சவாரித்தம்பரும் சின்னத்தம்பியும்

அது 2007. கனடாவில் ஒரு இனிய கோடைகாலத்து  காலையில் 2 தமிழர்கள் மது அருந்தியபடியே தமிழ்த்தேசியம், புலிப்பாசிஸம் பற்றி சம்பாஷிக்கிறார்கள் 

2007 கனடிய வசந்தகாலத்தில் நட்சத்திரன் செவ்விந்தியன்  எழுதி தேனியில் வந்த கட்டுரை. புலியின் அழிவு ஆருடம் சொல்லப்பட்டிருக்கிறது

  கனடாவில் வேனில் காலம். புதிதாக மணமாகியிருந்த சின்னத்தம்பி சங்கானைச் சந்தைக்கு தனியாக அதிகாலையிலேயே சென்று மரக்கறி மீன்சாமான்களை வாங்கிவந்து தன் இளம் மனைவி கனகாவை அசத்தினான். தன்னுடைய புதுப்புருசனை "அதிகம் வேலை வாங்கி கஸ்டப்படுத்துகிறேனோ" என்று குற்ற உணர்ச்சியால் வருந்திய கனகா

 "சரி இண்டைக்கு வேணுமெண்டால் பப்புக்குப் போய் ரண்டு பியர் குடிச்சிட்டு வாங்கோ. நான் சமைச்சு வைக்கிறன்" 

என்றாள். தன்னுடைய மனுசிதான் இதைச் சொல்லுகிறாளோ என்று ஒரு கணம் நம்ப மறுத்த சின்னத்தம்பி, மனுசி மனம் மாறினாலும் என்று அவசர அவசரமா இறங்கினான். 

வெளியில பத்துமணி வெய்யில் சின்னத்தம்பியின்ர முகத்தில அடிக்க அவனுக்கு யாழ்ப்பாணத்து தெருவொன்றில நடந்த மாதிரி இருந்தது. வயுத்துக்குள்ள வண்ணாத்திப்பூச்சி பறந்தது. கனகாவையும் தன்னோட சேர்ந்து பியர் அடிக்கப்பழக்கினால் இந்தக் கோடையில மேப்பிள் மரத்துக்குக் கீழயிருந்து அவளோட பியர் குடிக்க என்ன சோக்காயிருக்கும் என்று அங்கலாய்த்தவன்   

"இஞ்சீ இடுப்பழகி.......கள்ளச் சிரிப்பழகி......."  

என்ற பாடலை முனகியவாறு பப் வாசலை வந்தடைந்தான். அப்போதுதான் சனிக்கிழமைக்கான 2 ஆங்கிலப்பேப்பரும் ஒரு பிரெஞ்சுப்பேப்பர் கட்டுகளோடும் வந்த சவாரித்தம்பரிடம் மாட்டிக்கொண்டான். இருவரும் சேர்ந்து பியர் குடிக்க உள்ளே போனார்கள். 

ஆங்கிலம் பிரஞ்சு மட்டுமல்ல சிங்களம் தமிழிலும் அத்துப்படியான சவாரித்தம்பர் (இப்போது சமஸ்கிருதமும் ஹிந்தியும் கற்றுக்கொண்டிருக்கிறார்) குட்டி யாழ்ப்பாணமான ஸ்காபரோவில் ஒரு சின்னக் காள் மார்க்ஸ் மாதிரியான புத்திஜீவி. அவருடன் சேர்ந்து குடிக்க இன்று தனக்கு கிடைத்திருப்பது இரண்டாவது அதிஸ்டம் என்று நினைத்தவாறு சின்னத்தம்பி இரண்டு வெண்ணுரை ததும்பும் பொன்னிறபியரை வாங்கிவந்து தொடங்கினான். 

 சவாரித்தம்பர் என்ன சின்னத்தம்பி கலியாணக்களையில நல்ல சந்தோசமாயிருக்கிறாய் போலயிருக்கு. மனிசியையும் முந்தநாள் மாக்கம் ரோட்டில கண்டனான். சரியாய்ப் பூரிச்சுப்போயிருக்கிறாள். நீயொரு சிங்கன் தானடா....ஹாஹ்.... ஹாஹ் ஹாஆஆ அ.........

 சின்னத்தம்பி  ஹி..... ஹி.......ஹி...... இல்லையம்மான் எல்லாம் உங்கட புண்ணியந்தான். எல்லாம் நீங்கள் சொல்லித்தந்த காமரகஸியங்கள் தான்.... மனுசி முதல்நாளே என்னை சந்தேகித்து கேள்வி கேட்கத்தொடங்கிவிட்டாள் ...உனக்கு இதுக்குமுதல் எத்தனை பொம்பிளையளோட தொடுப்பிருந்தது? என்ன நீ பெண்ணுடலில PhD முடிச்சமாதிரி என்னுடல சாதுரியமாய்க் மீட்டிறாய் அப்பிடி இப்பிடி யெண்டு. நான் இல்லையெடியாத்தை எனக்கு பிறக்டிக்கல் நொலேட்ஜ் ஒண்டும் தெரியாது. தியரெக்டிகலா திருக்குறள் காமத்துப்பால் மாதிரியான புத்தகங்களில படிச்சது மட்டும்தான்... அப்பப்ப ட்வுட் வந்தால் அம்மான் சவாரித்தம்பரட்டைக்கேட்பன் எண்டு சொல்லி சமாளிக்கிறதுக்கிடையில எனக்கு உயிர் போட்டுது...... 

 சவாரித்தம்பர்: அடி சக்கை! அது சரி என்ன நீ அண்டைக்கு ஸ்காபரோவில நடந்த சிவத்தம்பியின்ரை பவள விழாக்கொண்டாட்டத்துக்குப் போனமாதிரியிருந்தது.

 சின்னத்தம்பி: இல்லையம்மான் நான் சும்மா விடுப்புப் பாக்கப்போனனான். உங்களட்டைக்கேட்கோணுமெண்டு யோசிச்சனான்.... ஏன் காலம் சஞ்சிகை வல்வை மக்களின் ஆதரவோடு சிவத்தம்பியின் காலம் சிறப்பிதழோடு விழாவையும் நடத்தினவங்கள்?

 சவாரித்தம்பர்: தம்பி காலம் செல்வம் ஒரு பக்கா யாவாரி. அவனுக்கு காற்றடிக்கிற திசையில யாவாரம் செய்யத்தெரியும். உனக்குத்தெரியும் தானே இந்தமுறை இயல் விருதுவும் தலைவரின் கரையார சாதியைச்சேர்ந்த தாசீசியசுக்குத்தான் குடுக்கப்பட்டது. ஏறத்தாழ ஒரே காலத்தில இரண்டு விழாவையும் வச்சான் செல்வம். ஒரே கல்லில இரண்டு மாங்காய் அவனுக்கு. தேசியப் பொற்காலப் புனைவில திளைத்திருக்கிற கணிசமான டொரண்டோ கரையாரும் படையெடுத்து வந்தார்கள். 

இப்பெல்லாம் சாதி அரசியல் தான் தம்பி ஆட்சி. உந்தக் கோபாலசாமி ம.தி.முக காரன் ஸ்டாலின் , கருணாநிதியையே சலஞ்செய்கிற மாதிரி தமிழ் நாட்டில தனக்கு செல்வாக்கு இருக்கெண்டு கொஞ்ச நாளுக்கு பிலிம் காட்டிக்கொண்டு திரிஞ்சான். பிறகுதான் எனக்கெல்லாம் தெரியவந்தது கோபாலசாமியின்ர உண்மையான வாக்குவங்கி அவன்ர ஜாதிச்சனங்கள்தான். 

