பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

 


By Maj. Gen. Kamal Gunaratne

தமிழில் Rajh Selvapathi                             (முன்னாள் ஐ. நா. சபை     உத்தியோகத்தர், கிளிநொச்சி)

(முன்) கதைச்சுருக்கம்

800x800 சதுர மீற்றர் நிலப்பரப்புக்குள் மூன்றுபக்கமும் இராணுவத்தினரால் சூழப்பட்ட நிலையில் தப்பிப்பதற்காக மூர்க்கத்தனமாக முயன்று கொண்டிருந்த பயங்கரவாதிகளின் கடைசி மணித்துளிகளை மீட்டி பார்ப்பது முக்கியமானது என நான் நம்புகின்றேன். முன்பே கூறியது போல் மே 17 விடிகாலை பொழுதில் நந்திகடல் நீரேரியின் மேற்கு கரையோரத்தில் இருந்த முன்னரங்க நிலைகள் மீதுகடற்புலிகளின் 06 தற்கொலை படகுகளின் உதவியுடன் அவர்கள் தாக்குதலை தொடங்கினார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் முல்லைத்தீவு காடுகளுக்குள் அவர்களால் சென்றிருக்க முடியும். அங்க மறைத்து வைக்கப்பட்டிருந்த உணவு, வெடிபொருட்கள், ஆயுதங்களின் துணையுடன் பல மாதங்கள் தாக்குபிடித்திருக்க முடியும். போரும் தொடர்ந்து கொண்டிருக்கும். எப்படியிருந்தாலும் தைரியமும் தளம்பல் இல்லா போராடும் உத்வேகத்தையும் கொண்ட எமது படையினர் அவர்களின் முயற்சியை நாசமாக்கிவிட்டனர். ஆகையால் அவர்கள் வேறு ஒரு திட்டடம் போட வேண்டி இருந்தது.

அந்த சதுர நிலப்பரப்புக்குள் அடுத்த நாள் வரை அகப்பட்டிருதால் அவர்களின் முடிவை நெருங்குவாரகள் என்பது தெள்ளத்தெளிவாகவே இருந்தது. சுவரை தள்ளுவதுபோன்று தப்பிப்பதற்காக அதி உச்சளவிலான மூர்க்கதனமான முயற்சித்தனர், மரணபுள்ளியில் உள்ள அவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்ய்பும் நிலையில் இருந்தனர். நந்திக்கடல் நீரேரியின் ஓவ்வொரு மூலையும் படையினரால் சூழ்ப்பட்ட நிலையிலும் கூட அவர்கள் ஏதாவது ஒன்றை செய்தேயாக வேண்டும் என்கின்ற கட்டயத்தில் இருந்தனர். எதுவும் செய்யாமல் இருப்பதை விட ஏதாவது செய்வது நல்லதுதான். இருந்தாலும் இந்த முயற்சிகள் தெளிவில்லாமல் ஒரு முறையான திட்டம் இல்லாமலும் செய்யப்பட்டதாகவே நான் உணர்கின்றேன்.

அந்த சதுர நிலத்தினுள் அண்ணளவாக 700 பயங்கரவாதிகள் இருந்திருக்ககூடும். பிரபாகரன், சூசை, பொட்டு அம்மான், பாணு, ஜெயம், சாள்ஸ் அண்டனி, ரட்ணம் மாஸ்டர் போன்ற மேல் நிலை தலைவர்களும் அவர்கள் மத்தியில் இருந்தனர். மே 17ல் சூசை தலைமையிலான அவர்களின் பெரும் முயற்சி தோல்வியில் முடிந்து பின் அடுத்ததாக அவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்துகொண்டனர். முதல் குழு யாரோ ஒரு மூத்த தலைவரால் தலைமை தாங்கப்பட்டது. இரண்டாவது குழுவை ரட்ணம் மாஸ்டரும் சாள்ஸ் அண்டனியும் தலைமை தாங்க மூன்றாவது குழு பிரபாகரன் தலைமையில் எஞ்சியுள்ள ஏனைய புலி தலைமைத்துவமாக இருந்தது. முதலாவது குழு அந்த நிலப்பகுதியிலேயே தங்கியிருக்க தீர்மாணித்திருந்தது. பெரும்பாலான பயங்கரவாதிகள் இன்னும் அந்த பகுதியிலேயே இருக்கின்றனர் என எம்மை நம்பவைத்து ஏனையவர்களை தேடபிடிக்க முடியாத வகையில் தப்பிசெல்ல வைக்கும் ஒரு தந்திரோபாய புகைதிரையாகவே அதனை நான் பார்கிறேன். இருள தொடங்கியபடியால் இரண்டாவது, மூன்றாவது குழுக்கள் கிழக்கு கரை வழியாக கடல் நீரேரிக்குள் இறங்கிவிட்டனர். கிட்டதட்ட 1 ½ கிலோ மீற்றர் தூரம் மேற்கு நோக்கி நடந்து பின் வடக்கு நோக்கி 4 கிலோமீற்றர் தூரம் நடந்து பொதுமக்கள் தப்பிவருவதற்க்காக படையினரால் அமைக்கப்பட்டிருந்த இராணுவ நிலைக்கு அருகில் வந்துவிட்டார்கள். இரண்டாவது குழுவை சேர்த சிலர் சாள்ஸ் அண்டனி தலைமையில் இராணுவ நிலையை அணுகி தாங்கள் பொதுமக்கள் எனக்கூறி தங்களை உள்ளே அனுமதிக்குமாறு கேட்டார்கள். முதல் தடவை நிராகரிக்கப்பட்ட போது மீண்டும் கடல் நீரேரிக்கே திரும்பி சென்றவர்கள் ஒரு மணித்தியாலத்தின் பின் மீண்டும் அதே கோரிக்கையுடன் வந்தனர். அவர்கள் எங்களிடம் வருவதற்கு முன்பாகவே அநத இராணுவ நிலைக்கு அருகே கிழக்கு கரையில் ஒரு பெரும் குழு தாக்குதலுக்கு தயார் நிலையில் கூடியிருதது. கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கிருந்த அதிகாரி வானை நோக்கி சுடவே கரையோரமாக நீருக்குள் நிலைபடுத்தப்பட்டிருந்த எதிரிகள் படையினரை நோக்கி சுடத்தொடங்கினர். இது எதிர்பாக்கப்படாத மோசமானதாக்குதலாக இருந்தது. இரண்டாவது குழுவை சேர்ந்த கிட்டதட்ட 350 பயங்கரவாதிகள் முன்னரங்க நிலைகளை உடைத்துக்கொண்டு எமது பகுதிகளுக்குள் ஊடுறுவிட்டார்கள். உடனடியாகவே ஆட்லறி, மோட்டார் தாக்குதலை நடத்துமாறு நான் உத்தரவிட்டேன். இதனால் உள்நுழைய தாயாகாக சற்று தொலைவில் இருந்த பிரபகரனுடன் இருந்த மூன்றவது குழு வடக்கு பக்கமாக தள்ளப்பட்டு அடர்ந்த கண்டல் காட்டினுள் மெதுவாக நகர்ந்து தப்பி சென்றுவிட்டனர்.

