இடதுசாரி பொருளாதார அடியாள் சோபாசக்தியின் வாக்குமூலத்திற்கு நெற்றியடி



இலங்கையின் சமகால பொருளாதார சீரழிவுக்கான காரணங்கள் 

By Dr. முத்துகிருஷ்ணா சர்வானந்தன். .  ஆய்வாளர்,  அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகம்)

சமகால இலங்கைப் பொருளாதார நெருக்கடிகள் பற்றி திரு. சோபாசக்தி அவர்கள் முகநூல் சமூக வலயத்தளத்தில் மேற்கொண்டுள்ள பதிவு மிகவும் வரவேற்கத்தக்க விடயம் ஆகும். சமூக வலைத்தளங்களில் பதியப்படும் பெருவாரியான விடயங்கள் மற்றும் கருத்துக்கள் ஆதாரமற்ற உண்மைகளுக்கு புறம்பானவை என்பதினால் நேரப் பற்றாக்குறை காரணமாக நான் பொதுவாக திருத்தங்களையோ மாற்றுக் கருத்துக்களையோ சமூக வலயத்தளங்களில்  தெரிவிப்பது இல்லை. மேலும் நான் முகநூல் உறுப்பினரும் அல்ல. இருந்த பொழுதிலும் எனது நண்பர் நட்சத்திரன் செவ்விந்தியன் கேட்டுக்கொண்டதனை ஏற்று திரு. சோபாசக்தி அவர்களின் பதிவிற்கு பதில் அளிக்க விரும்புகிறேன்.

  இலங்கை சுதந்திரம் பெற்றபோது செல்வந்த நாடாக இருந்ததா?

 இலங்கை சுதந்திரம் பெற்ற 1948 இல்

 “ஆசியாவிலேயே ஐப்பானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பணக்கார நாடாக இலங்கை இருந்தது” 

என்ற சோபாசக்தியின் கூற்றானது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இருப்பினும் தனிநபர் வருமானம் அல்லது தலா வருமானம் குறைந்த ஒரு நாடாக 1948 இல் இலங்கை இருந்த பொழுதிலும் இலங்கை மக்களின் ஆயுட்காலம், எழுத்தறிவு விகிதம்,  மற்றும்; குழந்தைகள் இறப்பு விகிதம் போன்ற  சமூக அல்லது மானிடமேம்பாட்டு குறிகாட்டிகள்   ஆசியாவிலேயே (ஐப்பானுக்கு அடுத்தபடியாக) சிறப்பாக இருந்தது என்பது உண்மையே. (பார்க்க: Donald R. Snodgrass, Sri Lanka’s Economic Development during twenty-five years of Independence)

முன்கூறப்பட்ட குறிகாட்டிகள் சிறப்பாக இருந்து வந்ததற்கான காரணிகள் ஆவன  1934-1935 ஆண்டுகளில் இடம்பெற்ற மலேரியா பெருந்தொற்று நோயிற்குப் பின்னதாக நடைமுறைப்படுத்தப்பட்ட பரந்த இலவச சுகாதார பராமரிப்பு சேவைகள் மற்றும் 1946இல் அறிமுகப்படுத்தப்பட்ட தரம் ஒன்றிலிருந்து பல்கலைக்கழகம் வரையிலான பரந்த இலவச கல்வியுமே ஆகும். அதாவது மக்களின் வருமான ஏற்றத்தாழ்வுகளுக்கு அமைவாக அல்லாத சகல பிரiஐகளுக்குமான இலவச கல்வி மற்றம் சுகாதார சேவைகள் ஆகும். 

இரண்டாம் உலகப்போரின் போது (1939-1945) இந்தியாவானது பிரித்தானியா சார்பாக முற்றுமுழுதாக அப்போரில் ஈடுபட்டிருந்த வேளை இலங்கை இந்தியாவிற்கு பல்வேறு உணவு, விவசாயாப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுமதி செய்ததனால் அந்தக் காலத்தில் இலங்கை-இந்தியா வர்த்தக நிலுவை  இலங்கைக்கு சாதகமாக இருந்தது. அதாவது இரு நாட்டு வர்த்தக உபரி (Trade Surplus) அன்று (முதல் தடவையும் இறுதித் தடவையுமாக) இலங்கையிடமே இருந்தது. இந்த இலங்கை-இந்திய இருதரப்பு வர்த்தகத்திலும் தரகு முகவர்  பணியிலும் இலங்கையின் உள்நாட்டு மொத்த வியாபாரத்திலும் இந்திய வம்சாவளி வர்த்தக சமூகத்தினரான நட்டுக்கோட்டைச் செட்டியார் போன்ற சமூகத்தினரே முன்னின்றனர். மற்றும்  அன்றைய இலங்கையின் (குறிப்பாக கொழும்பு,  கண்டி மற்றும் மலையகத்தில்) வங்கிச் சேவைகள், காப்புறுதி மற்றும் நிதிச்சேவைகளில் இந்திய வம்சாவளி தனியார் துறையினரே பெரும்பங்கு வகித்தனர். இந்தத் தனியார் துறை மூலதன சொத்துக்காரரிடமிருந்தும் மொத்த வியாபாரிகளினிடமிருந்தும் பெருவாரியான வரிவசுலிப்புகள் அன்றைய இலங்கை அரசுக்கு கிடைக்கப்பெற்றது. இவ்வரி நிதித்திரட்டுகள் மூலம் அன்றைய இலங்கை அரசு இலவச சுகாதார மற்றும் இலவச கல்வி சேவைகளை 1945 இற்குப் பின் மேலும் விஸ்தரிக்கக் கூடியதாக இருந்தது மட்டுமல்ல அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை சகல மக்களுக்கும் மானிய அடிப்படையில் (அதாவது உற்பத்தி மற்றும் இறக்குமதி செலவினங்களுக்கு குறைவாக) விற்கக் கூடியதாக இருந்தது. 

ஆனால் சுதந்திரம் பெற்ற உடனடியாகவே இந்திய வம்சாவளி மக்களின் பிரஜா உரிமையை அன்றைய இலங்கை அரசு இரத்துசெய்து அவர்களை நாடோடிகளாக்கியதும் இலங்கையிலிருந்து பெருமளவிலான மூலதனப் பறப்பு (Capital Flight) ஏற்பட்டது. இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட அல்லது வெளியேறிய இந்திய வம்சாவளி மூலதன சொத்துக்காரரும் வர்த்தகர்களும் (குறிப்பாக நட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினர்) பர்மா, மலாயா போன்ற அன்றைய பிரித்தானியக் காலனிகளுக்கு குடிபெயர்ந்தனர். பின்பு பர்மாவில் 1961 இல் இராணுவப்புரட்சி ஏற்பட்டு ஐனநாயகம் சீர்குலைந்த பொழுது இந்திய வம்சாவளி மக்கள் பர்மாவிலிருந்தும் விரட்டப்பட்டார்கள். ஆகவே அவர்கள் அன்றைய மலாயாவில் (இன்றைய மலேசியா மற்றும் சிங்கப்பூர்) குடியேறினார்கள். ஓட்டுமொத்தத்தில் பௌத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இலங்கை மற்றும் பர்மா (இன்றைய மியான்மார்) இந்திய வம்சாவளியினரை (குறிப்பாக நட்டுக்கோட்டைச் செட்டியார்கள் போன்ற மூலதனச் சொத்துக்காரரையும் வர்த்தக சமூகத்தினரையும்) வெளியேற்றி பிச்சைக்கார நாடுகளாகிய அதே தருணத்தில் அச்சமூகத்தினரை வரவேற்ற சிங்கப்பூரும் மலேசியாவும் செல்வந்த நாடுகளாகின. இதுதான் இலங்கையின் பரிதாபம்.

