Posts

Showing posts from September, 2020

அன்ரன் பாலசிங்கம் வரலாறு 2

Image
நட்சத்திரன் செவ்விந்தியன்   அத்தியாயம் இரண்டு  பிரபாகரன் போராட்டத்தில் தனக்கு போட்டியாக வரக்கூடிய தன்னைவிட திறமையான நேர்மையான மற்ற இயக்கத்தலைவர்களை எவ்வாறு கொன்றாரோ அதேபோல அன்ரன் பாலசிங்கமும் புலிகள் இயக்கத்தில் தனது ஆலோசகர் என்ற பதவிக்கு போட்டியாக வரக்கூடியவர்களை கனகச்சிதமாக திட்டமிட்டு ஓரங்கட்டி அவர்களை கலைத்தார். பாலசிங்கம், பிரபாகரன் என்கிற இரண்டு அரக்கர்கள் ஒருவரையொருவர் இட்டுநிரப்பி வந்ததுதான் புலிகளின் பாசிசம்.  பிரபாகரன் இல்லாமல் பாலசிங்கமும் பாலசிங்கம் இல்லாமல் பிரபாகரனும் தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய அரக்கர்களாக வந்திருக்கமுடியாது. பாலசிங்கம் தம்பதியர் பிரபாகரனை 1979, 1981 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் இந்தியாவில் சந்தித்து சில மாதங்கள் பிரபாகரன் அணியோடு தங்கியிருந்தனர். இவ்விரு தடவைகளிலும் பாலசிங்கத்தால் பிரபாகரனிடம் தன்னை ஒரு இட்டு நிரப்பமுடியாத ஆளுமையாக நிலைநிறுத்தமுடியவில்லை. ஆனால் 1983 திருநெல்வேலித்தாக்குதல்/ஜூலைக் கலவரங்கங்களையடுத்து வந்த நிகழ்வுகளை அடுத்து பாலசிங்கம் தான் புகுந்துவிளையாடவந்த தகுந்த சந்தர்ப்பத்தை மிகச்சாதுரியமாக பயன்படுத்தினார்.  1983 ஆகஸ்டில் சென்னைக்க

பாலகுமார் பாலைநில பச்சோந்தி வரலாறு

Image
By முரளி  ஈரோஸ் முன்கதைச்சுருக்கம்  ஈரோஸ் அமைப்பு இராணுவபலம் மிக்கதல்ல. இராணுவ வழிமுறைகள் அவ்வளவாக கைவரப்பெற்றதுமல்ல. இடதுசாரி சித்தாந்தங்கள் உள்ளிட்ட சித்தாந்தங்களை கற்று அதுபற்றி விவாதித்துக் கொண்டிருந்த அமைப்பு. ஈரோஸ் பற்றி நகைச்சுவையாக சில விடயங்கள் சொல்வார்கள். ஒன்று, பேசியே தமிழீழம் பிடிக்கலாமென நினைத்தார்கள் என்பது. (அதாவது, விஜயகாந்த் பக்கம்பக்கமாக வசனம் பேசி எதிராளிகளை தெறிக்க விடுவதை போல). அதுபோல, ஒரு விடயத்தில் உறுதியாக இல்லாமல் நழுவிச்செல்வதை ‘ஈரோஸ்பாணி’ என்பார்கள். உறுதியாக இல்லாமல், பாம்பக்கு தலையும், மீனுக்கு வாலும் காட்டும் ஆட்களை இயக்கங்கள் பல இருந்தகாலத்திலேயே ‘ஆள் ஈரோஸ்காரன்’ என்று நகைச்சுவையாக கூறுவார்கள்."  பாலகுமாரன் விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒரு கௌரவ உறுப்பினராக இருந்தார். பாலகுமாரனிற்கு புலிகள் கொடுத்த பணியென்றால் அது இறுதி யுத்த சமயத்தில்த்தான். ஆட்சேர்ப்பு. கட்டாய ஆட்சேர்ப்பிற்கு முதற்படியாக வன்னியை வலயங்களாக பிரித்து ஒவ்வொரு முக்கியஸ்தரை பொறுப்பாக நியமித்தார்கள். உடையார்கட்டு பகுதியில் பாலகுமாரன் செயற்பட்டார். வீதியில் செல்லும், வீடுகளில் உள்ள இளைஞர் யு

