Posts

Showing posts from November, 2021

முள்ளும் மலரும்(சிறுகதை)

Image
  - நட்சத்திரன் செவ்விந்தியன் “துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று” - குறள் 586(ஒற்றாடல்) 1. ஒற்றன் பிரிகேடியர் கரும்புலி மொஹமட் ஒரு 19 வயதுக் கரும்புலி ஒற்றன் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் பொட்டம்மானின் தொடர்பறுபட்டுக் கொழும்பில் மாட்டிக்கொண்டான். கொழும்பின் மிகச்செல்வந்தக் குறிச்சியான கறுவாக்காட்டில் அவன் மொஹமட் என்ற மாலைதீவு முஸ்லீமின் பெயரோடு, மாலைதீவு  கள்ளப்பாஸ்போட்டில் ஒரு சர்வதேச மாணவனாகக் கொழும்புப் பல்கலைக்கழகத்தில்  படித்துக்கொண்டிருந்தான். அம்மானும் தலைவரும் செத்ததையோ யுத்தம் முடிந்ததையோ அவன் நம்பவேயில்லை. பொட்டம்மான் அவனிடம் 2008இல் கொடுத்தனுப்பிய ஐந்து  லட்சம் அமெரிக்க டொலர்களில் அவனது செலவுக்குப் போனதைவிட மிகுதியைக் காசாகவே தனது கறுவாக்காட்டு அறையில் ஒழித்துவைத்திருந்தான்.  பொட்டம்மான்  உருவாக்கிய மிகச்சிறந்த ஒற்றன்/கரும்புலி மொஹமட்தான். மொஹமட்(இயக்கப்பெயர்) 1990 மே 19 அதிகாலை 3.19இல் இரண்டு புலிப் பெற்றோருக்குப் பிறந்தவன். போராளிகளான இருவரும் காதலித்துத் திருமணம் செய்தவர்கள். இருவரும் கிளிநொச்சி மலையக வம்சாவளியைச் சேர்ந்தவர

பத்மநாபா 70 Not Out

Image
  " நாங்கள் எழுபது ஆண்டுகள் வாழக்கூடும். பலமுடையவர்களாயின் எண்பது ஆண்டுகள் வாழலாம். எங்கள் வாழ்க்கை கடும் உழைப்பினாலும், நோயினாலும் நிரம்பியவை. திடீரென, எங்கள் வாழ்க்கை முடிவுறும். நாங்கள் பறந்து மறைவோம்"            - சங்கீதம் 90:10. வேதாகமம் 38 வயதில் கோடம்பாக்கத்தில் புலிகளால் கொல்லப்பட்ட EPRLF இயக்கத்தலைவர் பத்மநாபா இன்றிருந்தால் அவருக்கு இப்போது வயசு 70. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை புலிகள் தம் பாசிச நலன்களுக்காக குழப்பாது விட்டிருந்தால் ஈழத்தின் வடகிழக்கு மாகாணங்களின் முற்போக்கான  பிதாமகராகராக காந்தி, நேரு, யாசர் அரபாத், மண்டேலா, ஏஞ்சலா மேக்கல் போன்றதொரு Statesman  ஆக  வந்திருக்கக்கூடியவர் பத்மநாபா. அவர் 1951ல் இரண்டாம் உலகப்போர் முடிந்த காலத்தில் பிறந்தவர். காலனியாதிக்கத்தின் பின்னான தேசிய விடுதலைக்காலத்தின் குழந்தை பத்மநாபா. காலனியாதிக்கம்  உருவாக்கிய காலனியாதிக்கத்தால் வஞ்சிக்கப்பட்ட  நாடுகள் சனாதர்ம/வைதீக மார்க்சிசத்தை தம் விடுதலைக்கான தாரக மந்திரமாக சரியாகவோ தவறாகவோ கருதிய காலத்தில் பிறந்த குழந்தை. நாமெல்லோரும் வரலாற்றினதும் சந்தர்பங்களினதும் கைதிகளே.  "தேசியத்தலை

ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்: அத்தியாயம் 04

Image
  By கணேசன் ஐயர் 1975 ஆம் ஆண்டு ஜீலை மாதம் துரையப்பா கொலை செய்யப்பட்ட நிகழ்வானது இரண்டு பிரதான கருத்தாக்கத்தின் தோற்றுவாயாக அமைந்தது. 1. தமிழ் மக்கள் மத்தியில், சிங்கள அடக்குமுறைக்கு எதிராக எதிர்த் தாக்குதல் நடத்த எமக்கு மத்தியில் சிலர் தயாராக உள்ளனர் உணர்வு. 2. ஒரு புறத்தில் சிறிமாவோ தலைமையிலான அரசிற்குப் பெரும் சவாலாகவும் மறுபுறத்தில் சிங்கள அடிப்படை வாதிகள் மத்தியில் பய உணர்வையும் உருவாக்கியிருந்தது. தமிழ் உணர்வாளர்களும், தேசிய வாதிகளும் இப்படுகொலையை பெரும் வெற்றியாகக் கருதினார்கள். இவ்வாறு முழுத் தேசமும் தமிழர்களின் எதிர்ப்புணர்வை ஒரு புதிய பரிணாமத்தில் அலச ஆரம்பித்திருந்தாலும், எம்மைப் பொறுத்தவரை அதற்க்குக்  காரணமான பிரபாகரனோடு வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தோம். அந்தக் கொலையை நிறைவேற்றிய தம்பியுடன் இருபத்தி நான்கு மணி நேரமும் எதிர்காலத் தமிழீழக் கனவு குறித்துத் திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். தம்பி பிரபாகரன் எமக்கெல்லாம் “ஹீரோ” வாக, எமது குழுவின் கதாநாயகனாக ஆனதற்கு இதுதான் அடிப்படைக் காரணம். துரையப்பா கொலையின் எதிர் விளைவுகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கும் புதிய திட்டங்களை மேற்கொள்வதற்க