Posts

Showing posts from February, 2022

பூட்டினின் Make or Break Date with Ukraine

Image
  By நட்சத்திரன் செவ்விந்தியன் கிரெம்ளின் ஒரு யுத்தத்தில் தோற்றால் ஆட்சி கவிழுவது வரலாறு. இது புட்டினுக்கு நன்கு தெரியும்.   1. ஓராம் உலக யுத்தத்தில் ரூசிய பேரரசு தோற்றபின்  சார் மன்னனின் சாம்ராஜ்யம் கவிண்டது 2. பத்தாண்டு ஆப்கானிஸ்தான் யுத்தத்தில்  சோவியத் ஒன்றியம் தோற்றபின் சோவியத் ஒன்றியம் சிதறியது.  அமெரிக்கா இரண்டு இருபதாண்டு போர்களில்( வியட்னாம், ஆப்கானிஸ்தான்) தோற்றாலும் சிதறவில்லை. இந்தியா இரண்டாண்டு ஈழப்போரில் தோற்றாலும் சிதறவில்லை. உலகின் மிகப்பழமையானதும் மிகப்பெரியயதுமான முறையே அமெரிக்கா, இந்தியா ஆகிய மக்களாட்சி நாடுகளின் வலிமை அது.  இந்த உண்மையை நன்கறிந்த புட்டின் உக்ரேனில் செய்யப்போவது  1. உக்ரேனின் கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதிகளையும் தலைநகரையும் கைப்பற்றுவது. உக்ரேனில் ஒரு பொம்மை ஆட்சியை நிறுவுவது. அதன்பின் அதிகபட்சம் ஒரு வருடத்திற்கு ரூசிய படைகளை வைத்து தன் பொம்மை ஆட்சியை பலப்படுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறுவது.  தற்காலத்தில் அமெரிக்காவுக்கு ஒன்றல்ல இரண்டு வல்லரசு எதிரிகள்.  1. சீனா 2. ரூசியா அமெரிக்காவின் நண்பர் கூட்டான ஐரோப்பா/ நேட்டோ தம் பொருளாதார நலன்களுக்காக

ஈழத்தின் வலி: "பிரபாகரனின் வைத்தியரின்" 4ம் ஈழயுத்தம் பற்றிய மகத்தான நூல்

Image
" அப்பாவுக்கு ஒன்று நடந்தால் உங்களை சும்மா விடமாட்டேன்"                                                                                    - பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி                             மருத்துவருக்கு மிரட்டல் By நட்சத்திரன் செவ்விந்தியன்   பிரபாகரனின் மரணத்துடன் புலிகளின் உறுப்பினர்கள் புலிகளின் உள்வீட்டு  ரகஸியங்களை எழுதும் உரிமை கிடைக்கிறது.  முதலில் வந்த  புத்தகம் புலிகளின் முதல் "நிதியமைச்சர்" கணேசன் ஐயர்(2010) எழுதியது. இரண்டாவது புத்தகம் புலிகளின் மருத்துவர்களில் ஒருவரும் புலிகளின் முன்னணி புலனாய்வுத் தளபதிகளில் ஒருவரானவரின்['கேணல்' கண்ணப்பன்    (மகேஸ்வரன் விஜயகாந், முல்லைத்தீவு)] சகோதரருமான பேராசிரியர் உமாகாந் எழுதிய ஈழத்தின் வலி(2014). மூன்றாவது புத்தகம் புலிகளின் பெண்புலித் தளபதி தமிழினி எழுதிய ஒரு கூர்வாளின் நிழலில்(2015).  இம்மூன்று நூலாசிரியர்களும்  தமக்குத்தெரிந்த உண்மைகளை மிக நேர்மையாக காய்தல் உவத்தல் இன்றி தம் அறிவு, அறம் சார்ந்து பேசியதால் இம்மூன்று நூல்களும் மகத்தான நூல்களே.  கணேசன் ஐயரின் புத்தகம் அவர் புலிகளின் உறுப்பினராக இ