Posts

Showing posts from May, 2022

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

Image
  By Maj. Gen. Kamal Gunaratne தமிழில்  Rajh Selvapathi                               (முன்னாள் ஐ. நா. சபை     உத்தியோகத்தர், கிளிநொச்சி) (முன்) கதைச்சுருக்கம் 800x800 சதுர மீற்றர் நிலப்பரப்புக்குள் மூன்றுபக்கமும் இராணுவத்தினரால் சூழப்பட்ட நிலையில் தப்பிப்பதற்காக மூர்க்கத்தனமாக முயன்று கொண்டிருந்த பயங்கரவாதிகளின் கடைசி மணித்துளிகளை மீட்டி பார்ப்பது முக்கியமானது என நான் நம்புகின்றேன். முன்பே கூறியது போல் மே 17 விடிகாலை பொழுதில் நந்திகடல் நீரேரியின் மேற்கு கரையோரத்தில் இருந்த முன்னரங்க நிலைகள் மீதுகடற்புலிகளின் 06 தற்கொலை படகுகளின் உதவியுடன் அவர்கள் தாக்குதலை தொடங்கினார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் முல்லைத்தீவு காடுகளுக்குள் அவர்களால் சென்றிருக்க முடியும். அங்க மறைத்து வைக்கப்பட்டிருந்த உணவு, வெடிபொருட்கள், ஆயுதங்களின் துணையுடன் பல மாதங்கள் தாக்குபிடித்திருக்க முடியும். போரும் தொடர்ந்து கொண்டிருக்கும். எப்படியிருந்தாலும் தைரியமும் தளம்பல் இல்லா போராடும் உத்வேகத்தையும் கொண்ட எமது படையினர் அவர்களின் முயற்சியை நாசமாக்கிவிட்டனர். ஆகையால் அவர்கள் வேறு ஒரு திட்டடம் போட வேண்டி இருந்

இடதுசாரி பொருளாதார அடியாள் சோபாசக்தியின் வாக்குமூலத்திற்கு நெற்றியடி

Image
இலங்கையின் சமகால பொருளாதார சீரழிவுக்கான காரணங்கள்  By Dr. முத்துகிருஷ்ணா சர்வானந்தன்.  .  ஆய்வாளர்,  அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகம்) சமகால இலங்கைப் பொருளாதார நெருக்கடிகள் பற்றி திரு. சோபாசக்தி அவர்கள் முகநூல் சமூக வலயத்தளத்தில் மேற்கொண்டுள்ள  பதிவு மிகவும் வரவேற்கத்தக்க விடயம் ஆகும். சமூக வலைத்தளங்களில் பதியப்படும் பெருவாரியான விடயங்கள் மற்றும் கருத்துக்கள் ஆதாரமற்ற உண்மைகளுக்கு புறம்பானவை என்பதினால் நேரப் பற்றாக்குறை காரணமாக நான் பொதுவாக திருத்தங்களையோ மாற்றுக் கருத்துக்களையோ சமூக வலயத்தளங்களில்  தெரிவிப்பது இல்லை. மேலும் நான் முகநூல் உறுப்பினரும் அல்ல. இருந்த பொழுதிலும் எனது நண்பர் நட்சத்திரன் செவ்விந்தியன் கேட்டுக்கொண்டதனை ஏற்று திரு. சோபாசக்தி அவர்களின் பதிவிற்கு பதில் அளிக்க விரும்புகிறேன்.   இலங்கை சுதந்திரம் பெற்றபோது செல்வந்த நாடாக இருந்ததா?   இலங்கை சுதந்திரம் பெற்ற 1948 இல்  “ஆசியாவிலேயே ஐப்பானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பணக்கார நாடாக இலங்கை இருந்தது”  என்ற சோபாசக்தியின் கூற்றானது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இருப்பினும் தனிநபர் வருமானம் அல்லது தலா வருமானம் கு