கனகி புராணம்




நட்சத்திரன் செவ்விந்தியன்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாண வழுக்கியாற்றின் தீரத்தில் தேவதாசி அவதாரத்தில் வாழ்ந்த ஒரு கடற்கன்னியின் காதல் கதை

                                     1

 நிலவு உதிக்கிற ஒரு கூதிர் காலத்தில் தான் ஆறுமுகன் முதன்முதலாக கனகியைக் கண்டான். ஊரெல்லாம் ஆறு ஓடுகிற அழகிய யாழ்ப்பாணப் பருவகாலம். இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில் அவள் தன்னந்தனியே குளத்தில் குளித்துக்கொண்டிருந்தாள். கூதிர் காற்றையும் நிலவையும் அனுபவித்து நடந்து கொண்டிருந்த ஆறுமுகன்  குளத்தங்கரையில் அரசமரக்கிளையில் தொங்கிய ஒரு பெண்ணின் சேலையைகண்டு அதிசயித்து எதிர்க்கரையில் ஒரு ஆலமர மறைவிலிருந்து எட்டிப்பார்த்தான். குறுக்குக்கட்டோடு ஒரு கட்டிளம் பெண் குளத்தின் நடுவில் தன்னந்தனியாக நீந்திக்கொண்டிருந்தாள். இரவோ நிலவோ என்ற பயமேதுமின்றி ஓர் அப்சரஸ் போல அவள் நீச்சலாடும்போது எழும் ஒலி பாற்கடலின்  அலை சத்தம்போல ஆறுமுகனின் காதில் வந்தோதியது. விதிர்விதித்தவன் குளத்தை ஒருதடவை கண்மூடிவிட்டுப் பார்த்தான். இப்போது பகல்போய் நிலவு வந்துவிட்டது. அது பாற்கடலே தான். 

ஆறுமுகனுக்கு வியர்த்தது. உடம்பை போற்றியிருந்த சால்வையை இடுப்பில் கட்டினான். அவள் நடுக்குளத்தில் சில நிமிடங்கள் மல்லாக்க மிதந்தாள். பின் மல்லாக்க படுத்தபடியே back stroke ஆக நீச்சலாடிவந்து கரையை அண்மித்ததும் உடம்பை திருப்பி தவளையைப்போல நீச்சலாடி வந்தாள். தரை தட்டியதும் நடந்து வந்தாள். 

அந்த நிலவொளியில் ஈரக் குறுக்குக் கட்டுப் புடவையில் அவள் ஊர்வசி, ரம்பை, மேனகா போல கரையேறியபோது அவளது உயரத்தையும் அங்க அளவுகளையும் கணிப்பதில் ஆறுமுகனுக்கு சிரமமேதுமிருக்கவில்லை.     அப்சரசுகளைப்போல நிர்வாணமாகி  காய்ந்த சேலையால் தன் ஈரம் துவட்டுவதை தன் நெஞ்சு துடிக்க எதிர்பார்த்துக் காத்திருந்தான் ஆறுமுகன். 

அப்படி எதுவும் நடக்கவில்லை. எங்கிருந்தோ ஒரு நாய் ஓடிவந்து அரசமரக்கிளையில் தொங்கிய அவளது சேலையை கவ்விவந்து அவளிடம் கொடுத்தது.

 "நயினார் எங்க ஊர் மேயப்போயிருந்தாயா" 

என்று செல்லமாகக் கடிந்துகொண்டாள். அந்நாய் செந்நாய் இக்கால லாப்ரடோர் நாய் போல  குரைக்கவே இல்லை. அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது. இடுப்பு வரை நீண்ட தன்னுடைய நீண்ட முடியின் ஈரத்தை பிழிந்தாள். குளக்கரைப் புற்தரையில் அவள் பிழிந்து விழுந்த நீர்த்துளிகளை செந்நாய் முகர்ந்தது. பிறகு தன் முகத்தையும் கழுத்தையும் தோளையும் கைகளையும் துடைத்தபின்  கேசத்தின் ஈரம் காய  சேலையை தலையைச்சுற்றி முடிந்தாள்.  ஈரக்குறுக்குக்கட்டோடு நடக்கத் தொடங்கினாள்.  செந்நாய்  அவளுக்கு முன்னுக்கு  போகவுமில்லை. பின்னுக்கு போகவுமில்லை. அவளின் ஈரக் குறுக்குக்கட்டிலிருந்து தரையில் விழும் தண்ணீர்த்துளிகளை முகர சில அடிகள் பின்னோக்கி போகும். பிறகு  அவள் போகும் பாதையில் முட்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை உளவு பார்க்க முன்னொக்கி சில அடிகள் போகும். 

குளத்தின் மறுகரையிலிருந்த ஆறுமுகன் தன் அடிகளை கவனமாக எடுத்துவைத்து பின் தொடர்ந்தான். அக்கணங்களில் செந்நாயின் ஒலிகளைவிட அவளின் கேசத்தின் நறுமணத்தை முகர்ந்தே அவளை அவன் வசதியான இடைவெளியில் பின்தொடர்ந்தான். நிலவொளியில் தன்னை யாரும் இனங்கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காக தன் சால்வையை முக்காடாகப் போட்டுக்கொண்டான்.