இந்தியாவினதும் (ஆவணி 15 1947) இலங்கையினதும் (மாசி 04 1948) சுதந்திரத்திற்குப் பின் இலங்கையின் இந்தியாவிற்கான ஏற்றுமதிகள் சகஐ நிலைக்குத் திரும்பியதனாலும் (அதாவது இரண்டாம் உலகப்போர் காலத்துடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைய) இந்திய வம்சாவளியினரை நாடோடிகளாக்கியதனால் ஏற்பட்டது மூலதனப் பறப்புகள் காரணமாகவும் இலங்கை அரசினால் உதாரணத்திற்கு மானிய அடிப்படையிலான அரிசி விற்பனையை தொடர இயலாதிருந்தது. இதன் காரணமாக 1953 இல் இலங்கை அரசு அரிசிக்கான மானியத்தை வாபஸ்பெற்ற போது தொழிலாளர்களும் (இடதுசாரிக் கட்சிகளின் வழி நடத்தலிலும்) தேசியவாதிகளும் பெரும் ஹர்த்தால் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இதுவே இலங்கை ஐனநாயக அரசிற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்த முதலாவது சம்பவம் ஆகும். இந்த ஒரு நாள் மக்கள் கிளர்ச்சியின் போது பத்து பொதுமக்கள் ஆவது இறந்ததன் காரணமாக அன்றைய பிரதமர் இராஜினாமா செய்துகொண்டார். இதிலிருந்து அன்றைய இலங்கையின் உயர்ந்த அரசியல் கலாச்சாரத்தினை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம் (இன்றைய இறம்புக்கனவை நினைவுகூறுங்கள்).

 1970 தொடக்கம் 1977 வரை ஆட்சி செய்த அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மேலானதா?

இரண்டாவதாக

 “1970-ல் அமைந்த இடது(சாரி) கூட்டணி அரசு முற்றாக இலவசக் கல்வி, இலவச மருத்துவம்,  கூட்டுறவு முறையில் உணவுப் பங்கீடு என ஆசியாவிலேயே சிறந்த சமூகநல அரசாக இலங்கையை உருவாக்கியது” 

என்ற சோபாசக்தி அவர்களின் கூற்றானது முற்றாக உண்மைக்குப் புறம்பானது. சோபாசக்தி அவர்கள் கூறுவது போல ஆசியாவிலேயே சிறந்த சமூகநல நாடாக 1970களில் இலங்கை உருவாக்கட்டது உண்மையென்றால் 1971 இல் மக்கள் விடுதலை முன்னனியினர் ஆயுதம் ஏந்தி ஆட்சியைக் கைப்பற்ற எத்தனித்தது ஏன்?

 மேற்கூறப்பட்டது போல பூரண இலவச சுகாதார சேவைகள் மற்றும் பூரண இலவச கல்வி போன்ற சமூகநல சேவைகள் சுதந்திரத்திற்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டவையாகும். சுதந்திரத்திற்குப் பின் இவ் இலவச சேவைகள் படிப்படியாக பரந்தளவில் நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்பட்டது. ((Donald R. Snodgrass, Sri Lanka’s Economic Development during twenty-five years of Independence)

 ஆகவே 1970 தொடக்கம் 1977 வரையிலான சுதந்திரக்கட்சி மற்றும் இடதுசாரிக் கூட்டணி ஆட்சியிற்கு இதில் விஷேட பங்கு இருக்கவில்லை. 

ஒரு சிறிதளவு அத்தியாவசியப் பொருட்கள் (அரிசி, கோதுமை மா, மைசூர் பருப்பு, சீனி, பொப்ளின் துணி, மண்ணெண்ணை) 1970களில் பங்கீட்டு ரீதியில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கூட்டுறவுச்சங்கக் கடைகள் மூலம் வழங்கப்பட்டது உண்மையே. இருந்த பொழுதிலும் இப்பங்கீட்டு அட்டைப் பொருட்களின் தராதரம் பற்றி பலதரப்பட்ட முறைப்பாடுகள் எழுந்தன. இதற்கு மேலாக இக் கூட்டுறவு அல்லது சங்கக் கடைகள் மிகவும் ஊழல்கள் நிறைந்தவையாக காணப்பட்டன. உதாரணத்திற்கு நிலுவைகளில் குறைப்பு செய்து பங்கீட்டு அட்டைப் பொருட்களை தனியார் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து அத்தியாவசியப் பொருட்களுக்கு கறுப்பு சந்தையை ஏற்படுத்திய பெறுமை அந்தக்கால சுதந்திரக்கட்சி மற்றும் இடதுசாரிக் கூட்டணி ஆட்சியையே சாரும். 

மேலும் சிங்களக் கிராமங்களிலும் சரி தமிழ்க்கிராமங்களிலும் சரி அக்காலத்தின் சுவாரசியமான பகடி என்னவென்றால் திருமணம் செய்வதென்றால் கூட்டுறவுக்கடைக்கார குடும்பத்தில் தான் செய்யவேண்டும் என்பதே. ஏனெனில் கூட்டுறவுக் கடைக்கார குடும்பத்தினரே 1970 களில் கிராமப்புற செல்வந்தர்கள் ஆவர். களவாடிய பங்கீட்டுப் பொருட்களை கறுப்பு சந்தையில் விற்றே அவர்கள் பணக்காரர்கள் ஆனார்கள் என்பது யாவரும் அறிந்திருந்த உண்மை. 

மொத்தத்தில் பல்வேறு மட்டத்து அரசாங்க ஊழியர்களிடையே பரந்துபட்ட இலஞ்சம், ஊழல்கள் ஆரம்பான காலகட்டமே 1970 தொடக்கம் 1977 வரையிலான ஆட்சிக் காலம். இருப்பினும் 1977ஆம் ஆண்டிற்கு பின்னரான தாராளமயப்படுத்தப்பட்ட பொருளாதாரக் காலகட்டத்திலேயே (இற்றைவரை) அரச சேவைகளில் இலஞ்சம் ஊழல் பன்மடங்கு அதிகரித்திருந்தது.