மூன்றாவது குழு கண்டல் பற்றைகளுக்குள் தப்பி சென்றதற்காக அறிகுறிகள் எதுவும் எமக்கு தென்படவில்லை. அதே நேரம் இரண்டாவது குழுவுடன் கடும் சண்டை மூண்டது. அதிகாலை 2.30 மணியளவில் தொடங்கிய சண்டை முற்பகல் 11.00 மணிவரை தொடர்ந்து. அடுத்தநாள் சாள்ஸ் அண்டனி, ரட்ணம் மாஸ்டர் உட்பட 350 பயங்கரவாதிகள் கடைசியாக கொல்லப்பட்டிருந்தனர். இதற்கிடையே அந்த 800x800 சதுர மீட்டர் நிலபகுதியின் மீது காலை 10.00 மணியளவில் தாக்குதலை தொடங்கப்பட்டு முழுமையாக எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. முதலாவது குழுவை சேர்ந்த கிட்டதட்ட 150 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அன்று மாலைவரை முதலாவது, இரண்ண்டாவது குழுக்களை சேர்ந்த 500 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

மதியம் 12.30 மணியளவில் சூசையுடன் சேர்ந்த குழு ஒன்று கண்டல் காடுகளுக்குள் பதுங்கி இருப்பதாக எமக்கு கிடைத்த தகவல் படி மூன்றாவது குழுவினர் மீதான தாக்குதலை ஆரம்பித்தோம். மாலை 6.30 மணியளவில் சண்டை ஓய்ந்தது. உயர் நிலை புலி தலைவர்கள் உட்பட150 மேற்பட்ட பயங்கரவாதிகள் செத்துக்கொண்டிருந்தார்கள். எப்படியிருந்தாலும் சிறு சிறு மோதல்களுக்கு மத்தியில் பிரபாகரன், சூசை உடபட மேலும் 50 பேர்கள் எனது படையினருக்கு அகப்படாமல் கண்டல் பற்றைக்குள்ளேயே மறைந்து கொண்டிருந்தனர். அடுத்த நாள் காலை வரை நான் எனது படைகளை அவ்விடத்தை விட்டு நகர்த்தாத படியால் 19ம் திகதி காலை பிரபாகரனும் சூசையும் ஏனைய 50 பேரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என சண்டை உறுதிபடுத்தியது வரை அவர்களால் தொடர்ந்து பதுங்கியே இருப்பதை தவிர அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதி தோட்டா இருக்கும் வரை, கடைசி பயங்கரவாதி இருக்கும்வரை அந்த கடைசி குழு போராடிக்கொண்டிருந்ததை நான் கூறியே ஆக வேண்டும். அவர்கள் எங்கள் எதிரியாக இருந்தாலும் அவர்கள் உண்மையான சண்டை வீரர்கள்

நிஜக்கதை

மாலை 6.00 மணிவரை நீடித்த சண்டையில் இப்போது துப்பாக்கி சத்தங்கள் ஓய்ந்திருந்தன. தாங்கள் பெரும் எண்ணிக்கையில் பயங்கரவாதிகளை கொன்றுவிட்டதாகவும் இறந்த உடல்களை ஒரு இடத்தில் கொண்டுவந்து போட்டுக்கொண்டிருப்பதாகவும் கொமாண்டோ படை கட்டளை அதிகாரி கேணல் ரால்ஃப் நுகேரா எனக்கு அறிவித்திருந்தார். அவர்கள் சேகரித்து கொண்டிருக்கும் இறந்த உடல்களை பார்வையிட சென்றிருந்தேன். வரிப்புலி உடையில் இருந்த இறந்த உடல்களை சதுப்பு நில கண்டல் பற்றைக்காடுகளுக்குள் இருந்து கண்டுபிடிப்பது கடினமானதாகவே இருந்தது. 150 பயங்கரவாதிகளின் உடல்களும் பெரும் எண்ணிக்கையான ஆயுதங்களும் படையினரால் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

                   மாதவன் மாஸ்ரர்



ஒர் இறந்த உடல் எனக்கு காட்டப்பட்டது. அது புலிகளின் தலைவர் பிரபாகரனுடையது என பலரும் கூறினார்கள். மிக அருகில் சென்று ஆராய்ந்ததில் முகத்தோற்றம், உடல்வாகு என்பன பிரபாகரன் போன்றிருந்தாலும் அது அவரது உடல் இல்லை என உணர்ந்து கொண்டேன். எங்களுடன் இருந்த சில புலிகள் இயக்க உறுப்பினர்களை அழைத்துவந்து அந்த உடல் யாருடையது என கண்டறியுமாறு அறிவுறுத்தினேன். அவர்கள் உடனடியாகவே அது ”மாதவன் மாஸ்டருடையது என கூறினார்கள்” அதன்பின் வரிசையில் அடுக்கப்பட்டுள்ள ஏனைய உடல்களையும் அடையாளம் காணுமாறு அவர்களை கூறினேன். அவர்களும் இராணுவ புலனாய்வாளர்களுடன் இணைந்து அந்த உடல்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கினர். அவர்களின் செய்ற்பாட்டை நான் அருகிலேயே இருந்து அவதானித்து கொண்டிருந்தேன். வரிசையில் கிடந்த 5வது உடலை நெருங்கிய போது அவர்களிட்ம் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டதை கவனித்தேன். அந்த உடலின் நிறம், மற்றும் உடல் கட்டமைப்பை வைத்து அது பானு என அதிசயத்துடன் கூறினார்கள். புலிகளின் இராணுவத்தளபதியை கொன்று எங்கள் முன்னே கிடத்தியிருக்கின்றோம் என்கின்ற வியப்பில் நாம் ஆழ்ந்து போனோம். எங்களது மகிழ்ச்சியை கட்டுப்படுத்த இயலாமல் இருந்தது. ”ஜெயம்”, ”ரட்ணம் மாஸ்டர” என உயர்நிலை புலித்தலைவர்களை அவர்கள் அடையாளம் கண்டனர். அடையாளம் காணும் செயல தொடர்ந்த போதே நான் இராணுவ தளபதியை மாலை 6.45 மணி அளவில் தொடர்பு மொண்டேன்.

”சேர், எமது தாய் நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் இப்போது எமது கட்டுப்பாடுக்குள் வந்துவிட்டது. எல்லாமே முடிந்துவிட்டது” என உடனடியாகவே அவருக்கு கூறினேன். சில நொடிகள் அமைதியாக இருந்த அவர் “ பிரபாகரன் எங்கே?” எனக்கேட்டார்.” சேர், பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை ஆகியோரை தவிர ஏனைய மூத்த புலித்தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்களின் உடல்கள் இங்கே என்னிடம் இருக்கின்றது” என பதிலளித்தேன்.

 ”பிரபாகரன் இறக்கவில்லை என்றால் போரும் முடிந்து விடவில்லை” என இராணுவத்தளபதி எனக்கு திருப்பிக்கூறினார்.

அவர் சரியாகத்தான் கூறுகின்றார் என நானும் ஏற்றுக்கொண்டேன். புலனாய்வு அமைப்புக்கள் உட்பட யாருக்குமே பிரபாகரன் எங்கு இருக்கின்றார் என தெரிந்திருக்கவில்லை. அவர் நாட்டை விட்டு தப்பிச்சென்ரிருக்கலாம். அல்லது எங்கோ இன்னும் பதுங்கி இருக்கின்றார். எப்படியென்றாலும் பிரபாகரன் மரணமடையாமல் இந்த நாட்டில் அமைதி ஏற்படபோவதில்லை. 

“ சேர் இந்த பகுதி முழுவதுமே எனது படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றது.  இன்று இரவும் தொடர்ந்து தாக்குதலை நடாத்திவிட்டு நாளை காலையில் மற்றுமொரு தேடுதலை தொடர்கின்றோம். இப்போது அந்த கண்டல் பற்றைக்காடுகளுக்கு இருட்ட தொடங்கிவிட்டது”  என அவருக்கு பதிலளித்தேன்.