ஒரு 5 நிமிடத்தில் அவள் கண்ணை கைத்தீஸ்வரர் கோயிலண்டையிலுள்ள தன் வீட்டுப்படலையைத் திறந்து உள்ளே போக நாயும் பின்தொடர்ந்தது. வீட்டில் மேலுஞ்சில நாய்கள் சிநேகபூர்வமாகக் குரைத்து இவர்களை வரவேற்றன. சில நிமிடங்கள் தரித்திருந்துவிட்டு ஆறுமுகன் தொடர்ந்து நடந்தான். அந்தப்படலையை அவன் கடந்து செல்லும்போது அவள் ஒரு தேவதாசி என்பதையறிந்தான். 

அக்கணத்திலிருந்து ஆறுமுகனின் நெஞ்சு துடிக்கத்தொடங்கியது. அப்சரஸை புணரத்துடிக்கும் துடிப்பு அது. அந்நிலவொளியில் நல்லூரில் உள்ள அவன் வீட்டுக்கு நடந்துவரும் அரைமணித்தியாலமும் அவன் நெஞ்சு துடித்துக்கொண்டிருந்தது. வீட்டில் இரவு ஆகாரம் சாப்பிட அவன் அண்ணன்கள் காத்திருந்தார்கள். ஆறுமுகன் தனக்கு பசிக்கவில்லை  என்றவாறு ஒரு செம்பு பாலை மட்டும்  குடித்துவிட்டுப் படுத்துவிட்டான். 

இக்கதை நடக்கிற காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு. 1847. 1848. அப்போது ஆறுமுகனுக்கு வயது 24. பேர்சீவல் என்கிற மெதடிஸ்ற் பாதிரியாரின் கீழ் யாழ் மத்திய கல்லூரியிலேயே படித்து அங்கு ஆங்கில ஆசிரியராக வேலை செய்துகொண்டிருந்தான். அப்போது பேர்சீவல் பாதிரியார் வேதாகமத்தை தமிழில் மொழி பெயர்த்துக்கொண்டிருந்தார். அவருடைய மொழிபெயர்ப்பை செம்மைப் படுத்தும் பணி ஆறுமுகனுடையது. சனி ஞாயிறுகளில் பெருமளவு நேரங்களை பாதிரியாரின் வீட்டிலேயே ஆறுமுகன் செலவளித்தான். 

ஆறுமுகன் பாதிரியாரோடு எவ்வளவு நெருக்கமோ அதைவிட நெருக்கம் கைத்தீஸ்வரச் செட்டியாரோடு. செட்டியாருக்கு அப்போது 85 வயது. பார்த்தால் ஒரு 65 வயது இளைஞன் போலவே இருப்பார். 

பெரும் வணிகரான பூபாலச் செட்டியாரின் மகன் கைத்தியலிங்கன். பூபாலச் செட்டியாரின் வணிகத்தால் அவர் அப்போதைய ஈழ ஒல்லாந்து தேசாதிபதியோடு நெருக்கமானார். பிள்ளைச் செல்வமில்லாத தேசாதிபதியின் மனைவி கைத்தியலிங்கனை தன் மகனாக்கி பராமரித்தார். தேசாதிபதியின் மாளிகையிலேயே கைத்தியலிங்கன் தன் பதின்ம பருவப் பெரும் பொழுதுகளைப் போக்கினான். தேசாதிபதியம்மா அவனுக்கு ஒல்லாந்த மொழியைக் கற்றுக்கொடுத்தார். அவரே அவன் வளர்ந்து சொந்தமாக வணிகம் தொடங்கியபோது மிக லாபமீட்டும் முத்துக்குளிக்கும் குத்தகையை எடுத்துக்கொடுத்தார். இவ்வணிகத்தில் செல்வமீட்டி யாழ்ப்பாணத்தில் பெருஞ்செல்வரானவரே கைத்தீஸ்வரச் செட்டியார். 

செட்டியார் தனது உயர் ஒல்லாந்த தொடர்புகளால் தேசாதிபதியின் அனுமதிபெற்று ஆரம்பித்த கோயிலே கண்ணார் பண்ணை கைத்தீஸ்வரன் கோயில். போர்த்துக்கீசர் யாழ்ப்பாண அனைத்து இந்துக்கோயில்களையும் அழித்தபின் யாழ்ப்பாணத்தில் முதலில் உருவான சிவன்கோயில். 

பிறகு ஒல்லாந்தர் ஆட்சிபோய் ஆங்கில ஆட்சிவந்தபோது செட்டியாருக்கு மொழிப்பிரச்சனையும் பல வணிகப்பிரச்சனைகளும் வந்தன. ஒல்லாந்த மொழி தெரிந்த செட்டியாருக்கு ஆங்கிலம் தெரியாது. ஆறுமுகன் தன் இருபது வயதில் முதலில் செட்டியாரின் மொழிபெயர்ப்பாளராகவே சேர்ந்தான். செட்டியார் அன் கோ அப்போது ஈழத்தில் ஒரு பெரிய முறைசாரா வங்கியாக இருந்தது. வட்டிக்கு கடன்கொடுத்து இலாபமீட்டுவது. ஆங்கிலேயர் செட்டியார்களின் வட்டித்தொழிலை உடைத்து முறையான தங்களது ஆங்கில வங்கிகளை படிப்படியாக உருவாக்க முயன்றபோதுதான் செட்டியாரின் வணிக ஏகபோகம் பாதிக்கப்படத் தொடங்கியது. ஆங்கில கவர்னர்கள், நீதிபதிகள், அரசாங்க அதிபர், பொலிஸ் அதிகாரி இவர்களுக்கெதிரான பெட்டிசன்களை செட்டியாரின் சார்பில் விக்ரோறியா மகாராணிக்கு எழுதுவது ஆறுமுகனின் இரண்டாவது தொழில். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆறுமுகன் செட்டியாரின் அரசியல் பொருளாதார மதியுரைஞராகவே மாறிவிட்டான். அதைவிட செட்டியாரின் புலனாய்வுக் காரனும் அவனே. தான் கூப்பிட்ட மாத்திரத்தில் ஆறுமுகன் வரக்கூடியவாறு இருக்கவேண்டும் என்பதற்காக செட்டியார் அவனுக்கென்று ஒரு குதிரை வண்டியையும் வண்டில் காரனையும் ஏற்பாடு செய்தார். வீதியில்  ஆறுமுகனின் குதிரை வண்டியைக்கண்டால் குதிரையில் வரும் யாழ் ஆங்கில பொலிஸ் அதிகாரியே ஒதுங்கி நின்று வழிவிடுவான். 