அத்தியாவசிய உணவு, புடவை மற்றும் பல்வேறு நுகர்வுப்பொருட்களுக்கும் கைத்தொழில் மற்றும் விவசாயத்துறைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களுக்கும் இறக்குமதித் தடைகள்இ கட்டுப்பாடுகள் அல்லது அதிஉச்ச இறக்குமதி வரி இருந்து வந்த கலியுகம் அது (1970 ஆம் ஆண்டுகள்). அத்தியாவசிய உணவுப்பொருட்களின் இறக்குமதிகள் தடை செய்யப்பட்டிருந்ததால் உள்ளுர் விவசாயிகளின் உற்பத்திகளுக்கு (குறிப்பாக நெல், வெங்காயம், பச்சை மிளகாய், பயறு மற்றும் தானியவகை உற்பத்தியாளருக்கு உச்ச விலை கிடைக்கப்பெற்றது உண்மையே. அத்தியாவசியப் பொருட்களுக்கான பெரும் தட்டுப்பாடு அக்காலத்தில் நிலவியதால் மக்கள் நீண்ட வரிசைகளில் நீண்ட நேரம் நிற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை இருந்துவந்தது (இன்று போல). 

விவசாய உற்பத்தியாளர்கள் நன்மை பெற்று இருப்பினும் பெரும்பான்மையானோரான நுகர்வோர்கள் கறுப்பு சந்தை விலைகளால் பெறும் அவதியுற்றிருந்தனர் என்பதே 1970களின் யதார்த்தமாக இருந்து வந்தது. உதாரணத்திற்கு அரிசி இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததாலும் அதே நேரம் உள்ளுர் நெல் உற்பத்தி போதுமானதாக இல்லாதிருந்ததாலும் அன்றைய அரசாங்கம் மக்களை ஒருவேளை மட்டுமே சோறு உண்ணும்படியும் மற்றைய வேளைகளில் மரவள்ளிக்கிழங்கு உண்ணும் படியும் கேட்டுக்கொண்டிருந்த உண்மைகளை சோபாசக்தி அவர்கள் அறிந்திருக்கவில்லையா?  

(1970 - 1977 அரசாங்க காலத்தில் இருந்த உணவுப்பற்றாக்குறையையும் அக்கால இடதுசாரிகளையும் கிண்டலடித்து சோபாசக்தியே "மைசூர் ராசா" என்றொரு சிறுகதை எழுதியுள்ளார்.                                      - Editor, Jaffnafashion.com)

1970களில் நிதி அமைச்சராக இருந்தவர் இடதுசாரி முன்னோடிகளில் ஒருவரான முனைவர் என்.எம்.பெரேரா ஆவார். இற்றைவரை இலங்கையருள் இரட்டைக் கலாநிதிப் பட்டம் பெற்ற மேதைகள் ஒரு சிலரில் இவரும் ஒருவர் ஆவார். (எனக்குத் தெரிந்த மட்டில்; இலங்கையருள் இரட்டைக் கலாநிதிப் பட்டம் பெற்ற இன்னொருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கலாநிதி இரட்ணஜீவன் ஹீல் ஆவார்) நாட்டு மக்களை ஒருவேளை மட்டும் சோறு உண்ணும் படி வேண்டிக்கொண்ட சமதர்மவாதிகளான என்.எம்.பெரேரா போன்றோர் இறக்குமதி செய்யப்பட்ட கோழிக்கறியும் ஸ்கொட்ச் விஸ்கியும் இலங்கையின் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டலான ஒபிரோய் ஹோட்டலில் உண்டு அருந்திய உண்மைகளையும் சோபாசக்தி அவர்கள் அறிந்திருக்கவில்லையா?


இலங்கை உலகிலேயே வாழ்க்கைச்செலவு குறைந்த முதலாவது நாடாக இருந்ததா? 

மூன்றாவதாக

“1980-ல் உலகிலேயே வாழக்கைச் செலவு குறைந்த நாடுகளின் வரிசையில் முதலாவதாக இலங்கை இருந்தது” 

என்ற சோபாசக்தி அவர்களின் கூற்று ஒரு மிகைப்படுத்தப்பட்ட உண்மை எனக் கருதலாம். 1980களில் அல்ல 1953 தொடக்கம் 1967 வரைஇ பின் 1971, 1976, 1977 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் (இங்கு அட்டவணை 3 ஐப் பார்க்கவும்) வாழ்க்கைச் செலவு (பணவீக்கம்) இலங்கையில் மிகக் குறைந்திருந்தது (அதாவது ஐந்து சத வீதத்திற்குக் குறைவாக இருந்தது) என்பது உண்மையே. ஆனால் உலகிலேயே மிகக் குறைந்த பணவீக்கம் கொண்ட நாடாக இலங்கை 1980களில் இருந்தது எனக்கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. மேலாக 1970களில் (அதாவது 1977இற்கு முன்) உத்தியோகபூர்வ பணவீக்கம் இலங்கையில் குறைந்திருந்ததற்கான பிரதான காரணம் அத்தியாவசியப் பொருட்களின் மீது விதிக்கப்பட்டிருந்த விலைக் கட்டுப்பாடுகளாகும். அதாவது பணவீக்கம் செயற்கையாக அடக்கப்பட்டிருந்தது என்பதே உண்மையாகும். ஏனெனில் அன்றைய பணவீக்கம் அரசாங்கம் நிர்ணயித்திருந்த கட்டுப்பாட்டு விலைகளின் அடிப்படையிலேயே கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பான்மையான மக்கள் கறுப்பு சந்தையில் கட்டுப்பாட்டு விலைகளுக்கு பன்மடங்கு மேலாக பணத்தைக் கொடுத்தே அத்தியாவசியப்பொருட்களை கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்தது. இதுவே குறைந்த வாழ்க்கைச் செலவின் நடைமுறை யதார்த்தம் ஆக அன்று இருந்தது.

மேலும் பணவீக்கம் அன்றைய காலப்பகுதியில் குறைந்திருப்பதற்கான இன்னுமொரு செயற்கைக் காரணி என்னவென்றால் மத்திய வங்கியின் கட்டுப்படுத்தப்பட்ட நிதியியற் கொள்கை மூலமாக வட்டி விகிதங்கள் செயற்கையாக அதிகரிக்கப்பட்டிருந்தமையே ஆகும். இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட நிதியியற் கொள்கையின் அனுகூலமாக பணவீக்கம் குறைந்திருந்த அதேவேளை அதிகரித்திருந்த வட்டி வீதங்களினால் முதலீடுகள் குறைந்திருக்க பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருந்தது.

இதற்கு மேலாக 1948 தொடக்கம் 1977 வரையிலான 30 ஆண்டுக் காலப்பகுதியில் பதினைந்து வருடங்களுக்கு மேல் பணவீக்கம் 5% இற்கு குறைவாகவும் ஏனைய ஆண்டுகளில் 5ம%  - 10ம% வரையிலேயே காணப்பட்டது என்பதும் உண்மையே (மேல்கூறப்பட்ட அட்டவணையைப் பார்க்கவும்). இது வாழ்கைச் செலவு குறைவாகக் காணப்பட்டதற்கு காரணமாக இருந்தபொழுதிலும்இ 1977 இற்கு முன் இலங்கையில் வருடாந்த வேலையின்மை விகிதாசாரம் ( இரட்டை இலக்கம் (அதாவது 10% இற்கும் 20% இற்கும் இடையில்) கொண்டதாக இருந்துவந்தது (இங்கு அட்டவணை 1ஐப் பார்க்கவும்). இந்த இரட்டை இலக்க வேலையின்மை விகிதாசாரம் 1997 ஆம் ஆண்டு வரை நீடித்திருந்தது. பொருளியற் கோட்பாடுகளின்படி   பொதுவாக பணவீக்கத்திற்கும் வேலையில்லான்மையிற்கும் எதிர்மறை தொடர்பு உள்ளது. அதாவது ஒன்று அதிகரிக்கும் போது மற்றையது குறையும் அல்லது ஒன்று குறையும் போது மற்றையது அதிகரிக்கும். இருப்பினும் சில தருவாய்களில் பணவீக்கம் மற்றும் வேலையில்லான்மை இரண்டுமே அதிகரிக்கும்.  1970களில் மேற்குலக நாடுகளில்) அல்லது குறையும் (2009இற்கு பின்னான காலப்பகுதியில் மேற்குலக நாடுகளில்). 

