Posts

கோணங்கியும் ஜெயமோகனின் ஞான மரபும்

Image
                    தேவரும் நாயரும்                   "போற்றிப் பாடடி பெண்ணே"   By நட்சத்திரன் செவ்விந்தியன் நீங்க பீ·ப் சாப்பிடுவீங்களா? தமிழ்நாட்டிலே இதெல்லாம் ரொம்ப ஆர்த்தடக்ஸா இருப்பாங்கள்ல?” என்றேன். ”நாங்க தேவமாரு பொதுவா மாடு எல்லாம் சாப்பிட மாட்டோம். நான் எல்லாத்தையும் சாப்பிட்டுருவேன். இப்ப காதல்கவிதை எழுதறவனில ஒருத்தன போட்டுத்தள்ளி ·ப்ரை பண்ணி சாப்பிடணும்ணு ரொம்பநாளா ஆசை…”   - தன்னை  தேடி வந்து கேரளாவில்   கோணங்கி சந்தித்தது பற்றிய கட்டுரையில் ஜெயமோகன்  ஜெயமோகனுடைய குரல் பாசிசக்குரல். பாசிசத்திற்கு அச்சொட்டான பாடப்புத்தக வரைவிலக்கணம் உண்டு. அவ்வரைவிலக்கணத்தை விரித்து விளக்கினால் சுயாதீனமாக இயங்கவேண்டிய இயல்கள் மற்றும்  துறைகளான சட்டம், நீதி, குற்ற(வியல்) சனநாயகம், விஞ்ஞானம் முதலியவற்றை ஒரு சிலரின் நலன்களுக்காக கட்டுப்படுத்துவதே பாசிசம் என்பது வரும். "எழுத்தாளன், புனிதன், மனிதன்"  என்ற தன் கட்டுரையில் ஜெயமோகன் அச்சொட்டாகச் செய்திருப்பது சுயாதீனமான இயல்கள் மற்றும் துறைகளை கட்டுப்படுத்த முயன்றிருப்பதுதான். மனுக்குலம் பல  நூற்றாண்டுகாலங்களாக சேகரித்த  அறிவாலும்

யாழ்ப்பாண Trendsetter குறும்படம்

Image
  By நட்சத்திரன் செவ்விந்தியன் யாழ் நகரிலுள்ள மிக அழகான ஊர்கள் குருநகரும் பாசையூரும். யாழ் நகரின் மீன்பிடித்துறைமுகம் இங்குதான் அமைந்துள்ளது.  அழகிய கலைச்சிற்பங்களான கத்தோலிக்க தேவாலயங்களின் இடம். பலமான உதைப்பந்தாட்ட கிளப்புக்களின் ஊர். சுருக்கமாகச் சொன்னால் இதுதான் யாழ்ப்பாணத்தின் வடசென்னை. இன்றைய பின்நவீனத்துவ மேலை நாடுகளில் காதல் டேற்றிங்கிலிருந்து தொடங்கும். ஈழத்திலோ இந்தியாவிலோ அது மாதக்கணக்காக ஒரு பெண்ணை பின்தொடர்ந்து ஊருக்கே அறிவித்தபின் ஒரு Proposal செய்யும் சூதாட்டத்திலிருந்து தொடங்கும். ஏறத்தாள திமிங்கிலங்களும் சேவல்களும் குரங்குகளும் செய்யும் சடங்குதான். ஆனால் விலங்குகள் சில நாட்களில் செய்யும் சடங்கை  யாழ்ப்பாண ஆண் வருடங்களாகச் செய்யவேண்டும்.  இக்குறும்படத்தில் காதலர்களின்   டயலாக் அற்புதம்.                    Proposal                                 Jaffna version of Dating ஸ்ரெல்லா ஒருக்கா நில்லு. உன்னோடை கதைக்கோணும். என்ன கதைக்கோணும் ஏன் உனக்குத் தெரியாதோ இல்லை 6 வருசமா உனக்குப் பின்னால திரியுறன். 3 வருசமா கேட்டுக்கொண்டிருக்கிறன். உனக்கு என்னில விருப்பமிருக்கா இல்லையா இல்