தாசீசியஸ் இப்ப ஒரு பழுத்த புலி. முந்தி அப்பிடியில்லை. கிட்டு லண்டனுக்கு வந்த பிறகுதான் பொடி போட்டு மாயம் போட்டு தாசீசியஸ்ஸை மயக்கியெடுத்தவன். தாசீசியஸ்ஸின் களரி குழுவினர் ஒரு உருக்கமான பாடலை நாடகமாக்கிப்போட்டுக்கொண்டிருந்தனர். அதுக்குக் கிட்டுவும் வந்திருந்தவன். பாடலின்ர உருக்கத்தில சில சனங்கள் தங்கட துயரங்களை நினைத்து அழத்தொடங்கீட்டுதுகள். கிட்டுவும் தனக்கு மாத்தையாவும் பிரபாகரனும் சேர்ந்து சதிசெய்து தன்ரை காலை முறித்த சோகத்தை நினைச்சு சாடையா தேம்பீட்டான். இதைக்கண்டு தன்ரை நாடகத்தின்ர வெற்றியெண்டு தாசீசியஸ் குழைய கிட்டு -Advertising Artist- விளம்பரக்கலைஞன் சந்தர்ப்பதைப் பயன்படுத்தி தாசீசியஸ்ஸுக்கு குளிசை குடுத்து வளைத்து எடுத்தான். 

தாசீசியஸ் எல்லாம் உண்மையான நாடகக் கலைஞன் என்டால் தேசியப்புனைவுகளை எல்லாம் கடந்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே ரஷ்யாவில் யூதர்களுக்கு எதிரான இனவாதத்தை முளையிலேயே எதிர்த்துப்போராடிய முதல் நவீன நாடகக் கலைஞன் அன்ரன் செக்கோவ் போல தேசியப் புனைவுகளை அறிந்து நிராகரித்து இருக்கவேண்டும். பாவம் தாசீசியஸ் வாத்தியருக்கு சாதி அரசியலையே இன்னும் கடக்கமுடியவில்லை.

 சின்னத்தம்பி: ஆனா அம்மான் கனடாவின்ர இயல் விருது தேர்வுக்குழுவில ஆர் ஆர் இருக்கினம். எனக்குப் பார்க்க ஆரம்பத்தில அது நல்ல மாதிரி தொடங்கினமாதிரி இருந்தது?

 சவாரித்தம்பர்: எனக்கும் ஆரம்பத்தில அதில நம்பிக்கை இருந்தது. சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் எண்டு அதிகமாக பிராமணருக்கு குடுக்கப்பட்டபோதும் சகிப்புத்தன்மையோடும் நம்பிக்கை இருந்தது. ஜோர்ஜ் ஹாட் , மலையக கணேஸ் ஆகியோருக்கு கொடுக்கப்பட்டதில் எனக்கு குறைந்த பட்ச அதிருப்தியும் இருந்ததில்லை. சுந்தர ராமசாமி தன்னளவில் நேர்மையானவராக இருந்ததோடு பிரபாகரனை ஒரு ஸ்டாலின் போன்ற பாஸிஸ்ட் என்பதை தன் நெருங்கிய நண்பர்களிடம் வெளிப்படையாகவே சொல்லிவந்தவர். வெங்கட் சாமிநாதன் தன்னையறியாமல் தத்துவார்த்த தவறுகள் விட்டாலும் ஒரு குழந்தையைபோல தனக்கு சரி, பிழை என்று பட்டதை நேரடியாகவே எழுதியும் பேசியும் வந்தவர்.

 நான் ஆர் ஆர் இயல் விருது தெரிவு நடுவர்களாய் இருக்கும் என்பதை தேடத் தொடங்கினேன். முத்துலிங்கம், என்.கே.மகாலிங்கம் செல்வா கனகநாயகம், காலம் செல்வம், சேரன் என்போர் இருப்பது தெரியவந்தது. இதில் கனக நாயகத்தை பல்கலைக் கழக அங்கீகாரத்துக்காக வைத்திருக்கிறார்களே தவிர நவீன தமிழிலக்கியத்தைப் பற்றி மனுசனுக்கு ஒரு மசிரும் தெரியாது. காலம் செல்வத்துக்கு 20%இலக்கியமும் 80% யாவரமும் தெரிந்த யாவாரி. பழைய முத்துலிங்கத்துக்கு (அக்கா) இலக்கிய நேர்மை இருந்தாலும் இப்போது அவர் அதிகாரத்தில் மட்டுமே ஆசையுள்ள அரசியல் (இலக்கிய) வாதியும் புலி வாதியும் (முத்துலிங்கம் கிட்டுவின் குரங்கைப்பற்றி ஒரு உப்புச் சப்பிலாத புலியாதரவு சிறுகதை எழுதினான். 

கடைசியா மிஞ்சிறது "பெரும் ஒழுக்க சீலனும் பெருங்கவியுமான" சேரனே. சேரன் பலம் அறிந்து புகுந்து விளையாடுகிற பக்கா. அதே விருது பெற்ற பத்மநாப ஐயரும் இப்ப தேர்வுக்குழுவில இருக்கிறார். பக்கா சேரனும்  முத்துலிங்கமும் பத்மனாப ஐயரும் தான் இயல் விருதுக்குள்ளை உண்மையான அதிகாரம் கொண்டவனுகள்.........

 சின்னத்தம்பி: அப்ப இப்ப பாஸிசப் புலிகளின்ர அடிவருடிகள்தான் இயல் விருதுக்காரர் என்டு சொல்லுங்கோ. அது சரியம்மான், ஏன் புலிகளை விமர்சித்துக்கொண்டிருந்த சேரன் குத்துக்கரணமடித்து ஒரு புலிப் பாஸிஸ்டா மாறினவன்?

 சவாரித்தம்பர்: அது சொல்லுறதுக்கு இன்னும் இரண்டு பியர் வேணுமப்பு. நீ வேண்டியந்த Moosehead பியர் அஞ்சியேத்துக்குதவாது. இந்தக் கனடாக் குளிராண்டியளுக்கு கோப்பி வடிக்கத்தெரியுமே தவிர ஒரு ஆன பியர் வடிக்கத்தெரியாது. நீ ரண்டு Red racer pale ale பியர் வேண்டிக்கொண்டு வா. (மடியில் இருந்து காசை எடுத்து சின்னத்தம்பியடம் கொடுத்து பியர்வாங்கிவரப் பணிக்கிறார். பியர் வந்ததும் தொடர்கிறார்)

 தம்பி எங்கட மரபில எட்வாட் செய்த், நோம் சோம்சி போன்ற நேர்மையான, திறமையான பேராசிரியர்கள் இருந்து வந்ததில்லை. எங்கட மரபில சிவத்தம்பி, சிவசேகரம் மாதிரியான பச்சோந்திகள், குறைமாதங்கள் தான் இருந்துவந்திருக்கிறார்கள்.