பேர்சீவல் பாதிரியாருக்கு ஆங்கிலேயரின் பொருளாதார அரசியல் நலன்களில் நாட்டமில்லை. மதம் பரப்புவது மட்டுமே அவரது ஒரே நோக்கம். ஆக வஞ்சகமில்லாமல் ஆங்கிலேயரின் அரசியல் பொருளாதார புலனாய்வுத்  தகவல்களை அவர் ஆறுமுகனிடம் சொல்வார். பதிலுக்கு ஆறுமுகனிடமிருந்து சைவமத மீள் எழுச்சி பற்றிய புலனாய்வுத் தகவல்களை எதிர்பார்ப்பார். ஆறுமுகன் கயிற்றில் நடக்கிற ஒரு டபிள் ஏஜண்ட் போல தனக்கும் செட்டியாருக்கும் பாதகமில்லாமல் சில சைவமத உளவுத் தகவல்களை கசிய விடுவான். 

தேவதாசி கனகியைப் பற்றிய புலனாய்வு அறிக்கையை மிக இலகுவாகவே ஆறுமுகன் பெற்றிருக்கலாம். கைத்தீஸ்வரச் செட்டியாரிடம் கேட்டிருந்தால் அவர்  உடனேயே சொல்லியிருப்பார். 

ஆறுமுகன் செட்டியாருக்கு தெரியாமல் தனக்கு நம்பகரமான இரு நண்பர்களிடமிருந்து சுற்றி வளைத்து தகவல் சேகரித்தான்.  அதன்படி 

கனகிக்கு இப்போது 20 வயது. கைத்தீஸ்வரச் செட்டியார்தான் அளவெட்டி என்கிற ஊரிலிருந்து இவர்களின் இசைவேளாளக் குடும்பங்களை  கைத்தீஸ்வரக் கோயிலில் குடியேற்றினார். கனகியின் இசைவேளாளர் குடும்பம் மிக வசதியானது.  அக்குடும்பத்தில் பரம்பரைத்தொழில் செய்து சேவிக்கவேண்டியிருக்காத செல்வம் மிக்க  பலர்  அக்கால ஈழ ஆங்கில  மிசனறிப்பள்ளிகளில் சேர்ந்து படித்தார்கள். கனகி உடுவில் மகளிர் கல்லூரியில் சேர்ந்து படித்தாள். கனகியின் மச்சான் நட்டுவச் சுப்பைனார்  வட்டுக்கோட்டை செமினறியில் சேர்ந்து படித்தான். 1844ம் ஆண்டில் சேர் ஜேம்ஸ் ரெனன்ற் என்கிற  ஒரு ஆங்கில உயர்பிரபு,  ஆங்கில சிவில் அதிகாரி வட்டுக்கோட்டை செமினறியின் உலகப்புகழ் அறிந்து குதிரையில் அக்கல்லூரிக்கு விசயம் செய்தார். அவரது பாதுகாப்புக்கு பொறுப்பாக யாழ் கோட்டை பொலீஸ் அதிகாரியான ஆங்கிலேயன் ஜேம்ஸ் ரெய்லரும் தன் சிறிய  குதிரைப்படையோடு அங்கு போனான். அன்றுதான் கனகியின் விதி மாறியது. 

கனகிக்கு கடல் நீலக்கண்கள். யேசப்பாவின் மத்தியகிழக்கு பொன்னிற ஒலிவ் தோல். .கறுப்பு கேசம்.  இந்த வரலாறு போர்த்துக்கீசர்களின் காலத்திலிருந்து தொடங்குகிறது. கனகியின்  மூன்றாவது மூப்பாட்டியை சங்கிலிய மன்னன் காலத்தில் மாவிட்டபுரத்தில்  ஒரு போர்த்துக்கீசிய ஜெனரல் வைத்திருந்தான்.  கனகியின் அம்மாவின் வாடிக்கையாளர்களாக சில ஒல்லாந்தர்கள் இருந்திருக்கிறார்கள். 

யாழ்ப்பாணம் பச்சைப்பசேலென இருந்த ஒரு தைமாதப் பகலில் ரெனன்ரின் குதிரைப்பரிவாரம் வட்டுக்கோட்டை செமனறிக்குள் புகுகின்றபோது  ஒருபுறம் உடுவில் மகளிர் கல்லூரி  மாணவிகளும் மறுபுறம்  வட்டுக்கோட்டை செமினறி மாணவர்களும் சீருடையில் நின்று ஒரு இராணுவ அணிவகுப்பு மரியாதைபோல வரவேற்றார்கள். 