மேற்கூறிய பாரிய வேலையில்லாத் திண்டாட்டமே சித்திரை 05, 1971 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிராமப்புற சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியிற்கு பிரதான காரணமாக அமைந்திருந்தது என்பது யாவரும் அறிந்திருந்ததே. இந்த நீண்ட கால வேலையில்லாத் திண்டாட்டத்திற்கான பிரதான காரணம் 1977 வரையிலான மந்தமான வருடாந்த பொருளாதார வளர்ச்சியே (அதாவது ஐந்து சதவீதத்திற்கு குறைவான வருடாந்த வளர்ச்சியே) ஆகும் (1960, 1964, 1967, மற்றும் 1968 தவிர) (இங்கு அட்டவணை 2 ஐப் பார்க்கவும்).

இலங்கையில் 1977 இற்கு முன்னதான பொருளாதாரக் கட்டமைப்பும் அதன் தார்ப்பரியங்களும்

1931 இல் இலங்கைக்குக் கிடைக்கப்பெற்ற மட்டுப்படுத்தப்பட்ட சுய ஆட்சிக் காலத்திலிருந்து இலங்கைப் பொருளாதாரக் கட்டமைப்பு நலன்புரி மற்றும் நிவாரணம் சார்ந்ததாகவும்   அதேநேரம் அடக்கப்பட்ட அல்லது தாழ்ந்த பொருளாதார விருத்தி வளர்ச்சி  சார்ந்ததாகவும் இருந்து வந்தள்ளது. இந்த நலன்புரி மற்றும் நிவாரணம் சார்ந்த பொருளியற் கட்டமைப்பு 1948இல் கிடைக்கப்பெற்ற சுதந்திரத்திற்குப் பின் இன்றுவரை மேலும் வலுவடைந்து வந்துள்ளது. நலன்புரி மற்றும் நிவாரணம் சார்ந்த பொருளியற் கட்டமைப்பு இலங்கை மக்களின் சமூக அல்லது மானிட அபிவிருத்தியை மேம்படுத்தியிருப்பினும் பொருளாதார விருத்தி வளர்ச்சியை கணிசமான அளவு மேம்படுத்தவில்லை. என்றும் அதிகரித்து வரும் சனத்தொகைக்கு நலன்புரி மற்றும் நிவாரணங்களை தொடர்ந்தும் வழங்குவதற்கு பொருளாதார விருத்தி வளர்ச்சி இன்றியமையாததாகும் என்ற உண்மையை 1977 வரையிலான இலங்கை அரசாங்கங்கள் உணர்ந்திருக்கவில்லை என்பதே கசப்பான அனுபவம் ஆகும். இதனை நிவர்த்தி செய்யும் முகமாகவே இலங்கை பொதுமக்கள் 1977 பொதுத் தேர்தலில் ஐந்தில் நான்கு பெரும்பான்மைப் பலத்துடன் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிபீடம் ஏற்றினர்.  

சோபாசக்தி அவர்கள் கூறுவது போல 

“1970-ல் அமைந்த இடதுசாரி கூட்டணி அரசு முற்றாக இலவசக் கல்வி, இலவச மருத்துவம், கூட்டுறவு முறையில் உணவுப் பங்கீடு என ஆசியாவிலேயே சிறந்த சமூகநல அரசாக இலங்கையை உருவாக்கியது” 

என்பது உண்மையாக இருந்திருந்தால் 1977இல் இலங்கை மக்கள் அன்றைய எதிர்கட்சியினருக்கு ஏன் அமோக வெற்றியை வழங்கினார்கள்? 

இலங்கையில் 1970 இற்கும் 1977 வரையிற்குமான காலப்பகுதியில் வருமான ஏற்றத்தாழ்வுகள் குறைந்து காணப்பட்டது என்ற உண்மையைக் கூற சோபாசக்தி அவர்கள் தவறிவிட்டார்கள் (இங்கு அட்டவணை 10 ஐ பார்க்கவும்). மந்தமான பொருளாதார வளர்ச்சியின் ஒரு சாதகமான பிரதிபலிப்பு அல்லது அனுகூலம் மக்களுக்கிடையே இருந்து வந்த  தாழ்ந்த வருமான ஏற்றத்தாழ்வுகளாகும். 1977இற்குப் பின்பு இற்றைவரை இலங்கையில் வருமான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருவது நாட்டின் சமூக மற்றும் அரசியல் ஸ்திர நிலைக்கு உகந்தது அல்ல.

இலங்கையில் 1977 இற்குப் பின்னரான பொருளாதாரக் கட்டமைப்பில் இற்றைவரை இருந்து வருகிற குறைபாடுகள் எவை? 

எனது கருத்து என்னவென்றால் இலங்கையின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியிற்கு அல்லது சீரழிவிற்கு பிரதான காரணம் 1977 இலிருந்து மேற்கொள்ளப்பட்டு வந்த பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைகள்  அல்ல. மாறாக பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைகளுக்கு சமாந்தரமாக கட்டமைப்பு, நிறுவன ரீதியான பொருளாதார மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படாமையே தற்கால பொருளாதார வீழ்ச்சியிற்கான பிரதான காரணம் ஆகும் (அத்தியாயங்கள் 1, 2  மற்றும் இறுதி அத்தியாயத்தையும் பார்க்கவும்)  அதாவது பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைகளான அத்தியாவசியப் பொருட்களின் விலைக்கட்டுபாடுகளை நீக்குதல்,  அன்னிய செலாவணி கட்டுப்பாடுகளை நீக்குதல் அல்லது தளர்த்துதல், ரூபாவிற்கும் அந்நிய நாணயங்களுக்கும் (குறிப்பாக அமெரிக்க டொலருக்கும்) இடையிலான நிலையான நாணய மாற்று விகிதங்களை இல்லாது ஒழித்தல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளுக்கு இருந்த வரிசாரா தடைகளை முற்றாக நீக்குதல், ஏற்றுமதி வரிகளை நீக்குதல், மற்றும் இறக்குமதி சுங்க வரிகளை குறைத்தல் போன்றவற்றிற்கு மேலாக பொருளாதாரத்தில் அரச தலையீடுகளையும் பங்களிப்புகளையும் குறைத்தல் அல்லது இல்லாது ஒழித்தல் மற்றும் அரச உரிமையான வியாபாரங்களை படிப்படியாக குறைத்தல் போன்ற கட்டமைப்பு,நிறுவன ரீதியான பொருளாதார மறுசீரமைப்புகள் மேற்கொண்டிருக்கப்பட வேண்டும். முன் குறிப்பிடப்பட்டவைக்கு மாறாக அரசசார்பு நிறுவனங்களும் வியாபாரங்களும் 1977இற்குக் பின் இற்றைவரை வெவ்வேறு அரசாங்க காலங்களிலும் மேலும் விஸ்தரிக்கப்பட்டன (பின்வருபவனவற்றை பார்க்கவும்).     

