Posts

அசோகமித்திரனை வசைபாடும் சாருவின் வண்டவாளங்கள்

Image
   By அபிலாஷ் சந்திரன்   அபிலாஷால் பத்தாண்டுகளுக்கு முதல் சாருவை மதிப்பிட்டு  எழுதப்பட்ட  இக்கட்டுரை சாரு நிவேதிதாவை மிகத்துல்லியமாகத்  தோலுரித்துக் காட்டுகிறது. அன்று இருந்த சாருதான் இன்றும். சாரு மாறவில்லை. மாறி பச்சோந்தியானது அபிலாஷ் சந்திரன். இன்று அபிலாஷ்  சாரு லாபியிஸ்ட்.  பல சமகால தமிழ் எழுத்தாளர்களின் வறுமை அறிவு வறுமையல்ல. அறவறுமை. சாருவுக்கு அடிக்கிற  சமூக வலைத்தள அல்கோறிதக் காற்றில் தங்கள் பாய்க்கப்பலையும் ஓட்டிவிட வேண்டுமென்ற பக்கா சுயநலன். காலச்சுவட்டிலிருந்து பிரிந்து வந்த லக்ஷ்மி மணிவண்ணனும் மனுஷ்ய புத்திரனும் இதனைத்தான் செய்தார்கள். ஜெயமோகனும் சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது கொடுத்து இதனைத்தான் செய்தார். காலச்சுவடு கண்ணன் மீது  எனக்கு சிலபல விமர்சனங்கள் இருந்தாலும் அறம்சார் கொள்கைசார் அடிப்படையில் அவர் மிகச்சரியாக துல்லியமாக  ஜெயமோகனையும் சாரு நிவேதிதாவையும்  விமர்சித்து அம்பலப்படுத்தினார். தங்கள் பொது எதிரியான கண்ணனை ஒரங்கட்ட லக்ஷ்மி மணிவண்ணன், மனுஷ்ய புத்திரன், ஜெயமோகன், சாரு நிவேதிதா ஆகியோர் கூட்டு களவாணிகளானார்கள். காலச்சுவடு 1998ல் நடாத்திய விஷ்ணுபுரம் நாவலை மிகச்சர

சரசம் சாடிசம் சாரு நிவேதிதா

Image
  2011ல் சாரு நிவேதிதா இணையத்தில் ஒரு அப்பாவிப் பெண்ணை Groom பண்ணி மடக்கி செக்ஸ் செய்ய முயன்று மாட்டுப்பட்டதை வினவு இணையத்தளம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருந்தது. அக்கட்டுரையின் சுருக்கமான வடிவம் இது.  அதன் இணைப்பு இக்கட்டுரையின் இறுதியிலுள்ளது.  படிப்பு முடித்த ஒரு இளம்பெண்.  வேலை பார்க்க வெளியே செல்ல முடியாத சூழ்நிலை, இணையம் மூலமாக சிறிய அளவில் டி.டி.பி போன்றதொரு வேலை  எடுத்து செய்பவள். கட்டுப்பெட்டியான குடும்ப வாழ்க்கையில் வெளியே தொடர்பு கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது இணையம். கணினிப் பெட்டியில் அந்தப்பெண் நேரம் செலவிடுவதை குடும்பத்தினரும் தடை செய்யவில்லை. கணினியில் பொழுதை செலவிடுவது வீட்டுச் சிறையை மீறுவதாக இல்லாததுதான் அந்த அனுமதிக்கு காரணம்.  இப்படித்தான் அவளது இணைய வாழ்க்கை தொடங்குகிறது. ஆரம்பத்தில் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டும், பின்னர் முக நூலில் – பேஸ்புக்கில் – தனி கணக்கு ஒன்று ஆரம்பிக்கிறாள். சிறு கவிதைகளையும், தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறாள். நட்பு வட்டம் விரிகிறது. பேஸ்புக்கில் சாருவின் வாசகர் வட்டம் அறிமுகமாகிறது , அதில் இணைந்து அங்கே கருத்துகளை எழுதுகிறாள். பெ