அங்கிருந்த ஒவ்வொரு மாணவன் மாணவியினதும் திறமைகளை குதிரையிலிருந்தபடியே சோதித்தார் சேர் ஜேம்ஸ் எமர்சன் ரெனற். கனகி அவரோடு ஆங்கிலத்தில் பேசினாள். அக்காலத்தில்தான் வேதாகமம் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுக்கொண்டிருந்த காலம். கனகி வேதாகம  சாலமனின் பாடல் சிலவற்றை  தான் தமிழில் கர்நாடக சங்கீத ராகத்தில் பாடுகிறேன் என்று சொல்லிவிட்டு  பாடினாள்.  ஒரு கடற்கன்னியின் குரலைப்போலிருந்த  கனகியின் பாடலைக் கேட்டு  இத்தனை மைல் தூரம் கடலால் வந்த எமர்சன் குதிரையிலிருந்து குதித்திறங்கி கனகியை வணங்கினார்.

அன்று கனகியில் கண் வைத்தவன் தான் அந்த  ஆங்கில பொலிஸ்  அதிகாரி ரெய்லர்.  அவளது மாமனைப்பிடித்து அவளை அடைத்து விட்டான். கனகியின் கெட்டகாலம் இரு வருடங்களுக்கு முதல்தான் கனகியின் தாய் இறந்திருந்தாள். 

யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்த பொலீஸ் நிலையத்திலிருந்து முழு யாழ்ப்பாணத்துக்குமான பொலீஸ் அதிகாரியாக இயங்கியவன் ஜேம்ஸ் ரெய்லர். அந்தக்காலத்தில் இப்போது போல இந்தியர்களும் ஈழத்தவர்களும் பிழைப்பதற்காக ஐரோப்பாவுக்கு போவதில்லை. ஐரோப்பியர்களும் பிருத்தானியர்களும்தான் பிழைக்க இந்தியாவுக்கும் ஈழத்திற்கும் வந்தார்கள். அப்படி அதிகாரத்தோடு வந்தவன்தான் ரெய்லர். அவன் மகா குடிகாரன். இரவுமுழுக்க குடிப்பதிலும் வேசையாடுவதிலுமே செலவழிப்பான். பகலில் யாழ் மக்களை கொடுமைப்படுத்துவான். 

அவனின்  கெடுபிடிகளைப்பற்றி ஆங்கிலேய மகாராணிக்கும் ஆங்கில கவர்னருக்கும் யாழ்ப்பாணப் பிரதானிகள்  முறையிட்டதால் இங்கிலாந்துக்கு  வரவழைத்தார்கள். வருமானம் இழந்த கனகியின் மாமன் அவளை கைத்தீஸ்வரன் கோயிலண்டைக்கு தன் சொந்தக்காரர்களோடு அவளைக் கொணர்ந்து குடியேற்றினான். இப்போது ஒரு இந்திய நாட்டுக்கோட்டை செட்டியாரும்  ஒரு வெள்ளாள முதலியாரும் அவளை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளி இரவும் கண்ணை கைத்தீஸ்வரன் கோயிலில் கனகி சதிராட்டம் ஆடுவது கைத்தீஸ்வச் செட்டியாரின் ஏற்பாடு. இதனால் கோயிலின் வருமானம் கணிசமாக அதிகரித்தது.  

அடுத்த வெள்ளிக்கிழமை தனது வழமையான கண்ணை கைத்தீஸ்வரன் கோயில்  பிரசங்கம் முடிந்தபின் ஆறுமுகன் கோயிலிலேயே தங்கியிருந்து கனகியின் சதிராட்டத்தைப் பார்த்தான். ஆறுமுகன் இந்த சிறப்பு பிரதானிகளுக்கு மட்டுமான தனிப்பட்ட மூடிய மண்டபத்துள் வரும்போது சில இரகசிய முணுமுணுப்புக்கள் கேட்டன. சதிராட்டத்தைப் பார்க்கும் பிரதானிகள் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். ஆறுமுகன் வெறும் 24 வயதிலேயே யாழ்ப்பாணப் பிரதானி ஒருவனாகிவிட்டான்.  கனகிக்கும் பேரதிர்ச்சியும் பயமும். ஆட்டத்தில் பெருமளவு நேரம் அவள் ஆறுமுகனை பார்த்ததை சபையும் பார்த்தது. 

சனி, ஞாயிறு ஆறுமுகன் பாதிரியாரிடம் போகவில்லை. அவனுக்கு மனசு சரியில்லை. இரண்டு நாட்களாக அவன் தூங்கவில்லை திங்கட்கிழமை அதிகாலை கிணற்று பச்சைத் தண்ணீரில் குளித்துவிட்டு கைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போனான். உதய காலப் பூசையில் சனங்கள் அதிகமிருக்கமாட்டார்கள். கால் கழுவும் கோயில் கிணற்றடியில் காத்திருந்தான். கும்மிருட்டு. கனகி தனியே வந்துகொண்டிருந்தாள். அவளது உயரத்தையும் நடையையும் வைத்தே கணித்தான். அப்போதுதான் வந்தவன்போல கிணற்றில் தண்ணீர் அள்ளி தன் காலை நனைத்தபின் இன்னொரு வாளி தண்ணீர் அள்ளி அவள் கால் கழுவ உதவும்போது 

“ பிள்ளை கனகி நான் யாரெண்டு தெரியுதா? “

“ உங்களை தெரியாதா சுவாமி? எத்தனை தடவை உங்கள் பிரசங்கத்தைக் கேட்டிருக்கிறன்” 