உதாரணத்திற்கு தனியார்துறை தான் பொருளாதார வளாச்சியின் இயந்திரம்  என்ற தாரக மந்திரத்தினை உதட்டளவில் அன்றைய அரசாங்கமும் அடுத்து வந்த அரசாங்கங்களும் காலா காலமாக கூறி வந்த பொழுதிலும் தனியார் துறைக்கு மேலாக அரசதுறையும் )மற்றும் குறை-அரசதுறையும் (ளநஅi-பழஎநசnஅநவெ) தான் பெருகிவந்த சனத்தொகையினருக்கு பிரதானமாக (தேவைக்கு மேலாக) வேலைவாய்புகளை வழங்கி வந்தன. 

உதாரணத்திற்கு இலங்கையின் சனத்தொகை 1981 இற்கும் 2022 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 47 வீதத்தினால் மட்டுமே (அதாவது  1981 இல் 15 மில்லியன் இலிருந்து 2022இல் 22 மில்லியனுக்கு) அதிகரித்திருக்க இலங்கையில் மொத்த அரச ஊழியர்களின் எண்ணிக்கை 100 வீதமாக 1980இல் 600000 (6 இலட்சம்) இருந்து 2022 இல் மொத்தமாக 1200000 (12 இலட்சம்) இற்கு அதிகரித்துள்ளது (அரசதுறை மற்றும் குறை-அரசதுறை ஊழியர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்). 2016 ஆம் ஆண்டில் அரச மற்றும் குறை-அரச ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1100000 (11 இலட்சம்) ஆக இருந்தது.  (இங்கு பக்கம் 6ஐப் பார்க்கவும்). இதற்கு புறம்பாகஇ இன்றுஇ 300000 (3 இலட்சம்) பேர் ஆயுதப்படைகளில் பணி புரிகின்றனர் (இந்த எண்ணிக்கையானது பிரித்தானியாவின் ஆயுதப்படையினரின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு ஆகும் - பிரித்தானியாவின் மொத்த சனத்தொகை 67 மில்லியன் ஆகும்). ஆகவே ஒட்டு மொத்தத்தில் 15 இலட்சம் பேர் அரச சேவைகளில் இன்று பணிபுரிகின்றனர். இலங்கையின் சனத்தொகைக்கு ஏற்ப இதன் அரச சேவையாளர்களின் மொத்த எண்ணிக்கையானது ஆசியாவிலேயே மிக உயர்ந்ததொன்று என்று கூறினால் மிகையாகாது.

1987 ஆம் ஆண்டிற்குப் பின் என்றும் பெருகிவரும் அரச மற்றும் குறை-அரச துறை ஊழியர்களினதும் ஆயுதப்படையினரதும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய வருடாந்த மீள்வரும் செலவினங்களைக்  நஒpநனெவைரசநள) கூட அரசாங்கத்தின் வருடாந்த வரி மற்றும் வரிசாரா வருவாய்கள் (வயஒ யனெ ழெn-வயஒ சநஎநரெந) ஈடுசெய்ய முடியவில்லை. அதாவது அரச சேவையாளரின் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய வருடாந்த மீள்வரும் செலவினங்களுக்குக் கூட உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஓரளவு கடன் பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலேயே இலங்கை 1987இற்குப் பின் இற்றைவரை இருந்து வந்துள்ளது. முன்வருபவனவற்றிற்கு மேலாக வருடாந்த மூலதனச் செலவுகளுக்கும் பொதுக் கடன்களுக்கான வருடாந்த வட்டியையும் முதலையும் மீள்செலுத்துவதற்காகவும் 1987இற்குப் பின் இற்றைவரை வருடாவருடம் கடன்பெற வேண்டியதாயிற்று.  (இங்கு அட்டவணை 6ஐப் பார்க்கவும்). 

மேற்கூறப்பட்ட அரச செலவினங்களுக்கு மேலாக இலஞ்சம் ஊழல் போன்றனவையும் 1977 இற்குப் பின் இற்றை வரை இலங்கையில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. 

மேற்கூறப்பட்ட அரச செலவினங்கள் அதிகரிப்பிற்கும் இலஞ்ச ஊழல் அதிகரிப்பிற்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறைமையும் விகிதாசார தேர்தல் முறைமையும் பெரும் பங்களிப்பு செய்துள்ளன. ஏனெனில் விகிதாசார தேர்தல் முறைமையின்படி தேர்தல் வேட்பாளர்கள் தொகுதி ரீதியாக அன்றி மாவட்ட ரீதியாக பிரச்சாரம் செய்யவேண்டியுள்ளதால் ஒவ்வொரு வேட்பாளரும் பெருமளவு பணம் தேர்தல் பிரச்சாரத்திற்காக செலவிடவேண்டியுள்ளது. இதன் காரணமாக கல்விகற்ற, துறைசார்ந்த மற்றும் அல்லது நேர்மையான வேட்பாளருக்குப் பதிலாக கள்ள வியாபாரிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் போன்ற சமூகவிரோதிகளே 1977 இற்குப் பின் பெருமளவு தேர்தல் வேட்பாளர்களாக பெரும்பாலான அரசியல் கட்சிகளினால் நிறுத்தப்படுகின்றனர். இச் சீர்கெட்ட அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் ஊழல் என்பன சர்வசாதாரணமானது.  

மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறைமை காரணமாக பல்வேறு சிறு கட்சிகளும் (குறிப்பாக இனம், மதம், மற்றும் பிரதேசம் சார்ந்த சிறு கட்சிகள்) அரச அமைப்பாளர்களாக விஸ்பரூபம் எடுத்துள்ளனர். இந்த சிறு அரசியற் கட்சிகளின் அளவுக்கு மிஞ்சிய செல்வாக்கு ஸ்திரமான ஒரு அரசாங்கம் அமைப்பதற்கு இன்றியமையாததாக இருப்பதன் காரணமாகவே தேவைக்கு மிக அதிகமான அமைச்சர்கள், பிரதி அல்லது இராஜாங்க அமைச்சர்கள் குறை-அரச  சேவையாளர்கள் மற்றும் அரசியல் நியமனம் பெற்ற இராஐதந்திரிகள் பெருவாரியாகஇ 1977 இற்குப் பின் அதிகரித்துள்ளனர். இவை அனைத்தும் இலங்கையில் அரச ஆளுமையை சீரழியச் செய்து சீர்கெடுத்துள்ளது.

