிபான்கள்

Image
  நட்சத்திரன்செவ்விந்தியன்   ஈழம் ஒரு பௌத்த மத மேலாதிக்க நாடுதான். இந்த பௌத்த மேலாதிக்கம் ஸ்ரீலங்கா சனநாயக சோசலிசக் குடியரசுக்கு இடைஞ்சலாக இருப்பது உலகம் அறிந்தது. ஈழப்போர்களின் காரணமே இந்த சிங்கள பௌத்த மேலாதிக்கம் தான். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்  இதே தினத்தில் மன்னாரில் திருக்கேதீஸ்வர ஆலய வளைவு கத்தோலிக்க  மேலாதிக்கம் மிக்க  மன்னார் மாவட்டத்தின்  அடிப்படைவாத கத்தோலிக்க பாதிரிகள் தூண்டுதலால் சட்ட விரோதமாக அழிக்கப்பட்டது. மன்னார் குரு முதல்வர் விக்டர் சோசை இவ்வளைவு உடைப்புக்கு பூரண ஆதரவு வழங்கி இதற்காக மன்னிப்பு கேட்க மறுத்தார்.மன்னார் ஆயர் பெர்ணாண்டோ மௌனமாக இருந்தார்.  யாழ் ஆயர் இதற்காக மன்னிப்பு கேட்டதையும் விக்டர் சோசை கண்டித்தார்.  பாரம்பரிய ஈழ ஊடகங்களில் இவ்விடயம் சம்பந்தமான முறையான ஆய்வுகள் வெளிவரவில்லை.               Mastermind: Victor Sosai Anthony 1990ல் மன்னாரிலுள்ள முஸ்லீம்கள் புலிகளால் கலைக்கப்பட்ட பின்னர்தான் மன்னாரில் அடிப்படைவாத கத்தோலிக்க அடாவடித்தனங்கள் அதிகரித்தது. புலிகளுக்கும் தமிழ் கத்தோலிக்க பாதிரிகளுக்குமிடையில் ஒரு எழுதாத பரஸ்பர உடன்படிக்கையும் இருந்தது.  பு