Posts

Showing posts from November, 2020

புட்டு பிலிப்பைன்ஸிலிருந்து வந்த வரலாறு

Image
நட்சத்திரன் செவ்விந்தியன்     Pirurutong என்கிற பிலிப்பைன்சில்                                புட்டு செய்யும்  அருசி புட்டு அல்லது பிட்டுவினது நமக்கு தெரிந்த வரலாறு கேரளாவிலிருந்து வந்ததாக நாம் நம்புகிறோம். புட்டு ஒரு ஆதி தமிழ் உணவல்ல.  சங்க இலக்கியத்தில் புட்டு பற்றி எந்த குறிப்புமில்லை. எட்டாம் நூற்றாண்டில் உருவான மலையாள மொழியிலும் புட்டு பற்றி எந்த குறிப்புமில்லை.  15 ம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழில்தான் புட்டு பற்றிய முதல் குறிப்பு வருகிறது. பிறகு சைவரான பரஞ்சோதி முனிவர் 17ம் நூற்றாண்டில் மதுரையில் தங்கியிருந்து எழுதிய திருவிளையாடல் புராணத்தில்தான் பிட்டுக்கு மண்சுமந்த பெருமானின் செம்மனச்செல்வி கதை வருகிறது.  பரஞ்சோதி முனிவர் ஊர் வேதாரண்யம். போர்த்துக்கேயர் நாகபட்டினத்துறைமுகத்தை வைத்திருந்த காலத்தில்தான் அங்கிருந்து மதுரைக்கு வந்தபோதுதான் புட்டைபற்றி பாடினார். ஆக புட்டையும் இந்தியாவுக்கு மிளகாய், சோளம், உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிளங்கு, ஆனைக்கொய்யா(அவக்கடோ), முருங்கக்காய் முதலிய திரவியங்களை கொணர்ந்த போர்த்துக்கேயர்தான் கொணர்ந்தார்களா எனத்தேடினேன். உண்மை. ப

கிரிசாந்தின் "அலைமுறியும் கடற்காற்றில்"

Image
                                கிரிசாந் நான் கவிதைகளை எழுத ஆரம்பித்த காலங்களில் எனக்கு முந்தைய தலைமுறையில் எழுதியவர்களில் நட்சத்திரன் செவ்விந்தியனை மட்டும் தான் முக்கியமானவராக கருதினேன், இன்றும் அப்படித் தான் . சேரன்,வ .ஐ. ச  ஜெயபாலன் , ஊர்வசி, சிவரமணி எல்லாம் ஏதோவொரு புள்ளியில் வேறு விதமான அனுபவங்களைத் தருபவர்களாக இருந்தார்கள். செவ்விந்தியனின் "வசந்தம் 91" தமிழில் வந்த முதல்தொகுப்புகளில் முக்கியமானதொன்று. அதன் மொழியமைப்பு மிகவும் சரளமான , நதியின் மேல் எறியும் கல்லைப் போன்று தாவிச் சென்று மறைவது. ரமணன் அண்ணாவின் வீடு தான் எனக்கு ஏராளம் புத்தகங்களைக் காட்டித் தந்த வீடு . குறைந்தது ஆயிரம் புத்தகங்கள் ,ஆயிரமும் தேர்ந்தெடுத்த புத்தகங்கள் , கவிதைகள் , சிறுகதைகள் , நாவல்கள் , கட்டுரைகள் , தத்துவ நூல்கள் , பழைய இலக்கிய சஞ்சிகைகள் . இவ்வளவுக்கும் மேல் அவரது மரபும் நவீனமும் பற்றிய அறிவு.இரவும் பகலும்  உரையாடிக் கொண்டே இருப்போம். சிறிய வயதில் (ஒரு பன்னிரண்டு வயது இருக்கலாம் ) அவருடைய புத்தகங்களை அடுக்கிக் கொடுக்கும் வேலைகளை நானும் எனது சகோதரர்களும் ஊர்ப் பெடியளும் செய்வோம் , அவர் வீட்