Posts

Showing posts from September, 2021

💥கள நிலவரம்💣 ஈழப்போரின் இறுதிக்காட்சிகள்

Image
   என் சனம் படுகின்ற தொல்லைகளை நான் கண்டேன். அவர்களிடும் கூக் குரலை நான் கேட்டேன். அவர்கள் படும் வேதனையை நான் அறிவேன். பார்வோன் பிரபாகரனிடம் போய்ச் சொல் "என் சனத்தை போக விடு"                                    - யாத்ராகமம் By சிவராசா கருணாகரன்   ஈழப்போரின் இறுதி நாட்களைப்பற்றி தமிழில் பக்கச்சார்பற்று எழுதப்பட்ட இதுவரையில்  ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோரால் படிக்கப்பட்ட மகத்தான கள ஆய்வறிக்கை👇 நாயிற் கடைப்பட்ட நம்மை                                                      இம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி      ஆடப்பொற்சுண்ணம் இடித்து நாமே                                                            - திருவாசகம்                                                   2006 ஆகஸ்ட் 11இல் விடுதலைப் புலிகள் யுத்தத்தை ஆரம்பித்ததுடன் வன்னிக்கான கதவுகள் பெரும்பாலும் மூடப்பட்டுவிட்டன. ஒரு பக்கத்தில் சிறிலங்கா ராணுவம் பாதைகளை மூடியது என்றால் மறுபுறத்தில் புலிகள் சனங்களுக்கான தொலைத்தொடர்புகள், போக்குவரத்து, பயண அனுமதி எல்லாவற்றையும் மூடினார்கள். வன்னி மக்கள் இரண்டு தரப்பினருடைய நெருக்கடிகளுக்கும்

இந்தியா நமக்களித்த அருங்கலையகம்: யாழ் கலாச்சார நிலையம்

Image
  யாழ்ப்பாண கலாசார நிலையம் - கட்டடக்கலையின் ஊடாக ஜனநாயகத்தை வெளிப்படுத்தல்   By கு.பதீதரன்(கட்டடக்கலைஞர்) யாழ்ப்பாணம் பொது நூலகம் மற்றும் புல்லுக்குளம் இரண்டிற்கும் இடையில், முன்பு திறந்வெளி அரங்கு இருந்த இடத்தில் யாழ் மாநகரசபைக்கு சொந்தமான காணியில், குறிப்பிட்ட யாழ்ப்பாண கலாசார நிலையம் அமைகின்றது. இந்திய அரசின் 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியில் அமைக்கப்படுகின்றது. இதற்கான கட்டட வடிவமைபப்பு ஆனது, 2011 யூன் மாதம் அறிவிக்கப்பட்ட கட்டடக்கலைஞர்கள் இடையில் நடத்தபட்ட போட்டியின் ஊடக தெரிவு செய்யப்பட்டது.  இப்போட்டியினை இலங்கை கட்டடக்கலைஞர் அமைப்பு மற்றும் இந்திய உயர்தானிகரகம் இணைந்து மேற்கொண்டனர். போட்டியில் பங்குபற்றிய இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 29 வடிவமைப்பாளர்களில் கொழும்பில் வசிக்கும் கட்டடக்கலைஞர் மதுர பிறேமதிலக மற்றும் அவரது நிறுவனத்தினர் முதலிடம் பெற்றனர்.                                       சிற்பி: மதுர திலகம் இவருடைய கற்பனையில் உருவான கட்டடம் 2016 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு முடிவுறும் தருவாயில் இருக்கின்றது. கட்டட வடிவமைப்பு பற்றி குறித்த திட்ட

இலக்கிய திருடன் சாரு நிவேதிதா

Image
  இணையத்தில் வளைய வரும் நண்பர்கள் இந்தத் தலைப்பை பார்த்து அதிர்ச்சியடையக் கூடும் .  அல்லது எதிர்மறையாக தலைப்பை வைத்து இந்தப் பதிவு புகழ் அடைய நினைப்பதாக கருதவும் கூடும் .  அப்படியெல்லாம் எதுவுமில்லை .  இது அக்மார்க் உண்மை .  தகவல் பிழைகளுடன்   தப்பும் தவறுமாக சாருவுக்கு  ‘ பத்தி (?)’  எழுத வருமே தவிர புதினத்துக்கும் அவருக்கும்  7  கடல் , 7  மலை தூரம் . உதாரணத்துக்கு அவரது சிறுகதை தொகுப்பை எடுத்துக் கொள்வோம் .  இந்த  2009 ம் ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை எதுவென்றால் ,  அது   சாரு நிவேதிதாவின்  ‘ முழு (?)’  சிறுகதைகள் அடங்கிய தொகுப்பான  ‘ மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள் ‘  தொகுப்புதான்  ( உயிர்மை வெளியீடு ). ‘ சாரு நிவேதிதா  ‘ எழுதிய ‘  சிறுகதைகளின் முழு தொகுதி இது ‘  என தொகுப்பின் பின் அட்டை சொல்கிறது .  உண்மையிலேயே சாருவின் முழு சிறுகதைகளும் அடங்கிய தொகுப்பா இது ? சத்தியமாக இல்லை .  அந்த  ‘ தொகுப்பில் ‘  குறிப்பிட்டு சொல்லும்படியாக இருகதைகள் மிஸ்ஸிங் .  ஒன்று  ‘ இந்தியா டுடே ‘  இதழில் வெளியாகி  ‘ இலக்கிய சிந்தனை ‘  பரிசு பெற்றது .  இன்னொன்று  ‘ குமுதம் ‘  குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடு