Posts

Showing posts from February, 2020

சைக்கோபாத் 001: உமா வரதராஜன்

Image
உடையப்பா மாணிக்கம் வரதராஜன் நட்சத்திரன் செவ்விந்தியன் உமா வரதராஜனின்(1956) உள்மன யாத்திரை(1988) ஒரு யாழ்ப்பாண இளவேனில் வெய்யிலில் புதுவருச வாய்ப்பன் பிளேன் ரீயுடன் நான் அனுபவித்து படிச்ச புத்தகம். வரதராஜனின் முதல் சிறுகதைத்தொகுதி. பெருவரவேற்பை பெற்றது. அதற்குப்பிறகு பலகாலமாக அவர் புத்தகம் எதுவும் போடவில்லை. முதல்புத்தகத்தின் புகழிலேயே அவர் குளிர்காய்ந்து அனுபவித்தார்.  சைக்கோ பாத் எழுத்தாளர்கள் என்றொரு தொடரை எழுதவுள்ளேன். முதலாவது எழுத்தாளர் ஈழத்து உமா வரதராஜன். யார் சைக்கோபாத் அல்லது sociopath? சாதாரண மனிதர் எல்லோருக்கும் அறவிழுமியங்கள் நீதி நியாயங்கள் இருக்கும். இவற்றை பின்பற்றாவிட்டால் சாதாரண மனிதர்களுக்கு குற்ற உணர்ச்சிவரும். சைக்கோ பாத்துகளை பொறுத்தவரையில் தாங்கள் சட்டம், நீதியைவிட மேலானவர்களாக நினைப்பார்கள். இவர்களுக்கு குற்ற உணர்ச்சி கிடையாது. தங்கள் தவறுகளை நியாயப்படுத்துவார்கள்.  உலகத்து கலைஞர்கள் எழுத்தாளர்களில் சைக்கோ பாத்துக்களின் வீதம் அதிகம். உலகத்தின் அற காவலர்கள் கலைஞர்கள் என்ற தப்பு அபிப்பிராயத்தை இவர்கள் செமையாக பாவிப்பார்கள். இசைமேதை மொசாட்டிலிருந்து ர

சுஜாதா: ஒரு மறு மதிப்பீடு

Image
(By Vasu Devan)  மிகை உணர்ச்சியை மலிவாக தூண்டும் மேம்போக்கான எழுத்து சுஜாதாவுடையது.  எந்த ஆழமும் இல்லாமல் அனைத்தையும் எளிமைப்படுத்தி பண்ட சரக்காக மாற்றியதில் கெட்டிக்காரர்..அனைத்து அறிவார்த்த துறையைப்பற்றியும் சுருக்கி போலி அறிவு ஜீவி முகமூடி மூலம் நடுத்தர வர்க்கத்தை கவர்ந்தவர். மொழியை சீரழித்தது மட்டுமல்லாமல் ஒரு தலைமுறையை சர்வ நாசப்படுத்தியதில் இவருக்கு பெரும் பங்குண்டு. அவர் இறந்தபிறகும் அவர் பெயரில் ஒரு விருதை ஏற்படுத்தி அவர் பிம்பத்திற்கு எந்த சேதாரமும் இல்லாமல் காப்பது மட்டுமல்லாமல், அவரை இலக்கியவாதி வரிசையில் பீடத்தில் தூக்கி நிறுத்தும் அவலமும் தொடர்கிறது.. சொந்த விசுவாசத்திற்கும் நன்றிக்கடனுக்கும், ஒரு மலிவான வணிக எழுத்தாளருக்கு இலக்கிய அந்தஸ்தை வலிய வழங்கி அதை பிறரையும் ஏற்கச்செய்யும் மோசடித்தனம் இங்குதான் சாத்தியம்.. சுஜாதா / பாலகுமார் குப்பைகள் எந்த வேப்பிலை அடித்தும் நகரமாட்டேங்கிறது..அந்தளவுக்கு கெடுதல் விளைவிக்கும் கதிர் வீச்சு நச்சுத்தன்மை கொண்ட எழுத்து. அவரைப்பற்றி நண்பர் #நாவிச்வநாதன் எழுதியதை கீழே வாசிக்கலாம்.. சுஜாதா என்ற ஆரவாரம் ~~~ 'வந்தேனய்யா நா

