Posts

Showing posts from August, 2020

ஒரு நாள் கூத்து(சிறுகதை)

Image
நட்சத்திரன் செவ்விந்தியன் எழுத்தாளன் காட்டுக்கும் நாட்டுக்குமிடையிலுள்ள புல்வெளியிலுள்ள ஒரே தனித்த வீட்டில் குதிரையோடும் இரண்டு நாய்களோடும் (Labrador Retriever, Rottweiler) வசிக்கவேண்டும். மதியத்தில் குதிரையை புல்வெளியில் மேயவிட்டபின் நாய்களோடு காட்டுக்கு வேட்டைக்கு போகிறான். அங்கு ஒரு வனமோகினியை சந்திக்கிறான். பகல்முழுக்க அவளோடு வனத்தில் அலைகிறான். நாய்கள் இவர்களை விட்டு தம்பாட்டுக்கு காடுமணந்து வேட்டையாடுகின்றன. அந்திசாய்கிறபோது வனமோகினி இரவுக்குமுன் தான் போய்விடவேண்டுமென்கிறாள். அவன் தன் நாய்களுக்காக விசில் அடித்தபோது மோகினி மறைந்துவிட்டாள். (அவள் Shrek பட இளவரசிபோல் இரவில் அரக்கியாபவள்)  நாய்கள் வாயில் இரண்டு உடும்புகளோடு பிரசன்னமாகின்றன. இரவில் அவளை தன்வீட்டுக்கு கூட்டிப்போய் அவளுக்கு சமைத்துப்போடும் தன் கலைந்த கனவோடு வீடேகிறான். பாதிவழியில் இன்னொரு விசிலடிக்க குதிரை கணங்களில் வாயில் நுரைதள்ள வந்து சேர்கிறது. உடும்புகளை கொடியால் கட்டி தோளில் போட்டு குதிரையில் முன்னிரவில் நட்சத்திரங்களை GPS ஆகவைத்து வைத்து வண்டிப்பாதைகள், காடு, மலை, கழனி கடந்து நகரம் போகிறான்.  அந்நகர மதுச்சாலையொ

பிரபாகரன் மாத்தையா(சிறுகதை)

Image
   நட்சத்திரன் செவ்விந்தியன்  தர்மபுரக்காட்டுக்குள்ளிருந்த பிரபாகரனின் பங்கருக்குள் நாமல் ராஜபக்க்ஷவும் மாலக சில்வாவும் (மேர்வின் சில்வாவின் மகன்) நானும் படிகளில் இறங்கி போகிறோம். மூன்றாவது தளத்தில் டைனிங் கோல் மாதிரியிருந்தது. அங்கிருந்த ஒரு பீரோவுக்குள் அன்ரன் பாலசிங்கம் அரைவாசி குடிச்சிட்டு வைத்திருந்த அரிய சிங்கிள் மோல்ற் ஸ்கொச் விஸ்கி போத்திலொன்றையும் அரிய கியுபன் சுருட்டுக்களையும் கண்டெடுக்கிறான் மாலக. நாங்கள் மூவரும் மேசையிலிருந்து ஒரு பெக் அடிக்க மாலக தள்ளிக்கொணர்ந்த செக் குடியரசை சேர்ந்த நீலக்கண் சரக்கு அப்பொலேனா  “ நான் ஜேர்மன், பெல்ஜியம் பியர்தான் குடிப்பேன்”  என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்த குளிர்சாதனப்பெட்டிகளில் சல்லடை போட்டாள். அவளுக்கு பியர் கிடைக்கவில்லை. அடேல் அன்ரி பாதி குடிச்சிட்டு வைத்திருந்த தென் ஆஸ்திரேலிய பரோஸா பள்ளத்தாக்கை சேர்ந்த செம்மதுப்புட்டி ஒன்று மட்டும் கிடைக்கிறது. அவள் தொடர்ந்து தேடியபோது அரச வம்சத்தினர் சாப்பிடும் கவியார் மீன் முட்டை ரின்கள் பலவும் விலையுயர்ந்த ரஷ்ய வோட்கா மதுவும் கிடைத்தன. கவியார் ரின்களைக்கண்டு மிகப்பரவசமடைந்த அப்பொலேனா எங்களுக்கு ப