இதற்கு மேலாக அரசாலும் பெரிய அரசியல் கட்சி அரசியல்வாதிகள் போலவே சிறு கட்சி அரசியல்வாதிகளும் இலஞ்சம் ஊழல் என்பனவற்றில் ஜாம்பவான்கள் என்பது யாவரும் அறிந்ததே. உதாரணத்திற்கு தொண்டமான் குடும்பத்தினர் காலா காலமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சி தமது அரசியல் கட்சியிற்கு சந்தாப்பணம் பெற்று அமைச்சுப் பதவிகள் வகித்து அதன் மூலம் இலஞ்சம் பெற்று அப்பணத்தையெல்லாம் இந்தியாவின் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திர மற்றும் வட மாநிலங்களில் தொழிற்சாலைகள், காணிகள், மனைகளில் முதலீடு செய்து பல்வேறு சொத்துக்களுக்கும் உரிமையாளர்களாகவுள்ளனர். இவ்வாறே ரவூப் ஹக்கிம், ரிஷாத் பதியுதீன் போன்ற முஸ்லிம் அரசியல்வாதிகளும் இலஞ்சம் ஊழல்களில் பெரும்புள்ளிகள். இல்லாவிட்டால் அரசியலமைப்பின் 18ம், 19ம் மற்றும் 20ம் திருத்தங்களுக்கு அதே கட்சியைச் சேர்ந்த அதே பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் பிரதி இராஜாங்க அமைச்சர்களும் எவ்வாறு வாக்களித்திருக்க முடியும்? 

இவர்களுக்கு என்று ஒரு கொள்கையும் இல்லை மனச்சாட்சியும் இல்லை. தமது இனத்தவரையும் மதத்தவரையும் பேரம்பேசி தமது குடும்பத்தாருக்கு சம்பாதிப்பதே அவர்களின பிரதான நோக்கு. இவர்கள் காலா காலம் காற்று எந்தப்பக்கம் வீசுகிறதோ அந்தப் பக்கம் சாய்வார்கள். அவர்களது இன மதத்தவர்கள் நன்மை தீமைகளை கருத்தில் கொள்வது இல்லை. 

மக்கள் விடுதலை முன்னணி(JVP) போன்ற சிறு கட்சிகளும் அரசியல் நேர்மையாளர்கள் அல்லர். அவர்கள் 1980 களில் விடுதலை என்ற போர்வையில் மேற்கொண்ட மனிதப் படுகொலைகளுக்கு (இந்திய வம்சாவளி வர்த்தகர்கள் உட்பட) இற்றைவரை மன்னிப்புக் கோரியதில்லை. இருந்த பொழுதிலும் இலஞ்சம் ஊழல் போன்றவற்றில் அவர்கள் ஈடுபடுவதில்லை என்பதனை நம்பலாம். இருப்பினும் முதல் தடவையாக பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவர் மக்கள் விடுதலை முன்னனி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கையில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்விசார் மற்றும் அறிவுசார் மோசடிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களினால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்படும் மாணவர்கள் பற்றி நான் கடந்த வருடம் செய்த முறைப்பாடு கிடைத்ததற்கான ஒப்புகை கடிதம் கூட அவரிடமிருந்து இற்றைவரை கிடைக்கவில்லை.

 முடிவுரை

ஓட்டு மொத்தத்தில்  1977 இற்குப் பின்னான தாராள மயமாக்கப்பட்ட பொருளியல் கட்டமைப்புக்கு மாறாக மேற்கூறப்பட்ட அரசான்மை மாற்றங்களே இன்றைய பொருளாதாரக் சீரழிவுகளுக்குப் பிரதான காரணமாகும். இன்றைய பொருளாதார சீரழிவுக்கான மேலும் சில குறிப்பிட்ட விஷேட காரணங்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இடப்பற்றாக்குறை காரணமாக இங்கு மேலும் எழுத முடியவில்லை. 

 இலங்கையில் உள்நாட்டுப் போருக்குப் பின்னான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அனாவசியமான மற்றும் வீண் விரயமான பாரிய கௌரவ உட்கட்டமைப்புத் திட்டங்கள்கள்  பற்றிய விபரங்களுக்கு இந்த ஆங்கிலக் கட்டுரையை வாசிக்கவும்.

இலங்கை அரசாங்கங்கள் 2006 இலிருந்து 2020 வரையான காலப்பகுதியில் சர்வதேச தனியார் மூலதன சந்தைகளில் பெற்றுக்கொண்ட வெளிநாட்டுக் கடன் விபரங்களையும் அவற்றின் பழுக்கள் மற்றும் அபிவிருத்திப் பெறுபேறுகளையும்  இந்த ஆங்கிலக் கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.

பொருளாதார சீரழிவிலிருந்து இலங்கை மீள்வதற்கு செய்யவேண்டியது என்ன?

உடனடியாக அல்லது குறுகிய காலத்தில் (அடுத்த இரண்டு வருடத்துக்குள்)  செய்யவேண்டியவை

1. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறையை உடனடியாக இரத்து செய்து விகிதாசார தேர்தல் முறையை உடன் இல்லாதொழிக்க வேண்டும். இதற்கான அரசியலமைப்பு திருத்தத்தினை உடன் பாராளுமன்றம நிறைவேற்ற வேண்டும.; 

2. சிறிலங்கன் விமானசேவையை   உடனடியாக அன்னிய நாட்டு விமானசேவைக்கு விற்பனை செய்யவேண்டும். உள்நாட்டு தனியார் கொம்பனிக்கு விற்றால் அவர்கள் இலங்கையின் அந்நியய செலாவணியை பாவிப்பார்கள். இது இலங்கைக்கு பாதகமானது. சிறிலங்கன் விமானசேவையை வாங்குபவர்கள் எவராய் இருப்பினும் அவர்கள் தமது வியாபார செயற்பாடுகளுக்கு இலங்கையில் இருக்கின்ற வங்கிகளிடமிருந்து அந்நிய செலாவனியைப் பெறுவது தடை செய்யப்படவேண்டும்.

சிறிலங்கன் விமானசேவையின் 48% பங்குகள் எமிரேட்ஸ்   விமானசேவைக்கு 1997 இல் விற்கப்பட்டு அதன் முகாமைத்துவம்    எமிரேட்ஸிடம் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் 2007இல் அன்றைய இலங்கை அரசாங்கம் மீண்டும் தமது பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து பெறும் தவறு இழைத்துவிட்டது. கடந்த சில வருடங்களாக சராசரியாக வருடாந்தம் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டத்தில் இயங்குகிறது. ஆகவேஇ இதனை விற்பதன் மூலம் வருடத்திற்கு 250 மில்லியன் டொலர்கள் சேமிக்கலாம்.  