“ பிள்ளை போன கிழமை அந்திசாயும் நேரம் குளத்தில் நீ நீராடுவதைப் பார்த்தேன். வெள்ளிக்கிழமை இரவு உன் சதிராட்டத்தைப் பார்த்தேன். இரண்டு நாள் தூக்கமில்லை எனக்கு. நான் எத்தனை பொன் கொடுத்தும்  உன்னை அடைய விரும்புகிறேன். நான் என்ன செய்யவேண்டும்”

“ சுவாமி, நீங்களுமா? இது செட்டியாருக்கு தெரிந்தால்.... என்று சிணுங்கத் தொடங்கினாள் கனகி. அவள் சிணுங்கியபடியே ஓடத்தொடங்கினாள். ஆறுமுகன் அவளைத் துரத்திச் சென்று அவள் முன்பக்கம்போய் அவளை மறித்து கரங்கூப்பியபடி அவளின் காலில் விழுந்து அவள் இரும் காற்சலங்கைகளை பிடித்தபடி அழுதபடி சொன்னான்.

“ செட்டியாருக்கு தெரியாமல் நான் உன்னிடம் இரவில் நடந்தே வருகிறேன்.” 

“ என் அம்மானிடம் பேசுங்கள்” என்று கனகி சிணுங்கியபோதுதான் ஆறுமுகன் தன் பிடியை விட்டான்.

ஆறுமுகன் தருணம் பார்த்து கனகியின் மாமனை அவரது ஊரான அளவெட்டி பெருமாள்கடவை கோயிலில் சாட்டோடு சாட்டாகச் சந்தித்தான். கனகியின் மாமனுக்கு ஆறுமுகன் யார், அவன் எவ்வளவு செட்டியாருக்கு வேண்டப்பட்டவன் என்பது தெரியும். ஆறுமுகன் மாமனுக்கு புரிகிற பொன்னின் மொழியிலேயே பேசினான். அந்த நாட்டுக்கோட்டை செட்டியாரும் வெள்ளாள முதலியாரும் தருகிறதை விட இருமடங்கு பொன் மாதாமாதம் நான் தருவேன். அவர்களை விட்டுக்கலை. இனி நான் மட்டுமே கனகிக்கு உபயம்” என்றான். 

மாமன் 

“ தம்பி நீ எனக்கு மகன் மகன் மாதிரி. உனக்கு கனகியை ஏற்பாடு செய்வதில் எனக்கு  ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் செட்டியாருக்கு தெரியாமல் என்னால் ஒன்றும் செய்யமுடியாது.” 

என்று கைவிரித்து விட்டான். 

ஆறுமுகன் தன் வண்டிக்காரனிடம் செட்டியார் வீட்டுக்கு வண்டியை வேகமாக  ஓட்டு என்று உத்தரவிட்டான். 

செட்டியார் வீட்டில் இல்லை. செட்டியாரம்மா ஆறுமுகனுக்காகக் காத்திருந்த மாதிரி இருந்தாள். தாயைத் தின்னியான ஆறுமுகனின் சிற்றன்னை போலவே செட்டியாரம்மா ஆறுமுகனோடு வாரப்பாடு கொண்டிருந்தவள். வெள்ளிக்கிழமை கனகியின் சதிராட்டத்தை ஆறுமுகன் பார்த்ததை செட்டியார் கவலையோடு செட்டியாரம்மாவிடம் சொல்லியிருந்தார். 

அம்மா பரிமாறிய அன்னம், பாசிப்பயறு, வெள்ளைக் கத்தரிக்காய், பயத்தங்காய் கீரை,  வடை, வாழைக்காய்ப் பொரியல், அப்படம், ரசம் என்பவற்றை ஆறுமுகன் சாப்பிடுவதை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த செட்டியாரம்மா அவனாகவே சொல்லட்டும் என்று காத்திருந்தார். 

அவாவே ஒரு வெற்றிலை எடுத்து சுண்ணாம்பு தடவி பாக்கு சீவிப்போட்டு சுருட்டி பெறாமகன் வாயில் செருகிய கணத்தில் செட்டியாரின் குதிரை வண்டில் வரும் சத்தம் கேட்டது. ஆறுமுகன் சுருக்கமாக முழு உண்மையையும் சொல்லி அம்மாவின் உதவியைக் கேட்டான். 

அன்றிரவு செட்டியாரம்மா செட்டியாரைக் கடிந்துகொண்டாள். 

“இருபது வயதிலேயே உங்கள் கடைசி மகனுக்கு சோழநாட்டிலிருந்து ஒரு செட்டிச்சியை கட்டிக்கொடுத்த உங்களுக்கு தாயைத்தின்னி  ஆறுமுகனுக்கு திருமண வயசாகிவிட்டது என்பது தெரியவில்லையா?  பாவம் ஆறுமுகன் இப்ப ஒரு  தேவதாசியில் வேட்கை கொண்டுவிட்டான். நம் சொல்லுக்கேட்க மாட்டாத வயசு அவனது. ஏற்பாடு செய்து கொடுங்கோ. ஒரு வருசத்தில் அவன் ஆசை அடங்கிவிடும். பிறகு அவனுக்கு ஒரு நல்ல செட்டிச்சியை பார்த்து கட்டிக் கொடுக்கலாம். 

