Posts

Showing posts from July, 2020

கூட்டமைப்பு உருவான உண்மை வரலாறு

Image
நட்சத்திரன் செவ்விந்தியன் Rushangan Kodeeswaran, Amirthanayagam Nixon, Gowripal Sathiri Sri, DBS jeyaraj, Ramasamy Thurairatnam முதலிய "பத்திரிகையாளர்கள்"  கூட்டமைப்பு புலிகளால் 2001 ல் ஏற்படுத்தப்படவில்லை என்றும் கூட்டமைப்பு 2004ன் பின்னரே புலிகளால் கட்டுப்படுத்தப்பட்டது என்றும் ஒரு வரலாற்றுத்திரிப்பை செய்கின்றனர். கூட்டமைப்பு ஆரம்பத்திலிருந்தே(2001) புலிகளால் துப்பாக்கிமுனையில் உருவாக்கப்பட்டது என்பதை பின்வரும் எனது கட்டுரை ஆதாரங்களுடன் விளக்குகிறது. 2018 இறுதிப்பகுதியில் கம்பவாரிதி ஜெயராஜ்  நடத்திய ஒரு மேடையில் Kesavan Sajanthan கூட்டமைப்பு புலிகளால் துப்பாக்கி முனையில் உருவாக்கப்பட்டது என்பதை வெளிப்படையாக பேசியிருந்தார். எதிரிகளையும் துரோகிகளையும் கொல்லாது மிரட்டல், வசதிவாய்ப்பு மற்றும் பணம் அல்லது Blackmail என்கிற பணையவைப்பு/பொறிவைப்பு மூலம் தங்களுக்கு வேலைசெய்பவர்களாக மாற்றும் தந்திரம் ஒரு பழைய ராசதந்திரம். இது ஸ்ராலின்கால சோவியத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்ட உத்தி. புலிகள் இந்த உத்தியை பயன்படுத்த காரணமாக இருந்தவர் புலிகளின் பல சகுனி வேலைகளுக்கு காரணமாக இருந்த அன்ரன் பால

பொக்ஸ் நாவல்: ஒரு மலின இலக்கியம்

Image
Pornography of Literature மதிப்புரை  நட்சத்திரன் செவ்விந்தியன் 2009ல் ஈழப்போர் முடிந்தபின் தமிழ் உணர்வை சனரஞ்சகமான கச்சாப்பொருளாக்கி சுமாரான மற்றும் மோசமான ஈழப்போர் சம்பந்தமான நாவல்கள் வெளிவந்தன. ஆனந்த விகடன் போன்ற வியாபார நிறுவனங்கள் ஊக்குவித்த இந்த போக்கின்படி தமிழ்க்கவி, தமிழ்நதி, சயந்தன், குணா கவியழகன், தீபச்செல்வன் முதலியோர் எழுதிய நாவல்கள் வெளிவந்து சனரஞ்சக மதிப்பைபெற்று பிரபல்யமாகின்றன. இந்த நாவல்களை எழுதியவர்களுக்கு தமிழகத்தில் கிடைக்கும் பிரபல்யத்தால் மனங்குமைந்து "ரென்சனான" ஷோபாசக்தி தனக்கு இருக்கும் தெரிவுகளை ஆராய்கிறார். ஷோபாசக்திக்கு தனது சரக்கும் இலக்கிய திறமைகளும் தீர்ந்துபோனது தெரியும். புலி எதிர்ப்பாளன், புலி விமர்சகன் போன்ற தனக்கு எதிராக இருக்கிற வணிக சாபங்களையும் சமரசம் செய்து குத்துக்கரணமடித்து புலியாதரவு நாவலாகவே எழுதுவதைத்தவிர தன்னிடம் திராணி இல்லை என்பதை உணர்ந்த ஷோபாசக்தி தீட்டியதுதான் "ஒப்பரேஷன் Box"                               மோசடி இதழ்: 7-11-2012 1. முன்னாள் பெண்புலி தளபதி விபச்சாரம் செய்வதாக புனைவது. இது ஆனந்த விகடன்(7-11-2012) பேட்டிய