போர் இறுதியாக முடிவுக்கு வந்து விட்டதது என்கின்ற நினைப்பில் ஏற்கனவே முழு நாடுமே கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டிருந்தது. கொழும்பு, கண்டி, காலி, மாத்தறை, அனுராதபுரம், போன்ற பெரும் நகரங்கள், இலங்கையின் தொலைதூர கிராமங்கள் வரை எல்லோரும் வீதிகளில் இறங்கிவிட்டனர். தேசியக்கொடியை காற்றில் அசைய விட்டு ஆட்டமும் , பாட்டமும் கொண்டாட்டமுமாக இருந்தனர். பால்சோறு சமைத்து தமது மகிழ்ச்சியை தடையின்றி கொண்டாடிக்கொண்டிருந்தனர். மிக நீண்ட கடினமான போரில் ஈடுபட்டதால் எனக்கும், எனது அதிகாரிகளுக்கும், படையினருக்கும் கொண்டாட்டங்களுக்கு முன் சிறிதளவு ஓய்வு தேவையாக இருந்தது. முன்கூட்டியே ஊகிக்க முடியாதளவுக்கு நாடு முழுவதிலும், உலகம் முழுவதிலும் இருந்து நண்பர்களும் நலன் விரும்பிகளும் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துக்களை கூறினார்கள். ஒவ்வொரு அழைப்பும் ” பிரபாகரன் எங்கே?” என்கின்ற கேளவியுடனேயே முடிந்தது. ” எங்களுக்கு தெரியவில்லை” என்பதே அவர்களுக்கான எனது உடனடியான பதிலாக இருந்தது. பல மாதங்களுக்கு பின் அன்று இரவு நான் வசதியாக நித்திரைகொள்ள முடிந்தது. ஆனாலும் எனது உறக்கம் “பிரபாகரன் எங்கே?” என்கின்ற தொடர்ச்சியான கேள்வியினால் வேட்டையாடப்பட்டு கொண்டிருந்தது. வார்த்தைகளால் விபரிக்க முடியாத துயரங்களை ஏற்படுத்திய, பல்லாயிரக்கணக்கான இந்நாட்டு மக்களின் சாவுக்கு காரணமான கொலைகாரன் பிரபாகரனின் பெரும் பலமாகவும் தூணாகவும் இருந்த அனைவரும் இன்று கொல்லப்பட்டுவிட்டனர். ஆனால் அவர்களுக்கு கட்டளையிட்டு கொலை செய்வதற்கும் குற்றங்கள் புரியவும் ஆக்கமும் ஊக்கமும் அளித்த அவர்களின் தலைவன் பிரபாகரன் இன்னும் இருக்கின்றான். அவனுடைய கொலைதிட்டத்துக்கு வடிவம் கொடுத்தது ஈழக்கனவுக்கு ஊகம் கொடுத்த பொட்டு அம்மானும், சூசையும் கூட இன்னும் சுதந்திரமாக இருக்கின்றனர். அப்படியென்றால் இன்று சுதந்திரமாகவும் சந்தோசமாகவும் கொண்டாட்டங்களின் ஈடுபடும் அந்த மக்களின் மகிழ்ச்சி எவ்வளவு காலத்துக்கு நீடிக்க போகின்றது? அவர்களால் எப்படி அமைதியாக வாழமுடியும்? ஒருவேளை சந்தர்ப்பம் கிடைத்து பிரபாகரன் மீளவும் போரை தொடக்கிவிட்டால் “ நீங்கள் போரை முழுமையாக முடிக்கவில்லை” என இந்த மக்கள் எங்களை நோக்கி விரலை நீட்டுவார்களே? அப்படி நடந்தால் அவர்களை என்னால் குறை கூற முடியாதே?. பிரபாகரன் வேட்டையாடப்பட்டிருந்தால் இங்கே இந்த மண்ணில்தான் எங்கோ இறந்து கிடக்க வேண்டும். அப்படியென்றால் தானே இந்த நாட்டின் ஓவ்வொரு அங்குல நிலமும் எமக்கு சொந்தமானதாகும். ஆனால் “பிரபாகரன் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லையே? இந்த மனவோட்டங்கள் என்னை சீண்டிக்கொண்டும் பலமணி நேரத்துக்கு புரட்டிப்போட்டுக்கொணடும் இருந்தன. இறுதியாக அதிகாலை நேரத்தில் ஆழ்ந்து உறங்கிப்போனேன்.


காலையில்  கேணல் ரவிபிரிய, லெப்டினண்ட் கேணல் லாலந்த கமகே ஆகியோரை அழைத்து 4வது விஜயபாகு படையணியினரை அனுப்பி அந்த கண்டல் காடுகளை முழுமையாக ஒரு இடம் விடாமல் தேடுமாறு அறிவுறுத்தினேன். இன்னும் 7 அல்லது 8 பயங்கரவாதிகள் அங்கே பதுங்கி இருக்கலாம், நாங்கள் இறந்து போன எல்ல பயங்கரவாதிகளினதும் உடல்களையும் ஆயுதங்களையும் கைப்பற்றவில்லை என எனக்கு உள்ளுணர்வு ஓடிக்கொண்டிருந்தது. காலை 9.00 மணிக்கு ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்த போகின்றார் என கேள்விபட்டேன். அதனை தொலைக்காட்சியில் பார்ப்பது எனவும் முடிவு செய்திருந்தேன். படையினர் காலை உணவுக்கு பால்சோறு சமைத்திருந்தனர். அவற்றில் இரண்டு மூன்று துண்டுகளை எடுத்துக்கொண்டு பாராளுமன்றில் நடப்பதை பார்ப்பதற்காக தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்தேன். ஜனாதிபதி பாராளுமன்றத்தினுள் கம்பீரமாக உரையாற்ற தொடங்கினார். சில நிமிடங்களுக்குள்ளாகவே என்னுடைய CDMA தொலைபேசி அழைத்து. மறுமுனையில் கேணல் ரவிபிரிய.

” சேர் கண்டல் காட்டுக்கு அருகில் ஒரு பிரச்சினை, விரைவாக வாருங்கள்” 

என அழைத்தார்.  போர் உத்தியோகபூர்வமாக முடிவடைந்திருந்தாலும்  இப்படியான சிலவற்றை நான் எதிர்பார்த்திருக்க வேண்டியிருந்தது. பாதி சாப்பிட்ட நிலையில் உணவையும் தொலைகாட்சியையும் கைவிட்டு என்னுடைய லாண்ட் ரோவர் வாகனத்தில ஏறி அந்த சதுப்பு நில கண்டல் பற்றை காட்டு பகுதிக்கு விரைந்து சென்றேன்.

நான் அங்கே சென்றடைந்த போது

 “ சேர், கண்டல் பற்றைகளினுள் இன்னும் சில பயங்கரவாதிகள் ஒழிந்துள்ளதாக எம்முடைய 4வ்து விஜயபாகு படையினர் கூறுகின்றனர்”  

என கேணல் ரவிப்பிரிய என்னிடம் கூறினார். படையினருடன் நின்றிருந்த லெப்டினண்ட் கேணல் லாலந்த கமகே அழைத்து எவரும் தப்பி செல்ல முடியாதவாறு அந்த பகுதியை சுற்றி வளைக்குமாறு அறிவுறுத்தினேன். மேலும் கடைசி கசப்பான முடிவு வரை அவர்கள் உங்களை தாக்ககூடும் என்னுடைய பெடியல் (பையன்கள்) கடைசி நேரத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்வதை நான் பார்க்க விரும்பவில்லை. எனவே அவதானமாக செயற்படுங்கள் என அவர்களை எச்சரித்தும் இருந்தேன். ஏற்கனவே படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்திருந்ததால் நான் அவர்களுக்கு அறிவுறுத்திய சில நிமிடங்களுக்குள்ளாகவே அங்கே மறைந்திருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதலை தொடங்கிவிட்டனர்.  எதிர்பாராத விதமாக தாக்குதல் மிக மோசமான நிலையை அடைந்தது. பயங்கரவாதிகள் மிக குறுகிய இடத்தினுள் சுற்றி வளைக்கப்பட்டு இருந்ததால் எம்மால் ஆட்டிலரி அல்லது மோட்டார் தாக்குதலை நடாத்த முடியாமல் இருந்தது. எனவே 4வ்து விஜயபாகு படையினருக்கு தங்களது இயந்திர துப்பாக்கிகள் மற்றும் தங்களது தனிப்பட்ட ஆயுதங்களுடனுமே அந்த தாக்குதலை மேற்கொள்ள வேண்டி இருந்தது. சில நிமிடங்களுக்குள்ளாகவே நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகளவு பயங்கரவாதிகள் அங்கே மறைந்திருந்தது தெளிவாகியது.  தாக்குதலை தொடங்குவதற்கு முதல் அவர்களை சரணடையுமாறு அறிவிப்பு செய்தோம். எங்கள மீதான தாக்குதலையே அவர்கள் அதற்கு பதிலாக கொடுத்ததனால் அவர்களை தாக்கி அழிப்பதை தவிர எங்களிடம் வேறு தெரிவுகள் எதுவும் இல்லாமலேயே போனது. 