செட்டியார் அடுத்தநாள் காலையே கூப்பிடு தூரத்திலிருந்த கனகியின் மாமனை வரவழைத்தார். வெள்ளாள ஆறுமுகனை நம்ம பையன் உன் பொண்ணில் ஆசை வைத்துவிட்டான் என்றார். 50 வயதிலிருந்த கனகியின் வாடிக்கையாளர்களான செட்டியையும் வெள்ளாள முதலியையும் விட்டுக்கலைப்பது தன் பொறுப்பு என்றார். ஆறுமுகன் இரவில் முக்காடு போட்டுக்கொண்டு  நல்லூரிலிருந்து நடந்தே வருவான். அவன் வரும்போது உன்வீட்டு நாய்கள் எதுவும் குரைக்கக்கூடாது. ஒரு ஈ, காக்காய் கூட சத்தம் போடக்கூடாது. இதோ இம்மாதக் கூலி என்று சொல்லி தன் சங்கிலியை கழற்றி கனகியின் மாமன் கழுத்தில் போட்டார். 

                               2

ஆறுமுகன் கனகியைச் சந்தித்த முதலிரவு 1848 முன்பனிக்காலம். கனகி படலையில் நட்சத்திரங்களுக்குக் கீழ்  காத்திருந்தாள். அந்த செந்நாய் குரைக்காது ஆறுமுகனின் பாதங்களை நக்கி வரவேற்றது. 

கனகியின் மண் குடிசை பனை ஒலை சுவர்களாலும் கூரையாலும் வேயப்பட்டிருந்தது. பனிக்குளிரிலும் காமத்திலும் துடித்துக்கொண்டிருந்த ஆறுமுகனை கனகி குடிசைக்குள் அழைத்துப்போய் பாய் விரித்தாள். இருவருக்குமே என்ன பேசுவது என்பது தெரியவில்லை. 

தேவதாசிகளின் சடங்குகளுக்கேற்ப கனகிதான் முதலில் மௌனத்தை கலைத்தாள். 

“ சுவாமி கள்ளு அருந்துகிறீர்களா” 

என்றவாறு ஒரு கள்ளு முட்டியை பாயில் சும்மாடு போட்டு அதில் வைத்தாள். ஒரு சிரட்டையில் கள்ளு மொண்டு ஆறுமுகனின் கைகளில் வைத்தாள். அவன் ஒரு வாய் குடித்தான். புளித்தது.

“ சுவாமிக்கு பழக்கம் இல்லையோ. தேவதாசியான என்  காலில் விழுந்து காற்சாலம்பை பிடித்து அழுதது பழக்கத்தாலா வந்தது சுவாமி”  

என்று கணீரென்று சிரித்தாள்.

அந்தக்காலத்தில் Bra இல்லை. சேலை Blouse/ ஜாக்கெட் இல்லை. யங்கி இல்லை. கனகி ஒரு சிவப்பு  காஞ்சிபுரப் பட்டுப் புடவையை மட்டுமே கணுக்காலுக்கும் முழங்காலுக்கும் இடைப்பட்ட உயரத்தில்  அணிந்திருந்தாள். தன் கொங்கைகளையும் சேலையை தோள் மேல் போட்டு மறைத்திருந்தாள். 

“சுவாமி சுடச்சுட வடை கள்ளுக்கு நல்லாயிருக்கும். வடை வேணுமா “  

என்றபோது ஆறுமுகன் தலையாட்டினான். அவள் வெளியே போய் பின் திண்ணையில் நின்றபடி  அடுப்பு மூட்டினாள்.  ஆறுமுகனும் வெளியே எழுந்துபோய் கனகி பின்னால் பேசாமல் நின்றான். கனகி பின் நகர்ந்து ஆறுமுகனின் தேகத்தில் இடித்து

“ செட்டியாரே ஆமோதித்தது நம் ஒறவு. எனக்கு பயமேதுமில்லை. உங்க பிரியத்துக்கேற்ப ஒட்டுங்க. ஒறவாடுங்க. கட்டிப்பிடியுங்க, கடியுங்க,  கசக்குங்க. நான் கத்தமாட்டேன்” 

என்றாள். 

ஆறுமுகன் பின்னிருந்து வடை சுட்டுக்கொண்டிருந்த கனகியின் பின் கழுத்தில் முத்தமிட்டு சேலைக்குள்ளிருந்த அவள் கொங்கைகளை தன் இருகரங்களாலும் பிடித்தபடி அவளைக் கட்டிப்பிடித்தான். கனகியின் செந்நாய் அதை வைத்தகண் வாங்காமல்  பார்த்துக்கொண்டிருந்தது. 

“சுவாமி என் செந்நாய்க்கு உங்களை ரொம்ப பிடிச்சு போச்சு. அந்த கிழச் செட்டியும் வெள்ளாள முதலிக் கிழவனும் ஒவ்வொரு தடவையும் வரும்போதும் எந்நாய் குரைத்து ஊரைக்கூட்டும். நீங்க வந்ததிலிருந்து இதுவரை ஒரு தடவைகூட எந்நாய் குரைக்கவே இல்லையே?”

வடை சுட்டபின் அவள் குந்தியிருந்து அம்மியில் சம்பல் அரைத்தாள். ஆறுமுகனும் பக்கத்தில் அமர்ந்தான். அரைக்கும்போது சேலை இடைவெளியில்  அவளது தனங்கள் ஆடுவதை ஆறுமுகன் கண்டான். கள்வெறியில் ஆசை துளிர்க்க அவன் வலக்கை சேலைக்குள் புகுந்து அவளின் தனங்களை வருடியது.