சாக்காடு

Image
          PÈRE LACHAISE // PARIS, FRANCE இடுகாட்டு பட்டிப்பூ  அழகு  இடுகாட்டு பூ வாசம்  இடுகாட்டு இளவேனில் அழகு  இடுகாட்டு கனி சுவை இடுகாட்டு குருவிக்கு ஒப்பாரி தெரியாது இறுதி ஊர்வலம் அழகு  இளமையை விட அழகு இடுகாடு   - நட்சத்திரன் செவ்விந்தியன்

லாக் டவுண் சினிமாக்கள் 01

Image
  அட்டக்கத்தி இதனை "றொமான்ரிக் காமெடி" என்பதே ஒரு சாதிவெறி. முதலில் இது ஒரு 'காமெடி' படம் அல்ல. இரண்டாவது இது ஒரு 'ரொமான்ரிக்' படமல்ல. ஆனால் விக்கிபீடியா இங்கிலிஷ் இதனை "Romantic" "Comedy" என்றுதான் விபரிக்கிறது. விக்கிபீடியிவில் ஆங்கிலத்தில் இதனை யார் இவ்வாறு எழுதுகிறார்கள் என்பதை ஆராய்ந்தாலே இதன் புதிரை உடைத்து விடலாம். ஆங்கில ஊடக Private Christian பாடசாலை பெரும்பாலும் "உயர்" சாதி மத்தியதரவர்க்க மாணவர்களே இதனை எழுதுகிறார்கள். கலை இலக்கியங்களில் இவர்கள் பூச்சியம். ஆனால் லாபி(Lobby) ஊடக நாட்டாமையில் நூறு. காலனியாதிக்க காலத்தில் Vernacular என்றவொரு சொல்மூலம் அசிங்கப்படுத்திய சுதேசியத்தை இப்போ அசிங்கப்படுத்துகிற மொழி "Romantic Comedy" முழு படமே பின்வரும்  இணைப்பில்  இலவசமாக  கிடைக்கிறது. பார்த்து நீங்களே முடிவெடுங்கள். பா.ரஞ்சித்துக்கு கோடி நன்றிகள். காதல் நிஜமானதா என்பது விவாதத்துக்குரியது. எல்லாக்கேள்விகளுக்கும் இப்படத்தில் விடையுள்ளது. சென்னைக்கு புறத்தேயுள்ள கிராமத்து காதல் கத. கானா பாடல். சந்தோஷ் நாராயணனின் அச

கமக்காரன்(சிறுகதை)

Image
நட்சத்திரன் செவ்விந்தியன்  தைப் பொங்கலுக்கு முதல்நாள் காலையில் கொடிகாமம் வீதியில் நெல்லியடிச்சந்தை நோக்கி மடித்துக் கட்டிய சாரம் மட்டுமே கட்டியிருந்த ஒல்லியன் ஒருத்தன் தோளில் அரைச்சாக்கு நிறைந்த பயறோடு போய்க்கொண்டிருந்தான். ஆயம் என்ற சிற்றூரில் வசிக்கும் அவன் கொஞ்சம் கொஞ்சமாக உவர் ஏறி தரிசாக மாறிவரும் தன்னுடைய சிறு தோட்டத்தில் கடுமையாக மாரடித்து அறுவடை செய்தது அந்தளவுதான். வீட்டில் கொஞ்சம் பழஞ்சோற்றை மனுசிக்கு ஆரோ கொடுத்தது என்ற அருமையான பச்சை மிளகாய்த் துண்டுகளோடும் வழமையான வெங்காயத்தோடும் சாப்பிட்டிருந்தான். மனுசி இஞ்சி போட்டுத்தந்த பிளேன் டீயையும் உள்ளங்கையில் போட்ட ஒரு சொட்டு சீனியில் நக்கி நக்கிக் குடித்திருந்தான்.  நெல்லு வெட்டிய வெற்று வயல்களுக்கு ஊடாக பயணத்தைத் தொடங்கினான். வெறும் பாதத்தில் வெட்டப்பட்ட அடிக்கட்டைகள் குத்தியபோது உடம்பு சிலிர் த்தது. கொஞ்ச நேரத்துக்கு முதல் கடித்த மிளகாயில் நாக்கும் மண்டையும் சிலிர்த்திருந்தது. சோக்கான மிளகாய்தான் என்று எண்ணிக்கொண்டான். சாயம்போன அவனது அரணாக்கயிறு இடுப்பில் சாரத்தின் ஒரு மூலையில் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. வெறுங்காலோடும் ப