வெற்றிக்களிப்புடனும் பதட்டத்துடனும் இருந்த படையியினர் அந்த தாக்குதலை 45 நிமிடங்களுக்குள்ளாகவே முறியடித்திருந்தனர்.  இருந்தாலும் வேறு ஒரு திசையில் இருந்து மற்றுமொரு தாக்குதல் எம்மீது நடாத்தப்பட்டது. சிறிது நேரத்துக்கள்ளாகவே அந்த தாக்குதல் உக்கிரமான நிலையை எட்டிவிட்டது. பயங்கரவாதிகளின் ஒரு சிறிய அணியினர் விடாமல் தாக்கிக்கொண்டிருந்தனர். இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் அவர்கள் மறைந்திருந்த அந்த இடத்தின் மீது தரைப்படையினரை தாக்குதலில் ஈடுபடுத்த வேண்டும் என நான் புரிந்துகொண்டேன். அதற்கேற்ப 4வது விஜயபாகு படைபிரிவின் கட்டளை அதிகாரியை அழைத்து தலா 8 பேர் கொண்ட இரண்டு படை அணிகளை தாக்குதலில் இறக்குமாறு அறிவுறுத்தினேன். அதி சிறப்பு தகமையும் துணிச்சலும் கொண்ட இந்த படையணிகளை கோப்ரல்களான விஜயசிங்க, முத்துபண்டா ஆகியோர் வழிநடத்தினர். அடுத்து வந்த 10 நிமிடங்களுக்குள்ளாகவே சண்டையை அவர்கள் முடித்துவிட்டனர்.  என்னுடைய வாழ்நாளில் நான் முன்பு எப்போதுமே கேள்வி பட்டிருக்காத அந்த அற்புதமான, முக்கியமான, மகிழ்ச்சியான செய்தியை கேள்விப்பட்டேன்,

“ சேர், இப்போது நடந்த இந்த கடைசி சண்டையில் நாங்கள் பிரபாகரனை கொன்றுவிட்டோம்.” 

கேணல் ரவிபிரிய இதனை கூறினார்.  அப்போது கண்டல் பற்றைக்காட்டின் ஓரத்தில் கேணல் ரவிபிரிய, கேணல் சுத்தா பெரேரா, லெப்.கேணல் லாலந்த கமகே, லெப்.கேணல் திலக் ஹங்கிலிபொல ஆகியோர் நின்றுகொண்டிருந்தோம். மகிழ்ச்சி ததும்பிய இனிப்பான ஆனால் நம்பவே முடியாத அந்த செய்தியை ரவிப்பிரியவுக்கு தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து கூறியவர் மேஜர் ரோஹித அலுவிஹார.

 “ அது பிரபாகரன்தானா? நன்றாக பாருங்கள்” 

என நான் அவர்களுக்கு கூறினேன். 

 ”சூரியன் சந்திரன் இருப்பது எவ்வளவு உறுதியான தகவலோ அதே போன்றதுதான் பிரபாகரனை நாம் கொன்றதும் சேர்.” 

என மறு முனையில் இருந்து எனக்கு பதில் வந்தது.  இருந்தாலும் அந்த செய்தியை மேலும் உறுத்திபடுத்திக்கொள்ள விரும்பினேன்.  CDMA தொலைபேசியை எடுத்துக்கொண்டு கேணல் லாலந்த கமகேயை அந்த இடத்துக்கு சென்று செய்தியை உறுதிபடுத்துமாறு கூறினேன்.  அடுத்த 10வது நிமிடத்தில் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது.

“ சேர், அவர்கள் கூறியது சரி. அது பிரபாகரனேதான்.” 

செய்தியை உறுதிபடுத்தினார்.

 “ உறுதியாக கூறுகின்றீர்களா?” 

நான் மீண்டும் கேட்டேன்.  இவ்வாறு நான் இரண்டாவது தடவையாக கேட்டபோது அவர் உண்மையிலேயே உறுதியாக.

” எந்த மாற்றமும் இல்லை. இது பிரபாகரனேதான்” என்றார். 

“ சேர் விரைவாகவே இராணுவதளபதிக்கு அழைப்பு எடுத்து நாங்கள் பிரபாகரனை கொன்றுவிட்டோம் என்று கூறுங்கள்” 

என அவர் உட்சாகமாக எனக்கு கூறினார். நான் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து சதுப்பு பற்றைகளுக்குள் 200-300மீட்டர் தொலைவில் அவரது உடல் கிடந்தது.  இருந்தாலும் இந்த பெறுமதிமிக்க, எனது வாழ் நாளிலேயே மிக நம்பக்கூடிய இந்த செய்தியை  நானே நேரில் உறுதிபடுத்திக்கொள்ளாமல் இராணுவதளபதிக்கு கூற விரும்பவில்லை. அவசரப்பட்டு இராணுவ தளபதிக்கு நான் இந்த செய்தியை கூறினால் அவர் பாதுகாப்பு செயலாளரருக்கு அறிவிப்பார். பாதுகாப்பு செயலாளர் இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு செய்தியை கூறுவார். இவர்களில் யாரவது” எங்களுடைய வீரதீரமிக்க படையினர் பிரபாகரனை கொன்றுவிட்டனர்” என ஊடகங்களுக்கு கூறக்கூடும். ஒருவேளை அங்கே கொல்லப்பட்டு கிடப்பது பிரபாகரன் இல்லை எனறால் என்னாவது? 

எனவேதான் அந்த உடலை நான் நின்ற இடத்துக்கு கொண்டுவரும்படி லாலந்தவுக்கு கட்டளையிட்டேன். 



பிரபாகரனின் சடலம் கொணரப்பட்ட என்னிடத்தில்   அதிகாரிகளும் படையினரும் கூடத்தொடங்கிவிட்டனர். ஏறக்குறைய 5000 பேர் வரை அங்கே குழுமி இருக்கலாம் என ஊகிக்கின்றேன். நூற்றுக்கணக்கான படையினர் நாலாதிசைகளிலும் இருந்து எம்மை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தனர். பல்வேறு ஊடகங்களில் இருந்தும் செய்தியளர்கள்கூட அங்கே வந்து விட்டனர்.  10 நிமிடம் கழித்து 4வது விஜயபாகு படையினர் லாலந்த கமகே ரோஹித் அலுவிகார ஆகியோர் தலைமையில ITN செய்தியாளர் சுஜித் விதான பத்திரன மற்றும் ஒளிப்பதிவாளர் சாமல் ஆணந்த ஆகியோர் புடை சூழ சதுப்பு பற்றைகளுக்குள் இருந்து அந்த அரக்கனின் உடலை சுமந்தபடி வெளிப்பட்டு எனது திசை நோக்கி வந்தனர். பற்றை காட்டுக்குள் இருந்து 4வது விஜயபாகு படையினர் வெளிப்பட்ட உடனேயே என்னை சூழ நின்று கொண்டிருந்த கிட்டதட்ட 5000 படையினரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். எங்கள் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் எல்லைகளே இல்லை என நான் அந்த நொடியில் உணர்ந்தேன்.  துரோகியின் உடலை 4விஜயபாகு படையினர் கொண்டுவருவதை கண்ட படையினர் தன்னிலை மறந்து பரவசமாகி வானை நோக்கி வேட்டுகளை தீர்க்க தொடங்கிவிட்டனர். அவர்களின் T56  ரக துப்பாக்கியில் மாத்திரமல்லாமல் கனரக இயந்திர துப்பாக்கிகளில் இருந்தும் தோட்டாக்கள் மழையாக பொழிந்தன.  அதிகாரிகள் சிலர் அதனை நிறுத்த முயன்றனர். ஆனாலும் தங்கள் மகிழச்சியை கொண்டாட அவர்களை அனுமதிக்குமாறு நான்  அந்த அதிகாரிகளுக்கு சைகை காட்டினேன்.  இவர்கள் இந்தநாட்டின் புதல்வர்கள். திகதியிடப்படாத மரண சான்றிதழை கைகளில் வைத்துக்கொண்டு அவர்களுடைய நாட்டுக்காக போராடியவர்கள். இந்த அசுரனின் மரணத்துடன் அவர்களுக்கிருந்த மரண அழுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்ப்பதன் மூலம் அவர்கள் தங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றால் நாம் அதனை தடுக்க கூடாது என உணர்ந்தேன். துப்பாக்கி வேட்டுக்களின் பெரும் சத்தம் நந்தி கடல்நீரேரியெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. இப்போது நான் இதை எழுதும் போது பெருமை பொங்கிய அந்த முகங்களில் இருந்து பெரும் கௌரவத்தையும் பெரும் மதிப்பையும் உணர்ந்து கொள்கின்றேன்.