அவர்கள் குடிசைக்குள் போனார்கள். ஒரு வாழை இலையில் வடைகளையும் பச்சை மிளகாய் சம்பலையும் அவள் பரிமாறினாள். மேலும் சில சிரட்டைகளில் ஆறுமுகன் கள்ளருந்தினான். 

“ சாமிக்கு நான் சதிராடவா” என்று கேட்டுவிட்டு கனகி தன் மார்புகளை மறைத்த சேலையை விலக்கி இடுப்பைச் சுற்றிக்கட்டினாள். விளக்கு வெளிச்சத்தில் அவள் பெரிய கட்டழகான தனங்களை பார்த்ததும் ஆறுமுகனின் நெஞ்சு துடிக்கத்தொடங்கியது. ஆறுமுகனுக்கு மட்டுமே கேட்கக்கூடிய குரலில் 

எப்போ வருவாரோ எந்தன் கலிதீர....

என்ற பாடலைப் பாடியவாறு அவள் சதிராடினாள். அவளது பொங்கிய தனங்கள் ஆட அதில் அவள் நெற்றி வியர்வைத்துளிகள் விழுந்தன. கச்சைக்குள் ஆறுமுகனின் ஆணுடம்பு புடைத்து கச்சையை ஈரமாக்கியது.

ஆறுமுகன் எழுந்துசென்று தன் பொன் சங்கிலியை அவள் கழுத்தில் போட்டான். அவள் தனங்களை கசக்கியபடி அவன் அவள் கீழ் உதட்டை சுவைக்க அவள் உதடுகளும் நாக்கும் அத்துமீறி ஆறுமுகனின் நாக்கை சுவைத்தது. அவன் அவள் சேலையை துகிலுரிந்தபடி அடுத்த சதிராட்டத்தை ஆடையின்றியே ஆடு கனகி என்றான். அப்போது அவள் ஆறுமுகனின் கவிட்டுக்குள் கைவிட்டு அவனின் வெள்ளைக் கச்சையை உருவி அதன் ஈரத்தை முகர்ந்தனுபவித்துவிட்டு அதனை தனது கழுத்தில் கட்டினாள். 

இன்னொரு முட்டி கள்ளை பிறந்தமேனியோடு கொணர்ந்து வைத்துவிட்டு அவள் ஆடினாள். ஆறுமுகன் கைகள் நடுங்க நடுங்க கள்ளருந்தியபடி அவளை ரசித்தான். அவளது தனங்கள், சிறிய தொந்தியிலுள்ள தொப்புள், அவள் அல்குல் மயிர்கள், அல்குல், பெரிய கட்டிறுக்கமான பிருஷ்டங்கள், தொடை எல்லாவற்றையும் மாறி மாறி அனுபவித்துக்கொண்டிருந்தவன் வெறிகொண்டவன் போல எழுந்து அவள் கவட்டுக்குள் ஒருகையும் தோளில் மறுகையும் போட்டுத் தூக்கிவந்து  பாயில் போட்டான். கனகி அவன் உதட்டில்  முத்தமிட முனைந்தபோது அதை விலக்கி விட்டு அவள் தொடைகளை விலக்கி அவள் ஈரமான அல்குல்லை நக்கிச் சுவைத்தான். கனகி முனகிக்கொண்டிருந்தாள். பிறகு புணர்ந்தான். கனகி தன் கால்களால் அவனுக்கு பூட்டுப்போட்டாள்.  அந்தப் முன்பனிக்குளிரிலும் இருவருக்கும் மூச்சு வாங்கியது. வியர்த்தது. 

காமாட்டத்தின் முடிவில் இருவரும் மூச்சுவாங்கியபடி படுத்திருந்தார்கள். கனகி அவனை பல தடவைகள் முத்தியபடி

 “ சுவாமி நீங்கள் தந்த இன்பம்போல வேறு யாரும் தந்ததில்லை. என் கன்னி கழித்த அந்த ஆங்கிலப் பொலீஸ்காரனும் 40 வயது முரடன். என் தனங்களை கடித்து காயப்படுத்துவதில் அவனுக்கு குரூர ஆசை. செட்டியும் வெள்ளாள முதலியும் கிழவர்கள். எனக்கு நாக்குப்போட்டு என்னை கூச வைத்ததே கிழவன்கள் செய்தது.” 

என்றாள்.

அவர்கள் மேலுஞ் சில தடவைகள் புணர்ந்தார்கள். 

“சாமிக்கு பசிக்குமில்லையா” 

என்றவள் எழுந்து சேலையை அணிந்துகொண்டாள். ஆறுமுகனும் வேட்டியை அணிந்தான். பின் திண்ணையில் நொடியில் சமைத்தாள். கனகி. அப்போது பின்நிலவு எழுந்துகொண்டிருந்தது. பருப்புக்கறியும் கத்தரிக்காய் வதக்கலோடும் கீரைக்கடையலோடும் பின் திண்ணை நிலவொளியில் அன்னம் பரிமாறினாள். ஆறுமுகன் அவளுக்கும் ஊட்டிவிட்டான். 

பாயாசத்திற்கு பதிலாக கனகி  தேன், பலாப்பழம், மாதுளை முத்துக்கள், பால், தயிர் கலந்து தயாரித்த பஞ்சாமிர்தத்தை ஆறுமுகனுக்கு ஒரு சிரட்டையில் விட்டுக் கொடுத்தாள். 