சேரனும் ஜெயன் தேவாவும்: இரு போலி பொய்மான்களின் கதை

Image
  By நட்சத்திரன் செவ்விந்தியன் தமிழினியின் கணவர் ஜெயன் தேவாவுக்கு முகநூல் அஞ்சலி ஒன்றுக்கு பின்னூட்டமிட்ட கவிஞர் சேரன் பின்வருமாறு எழுதியிருந்தார். “தோழரல்லர். போலி. பொய்மான். முன்னொருகாலத்தில் கொஞ்சம் விடுதலை வேட்கை இருந்தமையால் துயரில் பங்கெடுக்கிறேன்.” மேலும் தொடர்ந்த பின்னூட்டங்களில் சேரன் அறம் பற்றியும் பேசியிருந்தார்.  ஜெயன் தேவாவைவிட மிக மோசமான போலியும் பொய்மானுமான அறமற்ற சேரன் ஜெயனை குற்றஞ்சாட்டுவது நம்காலத்தின் மிகப்பெரிய வரலாற்று  மோசடி இருவருக்குமே பல ஒற்றுமைகள் இருக்கின்றன. சேரனும்(1958) ஜெயனும்(1960) சமகாலத்தவர்கள். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். சேரன் பட்டப்படிப்பை நிறைவுசெய்து பின் கலாநிதிப்பட்டம்வரை பெற்றவர். ஜெயன் முதல் பட்டப்படிப்பையே நிறைவு செய்யாதவர். இருவரும் பெண் பொறுக்கிகள்(Womaniser). அறத்தை அடகுவைத்து தம்மை முன்னிறுத்திய Narcissistic Personality disorder குறைபாடுள்ளவர்கள். சேரன் வாழ்வில் வெற்றிகரமான Sociopath ஆக கரையேறியவர். ஜெயன் ஒரு தோற்ற Sociopath. ஜெயனின் மரணம் மிக அவலமானது. இங்கிலாந்தில் தன் வசிப்பிடத்தில் யாருமறியாது மரணமடைந்தார். தனிமையில் அவர் இறந்ததே சில

விஷ்ணுபுரம் விருதின் மோசடி வரலாறு

Image
  "ஊரில் புதுசா ஒரு ரௌடி தாதா வந்தா எதிர் எதிரா சண்டை போட்டு ஒருத்தர் ரத்தத்தை மற்றவர் குடித்து கொண்டிருந்த பழைய தாதாக்கள், புது தாதாவை எதிர் கொள்ள ஒண்ணா சேருவது தெரிஞ்ச விஷயம் தான். ரெண்டு பேரு பொழைப்புலயும் மண்ணு விழுந்துடுமே"                                                                                                            -  Naren Ganapathy  By  Rajesh Kumar சாரு நிவேதிதா (சாநி) என்பவர் ஒரு பத்தி எழுத்தாளர். சில நாவல்களும் எழுதியுள்ளார். வாசகர் வட்டங்கள் மட்டுமே அறிமுகமாயிருந்த தமிழிலக்கிய உலகில் முதல் முறையாக விமர்சகர் வட்டம் என்று ஆரம்பிக்கப்பட்டது அண்ணாருக்குதான். ஆரம்பித்தவர்கள் வேறு யாருமல்ல, சாநியின் எழுத்துக்கு கடின சாவு விசிறிகளாக இருந்தவர்கள். அவர்கள் எல்லாம் ஏன் அப்படி மாறிப்போனார்கள் என்று நான் யூகம் செய்ய விரும்பவில்லை. ஆனால் நான் ஏன் விமர்சகனானேன் என்பதில் இருந்து இதற்கான பதிலை ஆரம்பிக்கிறேன்.   தமிழிணையம் அப்போதுதான் கொஞ்சம் பரவலாக அறிமுகமாகத் தொடங்கிய காலகட்டம். இணையத்தை சரியாக பயன்படுத்தி முதன் முதலில் அக்கவுண்டுக்கு காசு அனுப்பினால் மெயிலில் சீரோ

கனகி புராணம்

Image
நட்சத்திரன் செவ்விந்தியன் பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாண வழுக்கியாற்றின் தீரத்தில் தேவதாசி அவதாரத்தில் வாழ்ந்த ஒரு கடற்கன்னியின் காதல் கதை                                       1  நிலவு உதிக்கிற ஒரு கூதிர் காலத்தில் தான் ஆறுமுகன் முதன்முதலாக கனகியைக் கண்டான். ஊரெல்லாம் ஆறு ஓடுகிற அழகிய யாழ்ப்பாணப் பருவகாலம். இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில் அவள் தன்னந்தனியே குளத்தில் குளித்துக்கொண்டிருந்தாள். கூதிர் காற்றையும் நிலவையும் அனுபவித்து நடந்து கொண்டிருந்த ஆறுமுகன்  குளத்தங்கரையில் அரசமரக்கிளையில் தொங்கிய ஒரு பெண்ணின் சேலையைகண்டு அதிசயித்து எதிர்க்கரையில் ஒரு ஆலமர மறைவிலிருந்து எட்டிப்பார்த்தான். குறுக்குக்கட்டோடு ஒரு கட்டிளம் பெண் குளத்தின் நடுவில் தன்னந்தனியாக நீந்திக்கொண்டிருந்தாள். இரவோ நிலவோ என்ற பயமேதுமின்றி ஓர் அப்சரஸ் போல அவள் நீச்சலாடும்போது எழும் ஒலி பாற்கடலின்  அலை சத்தம்போல ஆறுமுகனின் காதில் வந்தோதியது. விதிர்விதித்தவன் குளத்தை ஒருதடவை கண்மூடிவிட்டுப் பார்த்தான். இப்போது பகல்போய் நிலவு வந்துவிட்டது. அது பாற்கடலே தான்.  ஆறுமுகனுக்கு வியர்த்தது. உடம்பை போற்றியிருந்த