3. அரச வியாபாரமான லிட்ரோ எரிவாயு (டுவைசழ புயள) கம்பனியை உடன் அன்னிய நாட்டு கம்பனிக்கு விற்பனை செய்ய வேண்டும். இந்த அரச வியாபாரத்தை வாங்குபவர்கள் எவராய் இருப்பினும் அவர்கள் தமது வியாபார செயற்பாடுகளுக்கு இலங்கையில் இருக்கின்ற வங்கிகளிடமிருந்து அன்னிய செலாவனியைப் பெறுவது தடைசெய்யப்படவேண்டும். எரிவாயு இறக்குமதிக்காக வருடத்திற்கு 300 மில்லியன் டொலர்கள் அன்னிய செலாவனி செலவிடப்படுகிறது. ஆகவே இதனை விற்பதன் மூலம் வருடத்திற்கு 300 மில்லியன் டொலர்கள் அன்னிய செலாவணி சேமிக்கலாம்.  

அரச வியாபாரமான இலங்கை எரிவாயு  ஷெல் எரிவாயு என்கிற பன்னாட்டு கம்பனிக்கு 5 வருடங்களுக்கு 1998 இல் முற்றாக விற்கப்பட்டது. பின்பு 2003 இல் மேலும் 5 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டது. ஆனால் 2008 இல் அன்றைய அரசாங்கம் மீண்டும் அதனை லிட்ரோ எரிவாயு என்ற பெயரில் அரச உடமையாக்கி நாட்டு மக்களுக்கு பெரும் துரோகம் இழைத்துவிட்டது. ஏனெனில் 2008 இலிருந்து வருடாவருடம் பாரிய நட்டத்தில் இயங்குகிறது.  

4. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை உடன் வெளிநாட்டுக் கம்பனிக்கு விற்பனை செய்யவேண்டும்.  இந்த அரச வியாபாரத்தை வாங்குபவர்கள் எவராய் இருப்பினும் அவர்கள் தமது வியாபார செயற்பாடுகளுக்கு இலங்கையில் இருக்கின்ற வங்கிகளிடமிருந்து அன்னிய செலாவணியைப் பெறுவது தடைசெய்யப்படவேண்டும். ஆகவே பெற்றோலியம் உற்பத்தி செய்யும் நாடு ஒன்றிற்கு (உதாரணத்திற்கு சவூதி அரேபியா) இதனை விற்று விடவேண்டும். 

பெற்றோலியப் பொருட்கள் இறக்குமதி செய்வதற்காக சராசரியாக வருடத்திற்கு 3000 தொடக்கம் 4000 மில்லியன் (அதாவது 3 தொடக்கம் 4 பில்லியன்) டொலர்கள் செலவிடப்படுகிறது. இந்த இறக்குமதி செலவினம் இலங்கையின் வருடாந்த மொத்த இறக்குமதி செலவினங்களில் சராசரியாக 20% ஆகும். ஆகவே பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை பெற்றோலிய உற்பத்தி நாடு ஒன்றிற்கு விற்றால் வருடத்திற்கு 4 பில்லியன் டொலர்கள் அன்னிய செலாவணி மீதப்படுத்தலாம்.    

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பல தசாப்தங்களாக நட்டத்தில் இயங்கும் அரச வியாபாரமாகும். மற்றும் மிகவும் ஊழல் நிறைந்த கூட்டுத்தாபனம் ஆகும்.

மேற்கூறப்பட்ட 3 அரச வியாபாரங்களின் விற்பனைகள் மூலமாக வருடத்திற்கு கிட்டத்தட்ட 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அன்னிய செலாவணியை இலங்கை அரசாங்கத்தினால் சேமிக்கலாம். மேற்கூறிய மூன்று வியாபாரங்களும் இடதுசாரிகள் கூறுவது போல தேசிய சொத்துக்கள் (National Assets) அல்ல.  இவை தேசிய பொறுப்புகள் (National Liabilities) ஆகும்.

மேற்கூறப்பட்டவை போன்றே இலங்கை முற்றுமுழுதாக இறக்குமதியில் தங்கியிருக்கும் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களான கோதுமை மா, விவசாயத்திற்கு தேவையான பசளைகள் மற்றும் பால்மா போன்றவற்றின் இறக்குமதி மற்றும் உள்ளுர் விற்பனைகளை பல்தேசிய கம்பனிகளுக்கு கொடுத்துவிடவேண்டும். இவற்றிற்கான அன்னிய செலாவணியை இலங்கையில் உள்ள வங்கிகளிடமிருந்து பெறுவதினை தடைசெய்ய வெண்டும்.

5. பொதுநிர்வாக சேவைகளுக்கும் குறை-அரச சேவைகளுக்கும் புதிதாக ஊழியர்களை மற்றும் உத்தியோகத்தர்களை நியமிப்பதை உடன் நிறுத்தவேண்டும் (கசநநணந நெற சநஉசரவைஅநவெ) (உயர் தொழில்நுட்பவியலாளர்கள் தவிர).

6. ஆயுதப்படைகளுக்கு புதிதாக ஆட்சேர்ப்பதை உடன் நிறுத்தவேண்டும்  (உயர் தொழில்நுட்பவியலாளர்கள் தவிர).


நடுத்தர காலத்தில் (அதாவதுஇ அடுத்த 2 வருடத்திலிருந்து 5 வருடங்களுக்குள்) செய்யவேண்டியவை

1. கல்வி சுகாதாரம் தவிர்ந்த ஏனைய பொது நிர்வாக மற்றும் அரச சேவையாளர்களின் எண்ணிக்கையை ஆகக் குறைந்தது 33 சதவீதத்தால் குறைக்க வேண்டும். மேற்கூறியபடி தற்போது 12 இலட்சம் சிவில் அரச ஊழியர்கள் இருக்கையில் 4 இலட்சம் அரச ஊழியர்களுக்கு விருப்பு ஓய்வுத்திட்டம் மூலமாகவோ அல்லது பொன்னான கைகுலுக்கள் (Golden Handshake) மூலமாகவோ அரச சேவையிலிருந்து பிரியாவிடை கொடுக்க வேண்டும்.

2. மேற்கூறியவாறே ஆயுதப்படையைச் சேர்ந்த 50 சதவீதத்தினருக்கு விருப்பு ஓய்வுத்திட்டம் மூலமாகவோ அல்லது பொன்னான கைகுலுக்கள்  மூலமாகவோ இராணுவ சேவையிலிருந்து பிரியாவிடை கொடுக்க வேண்டும். அதாவது தற்போது 300,000 ஆளணி கொண்ட ஆயுதப்படையினரை 150,000 ஆகக் குறைக்க வேண்டும்.

3. இலங்கை மின்சார சபை பாரிய நட்டத்தில் பல தசாப்தங்களாக இயங்கி வருகிறது. இதனை அடுத்த 2 தொடக்கம் 5 வருடங்களுக்குள் உள் நாட்டு அல்லது வெளிநாட்டு தனியார்துறைக்கு விற்று விடவேண்டும். 

4. இவ்வாறே என்றும் நட்டத்தில் இயங்கி வரும் அரச வியாபாரங்களான இலங்கை புகையிரதக் கூட்டுத்தாபனம்   மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை     போன்றவற்றினை உள் நாட்டு அல்லது வெளிநாட்டு தனியார்துறைக்கு விற்று விடவேண்டும்.

5. பாரிய நட்டத்தில் இயங்கி வரும்  தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் சபை விற்பனை செய்யப்பட வேண்டும்.