 சிவத்தம்பி, சிவசேகரத்தை எடுத்துக்கொண்டால் எக்காலத்திலும் முற்போக்குக்கு எதிர் முகாமிலேயே இருந்திருக்கிறார். எழுபதுகளின் ஆரம்பத்தில் தமிழ் தேசியம் முற்போக்கானதாக இருந்தபோது சிவத்தம்பி அதற்கு எதிர்மூகாமில பேரினவாதமும் இடதுசாரித்தனமும் கலந்திருந்த சிறீமாவோ கூட்டணியோடு கதிரை பதவிக்காக ஒட்டியிருந்தார். சிவசேகரத்தான் பேராதனையிலிருந்து கொண்டே இரகசியமாக கோணேசர் ஆலயத்திற்கு பணம் அனுப்பிக்கொண்டு (சிவசேகரத்தின் தாயார் தன் மகன் மார்க்ஸிசம் கதைப்பது எல்லாம் வேஷம் என்று வடிவாகச் சொல்லுவார்) ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனமே இல்லை என்று எழுதினார். எண்பதுகளின் பிற்கூறில் தமிழ் தேசியம் புலிப் பாசிஸமாக சீரழிந்த பிறகு அதற்குள் சிவத்தம்பியும் சிவசேகரமும் போனார்கள். இந்த மரபில் வந்த விரிவுரையாளர் சேரனிடம் இதைவிட வேறை எதை எதிர்பார்க்கமுடியும். வம்ச மரபு தவறக்கூடாது பாருடா. 

                        சேரன். GRANDIOSITY                                   Pompous superiority or pretentiousness


சேரனிடம் மேற்கூறிவர்களைடம் இல்லாததைவிட வேறு சில மோசமான Narcissistic நோய்க்கூறுகளும் உண்டு. தன்னைதானே முன்னிலைப்படுத்துதல், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிய முடியாமை, அதீதமான கவனத்தை வேண்டுதல் மற்றும் பார்க்குமிடமெல்லாம் தான் நீக்கமற நிறைந்திருக்கவேண்டும் என்கிற Grandiose மாயை என்பன மேற்கூறிய நோய்க்கூற்றின் குணங்குறிகள். குறித்த நோய் காரணமாகவே சேரன் வன்னிக்குப் போய் காவடி எடுக்கும் அளவுக்கு புலியாக மாறினவன். எல்லாவற்றையும் விட தன் தலையைச் சுற்றி ஒளிவட்ட்டம் சுற்றுவதாகவும் ஜேம்ஸ் பொண்டைப்போல அற்புதங்களும் சாகசங்களும் செய்யக்கூடியவனாக தன்னை உண்மையிலேயே நோய் காரணமாக நம்புகிறான். மக்கள் சக்தி வரலாற்றின் போக்குகளைத்தீர்மானிப்பதில்லையென்றும் வரலாற்று நாயகர்களான தாங்களே வரலாற்றைத்தீர்மானிப்பதாகவும் நம்பி வரலாற்றில் மோசம்போன ஹிற்லர், ஸ்டாலின் போன்ற தனிமனித சிந்தனைகளுக்கு ஒப்பானது இது. 

சின்னத்தம்பி உனக்குத்தெரியும்தானே ஹிட்லர் ஜேர்மனியில ஆட்சியில இருந்தபோது பெரும்பான்மையான ஜெர்மானியச் சனங்கள் மகா தவறுதலாக கிட்லரின் பாஸிசம் தான் ஜேர்மானியர்களின் மீட்சிக்கு வழி என்று நம்பினார்கள். கிட்லரின் பாஸிச ஆட்சி நடைமுறைகளான பத்திரிகைச் சுதந்திரத்தை மறுத்தல், சிவில் ஜனநாயக நிறுவனங்களை அழித்தொழித்தமை என்பனமூலம் மக்களின் பிழையான நம்பிக்கையை மேலும் வலுவாக தொடர்ந்திருக்குமாறு உறுதிப்படுத்தின. இதே நிலமைதான் தம்பி இப்ப எங்கட பிரச்சனையிலேயும். எங்கட பிரச்சனையில உண்மையிலேயே புலியின்ரை பாசிச ஆட்சிக்குக் கீழயிருந்து துன்பப்படுகிற வன்னியிலயிருக்கிற, வடகிழக்கில இருக்கிற, இன்னும் ஏன் தென்னிலங்கையில இருக்கிற பெரும்பான்மையான தமிழ்ச்சனத்துக்கு புலி சிங்கள பேரினவாததைப்போலவே இன்னுமொரு கொடிய சக்தி என்பது புரிகிறது. ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளிலெ இருக்கிற தமிழ் சனத்துக்கும் தமிழ் நாட்டுச் சனத்துக்கும் புலிப்பாசிசத்தின் கொடிய உண்மை நிலவரம் புரியவில்லை. தமிழ் நாட்டிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உலக நிலவரங்களை திரித்து வெளியிடுகின்ற CNN Fox news போன்ற செய்தி ஸ்தபனங்களைப்போலவே பெருமளவு ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. 

இப்பிடியான நிலமையில உண்மையை எடுத்துச் சொல்ல உண்மையும் ஓர்மமும் நேர்மையும் தேவை. சேரன் போன்ற Narcissist இடம் அது இல்லை. தான் ஒரு பெரும்புலவனாயும் புத்திஜீவியுமாய் தமிழ் நாட்டிலும் புலம்பெயர்தேசத்திலும் படம் காட்டவேண்டுமென்றால் புலியின் ஒத்தோடியாய்க் காட்டுவதுதான் Tactical ஆனது, தனக்கு தற்போதைக்கு நன்மையானது என்று சேரன் நம்புகிறான். 

சின்னத்தம்பி: ஏனம்மான் எப்பவும் சேரனுக்குப்பின்னால விசுவாசிகளாயும் அடிவருடிகளாயும் ஒரு கூட்டமே திரியுது? 

சவாரித்தம்பர்: சேரன் மாதிரியான ஒரு பச்சோந்தி ஆட்களைக் கதைச்சு மயக்கி அவர்களின்ர பலவீனங்களைக் கண்டறிந்து, பலவீனம் இல்லாட்டி புதுசா ஒரு பலவீனத்தை அவங்களுக்குப் புகுத்தி, அந்தப் பலவீனங்களுக்கு லஞ்சமாய் தீனி போட்டு குறித்தவர்களின்ர மனச்சாட்சியை வாங்கிப்போடுவாங்கள். பிறகு இந்தக் குறித்தவர்கள் விசுவாசமாய் சேரனுக்காய் வேலை செய்வாங்கள். இங்க கனடாவிலையும் முந்தி புலியாலை பாதிக்கப்பட்ட புலிகளை விமர்சித்து வந்த இலக்கியவாதிகள் கொஞ்சப்பேரும் வேறை சிலரும் சேரன்ரை ரசிகர் வட்டமாய் திரியினம். 

 சின்னதம்பி: புலியாலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஆட்கள். அவங்கள் ஏனம்மான் சேரன் புலியானாப்பிறகும் அவனுக்குப் புறகால மானம் ரோசம் இல்லாமல் திரியுறாங்கள்?

 சவாரித்தம்பர்: ஏனெண்டாலெடா சேரன் லஞ்சமாய்க் குடுத்த, குடுக்கிற தீனி இவங்களுக்கு இன்னும் வேலை செய்யுது. இவங்களுக்கெல்லாம் கொள்கை கோட்பாடு நீதி நியாயம் என்பவற்றை விட பக்கா சேரன் மீதான தங்களின் விசுவாசம் தான் முக்கியமாகக் கிடக்கு. சேரன்ர நிழல் பட்டாலே தாங்கள் தழைச்சிடலாம் எண்டு நினைச்சிட்டிருக்கிற பெக்கோக்கள். சேரன் கடிச்சிட்டுப் போடுகிற எலும்புத்துண்டுகளை பொறுக்கிச் சுவைப்பதற்கென்றே திரிகிறாங்கள். 