வீரர்கள் அந்த உடலை எனது காலடியில் கொண்டு வந்து போட்ட அடுத்த நொடியே அது பிரபாகரன்தான் என்பதை கண்டுகொண்டேன்.  இன்று கூட நான் இதை மிகைப்படுத்தி கூறவில்லை. அந்த தருணத்தை நினைக்கும் போதெல்லாம் இப்போதும் கூட எனது உடல் சிலிர்க்கும். அந்த உடலையும் தலையில் இருந்த ஆழமான வெட்டுக்காயத்தை அகழத்திறந்த கண்களுடன் வெறுமனே பார்த்துக்கொண்டேயிருந்தேன். நிச்சயமாக இது பிரபாகரன்தான். எங்கள் தேசத்தின் மீது மூன்று தசாப்தங்களாக பெருத்த நாசத்தை கட்டவிழ்த்து விட்டு வலியை தந்து கொண்டிருந்த அதே பிரபாகரன்தான். வயது, பால், இனம், மதம் என எதனையுமே கனக்கில் கொள்ளாது அப்பாவி பொதுமக்களை இரத்தம் தோயத் தோய கொன்று குவித்த, சிங்கள மக்களையும் இந்த நாட்டையும் இனவெறிபிடித்தவர்கள் என கூறித்திரிந்த, இந்த நாட்டை பீடித்திருந்த தசாப்த கால சாபமான கசாப்பு கடைக்காரனான அதே பிரபாகரன்தான் இது. 



இரக்கமற்ற  அந்த மனிதனை இங்கே கொண்டுவந்து போட்ட  படையினர் எனது கட்டளைக்கு கீழே பணிபுரிவதை நினைக்கும் போது,ம், ஒரு நாயை போன்று  அநத மனிதன் இங்கே எனது காலடியில் கிடப்பதை பார்க்கும் போதும் நான் உணர்ந்த பெருமையை அநேகமாக நீங்களும் கற்பனை செய்து கொள்ள முடியும். இங்கே என் முன்பாக அவனை கொண்டுவந்து நிலத்தில் போட்ட பின்பும் மகிழ்ச்சி ஆரவாரம் குறையவே இல்லை. அவர்கள் உரத்த குரலில் கத்திக்கொண்டே இருந்தார்கள்.

“சேர், பிரபாகரன் இதோ ”

“இதோ பிரபாகரன் சேர்”

“சேர் நாங்கள் அவனது கதையை முடித்துவிட்டோம்”

“ போர் முடிந்து விட்டது சேர்”

படையினரின் மகிழச்சி கோசம் நந்தி கடல் நீரேரி எங்கும் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. 

எனது காலடியில் ஒரு நாயை போல கிடக்கும் பொய்களின் மொத்தவடிவத்தின் உடலை நன்கு ஆராய்ந்தேன். கண்கள் இரண்டும் அகலதிறந்திருந்தது. புலிகளின் வரி கமோபிளேக் சீருடையில் கட்சியளித்தது அந்த உடல். பிரபாகரன் சிலநாட்களாக முகச்சவரம் செய்திருக்கவில்லை. நரைத்த முடிகட்டைகள் அவரது முகம் முழுவதும் பரவி இருந்தது. அவருடைய நெற்றி ஆழமாக மண்டையோடு வரை பிளந்திருந்த்திருந்தது. இதை தவிர அவரின் உடலில் ஒரு சிறு கீறல்கூட ஏற்பட்டிருக்கவில்லை. அகல திறந்திருந்த கண்களை பார்க்கும்போது அதிர்ச்சியையாகவும் பயங்கரமாகவும் இருந்தது. நான் அந்த உடலை தொட்டபோது இன்னும் உயிருடன் இருப்பது போலவே சூடாக இருந்தது. 30 நிமிடம்க்களுக்கு முன்பாகவே இறந்திருக்க வேண்டும். காயத்தில் இருந்தும், காதுகளில் இருந்தும் இரத்தம் ஒழுகிக்கொண்டிருந்தது.

இராணுவத்தினரால் கைது செய்யப்பட நேர்ந்தாலோ அல்லது இக்கட்டான சூழ்நிலையிலோ தற்கொலை செய்து கொள்ளும் பொருட்டு ஒவ்வொரு புலிகள் இயக்க உறுப்பினரும் சயனைடு குப்பியை தங்கள் கழுத்தில் மாட்டியிருக்க வேண்டும். அடிப்படை பயிற்சியை முடிக்கும் ஒவ்வொருவருக்கும் மூத்த புலிகள் இயக்க தலைவர் ஒருவரால் சயனைடு குப்பி பரிசளிக்கப்படுவதுண்டு. அதனை அணிந்திருப்பவர் இயக்கத்தினுள் ஒரு முழுமையான போராளியாக அடையாளம் காணப்படுவார். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ல் பிரபாகரன் தனது ஈழ அபிமானிகளுக்காக உரையாற்றுவதை வழக்கமாக வைத்திருந்தாரல்லவா, இலங்கையிலும், புலம்பெயர்தேசங்களிலும் இருக்கும் தமிழர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த உரைகள் உலகம் முழுவதிலும் ஒளிபரப்பபடுவதுணடல்லவா, அப்போதெல்லாம் கறுப்பு நூலில் தொங்கவிடப்பட்ட சயனைடு குப்பி அவரது சட்டை பையினுள் இருக்கும. அவரது நிகழ்வுகளில் அது முக்கிய அடையாளமாகவே இருந்தது. ஆனால் நாங்கள் கண்டெடுத்த உடலில் அவருடன் அந்த சயனைடு இருக்கவில்லை. வேறு வழியே இல்லை என்கின்ற சந்தர்ப்பசூழநிலைகளில் பயன்படுத்துவதற்க்காக தங்கள் அதிவணக்கத்துக்குரிய தலைவரின் கட்டளைப்படி சயணைட் குப்பியை யாழ்ப்பாண குடாநாடு, வன்னி, கிழக்கு மாகாணம் என ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மகிழ்ச்சியாக அணிந்து கொண்டிடுந்தனர். உண்மையில் நாங்கள் பிடிக்க முயன்றபோதும் , பிடித்தபோதும் எத்தனையோ பேர் இந்த சயனைட் குப்பியை கடித்து தற்கொலையும் செய்து கொண்டனர் சயனைட் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியும், பலர் தங்கள் உயிரை போக்கிக்கொள்ள ஊக்கப்படுத்தியும் கொண்டிருந்த நம்பவைத்து கழுத்தறுக்கும் இந்த பயங்கரவாதி ஒரு கோழையாகவே இருந்திருக்கின்றான். இறுதியாக இராணுவத்தினரால் கொல்லப்பட்டபோது அந்த உலக புகழ்பெற்ற சயனைட் குப்பியை அணிந்திருக்கவும் இல்லை. இறக்கும் போது அவனுடைய உலக வாழ்க்கையின் உடமைகளாக இராணுவ இலக்கதகடு, அடையாள அட்டை,ஒரு கட்டு நீரிழிவு மாத்திரைகள் ஆகியன மட்டுமே இருந்தன.