 6. அனைத்து அரச வங்கிகளையும் படிப்படியாக அடுத்த 5 வருடத்திற்குள் தனியார் மயப்படுத்த வேண்டும்.

மேற்கூறப்பட்ட பொருளாதார மறுசீரமைப்புகள் மூலம் பெறப்படும் ஆதாயங்களை கல்வி, சுகாதாரம் மற்றும் வறுமை ஓழிப்பு போன்ற சமூக பாதுகாப்புத்) திட்டங்களுக்கு அரசாங்கம் பயன்படுத்த வேண்டும்.   

தண்ணியைப் போட்டுவிட்டு தலைவரைப்போல 9ம் வகுப்புவரையும் படித்த  பொருளாதார அடியாள்/ பொருளியல் மக்கன் சோபாசக்தி போட்ட முகநூல் பதிவு👇( சோபாசக்தியைப் பொறுத்தவரையில் ஓழுக்கு வருகிற மவ் ழ தான். பொருளாதாரத்துக்கும்  மகத்தான பொருழியல் அறிஞர் சோபாசக்தி)

இலங்கை சுதந்திரம் பெற்ற 1948-ல், ஆசியாவிலேயே ஜப்பானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பணக்கார நாடாக இலங்கை இருந்தது. 1970-ல் அமைந்த இடது கூட்டணி அரசு முற்றாக இலவசக் கல்வி, இலவச மருத்துவம், கூட்டுறவு முறையில் உணவுப் பங்கீடு என ஆசியாவிலேயே சிறந்த சமூகநல அரசாக இலங்கையை உருவாக்கியது. 1980-ல் உலகிலேயே வாழ்க்கைச் செலவு குறைந்த நாடுகளின் வரிசையில் முதலாவதாக இலங்கை இருந்தது. ஜே.ஆரின் திறந்த பொருளாதாரக் கொள்கையுடன் இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு மெல்ல மெல்லச் சரியலாயிற்று. யுத்தம் அதை இன்னும் தீவிரமாக்கியது.

திறந்த பொருளாதாரக் கொள்கை, சுதந்திர வர்த்தக வலயம், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பன்னாட்டுக் கொள்ளை நிறுவனங்களுக்கு நாட்டைத் திறந்துவிட்ட எல்லா மூன்றாமுலக நாடுகளிலும் இந்த வீழ்ச்சி நடந்திருக்கிறது. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு, திறந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்ட  தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா போன்ற ஏழு தூரகிழக்கு ஆசிய நாடுகளை முதலாளிய ஆதரவாளர்கள் 'ஏழு பொருளாதாரப் புலிகள்' எனப் புகழ்ந்த வாயை மூட முன்பே, அவை பெரும் பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்தது நமக்கு ஞாபகமிருக்கிறது.

திறந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொள்ளுமாறு உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும், பன்னாட்டு நிறுவனங்களும் மூன்றாமுலக நாடுகளின் மீது பல்வேறு அழுத்தங்களைப் போட்டுப் பணிய வைக்கின்றன. வரலாற்றுரீதியாகவே தேசிய முதலாளித்துவ அரசாக உருவாகாமல், வெறும் தரகு முதலாளித்துவ அரசாக வெம்பிப் பிறந்த இலங்கை போன்ற அரசுகளுக்கு முதலாளியம் வேறு தெரிவுகளை விட்டு வைக்கவில்லை.

இலங்கையில் இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி திடீரென ஏற்பட்டதல்ல. திறந்த பொருளாதாரக் கொள்கை கடந்த நாற்பது வருடங்களாக உருவாக்கி வந்த படிப்படியான சீரழிவு இது. ஏற்பட்டுக்கொண்டிருந்த வீழ்ச்சியை மேலும் துரிதமாக்கியவர்கள் ராஜபக்ச சகோதரர்கள். அவர்கள் சிவப்புத் துண்டைக் கழுத்தில் போட்டுக்கொண்டே இலங்கையைத் துண்டுபோட்டுச் சீன நிறுவனங்களுக்கு விற்றுத் தள்ளிய வேகம் சீனாவையே வியக்க வைத்தது.

இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைக் காரணம் காட்டி இனி மேலும் அழுத்தங்கள் பன்னாட்டு நிறுவனங்களாலும், உலக வங்கியாலும், சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளாலும் இலங்கை மீது திணிக்கப்படும். முதல் வெட்டு சமூகநலத் திட்டங்களின் மீதே விழும். இலவச மருத்துவம், இலவசக் கல்வி, உணவு மானியம் எல்லாவற்றையும் படிப்படியாகக் குறைத்து இல்லாமலாக்குமாறு கட்டளையிடப்படும். அரசு நிறுவனங்களான போக்குவரத்து சபை, மின்சார சபை போன்றவற்றைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்க ஊக்குவிக்கப்படும். குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படைத் தேவைகள் கூட பன்னாட்டு நிறுவனங்களுக்கு முழுதாக விற்கப்படும். 

உண்மையில், இந்த நிலை ஏற்படும் என்பதை இலங்கையின் இடதுசாரி அறிஞர்கள் நீண்டகாலமாகவே சொல்லி வந்திருக்கிறார்கள். குறிப்பாக 'சோசலிஸ சமத்துவக் கட்சி' இது குறித்து ஏராளமான நூல்களையும் ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும் மூன்று மொழிகளிலும் பல பத்து வருடங்களாக வெளியிட்டு வருகிறது.

இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டாலன்றி, இந்த வீழ்ச்சியிலிருந்து இலங்கையால் எழுந்து வர முடியாது. அத்தகைய ஒரு பொருளாதாரக் கொள்கை மாற்றத்தைச் சாதிக்க நினைக்கும் வெனிசுலாவின் சாவேஸ் போன்ற ஒரு தலைவர் இலங்கையில் உருவாகி ஆட்சிப் பொறுப்பை ஏற்றாலும் உலக முதலாளித்துவம் இலங்கையை உலகப் பொருளாதார அச்சிலிருந்து விலக்கி வைத்துத் தண்டிக்கும்.

இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் எழுச்சி ஆட்சியாளர்களிற்கும், இனிவரப் போகும் ஆட்சியாளர்களிற்கும் நிச்சயமாகவே ஒரு பலத்த எச்சரிக்கையையும் அழுத்தத்தையும் கொடுத்திருக்கிறது. இலங்கையின் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் ஏற்படும்வரை வெகுமக்களின் இந்த விழிப்புத் தணிந்துவிடக் கூடாது என்று சொல்வதைக் காட்டிலும், இனிக் காலம் பூராவுமே இத்தகைய விழிப்புடனேயே இருக்க வேண்டியிருக்கும்.

தொடர்பான கட்டுரைகள்

1.  பொக்ஸ் நாவல் எனும் மலின இலக்கியம்

2. சோபாசக்தியின் தரகர்கள். நிர்மலா+ ராகவன்

3. IMF in Sri Lanka: A critical study By Dr. Sarvananthan




Comments

Popular posts from this blog

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

 யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், விரிவுரையாளர்களின்   கல்வி அறிவு மோசடிகள்

அவந்திகா: ஓர் அவல மனைவியின் வாக்குமூலம்