உண்மையைச் சொன்னப் போனால் இவங்கட மனுசிமாருக்கு இவையள் சேரனுக்குப் பின்னால திரியுறது துப்புரவாப்பிடிப்பில்லை. சேரன் தான் இவனுகளுக்கு ஐடியா குடுத்து இவனுகளைக் கெடுக்கிறது என்பது இவங்கடை மனுசிமாருக்கு வடிவாத் தெரியும். உனக்குத்தெருயுந்தானே சின்னத்தம்பி தமிழ்நாட்டில இளம்பொடியள்தான் ரஜனி ரசிகர்மன்றம் வைதிருப்பாங்கள். இங்கையென்னெண்டால் 40 க்கும் 50 க்கும் இடைப்பட்டவங்கள் ரசிகர் மன்றம் நடத்துற கேவலம் நடக்குது. 

 சின்னத்தம்பி: அம்மான் சேரன் கலியாணம் கட்டீட்டானாம். லோயராய் இருக்கிற ஒரு யூத மனுசியைக் கட்டிப் பிள்ளையும் பெத்திருக்கிறான். தெரியும்தானே?

 சவாரித்தம்பர்: தம்பி காதல் கலியாணம், பேசிச்செய்த கலியாணம், Marriage of convenience எண்டு சொல்லிற வசதிவாய்ப்புக்கான கலியாணம் எண்டு பலமாதிரியான கலியாணங்கள் இருக்கு. இப்படாப்பு நீயொரு சாதாரண மனிசனெண்டால் நீயொரு பணக்கார மனுசியை உனக்கு விருப்பமில்லாட்டியும் கட்டிக்கொண்டா உனக்கு வேறு பல வசதிகளும் நன்மைகளும். மனுசியின்ரை வீட்டிலேயே தங்கீட்டால் உனக்கு வாடகைச் செலவுகள் இல்லை. வெளி நாடுகளில வாடகை தானே சம்பளத்தில பெரிய வீதம். பிறகு மனுசி ஒரு யுனிவேசிட்டியில வேலை செய்யிறாள் எண்டால் அவளின்ர கொன்ராக்ருகளை வச்சுக்கொண்டே நீ உனிவேசிற்றிக்குள்ள புகுந்து விளையாடலாம். நீயும் ஒரு யுனிவேசிற்றி வேலை ஒண்டைக்கொழுவிக்கொள்ளலாம். உன்ர மனுசி பில் கிளின்ரன்ரை கிலறி மாதிரியான சாடையான மண்டை கழண்ட Power crazy பெட்டை எண்டால் உனக்கு இன்னும் வாய்ச்சுப்போச்சு. (கிட்டடியில வந்திருக்கிற கிலறி கிளின்ரன்ரை Biography இல எழுதியிருக்கிறாங்கள்... கிலறி சொல்லுவாளாம் ஒரு கணவன் தன் மனைவிக்கு விசுவாசமில்லாமல் இருக்கிறதைவிட மோசமான குற்றங்கள் எல்லாம் உலகத்தில இருக்கிற படியால தன்ர கணவன் தொடர்ச்சியாய் தன்னை ஏமாற்றிவந்ததை தான் மன்னிச்சு விட்டாள் எண்டு தொடர்ந்தும் கிளின்ரன் வயது போன காலத்திலும் வாய்மூலக்(Oral sex ) கள்ளக் கலவிக்கு லைசென்ஸ் குடுத்திருக்கிறாளாம்) நீ உத்தியோகபூர்வமான மனுசி இருக்க வேறு பல கள்ளப் பெண்ணுகளை வச்சுக்கொள்ளலாம். பிடிபட்டாலும் சாதுரியமாய் சமாதானம் சொல்லிச் சமாளிச்சுக்கொள்ளலாம்.............. காதல், பேசிச்செய்த கலியாணம் எல்லாம் என்ன எண்டு உனக்குத்தெரியும்தானே. இப்பிடியெடாப்பா கலியாணங்கள் பல அதைப்பற்றியே நாள் முழுக்கக் கதைக்கலாம். 

 சின்னத்தம்பி: அன்ரன் பாலசிங்கம் ஒரு வெள்ளைப்பெட்டையை கட்டினவர். சேரனுக்கும் அப்பிடி ஐடியாக்கள் இருக்குமெண்டு கதை அடிபடுகுது.

 சவாரித்தம்பர்: தானும் பாலசிங்கம் மாதிரி ஒரு பொறுப்பு புலிகளில எடுக்கோணும் எண்டதும் சேரன் வெட்கமில்லாமல் புலிவேசம் போட்டதுக்கான காரணங்களிலொண்டு. "புலன் பெயர்ந்த" புலி ஆதரவளர்களுக்கும் சேரன்ரை கனடா ரசிகர் மன்ற குஞ்சுகளுக்கும் பாலசிங்கம் மாதிரி தானும் ஒரு வெள்ளைக்காரியை கட்டீட்டன் எண்டதை சேரன் மதியுரைஞராக வருவதற்கான ஒரு தகுதியாகவே படங்காட்டி பூச்சுற்றலாம். இந்த வகையில பாலசிங்கத்தின்ரை வெள்ளைக்குட்டியைவிட சேரன்ரை யூத மனுசி ஒரு Prize catch.

 இஸ்ரேலிய உளவுதாபனத்தோடு தனக்கு தொடுப்பிருக்கு இஸ்ரேலிய அரசோடு தனக்கு பழக்கமிருக்கு எண்டெல்லாம் கதைவிடுவான். இப்ப புலியள் இஸ்ரவேல் தேசத்து சியோனிச இனவாதத்தால் ஆகர்ஷிக்கப்பட்டு இஸ்ரேலிய மொடலில (இஸ்ரேலிய இராணுவ மற்றும் புலனாய்வுப் பலத்தோடும் அதே சமயம் இஸ்ரேலில் உள்ள ஜனநாயகம் இல்லாமலும்) ஒரு தமிழீழத்தை அமைக்க மனப்பால் குடிக்கினமல்லோ. 

ஏற்கெனவே வன்னியில இருக்கிற சொகுசுப் புலியான நிலாந்தன் யப்பானியரோடும் யூதரோடும் சமமான திறமைவாய்ந்தவர்களாக யாழ்ப்பாணியர்களை குறிப்பிட்டு அதாவது Japanese, Jews and Jaffnaites (3 Js) எண்டு கற்பனைக் குதிரையைக் கிளப்பிவிட்டு குறிப்பு எழுதியிருக்கிறான். யூதர்களை மத்திய கிழக்கிலிருந்து ஓராம் நூற்றாண்டிலேயே உரோமானியர்கள் கலைத்துவிட்டார்கள். அன்று கலைக்கப்பட்ட யூதர்கள் ஏறத்தாழ இருபது நூற்றாண்டுகளாக ஐரோப்பாவெங்கும் புலம்பெயர்ந்து அலைந்தார்கள். இருபது நூற்றாண்டுகளாக ஐரோப்பாவெங்கும் தலைமுறை தலைமுறையாக அலைந்துதிரிந்து சேகரித்த அறிவினாலும் அனுபவத்தினாலும் கடும் உழைப்பினாலுமே அறிவியல், வியாபராத்துறையில் மிளிர்ச்சியும் செல்வாக்கும் பெற்ற சமூகமாக இருபதாம் நூற்றாண்டில் யூதர்கள் தங்களைப் பதிவு செய்தார்கள். யாழ்ப்பாணத்தமிழனின் இரண்டாவது புலம்பெயர்வுக்கு அம்பது வருச வரலாறே இன்னும் இல்லை. ஒழுங்கா கனடாவில ஒரு சின்ன தேத்தண்ணிக்கடையோ ஒரு கிளீனிங் பிஸ்நஸ்ஸோ போட்டு நடத்த திண்டாடுகிற யாழ்ப்பாணத்தமிழனை யூதர்களோடும் யப்பானியர்களோடும் ஒப்பிடுவது எவ்வளவு வேடிக்கை. ஒரு காள் மார்க்ஸை, ஐய்ன்ஸ்டீனை, நோம் சாம்ஸ்கியை யாழ்ப்பாண சமூகம் தந்திருக்காடா?