அவந்திகா: ஓர் அவல மனைவியின் வாக்குமூலம்

Image
  சாரு நிவேதிதா என்கிற அயோக்கிய சைக்கோப்பாத்தின் வரலாறு 2010ல் நித்தியானந்தா- ரஞ்சிதா உறவு வீடியோ வெளியான காலத்திலேயே அம்பலப்பட்டு  முடிந்திருக்கவேண்டும். அப்போது சாருதான் நித்தியானந்தாவின் மதியுரைஞராகவும் அவரது கதவைத்திற காற்றுவரட்டும் என்கிற குமுதம் தொடரின் Ghost writer ஆகவும் இருந்து நித்தியானந்தாவை பிரபல்யமாக்கிய காலம்.  நித்தியானந்தா- ரஞ்சிதா வீடியோ வெளிவந்த நாளில் சாருவின் பாவி மனைவி அவந்திகா நித்தியானந்தாவின் மடத்திலேயே இருந்தார்.   பிறவியிலேயே ஒரு சைக்கோபாத்தான கணவன் தன் மனைவியை அன்பு செய்பவனாக மதிப்பவனாக இருந்திருந்தால் இன்னொரு சைக்கோபாத்தான நித்தியானந்தாவின் மடத்தில் வசிக்க விட்டிருக்கவே மாட்டான்.  ஆனால் சாரு என்கிற சைக்கோபாத்துக்கு அது ஒரு டீல். கணவனே கண்கண்ட தெய்வம் என்று நம்பிய அவன் மனைவி அவந்திகாவுக்கு, கணவன் எவ்வளவு கொடுமை செய்தாலும்  தன் கணவன் புகழ்ந்து எழுதுகிற சாமியாரின் மடத்திலிருப்பது ஒரு விடுதலை.  நித்தி சாமியை தன் நலனுக்காக அக்கணமே குத்துக்கரணமடித்து தாக்க முடிவுசெய்த சாரு இரண்டு நாள் காத்திருந்தான். மனைவி மீதான காதலால் அல்ல. அவந்திக்காவைப் போல தனது கொடுமைகளை சகித

Who was Taraki Sivaram?

Image
                        Sivaram: The Assassin By Dr. Rajan Hoole                                                                                   UTHR(J) Many who have lavished praise on Sivaram since his murder knew him at arm’s length and communicated with him in English. To them he was an articulate and erudite companion and a worthy sparring partner. This carried also the danger that in the cultural milieu of Colombo where acceptance of the LTTE is seen as the way out, to say ‘Sivaram is my friend’ was also an easy means to ignore the inconvenient side of the Tamil experience.  It would however be very wrong to ignore the other, more intense, side of Sivaram’s life. One way or the other, Tamil militancy, its beliefs and goals consumed the bulk of his life. Some were awed by his intellectual prowess, others by his deep knowledge in Tamil National history and especially this knowledge of Eastern history. Many Tamils who were concerned about the direction of the Tamil Struggle had ta

கோணங்கியும் ஜெயமோகனின் ஞான மரபும்

Image
                    தேவரும் நாயரும்                   "போற்றிப் பாடடி பெண்ணே"   By நட்சத்திரன் செவ்விந்தியன் நீங்க பீ·ப் சாப்பிடுவீங்களா? தமிழ்நாட்டிலே இதெல்லாம் ரொம்ப ஆர்த்தடக்ஸா இருப்பாங்கள்ல?” என்றேன். ”நாங்க தேவமாரு பொதுவா மாடு எல்லாம் சாப்பிட மாட்டோம். நான் எல்லாத்தையும் சாப்பிட்டுருவேன். இப்ப காதல்கவிதை எழுதறவனில ஒருத்தன போட்டுத்தள்ளி ·ப்ரை பண்ணி சாப்பிடணும்ணு ரொம்பநாளா ஆசை…”   - தன்னை  தேடி வந்து கேரளாவில்   கோணங்கி சந்தித்தது பற்றிய கட்டுரையில் ஜெயமோகன்  ஜெயமோகனுடைய குரல் பாசிசக்குரல். பாசிசத்திற்கு அச்சொட்டான பாடப்புத்தக வரைவிலக்கணம் உண்டு. அவ்வரைவிலக்கணத்தை விரித்து விளக்கினால் சுயாதீனமாக இயங்கவேண்டிய இயல்கள் மற்றும்  துறைகளான சட்டம், நீதி, குற்ற(வியல்) சனநாயகம், விஞ்ஞானம் முதலியவற்றை ஒரு சிலரின் நலன்களுக்காக கட்டுப்படுத்துவதே பாசிசம் என்பது வரும். "எழுத்தாளன், புனிதன், மனிதன்"  என்ற தன் கட்டுரையில் ஜெயமோகன் அச்சொட்டாகச் செய்திருப்பது சுயாதீனமான இயல்கள் மற்றும் துறைகளை கட்டுப்படுத்த முயன்றிருப்பதுதான். மனுக்குலம் பல  நூற்றாண்டுகாலங்களாக சேகரித்த  அறிவாலும்