பிரபாகரனின் மரணத்தை பற்றி இராணுவதளபதிக்கு அறிவிக்க வேண்டியது கட்டாயமாகும். நெறிமுறைப்படி நான் இராணுவதளபதிக்கு அறிவிக்க வேண்டும். அவர் பாதுகாப்பு செயலருக்கு அறிவிப்பார். அந்த ஒழுங்கில் ஜனாதிபதிக்கும் அறிவிக்கப்படும். இராணுவ தளபதியை தொடர்பு கொள்ள நான் கடுமையாக முயன்றுகொண்டிருந்தேன். ஆனால் என்னால் அவரை அனுக முடியாமல் இருந்தது. பாராளுமன்றத்தின் விசேட அமர்வில் ஜனாதிபதியுடன் அவர் இருந்தார். அவருடைய தொலைபேசி அவரது இராணுவ உதவியாளரிடம் இருந்தது. 10 நிமிட கடுமையான முயற்சியின் பின் இராணுவ தளபதியுடன் என்னால் பேச முடிந்து. எனது வாழ்விலேயே மிக மகிழ்ச்சியான, பரபரப்பான அந்த செய்தியை அவருடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது.

”சேர் மகிழ்ச்சியான செய்தி” 

என்று நான் கூறினேன். 

“என்ன அது கமால்?” 

அவர் பதிலளித்தார்.

” சேர் பெரிய தலை முடிந்துவிட்டது.

” நான் கூறினேன். 

”என்ன?”

அவர் குழம்பி போய் கேட்டார். 

“சேர் நாங்கள் பிரபாகரனை கொன்றுவிட்டோம்” 

நான் தெளிவாக விளங்கப்படுத்தினேன். ஆனால் அவர் அதனை கிரகிக்க முடியாமல் உரத்த குரலில்

 “ என்ன?” 

எனறு மீண்டும் கேட்டார். சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் அந்த உரையாடலை அப்படியே வார்த்தைகள் மாறாமல் கீழே தருகின்றேன்

நான் : சேர் நாங்கள் பிரபாகரனை கொன்றுவிட்டோம்.

30 வினாடிகள் மௌனத்தின் பின்,

தளபதி : உண்மையாகவா?

நான் : இயஸ் சேர்

இன்னுமொரு 30 வினாடிகள் மௌனத்தின் பின்,

தளபதி : அது பிரபாகரந்தான் என்று உனக்கு எப்படி தெரியும்?

நான் : சேர் என்னிடம் இறந்த உடல் இருக்கின்றது.

தளபதி : ஓகே, உன்னிடம் இறந்த உடல் இருக்கின்றது ஆனால் அது பிரபாகரனின் உடல்தான் என்று உனக்கு எப்படி தெரியும்?

நான் : சேர் தயவு செய்து என்னை நம்புங்கள். இது பிரபாகரன்தான். நான்காம் வகுப்பு பிள்ளைகள்கூட இந்த மனிதனை அடையாளம் கண்டுகொள்ளுவார்கள். இது பிரபாகரன்தான். தயவு செய்து இந்த நல்ல செய்தியை பாதுகாப்பு செயலருக்கும் ஜனாதிபதிக்கும் தெரிவித்து விடுங்கள்.

தளபதி : ம்ம்ம்….., நான் சொல்லும்வரை இதனை யாருக்கும் கூறிவிடாதே.

அவர் கூறுவதற்கு முன்பாக நான் பாதுகாப்பு செயலருக்கு கூறிவிடுவேன் என ஒருவேளை அவர் நினைத்திருக்க வேண்டும். உயர்ந்த ஒழுக்கத்தை பேணும் அதிகாரியாக அப்படியொரு எண்ணம் எனது மனதில் தோன்றவே இல்லை. எனது மூத்த கட்டளை அதிகாரியாக பாதுகாப்பு செயலளார் இருந்த நாட்களில் இருந்தே உயர்ந்த மரியாதை அவரிடத்தில் எனக்கு இருந்தாலும் இந்த அதி முக்கியமான உன்னதமான செய்தியை இராணுவதளபதியை கடந்து அவருக்கு நேரடியாக கூற நான் ஒருபோதுமே நினைத்ததில்லை.

கிட்டதட்ட இன்னுமொரு 5-10 நிமிடங்களின் பின் மீண்டும் எனக்கு அழைப்பெடுத்த இராணுவ தளபதி சிங்களத்தில் உரையாடியதை கீழே தருகின்றேன்.

தளபதி: கமால் எங்கே நிற்கின்றாய்?

நான்: சேர் அந்த கண்டல் காட்டுக்குள்தான்

தளபதி: இதோபார், நேற்று மாலை நீ எனக்கு அழைப்பெடுத்து எல்லாம் முடிந்துவிட்டது, கண்டல் பற்றைகளை நன்கு தேடிய பின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் நாம் கைப்பற்றி விட்டோம் என்று கூறினாயல்லவா?

நான்: இயஸ் சேர்

தளபதி: புலிகள் கதை முடிந்துவிட்டது என்றும் கூறினாயல்லவா? கூறினாயா இல்லையா?

நான்: இயஸ் சேர்

தளபதி: பிறகு இவன் எங்கே இருந்தான்?

நான்: சேர், அந்த கண்டல் பற்றைகளுக்குள்தான். நேற்று நாங்கள் தவறவிட்டு விட்டோம்.

தளபதி: அப்படி எவ்வாறு நீ தவறவிடுவாய்? இதன் அர்த்தம் நீ ஒழுங்காக உன்னுடைய வேலையை செய்யவில்லை!

நான்: சேர், மிகவும் இருள் சூழந்து விட்டதால் நாங்கள் தவரவிட்டிருக்கலாம்.

தளபதி: நீ உன்னுடைய வேலையை ஒழுங்காக செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் நீ அவனை தவறவிடுவதற்கான வழியே இல்லை. அவன் தப்பித்து சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைக்கின்ராய்?

நான்: சேர், போர் முடியாமல் போயிருக்கும், ஆனால் அவன் தப்பிக்கவில்லை. நாங்கள் எப்படியோ ஒரு வகையில் அவனை கொன்றுவிட்டோம், சேர்.

தளபதி: உண்மைதான். நீங்கள் அவனை கொன்றுவிட்டீர்கள்தான். ஆனால் அவன் தப்பித்திருந்தால்? உன்னை நம்பி ஒரு வேலையை ஒப்படைத்திருந்தேன். நீ உன்னுடைய வேலையை சரியாக செய்யவில்லை.

நான்: சேர் அவன் தப்பித்திருந்தால் நான் மிக மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டிருப்பேன். ஆனால் அவன் தப்பிக்கவில்லையே சேர். அவன் தப்பிசெல்வதற்கு முன்பாகவே நாங்கள்தான் கொன்றுவிட்டோமே.

.தளபதி: ஆம், உண்மைதான். நீங்கள் அவனை கொன்றுவிட்டீர்கள். ஆனால் அவன் தப்பித்திருந்தால்?

நான்: சேர், ஆனால் அவன்தான் தப்பிக்கவில்லையே. நாங்கள் அவனை கொன்றுவிட்டோம். அவனது உடல் இதோ என்னிடம் இருக்கின்றது.

கோபத்தின் உச்சிக்கே சென்ற அவர் என்னை பயங்கரமாக திட்டி கவனயீனம் மீதான நடவடிக்கை எடுத்தார். எனது இராணுவ வாழ்க்கையில் அவர் என்னிடம் இவ்வாறு நடந்துகொள்வது இது இரண்டாவது தடவையாகும். பிரபாகரனை கொன்று பெரும் சாதனையை செய்திருந்தாலும் தளபதி இவ்வாறு திட்டியது எனக்கு பெருந்த ஏமாற்றத்தையும் மனச்சோர்வையும் தந்தது. நான் மௌனமாக அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தேன். விசாரணை தொடர்ந்து.

தளபதி: இதோபார் அவன் தனியாக இருந்திருக்க மாட்டான். கூடவே ஏழெட்டு பேர்களாவது இருந்திருக்க வேண்டும். அப்படித்தானே?

நான்: அதைவிட அதிகமாகவே இருந்தார்கள் சேர்

தளபதி: எத்தனை பேர் பத்து பதினைந்து பேர்கள்?