 அடேல் ஒரு Country girl. இவள் யூத மனுஷி ஒரு Gypsy girl. இப்பிடிச் சொல்லேக்குள்ளயடா நான் ஒரு இனவாதத்தோட சொல்லேல்லை. ஒரு கிராமத்துப்பெண் அல்லது ஒரு குறத்தி பெண் எவ்வளவு அப்பாவியான, உலகம் அறியாத எளிமையான நம்பிக்கைகளோடும் ஒரு குழந்தையைப்போன்ற கள்ளங் கபடமற்ற உள்ளத்தோடும் இருப்பாள். அப்பாடியானவளவை அன்ரன் பாலசிங்கம், சேரன் போன்ற Alcoholic அல்லது celebrated womaniser இடம் போய் மாட்டுப்பட்டால் கதி என்ன? அதோ கதிதான். 

 சின்னத்தம்பி: என்னம்மான் சேரன்ரை மனுஷி பெரிய லோயர், கனடாவிலயிருந்து புலியான சுரேஷ் மாணிக்கவாசகத்தை நாடுகடத்தாமல் இருக்க எல்லாம் வாதாடி வெண்டவள். அவளைப்போய் உப்பிடிச் சொல்லிறியள்?

 சவாரித்தம்பர்: எடேய் எப்பேற்பட்ட கொடிய கிரிமினலுக்காகவும் லோயராக வாதாடுவது நீதி தர்ம நடைமுறையின் அடிப்படையில் தவறே இல்லை. எடேயப்பா இப்ப உவன் சதாம் குசேன் பிடிபட்டவுடன தனிப்பட்ட அவனுக்காக திறமான லோயறுகள் எல்லாம் வாதாடினவங்கள். அது வேறு. சதாமின் அரசியலை அல்லது அவன்ரை நடைமுறைக் கருத்தியலை நியாயப்படுத்தி வாதாடுவது அல்லது கிட்லரின் நாசி இனவாதத்தை நியாயப்படுத்தி வாதிடுவது வேறு. உவள் என்ன செய்தவள்? சேரன் பின்னால இருந்து இயக்கிய தேடகக் கூட்டத்தில் கனடாவில புலியை கனடா தடை செய்தது பிழை எண்டு வாதாடினவள். அப்படிச் சொல்லேக்குள்ள அவள் புலியின்ரை அரசியலையும் கருத்தியலையும் நியாயப் படுத்தி வாதாடினவள். புலியின்ரை பாசிசத்தையும் அதன் இனவாதக் கொள்கைகளையும் இனப் படுகொலைகளையும் நியாயப்படுத்தினவள். உண்ணாணக் கேட்கிறன் புலியின்ரை அரசியலை சரியெண்டு சொல்லிற உந்த யூத மனுசி தன்ரை ஆறு மில்லியன் சனத்தை கொண்ட கிட்லரின்ரை நாசிசத்தை எந்த அடிப்படையில நிராகரிக்கலாம்? ஜேர்மனியில யூதருக்கு நடந்ததுதான் பாசிசப்புலிகளின்ரை ஈழத்தில முஸ்லீம்களுக்கு நடந்தது. இதுவரையில் இரண்டாயிரத்துக்கு அதிகமான எங்கட முஸ்லீம் சனங்கள் புலிகளால் படுகொலை செய்யப்ப்பட்டிருக்கிறார்கள்.(கிட்லருக்கு இருந்தமாதிரி வடக்கு கிழக்கின் முழு அதிகாரமும் புலியிடம் இருக்குமானால் முழு முஸ்லீம்களையும் புலிகள் கொல்லமாட்டார்கள் இல்லை என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.) 

 ...........அப்ப பிரச்சனை எங்கயிருந்து வருகுது? உந்த யூத மனுசிக்கு பாசிஸப்புலிகளை ஹிஸ்புல்லா, ஹமாஸ் மாதிரியான முற்போக்கான பலஸ்தீன விடுதலை இயக்கங்களிலிருந்து பிரித்துப்பார்க்க முடியவில்லை. ஹிஸ்புல்லாவிலும் ஹமாஸிலும் விடுதலைப்புலிகள் மாதிரியான பாசிஸக்கட்டமைப்பும் தலைமையில் மட்டும் அதிகாரம் குவிந்திருக்கும் தன்மையும் இல்லை. ஹிஸ்புல்லாவிலும் ஹமாஸிலும் உட்கட்சி ஜனநாயகம் இருப்பதோடு முடிவுகள் கூட்டாகவே எடுக்கப்படுகின்றன. இப்பலஸ்தீன இயக்கங்களில் அதன் தலைவர் கொல்லப்பட்டாலோ இறந்தலோ அடுத்த கட்டத்தலைவர் தெரிவுசெய்யப்பட்டு இயக்கம் தொடர்கிறது. 

புலிகள் பிரபாகரன் செத்தால் அதோடு புலிகள் இயக்கமே முடிஞ்சு போம். உனக்குத்தெரியும்தானே சின்னத்தம்பி, இந்தியனாமியோட அடிபர்ற முடிவை பிரபாகரன் தவிர்ந்த அனைத்து அக்காலப் புலித்தளபதிகளும் எதிர்த்தவர்கள். இந்தியனாமி உண்மையிலேயே புலிகளை அழித்துப்போடுவாங்கள் எண்டு பிரபாகரனைத்தவிர்ந்த புலித்தளபதிகள் மிகச்சசியாகவே நம்பினார்கள். பிறேமதாசா மட்டும் மோட்டுத்தனமா பிரபாகரனுக்கு கைகுடுத்து உதவாமல் விட்டிருந்தால் தேசியத்தலைவர் சயனேட் கடிச்சிருப்பார். 

