ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? எங்கிருந்து தொடங்க வேண்டும்?

By நிலாந்தன் ஈழப்போர் முடிந்தபின் வந்த முதலாவது மாவீரர் வாரத்தில் 2009ல் சென்னையிலிருந்து நிலாந்தன் எழுதிய கட்டுரை இது. இக்கட்டுரையில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ள சொற்களை கவனமாகப் படித்துப் பாருங்கள். அச்சொற்களில் பொடிவைத்து மிகச்சரியாகவே பிரபாகரனியத்தை வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குள் வீசியெறிந்திருக்கிறார். இன்றோ ஆள்மாறிவிட்டார். புலிகளையும் பிரபாகரனையும் "ஈவிரக்கமின்றி விமர்சிக்கும் ஒரு அரசியல் ஒழுக்கம் தேவை" என்று சொன்னவரே 2015ல் அவ்விதமே செய்து பெண்புலித் தளபதி தமிழினி எழுதிய தன்வரலாற்று நூலை சாடினார். "புலிகளின் வரலாற்றை யாருமே எழுதமுடியாது. அது ஒரு புதிராகவே இருக்கப்போகிறது" என்று தமிழினியின் நூலை நிராகரித்தார். புத்திஜீவியாகச் சிந்திக்கத் தெரிந்த நிலாந்தனின் உளக்குறைபாடு அவரது தன்மோகம்(Narcissism). இதிலிருந்து வருவது அவரது அற ஊனம். உண்மைகளை எழுதத்திராணி இல்லாத சனங்கள் கேட்கவிரும்புகிற சனவசியமான சரக்குகளை எழுதி தன் சொந்த தன்மோகத்துக்கு தீனி போடுவது. பிரபாகரனியமே இன்று அவர் பிழைப்பின் முதல். - பிரதம ஆசிரியர்/Jaffna Fashion இப்பொழுதும் ஒரு தெளி...