நான்: இல்லை சேர். எல்லாமாக 52 பேர் இருந்திருக்கின்றனர். நாங்கள் 52 இறந்த உடல்களை கைப்பற்றியுள்ளோம்.

தளபதி: என்ன? 52 சூத்தடிக்கிற நாய்கள் நேற்று தப்பி இருந்திருக்கின்றான்களா?

நான்: இயஸ் சேர், அவன்கள் எல்லோரும் இங்கே எங்களிடம் செத்து கிடக்கின்றான்கள். யாரும் உயிருடன் இல்லை.

தளபதி: அப்படியென்றால் நீ உனது கடமையை எப்படி செய்திருக்கின்றாய்? உன்னிடம் எவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைத்திருந்தோம் தெரியுமா?

தளபதி தொடர்ந்து என்னை கடுமையாக திட்டிக்கொண்டே இருந்தார். மேலதிகமாக விளக்கம் கொடுத்தது நியாயப்படுத்த முயல்வது வீணாணது என எனக்கு புரிந்தது. அது அவரை மேலும் கோபமூட்டுவதாக இருக்கும். சில நிமிடங்களுக்கு முன் இருந்த சந்தோசம் குதூகலம் இப்போது மறைந்து போய் சோகமும் வேதனையும் இதயத்தை பாரமாக்கியது. அவரின் காட்டு கத்தலை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் இப்படி ஏதோ திடீரெனெ கத்துபவர் அல்ல, வழக்கமாகவே தாராளமாக இப்படிதான் எல்லோரிடமும் நடந்து கொள்வார் என்பதுதான் அவர் என்னை திட்டுவதற்கான ஒரே காரணமாக இருக்க வேண்டும்.

கத்துவதை நிறுத்திவிட்டு பிரபாகரன் சீருடை அணிந்திருந்தானா என கேட்டார். ஆம் என நான் அதை உறுதிபடுத்தியபோது, ஒரு இராணுவத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே சீருடை அணிய தகுதியானவர்கள், எனவே அந்த சீருடையை கழற்றிவிடு என்று அடுத்த நொடியே எனக்கு உத்தரவிட்டார். ஏற்கனவே ஆயிரக்கணக்கான படையினரும், செய்தியாளர்களும் அங்கே குழுமிவிட்டதால் அதனை செய்வது அவ்வளவு சாத்தியமானதல்ல என நான் அவருக்கு விளங்கப்படுத்த முயன்றேன். ஆனால் அந்த முயற்சியானது அவரது கோபத்தை மீண்டும் கிளறிவிடவே எனக்கு உதவியது.

”அதுதான் பிரச்சினையே, எல்லாவற்றுக்கும் முன்பாகவே நீ மீடியாவை அழைத்திருக்கின்றாய்.” 

அவர் வெடித்து சிதறினார். 

” இல்லை சேர், நான் அவர்களை இங்கே அழைத்துவரவில்லை. ஊடகங்களை நான் எப்போதும் தள்ளியே வைப்பவன். அவர்கள் அனைவரும் இராணுவ தலைமையகத்தால் அனுப்பபட்டவர்கள்.” 

நான் அமைதியாக பதிலலித்தேன். ”அங்கு யார் இருந்தாலும் எனக்கு அக்கறையில்லை. நீ அவனது சீருடையை கழற்றிவிடு” 

தொலைபேசியை வைக்க முன்பு அவர் இறுதியாக எனக்கு கட்டளையிட்டார்.

முழு உலகமே பாரத்துக்கொண்டிருக்க பிரபாகரனின் சீருடையை கழற்றிவிட்டு வேறு ஒன்றை அந்த உடலில் போட எனக்கு எப்படி இருந்தாலும் விருப்பமில்லாமல்தான் இருந்தது. நான் இன்னும் சிந்தித்துக்கொண்டே இருந்த போது சரியாக 15 நிமிடங்கள் கழித்து எனது தொலைபேசி அலறியது. அது மீண்டும் இராணுவதளபதி.

அவர் இன்னும் கோபமாகவே இருந்தார்

.” அந்த ரூபவாகினிகாரன் சீருடை அணிந்த படியே அந்த மனிதனின் உடலை காட்டுகின்றான். சீருடையை கழற்றிவிடு என்று நான் உனக்கு கூறினேனல்லவா? இராணுவ தளபதியின் கட்டளையை உன்னால் நிறைவேற்ற முடியாதா?” 

என எரிந்து விழுந்தார். அவருடைய சொற்கள் எனது மனதை ஆழமாக காயப்படுத்தியது. கிட்டதட்ட ஐந்து நிமிடங்கள் வரை ஒரு வார்த்தைகூட பதில் பேசாமல் அவர் என்னை மோசமாக திட்டுவதையே கேட்டுக்கொண்டிருந்தேன். ஒருவாறு அவர் முடித்துவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்த பின் எனது அருகே நின்றுகொண்டிருந்த மேஜர் ஜெனரல் ஜகத் டயஸை திரும்பி பார்த்து மிகுந்த துக்கத்துடன் அவரிடம் கூறினேன்

” சேர் இராணுவத்தில் இருக்கும் ஒருவன் மிகபெரியதாக செய்யக்கூடியது எது? இந்த நாயை கொல்லுவதுதானே? அதனை செய்த பின்னும் இவ்வளவு மோசமாக வசைகளை நான் ஏன் கேட்கவேண்டும்? அனுதாபத்துடன் எனது தலையில் கைவைத்து

” கவலைபடாதே சகோதரா, கொஞ்சம் சூடுதணிந்தபின் பொஸ் உன்னை மீண்டும் அழைப்பார்” 

என நேசத்துடன் கூறினார். அவர்கூறியது போன்றே 15 நிமிடங்கள் கழித்து இராணுவ தளபதி என்னை அழைத்தார்.

“கமால்” 

அவருடைய குரல் தணிந்திருந்தது, இராணுவ புலனாய்வை சேர்ந்த பிரிகேடியர் அமல் கருணாசேகர அங்கே கருணா அம்மானையும் தயா மாஸ்டரையும் அழைத்துக்கொண்டு வருகின்றார். பிரபாகரனை முறையாக அடையாளம் காண்பதற்கான ஏற்பாடுகளை செய் என கூறினார். வசை மழையால் இன்னும் ஏமாற்றத்துடனேயே இருந்த நான் அது நிச்சயமாக பிரபாகரந்தான் மேலதிகமான அடையாளம் காணல் தேவையில்லை என கூறினேன். 

” நான் என்ன உனக்கு கூறுகின்றேனோ அதை நீ செய்” 

என கோபத்துடன் கடுந்தொணியில் கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்துவிட்டார்.

இதற்கிடையே கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் உடல்கள் எடுத்துவரப்பட்டு குவிக்கப்பட்டன. ஓரளவு உயரமான நல்ல உடல்வாகுடன் ஒரு உடலும் அங்கு கொண்டுவரப்பட்டது. அதனை மேலும் ஆராய்ந்ததில் ஒரு நல்ல செய்தி கிடைத்தது. அது கடற்புலிகளின் தலைவர் சூசையினுடையது. இந்த குற்றவாளிதான் கடற்படையின் துன்பங்களுக்கு காரணமானவன். நல்லகாலம் அவன் கொல்லப்பட்டுவிட்டான், அதுவும் எனது படையணி வீரர்களால்.

பிரபாகரன் உட்பட அனேகமாக புலிகளின் மேல்நிலை தலைவரகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். இன்னும் நாங்கள் கண்டுபிடிக்காமல் இருப்பது பிரபாகரனின் நெருங்கிய சகாவும் புலிகளின் புலனாய்வு தலைவருமான பொட்டு அம்மானைத்தான். எங்களுக்கு கிடைத்த தகவல்படி எங்களுடைய தாக்குதல் ஒன்றில் புலிகள் சிலருடன் பொட்டு அம்மானும் அவருடைய மனைவி மற்றும் இரு மகன்களும் கொல்லப்பட்டுவிட்டனர். நந்திக்கடல் நீரேரியில் அவருடைய மனைவி , இரண்டு மகன்களின் உடல்களை நாம் கண்டெடுத்திருந்தாலும் நந்திகடல் நீரேரியில் பொட்டு அம்மானின் உடலை எங்களால் காணமுடியவில்லை.