ஹமாஸ் என்னெண்டு கடசியா நடந்த பலஸ்தீன தேர்தலில வெண்டவங்கள்? மற்ற பலஸ்தீனக் கட்சியான Fatah வின் ஊழல்களை அம்பலப்படுத்தி அதற்காக மக்களுக்கு ஊழலற்ற ஆட்சியை வழங்க உத்தரவாதம் தந்து இலவச மருத்துவம் இலவசகல்வியைத் தந்து மக்களின் வாக்குகளை யாசித்துப்பெற்று வெண்டாங்கள். புலி சனத்தைக்கொடுமைப்படுத்தி காசு புடுங்கி சீவிக்குது. ஹிஸ்புல்லா பொனவருசம் இஸ்ரேல் குண்டு போட்டு அழிச்ச ஒவ்வொரு லெபனான் காரருக்கும் வீடு கட்டுற அளவுக்கு காசு கொடுக்குது. ஆரும் சொல்லலாம் அவன் அங்காலை ஈரான் காரன் குடுக்கிற காசை வேண்டி இங்கால ஹிஸ்புல்லா குடுக்கிறான் என்டு. இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்குப்பிறகு எத்தினை ஆயிரம் கோடி ரூபாய் இந்தியாவிட்ட வெட்கமிலாமல் வாங்கினவங்கள் புலியள். ஒரு சதம் தமிழ் மக்களூக்கு செலவளிச்சிருப்பாங்களோ. அட சூனாமிக்கெண்டு ஸ்ரீ லங்கன் கவண்மென்ற் சனங்களுக்கு குடுக்கிற காசையே விதானைமாரை வெருட்டி அடிச்சவங்கள் புலியள். இந்த விசயங்கள் சேரனுக்கு வடிவாத்தெரியும். ஆனால் அவன் தன்ரை நலனுக்காக மனுசிக்கு பிழை பிழையான தகவல்களைக் குடுத்து வச்சிருக்கிறான் 

 சின்னத்தம்பி: சேரன் இப்ப ரண்டு வருசமா கனடாவில ஒரு தமிழியல் அக்கடமிக் மாநாடு நடத்தீற்றான். அதைப்பற்றி என்ன சொல்லுறியள் அம்மான்? 

 சவாரித்தம்பர்: அதெடா அவன் தன்ர விலாசத்துக்காகச் செய்தது. பேருக்குத்தான் அக்கடமிக். உண்மையில அது ஒரு சேரன்ரை பொலிற்றிக்ஸுக்கான மாநாடு. சேரன்ரை தனிப்பட்ட அரசியல் நலன்களுக்கான மாநாடு. 2006 இல் நடந்த முதல் மாநாட்டில் பீட்டர் சால்க், ஜோசப் சந்திரகாந்தன் போன்ற வெட்கங்கெட்ட புலிப்பாஸிஸ்டுகளுக்கு இடமளித்ததன் மூலம் சேரன் தான் புலிகளுக்கு குனியத்தயார் என்பதை புலிகளுக்கு வெளிப்படுத்தினான். உமா மகேஸ்வரன் காலத்து புளட் கொடூரங்களுக்கு உடந்தைபோய் தானாகவே அகிலனையும் செல்வத்தையும் கொலைசெய்து பிற்காலத்தில் தன் வயிறு கழுவ வெட்கமில்லாமல் புலியின்ரை காசுக்காககவும் இலவச உலக சுற்றுப் பயணங்களுக்காகவும் உண்மையைத்திரித்து தமிழ்நெற் நடத்தின கூலிப்பத்திரிகையாளனான தாரகி சிவராமை மகிமைப்படுத்தி மாக் விற்றேக்கர் என்ற போலித்தரகு அமெரிக்க விரிவுரையாளர் உண்மையை திரித்து புனைந்து எழுதிய கட்டுரையை வாசிக்க அனுமதி அளித்த மாநாடு உண்மையிலேயே ஒரு பக்கச் சார்பற்ற அக்கடமிக் மாநாடு என்று எங்கள் காதில் சேரன் பூச்சுற்றினான். 2007 இல் நடந்த இரண்டாவது மாநாட்டில் தன்னுடைய உத்தியோகபூர்வமான மனைவியான யூத மனுசியைக்கொண்டே சேரன் புலிக்கு வால் பிடிக்கும் வேலையை செய்தான். எப்படி தேடகம் கூட்டத்தில் தன்னுடைய மனுசியை ஏவிவிட்டு கனடாவில் புலிகளை தடை செய்தது பிழை எண்டு விவாதித்தானோ அதையே மீண்டும் சேரன் செய்தான். சேரன் குடுத்த மாயச் சொக்குப் பொடியில் உண்மையிலேயே அந்த யூத மனுசி மயங்கிப்போய் புலிகளை ஹமாஸ், ஹிஸ்புல்லா மாதிரியான நேர்மையான விடுதலை இயக்கம் எண்டு நம்பியிட்டாள். அந்த யூத மனுசியின்ரை தலமையில ஹாரிணி சிவலிங்கம், யமுனா சங்கரசிவம் எண்டு ரண்டு புலிப் பொடிச்சியள் கனடாவில புலிகளை தடை செய்தது பிழை எண்டு "அக்கடெமிக்கா" எங்களுக்கு கட்டுரை வாசிக்கினாமாம். உண்ணானக் கேக்கிறன் சின்னத்தம்பி நாஸிசத்தை நியாயப்படுத்தி " அக்கடமிக்கா" கட்டுரை வாசிக்ககூடிய அம்பது " அக்கடமிக்கை" நான் கொண்டு வாரன். உந்தச் சேரன்ரை யூத மனுசி சரன் ஐக்கின் தலமை தாங்க ரெடியா? 

 சின்னத்தம்பி: ஆனால் அம்மான் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் நாங்கள் எதிர்க்கருத்து உள்ளவர்களின் உரைகளையும் அனுமதிக்கவேண்டும் என்பது நீங்களே அடிக்கடி சொல்லும் உண்மையல்லோ? 

 சவாரித்தம்பர்: அதோடு நான் உடன்பர்றன். ஆனால் அதுக்கும் ஒரு சமனிலை.. பலன்ஸ் வேணுமல்லோடா? 2006 இல் நடந்த மாநாட்டில் புலிகளால் கொல்லப்பட்ட தமிழரான கதிர்காமரைப்பற்றி கட்டுரை வாசிக்க எத்தனையோ கல்விசார் புலமையாளர்கள் இருந்தபோதும் அவர்களில் ஒருவரும் அழைக்கப்படாதது ஏன்? 2007 ல் நடந்த மாநாட்டில் புலிகளால் கொல்லப்பட்ட கேதீஸ் லோகனாதனைப் பற்றி உரையாற்ற முன்னாள் ஒன்ராறியோ மானில முதல்வரான பொப் ரேயை கூப்பிட்டிருந்தால் அவர் ஒரு அக்கடமிக்கான உரையை குடுத்திருப்பார். ஏன் அவரைக்கூப்பிடவில்லை? உனக்குத் தெரியும்தானே கதிர்காமரோ லோகநாதனோ சிவராமைப்போல கொலை செய்த கிரிமினல்கள் அல்ல. கொலைகாரனும் உண்மையைத் திரித்து எழுதும் பத்திரிகையாளனுமான சிவராமைப்பற்றி கட்டுரை வாசிக்குமாறு சேரன் கட்டுரையாசிரியரைத்தேடி அலைவன். புலிகளின் பாஸிச அரசியலை விமர்சித்து அம்பலப்படுத்திவரும் ரண்டு பேராசிரியர் மாரையும் அழைத்துக் கட்டுரை வாசிக்க விட்டிருக்கலாமெல்லோ?

 சின்னத்தம்பி: இந்த முறை இயல் விருதுக்காரர் வாழ் நாள் சாதனைக்கான பரிசு மட்டுமில்லாமல் வேற வேற கன விருதுகள் குடுத்திருக்கினமாம். இப்ப போகிற போக்கில பாத்தால் அடுத்தமுறை ஆருக்கு இயல் விருது கிடைக்குமெண்டு நம்பிறியள் அம்மான்? 