Bra-மார்புக்கச்சை, குறுக்கு கட்டு பற்றி

Image
(Jaffna Fashion புளக்கில் ஒரு பாசனையும் காணல என்பவர்களுக்கான பதிவு இது) ஆசியாவின் முதல் பெண்கள் Boarding பாடசாலையான உடுவில் மகளிர் கல்லூரி முன்றில் சுடப்பட்ட 1910 காலப்பகுதி படம் இது. பல வகைகளில் முக்கியமான அரிதான புகைப்படம். Fashion கற்கை மாணவருக்கு இது இன்னும் முக்கியமானது. இப்படத்தில் இருப்பவர் பலர் வயதானவர் என்பதாலும் காலம் 1908 என்பதாலும் இவர்கள் மாணவிகளாக இருக்க வாய்ப்பு குறைவு. காலம் இக்கல்லூரி தொடங்கிய 1824 ஆக இருந்திருந்தால் இவர்கள் மாணவிகளாகவே இருந்திருக்கலாம். குறுக்கு கட்டோடு நிற்கிறார்கள். நடுவில் உள்ளூர் பெண்ணொருவர் சேலையுடனும் Bra இல்லாமல் Blouse உடனும் உள்ளார்.  நவீனகால மார்புக்கச்சையான Bra ஐரோப்பாவிலேயே 1910 களில்தான் கால்வைக்கிறது. அங்கு அது corset ஐ விலக்கி முன்னுக்கு வருகிறது. Corset இல்லாத இந்திய துணைக்கண்டத்தில் சேலைதான் எல்லாம். அதனை பெண்கள் குறுக்கு கட்டாகவும் அணிந்தார்கள். அல்லது ஆண்களைப்போல இடுப்பில் வரிந்து பின் மேலும் மார்பையும் தற்கால பௌத்த துறவிகள் அணிவது போலணிந்து மார்பகங்களையும் மறைத்தார்கள். மார்பை மறைக்காமவும் இருந்தார்கள். மார்பகங்கள

கானா பிரபாவும் சடையன் சண்முகலிங்கமும்: தரந்தாழும் அற விழுமியங்கள்

Image
கானா பிரபா பிரபல்யமான ஒரு Blogger ம் வானொலி அறிவிப்பாளரும். ருவிட்டரில் அவரை 29 000 பேர் Follow பண்ணுவது அழகான பெண் ஆளுமைகளையே அதிர்ச்சிக்குள்ளாக்குவது. கானா பிரபா என்கிற இன்னொரு கானா பாடகனின் பெயரும் ஒன்றாக இருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் கானா பிரபாவின் அற மதிப்பீடுகள் மிக்க அதிர்ச்சிக்கும் சர்ச்சைக்குமுரியவை.  இளையராஜாவின் கட்டற்ற ஆதரவாளரான கானா பிரபா சின்மயி Me Too குற்றச்சாட்டுகளை வைத்தபோது கானா பிரபாவின் பதிவுகள் நல்ல உதாரணம். இப்போது கானா பிரபா யாழ்ப்பாணத்தின் மிக மோசமான பாலியல் குற்றவாளியான யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான சடையன் என்கிற என் சண்முகலிங்கனை மகிமைப்படுத்தி அவரை நல்லவராக்க பல பதிவுகளை சமூக ஊடகங்களிலும் தனது Blog இலும் எழுதிவருகிறார். கானா பிரபா விபரமான ஆள்( Detail man) இணையத்தில் சண்முகலிங்கனின் பாலியல் குற்றங்கள் தொடர்ச்சியாக வெளிவந்ததை அவர் அறிந்தே இருக்கிறார். சடையனே தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாக மறுத்ததில்லை. மறுக்கவும் முடியாது.  பெண்களுக்கெதிரான ஆதிகாரிகளின் செல்வாக்கானவர்களின் பாலியல் குற்றங்கள் அசட்டை செய்யப்படவேண

கர்னலின் காமம்

Image
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட மயிர்கூச்செறியும் போர்க்காலக் காதல் கதை   By நட்சத்திரன் செவ்விந்தியன் Woman at the window(1925) Salvador Dali 1987 மார்ச் 30 இரவு, யாழ்நகர்  கிளிபோல ஒரு பெண்டாட்டி கட்டிக்கோ கொரங்கு போல ஒரு வைப்பாட்டி வச்சுக்கோ”          - ஒரு தமிழ்நாட்டுப்பழமொழி                                            1  1987 ம் ஆண்டு முன்பனிக்காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ் குடாநாட்டின் சிவில் நிர்வாகத்தையும் புலிகளே தங்கள் கட்டுப்பாட்டிலெடுப்பதாக அறிவிக்க இலங்கை அரசாங்கம் குடாநாட்டுக்கு எரிபொருள் மின்சாரதடை விதித்தது. அதே மாதத்தில் யாழ் இந்துக்கல்லூரியின் பிரபல்யமான 35 வயதான வெள்ளாள தமிழாசிரியன் விக்னேஸ்வரன் சவூதி அரேபியாவில் பொறியியலாளராக வேலைசெய்யும் தன்னோடு இந்துக் கல்லூரியில் ஆறாம் வகுப்பிலிருந்தே ஒன்றாய்ப்படித்த தன் நெருங்கிய நண்பன் கிளியன் என்ற கிறிஸ்ரோபருக்கு ஒரு கடிதம் எழுதினான். அக்கடிதத்தை யாழ்ப்பாணத்தில் அஞ்சல் செய்யாமல் கொழும்புக்கு மருத்துவ சிகிச்சைக்கு செல்லும்தனது பெரியதாயிடம் கொடுத்து   “பெரியம்மா இது மிகக்கவனம். சிங்களவன் ஆமிக்காரனிட்ட இது அ