அன்று மதியம் அந்த உடலை முறையாக அடையாளம் காண்பதற்காக இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த பிரிகேடியர் அமல் கருணாசேகர கருணா அம்மான் மற்றும் தயா மாஸ்டருடன் ஒரு ஹெலிகொபடரில் வந்தடைந்தார். அடையாளம் காணும் பணி பிரிகேடியர் சவீந்திர சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆகையால் நானும் மேஜர் ஜெனரல் ஜகத் டயசும் சற்று ஒதுங்கி நின்று நடப்பதை கவணித்துகொண்டிருந்தோம். கருணா அம்மான் எங்களை கடந்து சென்றபோது அருகே நின்றிருந்த விசேட படையணியை சேர்ந்த கோப்ரல் ஒருவர் 

“ இவன் முதலிலேயே வெளியேறிய இருக்காவிட்டால் இவனுடைய உடலும் இங்கேதான் கிடந்திருக்கும்” 

என்றவாறே சுற்றி பார்த்தார். அவருக்கு நாங்கள் நிற்பது சட்டென்று நினைவுக்கு வந்தவுடன் அப்படி கூறியதற்காக அவசர அவரசரமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மூத்த புலிதலைவர் என்ற வகையில் கருணா அம்மான் கூட இராணுவத்துக்கு அதிக சேதத்தை கொடுத்தவர்தான்.அதனால் வெற்றி மயக்கத்தில் படையினர் எதிர்வினையாற்றலாம் என்பதை கருத்தில் கொண்டு கொமாண்டோக்களின் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அவர்களை இராணுவ தலைமயகம் நந்திக்கடலுக்கு அனுப்பி இருந்தது.

பிரபாகரனின் உடலை பார்த்த உடனேயே கருணா அம்மானின் முகம் பெரிய புன்னகையால் பின்னப்பட்டது. ஒருகாலத்தில் நண்பனாகவும் பின் எதிரியாகவும் ஆகிய பிரபாகரனின் இறந்த உடலை பார்பதே கருணா அம்மானின் மகிழ்ச்சிக்கும் பெரும் ஆறுதலுக்கும் காரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. கடைசி வரைக்கும் ஆதரவாளராகவும் விசுவாசியாகவும் இருந்த தயாமாஸ்டர் மிகுந்த துக்கமடைந்தார். இந்த கொடூரமான மனிதனின் உடலை உற்று பார்த்தபோது கண்ணீரில் அவரின் கண்கள் கலங்கின. அடையாளம் காணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட பின் எங்களிடம் வந்த கருணா அம்மான் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக கைகுலுக்கினார். ஊடகங்களுக்கும் புகைப்படங்கள் எடுக்க போஸ் கொடுத்தார். அதன் பின் கொக்கா கோலா ஒரு கோப்பை பருகினார். மகிழ்ச்சியில் இன்னும் பல்லிளித்துக்கொண்டிருந்த அவர் ஊடகங்களுக்கு அறிக்கை விட்டு புறப்பட்டு சென்றுவிட்டார். இந்த பூமியில் எங்கேயாவது ஒரு இடத்தில் பிரபாகரனின் உடலை நாம் புதைத்தால் அந்த துட்டகைமுனு மன்னன் காலத்தில் எல்லாளனின் புதைகுழி புனித பூமியாகியது போல் ஒரு தசாப்தகாலத்தின் பின் அவருடைய ஆதரவாளர்களால் வழிபாட்டிடமாக மாற்றப்பட்டுவிடும். ஆகையால் அன்றே அவருடைய இறுதி கிரிகைகளுக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டோம்.



பிரபாகரனின் மரணத்தை தொடர்ந்து பல்வேறுவிதமான வதந்திகள் நாடுமுழுவதும் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தன. எந்த படையணி பிரபாகரனை கொன்றது எனபது விவாதத்துக்கான எலும்புதுண்டாகியது. எங்களுடைய சில அதிகாரிகளும் படையினரும் அதற்கான உரிமை கோரியதுதான் இந்த குழப்பங்களுக்கான மூல காரணம். சிலர் தாங்கள் முதல் நாளே பிரபாகரனை கொன்றுவிட்டு அவருடைய பிஸ்டலை எடுத்துவந்து விட்டதாகவும் அவரது உடல் 4வது விஜயபாகு படையினரால் பின்னர் மீட்கப்பட்டது எனவும் கோரினர். இந்த வதந்திகளை கேள்விப்பட நான் முற்றாகவே மனமுடைந்து போனேன். பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டு மே 18ம் திகதியே கொழும்புக்கு கொண்டு செல்லப்படதாகவும் அங்கே ஜனாதிபதிக்கு முன்பாக நிறுத்தியபோது, ஜனாதிபதி அவரை அறைந்து முழங்காலில் மண்டியிட செய்ததாகவும் பின்னர் 19ம் திகதி நந்தி கடல் நீரேரிக்கு கொண்டு சென்று பிரபாகரனை கொலை செய்ததாகவும் மற்றும் ஒரு வதந்தியும் எழுந்தது. சிலர் அவர் சினைப்பர் தாக்குதல் கொல்லப்பட்டதாகவும் வேறு சிலர் பிரபாகரன் கொமாண்டோ தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் கூறினார்கள். யார் இந்த பச்சை பொய்- பிரட்டு கதைகளை பரப்பினார்கள் என்று என்னால் கற்பனைகூட செய்ய முடியாமலிருக்கின்றது. மே 19 காலை வரை பிரபாகரன் எங்கே என்று யாருக்கும் தெரியாது. 4வது விஜயபாகு படைபிரிவை சேர்ந்த தலா 8 பேர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள் மேஜர் ரோஹித் அலுவிகார தலைமையில் நடத்திய தாக்குதலில்தான் பிரபாகரன் மே 19 காலை 9.45 மணியளவில் கொல்லப்பட்டுருக்கின்றார் என இராணுவ நடவடிக்கைக்கு பொறுப்பான படையணியின் தளபதி என்கின்ற வகையில் அனைத்து ஊகங்களைளுக்கு இஅயம் திரிபுற கூறுக்கொள்ள விருபுகின்றேன். ஏனைய அத்தனை கதைகளும், ஊகங்களும், வதந்திகளும், முற்றிலும் பொய்யானவையாகும்.

அடுத்த சில நாட்களில் கடல் நீரேரிய மேலும் சோதனையிட்டபோது அழுகிக்கொண்டிருக்கும் இறந்த உடல்களையும் பெருந்தொகையில் ஆயுத தளபாடங்களையும் கைப்பற்றினோம். புதுமாத்தளனின் முழு பகுதியும் பூலோக நரகம் போன்று காட்சியளித்தது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அந்த பகுதியில் குழுமியிருந்ததால் அதனை அந்த ஒடுங்கிய நீளமான பகுதியால் கொள்ள முடியாமல் இருந்தது. கோடிக்கணக்கில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. ஆயிரக்கணக்கான வாகனங்கள் அந்த மெல்லிய நீண்ட நிலப்பகுதியில் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை நிறுத்தப்பட்டு எரியூட்டப்பட்டு சட்டங்களாக காட்சியளித்தன. இருந்தாலும் கடைசி போர்க்களமான புதுமாத்தளனும் நந்திக்கடல் நீரேரி பகுதியும் வெற்றி நிலமாகவே இன்னும் எங்களால் மரியாதையுடன் கருதப்படுகின்றது.

தொடர்பான கட்டுரைகள்

1. மேதகு பட விமர்சனம்

2. அன்ரன் பாலசிங்கம் வரலாறு





Comments

Popular posts from this blog

 யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், விரிவுரையாளர்களின்   கல்வி அறிவு மோசடிகள்

அவந்திகா: ஓர் அவல மனைவியின் வாக்குமூலம்