 சவாரித்தம்பர்: நானுங்கேள்விப்பட்டனான். இனிம ஒவ்வொரு ஆண்டுக்கும் தலைசிறந்த தமிழ் ஸ்திரிலோலன் அதாவது பொறுக்கி .....எண்டதுக்கான விருது. அதிகளவில் கிறிடிற் காட் கள்ள மட்டை மோசடி செய்த தமிழனுக்கான விருது என்டதுகளையும் இயல் விருதுக்காரர் வழங்கினால் அது இலக்கியத்துக்கு பரிசு கொடுக்கிறதைவிட மிகப்பிரயோசனமா இருக்கும். சிவத்தம்பி....... தாஸீசியஸ் இந்த லைனில யோசிச்சுப் பாத்தா அடுத்த முறை யேசுராசாவுக்கோ அல்லது தலைவரின் பள்ளித்தோழனான நோர்வேயில இருக்கிற கினா சேனா துரைக்கோ வாழ்நாள் சாதனைக்கான விருது குடுக்கலாம். இங்கால நாங்கள் தேசியத்தலைவற்ற மனுசியின்ரை சொந்தக்காரர் பக்கம் யோசிச்சுப்பாத்தா புங்குடுதீவாங்களான மு. பொன்னம்பலத்துக்கோ என். கே மகாலிங்கத்துக்கோ குடுக்கலாம். பொன்னம்பலமும் மகாலிங்கமும் வில்வரத்தினமும் தளையசிங்கத்தின்ரை சால்வையில தொங்கிக்கொண்டு மெய்யுள், ஆன்மீகமும் மார்க்ஸியமும் கலந்த மூண்டாவது பாதை எண்டு சனத்துக்கு பூச்சாண்டி காட்டினாலும் அவையின்ர உண்மையான கருத்தியல் ஒரு சராசரி சாதி வெறி வெள்ளாளனின்ரை சாமனிய சுயநலக் கருத்தியலுக்கு அப்பால போகேல்ல. வசதியில்லாத பஞ்சமர், த்லித் குழந்தையள புலி வைபோசா கடத்திக்கொண்டுபோய் அடைய முடியாத ஒரு இலட்சியத்துக்கு அடிபட்டு சாகவிடுகிற புலிப்பாஸிசத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கிற இந்த மெய்யுள் காரற்றை hypocrisy ஐ இண்டைக்கு தளையசிங்கம் கண்டால் அதிர்ச்சியில இரண்டாவது முறையாகவும் சாவார்.

 சின்னத்தம்பி: அம்மான் கடைசியா வந்த சரிநிகர் பாத்தனீங்களே? அதில சேரன் அன்ரன் பாலசிங்கத்தைக் கலாநிதி எண்டும் அவரை உன்னதமான நேர்மையான புத்திஜீவியாக காட்டி அவருக்கு ஒரு அஞ்சலி எழுதியிருப்பதோடு சாடையா தான் புலிகளை விமர்சிக்கிறமாதிரியும் "நடு நிலமையாளனாக" தன்னக்காட்டவும் அதில் முயன்றிருக்கிறான். சவாரித்தம்பர்: அப்பன்,....... மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டிச் சுத்திச்சீவிக்கிற விலாங்குமீன் மரபு சேரன்ரை. சார்ந்ததன் வண்ணமாக மாறுகிற பச்சோந்தி. எடச் சரியா ஒரு வருசத்துக்குமுதல் தான் சேரன் பாலசிங்கம் 2005 ம் ஆண்டு தலைவற்ர மாவீரர் தின உரையை கொச்சைப்படுத்திப்போட்டாரென்று பாலசிங்கத்தை கிழி கிழி எண்டு கிழிச்சு கனடா ஈழநாடு பேப்பரில எழுதினவன். சரிநிகர் அஞ்சலியோடு ஈழநாட்டுக் கட்டுரையையும் ஒப்பிட்டு வாசித்தால்தான் சேரனின் உண்மையான நிறம் என்னெண்டு விளங்கும். 

பாலசிங்கம் கலாநிதிப்பட்டத்தைப் படிச்சு முடிக்கேல்லை. அவர் கலாநிதியே இல்லை எண்டது எல்லாருக்கும் தெரிஞ்ச திறந்த ரகசியம். அப்படியிருக்க சேரன் மட்டும் ஏன் அவரை கலாநிதி எண்டு எழுதுறான்? தான் விரிவுரையாளராகவே இருந்துகொண்டு பேராசிரியர் எண்டு சுத்தித்திரியிறானல்லே சேரன். அது மாதிரி கலாநிதியெண்டு பாலசிங்கமும் சுத்தினவர் எண்ட மாயையை ஏற்படுத்தி இதன்மூலம் இம்மாதிரியான தவறுகளை எல்லோரும் செய்பவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தனது " பேராசிரியர்" வண்டவாளத்தை சரிப்படுத்துவதற்குத்தான் உந்த கேம். வித்தியாசம் என்ன எண்டால் பாலசிங்கம் ஒரு காலமும் தான் கலாநிதி எண்டு சொல்லேல்லை. அவற்ர அடிவருடிகள் தான் அவ்விதம் சொன்னாங்கள். ஆனால் சேரன் தானே தன்னை பேராசிரியர் எண்டு புழுகித்திரியிறான். மிகமோசமான அதிகார மோகம் பிடித்த தரகுப் புத்திஜீவியும், Alcoholic & chain smoker ஆனுமான பாலசிங்கம் சேரன் கட்டுரையில் அறம் முதலியவற்றுக்கு விசுவாசமான நேர்மையான புத்திஜீவியாக புனையப்படுகிறார். நசிஞ்ச கள்ளனுக்கு மசிஞ்ச கள்ளன் சாட்சி. 

இதைவிட அந்தக் கட்டுரையில தமிழ்ப்பத்திரிகையாளருக்கு முதுகெலும்பில்லை எண்டு சாடுறான் சேரன். தமிழ்ப்பத்திரிகையாளரில முதுகெலும்பு மட்டுமில்லை மானம் ரோசமும் நீதி நியாயம் எண்டதுகளும் இல்லாதவை எண்டால் அது சேரனும் சரிநிகர் ஆசிரியர்களான சேரனின் மச்சான் விக்கினேஸ்வரனும் சிவகுமாரும் தான். புலி இந்த மூண்டுபேரையும் சித்திரவதை செய்து கொல்லுறதுக்கு துரத்த அதிஸ்டவசமா தப்பி ஓடிவந்து இண்டைக்கு அந்தப்புலிக்கே அடிமைச்சேவகம் செய்கிறாங்கள். ஒரு பத்திரிகையின் பணி நடுநிலமையாக அனைத்துத்தரப்பினரையும் விமர்சிப்பதே. ஆனால் சரிநிகரில் 1999 க்குப்பின் புலிகள் விமர்சிக்கப்படவில்லை. அரசாங்கம் மட்டுமே விமர்சிக்கப்படுகிறது.

