Posts

Showing posts from September, 2022

கொள்ளி (சிறுகதை)

Image
  ஜூன் மாத தனிமை வெளியில் பிரசுரமான நட்சத்திரன் செவ்விந்தியனின் சிறுகதை கிருபாகரன் தூங்கி தற்கொலை செய்துகொண்டது ஈழப்போரின் உச்சத்தில் இருந்த புலிகளில் பொற்காலத்தில். ஹாட்லிக்கல்லூரியில் என் வகுப்பு சக மாணவன் . அவன் உயரமானவன். எங்கள் வகுப்பில் முதலில் மீசை வளர்ந்தது அவனில்தான். பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தோம். போர் நிலவரங்கள் காரணமாக சில மாதங்கள் பள்ளிக்கூடம் நடைபெறவில்லை. அதற்கு முதலே அவன் எங்களெல்லோரையும் விட்டு விலகிப்போய்விட்டான். வயதுக்கு மீறிய வளர்ச்சியால் அவன் எங்களைவிட இரு வயது கூடிய அண்ணன்மார்களுடனேயே நண்பரானான்.  எங்களில் முதலில் குரல் உடைந்ததும் அவனில்தான். அவனின் குரல் எனக்குப்பிடிக்கும். எட்டாம் வகுப்பில் பள்ளிக்கு ஒருநாள் பூதக்கண்ணாடி கொணர்ந்தான். முதுவேனில் காலத்தில்  திறந்த வகுப்பறை யன்னலுக்கு வெளியே சூரிய வெளிச்சத்தில் பூதக்கண்ணாடியால் வெளியிலிருந்த புற்தரையைக்கு தீ வைத்தான். சிறுதீயே உருவாக பள்ளியே கலவரமாகிவிட்டது. ஆதிபர் வந்து விசாரித்தும் எங்களில் ஒருவரும் அவனைக் காட்டிக் கொடுக்கவில்லை.  பிறகு ஒன்பதாம் வகுப்பில் நம் அதிபரே அவனை ஒரு கீரோ ஆக்கினார். எங்கள் பள்ள

சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது: தொடரும் கண்டனங்கள்

Image
ஜெயமோகன் தன்வாழ்நாளில் செய்த மிகப்பெரிய சூதாட்டம் சாருவுக்கு 2022 விஷ்ணுபுரம் விருதை வழங்கியது. சமூக வலைத்தளங்களை வைத்து அவர் ஆடிய தப்பு காய் நகர்த்தல் அவரை மிகப்பெரிய நெருக்கடியில் மாட்டியுள்ளது.  சமூக வலைதளங்களிலேயே இத்தேர்வுக்கெதிராக மிக அச்சொட்டானதும் தருக்கச்சிறப்பானதாகவுமுள்ள விமர்சனங்கள் ட்றெண்டிங் ஆகி வருகிறது. இந்த விருதை மறுசீலனை செய்து முடிவை மீளப்பெறுவது ஜெயமோகனுக்கும் விஷ்ணுபுரம் விருதுக்கும் நல்லது. தன்மோகம்(Narcissistic Complex) என்ற உளக்குறைபாடுடைய ஜெயமோகன் விருதை தடைசெய்வாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும். விருதை காரணகாரியங்களுடன் தர்க்கரீதியாக சிறப்பாக கண்டித்து விமர்சித்து வந்த முகநூல் பதிவுகளை கீழே தொகுத்து தருகிறோம்.                  1. KN. Senthil கண்டனம்  இந்த வருட விஷ்ணுபுர விருது சாருநிவேதிதாவுக்காம். எந்த வகையிலும் பொருட்படுத்த வேண்டாத புனைவெழுத்தாளர் அவர். மாபெரும் குப்பைக் கிடங்கு அது. அவரது அபுனைவுகளும் மொழியாக்கங்களும் பொருட்படுத்தத் தக்கவை. அதற்காக அவருக்கு விருது அளிக்கலாம் என்றால் அதை விட மேம்பட்டத் தரத்தில் அவ்வகையில் எழுதுகிறவர்கள் தமிழில் நி

 யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், விரிவுரையாளர்களின்   கல்வி அறிவு மோசடிகள்

Image
By Dr. முத்துகிருஷ்ணா சர்வானந்தன் யாழ் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின்(academic staff) கல்விசார் மற்றும் அறிவுசார் மோசடிகளை ( (academic and intellectual frauds)  அம்பலப்படுத்தும் பகிரங்கத் தொடரின்  முதலாவது கட்டுரை இது. கல்விசார் மற்றும் அறிவுசார் மோசடிகள் என இக்கட்டுரையில் கருதப்படுவது யாதெனில் உதாரணத்திற்கு பிற கல்விமான்களின் கல்விசார் வெளியீடுகளை அல்லது கருத்துக்கள் மற்றும் உள்ளடக்கங்களை திருடி பிரதி பண்ணி தமது பெயரில் பிரசுரிப்பது (Plagiarism) உலகளாவிய ரீதியில் மோசடிக்காரர் பிரசுரிக்கும் போலி சஞ்சிகைகளில் பணம் கொடுத்து தனியாக (Sole Author ) அல்லது பிற மோசடி ஆசிரியர்களுடன் சேர்ந்து இணை ஆசிரியராக (Co - Author) கட்டுரை பிரசுரிப்பது (Publications in Predatory Journals) பிற கல்விமான்களுக்கு அல்லது தமது சகாக்களுக்கு பணம் கொடுத்து கட்டுரை எழுதி தமது பெயரில் பிரசுரிப்பது (Impersonation/ Collusion), நிஐமான அறிவுசார் சஞ்சிகைகளினால் சக மதிப்பாய்வுக்கு (Peer Review) பின் பிரசுரிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரைகளில்  பணம் கொடுத்து இணை ஆசிரியராக தம்மை இணைத்துக்கொள்வது,  தமது மாணவர்களின் ஆய்