 இன்னுஞ் சொல்லப் போனால் புலிகள் இயக்கம் ஒரு உன்னதமான இயக்கம் எண்ட படிமம் வேறு கட்டப்படுகிறது. சரிநிகர் ஆசிரியர்களான விக்கினேஸ்வரனும் சிவக்குமாரும் வன்னியில் போய் குடும்பமாக வாழ விரும்பவே மாட்டார்கள். கொழும்பில் வாழ்ந்துகொண்டு வன்னியில் நிலவும் புலிப்பாசிசம் முழு வடக்குகிழக்குக்கும் வரவேண்டுமென்று பத்திரிகை நடத்துகிறார்களாம். உண்மையச் சொன்னப்போனால் சோவியத் யூனியன் காலத்து "பிராவ்தா" மாதிரியான ஒரு கட்சிப்பத்திரிகைதான் இன்று சஞ்சிகையாக வரும் சரிநிகர். அதில் கண்மூடித்தனமான புலி ஆதரவாளர்களுக்கு மட்டுமே அஞ்சலி எழுதப்படுகிறது. லக்ஸ்மன் கதிர்காமர், கேதீஸ் லோகநாதன் போன்ற புலிகளால் கொல்லப்பட்ட நேர்மையான தமிழ் புத்திஜீவிகளுக்கு அஞ்சலி எழுதப்படமாட்டாது. 

 சின்னத்தம்பி: அம்மான் இப்ப புலியளுக்கு மங்குசனிக்காலம். இனி கனகாலத்துக்கு அவையள் நிண்டு பிடிக்கமாட்டினம். தேசியத்தலைவர் குப்பி கடிச்சாப்பிறகு புலிக்கு கழுவித்திரிகிற சேரன் என்ன செய்வன்? 

 சவாரித்தப்பர்: என்ன செய்வனோ? உடனடியா அவன் சித்தருக்கும் சங்கரியாருக்கும் சிறிதரன் தோழர், டக்ளஸ்தோழர், கருணா அம்மான் ஆக்களுக்கு ரெலிபோன் எடுப்பான். எடுத்து தான் இங்க கனடாவில Conflict Resolution  சம்பந்தமான ஒரு மாநாடு கூட்டிறான் எண்டும் இவயள் அஞ்சு பேரும்தான் வந்துநிண்டு அதை வடிவா நடத்தித்தரவேணும் எண்டும் உடன தட்டை மாத்திப்போடுவான். கதையோட கதையா புலியின்ரை பாசிச கொடூரங்களைப்பற்றி ஒரு சின்ன லெக்சரும் அடிப்பான். நரி காகத்துக்கு கதைசொல்லி வடைபறிச்ச மாதிரித்தான். சேரன் ஒரு பெஸ்ட் கிளாஸ் மோசடிக்காரன். தேனி வெப் சைட்டில போனவருசம் அவன்ரை முழு மோசடியையும் ஒரு நீட்டுக் கட்டுரையில எழுதியிருந்தாங்கள் தெரியுந்தானே.

 (சின்னத்தம்பியின் செல்போன் அலறியது. மறுமுனையின் அவன் மனைவி எத்தனையாவது பியர் குடித்துக்கொண்டிருப்பதாக கேட்டு தான் சமைத்து முடித்துவிட்டதாகவும் சாப்பிடவருமாறும் அழைத்தாள். சின்னத்தம்பி தான் அம்மான் சவாரித்தம்பரோடு அந்தமாதிரி சுகித்துக் கொண்டிருப்பதாகக்கூறியபோது 

"ஆர் உங்களுக்கு அந்த கொக்கோக ரகசியங்கள் சொல்லித்தாறவரோ" அவர் என்றும் அவரையும் சாப்பிட அழைத்துவருமாறும் கூறினாள்.)

 சின்னத்தம்பி: அம்மான் மனிசிதான். உங்களையும் கூட்டிக்கொண்டு சாப்பிட வரட்டாம். இந்த பியரும் முடியப் போவம். அது சரி கடைசியா ஒரு நல்ல ஜோக் சொல்லுங்கோ. 

 சவாரித்தப்பர்: நல்ல ஜோக் எண்டால் சிவசேகரத்தின்ரைதான். கோகர்ணன் எண்ட பெயரில அவர் தினக்குரலில எழுதிற வரட்டுக் குறிப்புகள் வாசிக்கிறனிதானே. கொஞ்ச மாதத்துக்கு முதல் அதில அவர் விடுதலைப்புலிகளில இருந்து கருணா பிரிந்து போனதுக்கு அமெரிக்க உளவு நிறுவனத்தின் சதிதான் காரணம் எண்டு எழுதியிருந்தார். வாசிச்சவுடன எனக்கு வந்த சிரிப்பை அடக்கமுடியேல்லை. உடன பேராதனை யுனிவேசிற்றிக்கு எனக்கு தெரிஞ்ச ஒரு சிங்கள பேராசிரியருக்கு போன் போட்டுக்கேட்டன் "என்ன சிவசேகரத்துக்கு அறளை பத்தி முத்திப்போச்சுதோ" எண்டு. அவரும் சிரிச்சுப்போட்டுச் சொன்னார் 

"சில பேராசிரியர்மாரை அவர்கள் அறிவுலகை " entertain" பண்ணுவதற்கென்றே பேராதனைப்பல்கலைக்கழகம் வேலைபோட்டுக் குடுத்திருக்குது" 

எண்டு. ஐரோப்பாவின், ஏன் உலகின் முழுப்பிரச்சினைகளுக்கும் காரணமாக யூதர்களையே குற்றஞ்சாட்டுகிற ஒரு காலம் இருந்தது. அதைப்போலத்தான் சிவசேகரம் போன்ற வரட்டு மார்க்சியரும் உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் அமெரிக்க சீ.ஐ.ஏ தான் காரணம் எண்டு குற்றச்சாட்டுகிறார். கருணா பிரிந்ததற்கு முழுக்க முழுக்க காரணம் விடுதலைப் புலிகளின் பாஸிச இயங்கியலே என்பது மட்டக்களப்பின் ஒரு சராசரி விவசாயிக்கே விளங்கும் உண்மை. அமெரிக்க சீ.ஐ ஏக்கு இதில் கிஞ்சித்தும் பங்கு கிடையாது. சின்னத்தம்பி தென்னமெரிக்காவில உள்ள "விடுதலைப் போராட்டத்தையும்" போதைவஸ்து உற்பத்தி மற்றும் கடத்தலையும் ஒருங்கே செய்துவரும் சில இயக்கங்கள் சீ.ஐ.ஏ இன் சில உளவாளிகளை உயிரோடு பிடித்து பணையக்கைதிகளாக ஆண்டுக்கணக்காக வைத்திருக்கின்றன. தன்னுடைய இப்படியான சொந்த உறுப்பினர்களையே மீட்கமுடியாமல் சீ.ஐ ஏ திண்டாடுது. அது இலங்கை மாதிரியான கேந்திர முக்கியத்துவம் அற்ற ஒரு நாட்டில் தன்னுடைய உளவாளிகளை அனுப்பி புலியைப்பிரிக்கு அளவுக்கு உலகின் அத்தனை நாடுகளிலும் தனது வளங்களைப் பிரயோகிக்கிறது எண்டு உண்மையிலேயே நீ நம்புறாயா சின்னத்தம்பி?

தொடர்பான கட்டுரைகள்

1. மே 18 வெளிவரும் NETFLIX படம்: முள்ளிவாய்க்கால்

2. பாலசிங்கத்தின் பாணபத்திர ஓணாண்டிகள்

3. கள நிலவரம்: ஈழப்போரின் இறுதிக் காட்சிகள்

Comments

  1. அரிய தகவல்களுடனான கட்டுரை. முன்னர் படித்திருந்தாலும் மீண்டும் படிக்கவே வேண்டியிருந்தது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

 யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், விரிவுரையாளர்களின்   கல்வி அறிவு மோசடிகள்

யார் இந்த யதார்த்தன்