ஆறுமுகன் இன்னொரு முறை அவள் சேலையை உரிந்து அவள் கால்களை விரித்தான். ஒரு பாதி பலாப்பழச்சுளையால்  பஞ்சாமிர்தத்தை அள்ளி கனகியின் அல்குலில் ஊற்றினான். அதே சுளையால் அவளின் அல்குலை விரித்து  தடவிவிட்டு தன் நாக்கால் அல்குலிலிருந்த பஞ்சாமிர்தத்தை நக்கிச்சுவைத்தான். ஒரு மாதுளை முத்தை கனகியின் யோனிப்பருப்பிலிருந்து தன் நாக்கால் ஆறுமுகன் எடுக்கமுயன்ற போது கனகி இன்பவலியில் முனகினாள். அவர்கள் அதன்பிறகு மேலுமொரு முறை புணர்ந்தபின் பிறந்த மேனியோடு கட்டிப்பிடித்தபடியே தூங்கிவிட்டார்கள். 

கண்ணை கைத்தீஸ்வரன் கோயில் உசத் காலப்பூசை மணி அடித்தபோது ஆறுமுகன் கனகிக்கு விடைகொடுத்தான். மங்கிய நிலவொளியில் முக்காடு போட்டுக்கொண்டு நல்லூரிலுள்ள தன் வீட்டுக்கு நடக்கத் தொடங்கினான். அந்த அரைமணித்தியால நடையில் அவன் தன் வாழ்வின் மிகப்பெரிய சந்தோசத்தை உணர்ந்தான்   

பிறகென்ன? வாரத்தில் மூன்று நாலு நாட்களின் இரவை ஆறுமுகன் கனகியின் குடிசையிலேயே வாழ்ந்தான். கனகியின் இரவுத் தூக்கம் பாதிக்கப்படக்கூடாது. அடுத்தநாள் தானும் வேலைக்குப் போகவேண்டும் என்பதற்கமைய இரவு எட்டுமணிக்கே ஆறுமுகன் வந்துவிடுவான். இரவு ஆகாரம் அருந்தியபின் சில தடவைகள் புணர்ந்துவிட்டு அந்த புணர்ச்சிக் களையில் நள்ளிரவுக்கு முதல்  இருவரும் ஒரே பாயில் தூங்கிவிடுவார்கள். வைகறை தூக்கத்திலிருக்கும் கனகியை எழுப்பி ஒரு கடைசித்தடவை  புணர்ந்துவிட்டு ஆறுமுகன் போய்விடுவான். அதிகாலைப் புணர்ச்சியின்பத்தின் பின் மேலுஞ்சில நாழிகள் அனுபவித்துத் தூங்குவாள் கனகி.

ஆறுமுகன் செட்டியாரிடம் சொல்லி கனகி கோவிலில் சதிராடுவதையும் மறித்தான். வெள்ளிக்கிழமை மாலை  கைத்தீஸ்வரன் கோயிலில்  ஆறுமுகன் வழங்கும் பிரசங்கத்தில் பெண்கள் சபையில் கனகி முதல் வரிசையிலிருப்பாள். அவளை இப்போது வைத்திருப்பது ஆறுமுகன் என்பது ஊரே அறிந்த ரகசியம். அது அவளுக்கு மிகப்பெரிய கௌரவமும் சந்தோசமும். ஆறுமுகன் அவன் கால்களில் அணிவித்த விலை மதிப்பற்ற காற் சிலம்புகளின் ஒலி கைத்தீஸ்வரன் கோயில் உட்பிரகாரத்தில் கேட்கிற போதெல்லாம் பக்தர்கள் ஒதுங்கி நின்று  அவளுக்கு வழிவிட்டார்கள்.

வெள்ளிக்கிழமை பிரசங்கம் முடிந்தபின் முதலில் கலைவது பெண்கள் சபைதான். கனகியும் அவர்களோடு வீட்டுக்குப் போய் ஆறுமுகனுக்கு ஆகாரம் சமைக்கத் தொடங்கிவிடுவாள். 

பிரசங்கம் முடிந்தபின் பல  பிரமுகர்களும் வணிகர்களும்  ஆறுமுகனை மொய்த்து கேள்வி கேட்பார்கள். உரையாடுவார்கள். ஆறுமுகன் இவர்களை ஓரிரு மணித்தியாலங்களில் வெட்டிவிட்டு இரவானதும் சொற்ப தூரத்திலிருக்கிற கனகியின் வீட்டுக்கு நடந்தே போவான். 

வெள்ளி இரவுகள் ஆறுமுகனுக்கும் கனகிக்கும் மிக இனியவை. இரவு முழுக்க அவர்களுக்கானது. இருவருமே தீவிரமான காதலில் விழுந்துவிட்டார்கள். ஆறுமுகன் கையிலிருந்த பாதிரியாரின்  வேதாகம மொழிபெயர்ப்பை செம்மைப்படுத்திக் கொடுத்து விட்டு கனகியோடு கடல் கடந்து வடநாட்டுக்கு ஓடத் தீர்மானித்துவிட்டான். ஆறுமுகன் வெள்ளி இரவுகளில் பாதிரியாரின் மொழிபெயர்ப்புப் பிரதிகளுடன் வருவான். காதல் செய்வதற்கிடைகளில் கனகியோடு சேர்ந்து மொழிபெயர்ப்பை செம்மைப்படுத்துவான். 17 வயது வரையும் உடுவில் மகளிர் கல்லூரியில் ஆங்கில மூலம் கற்ற கனகி ஆறுமுகன் எது நல்ல தமிழ்ச்சொல் என்று தடுமாறும்போது கனகியின் தமிழ்ச்சொல் மிக உகந்ததாக இருக்கும். வேதாகமத்தின் சாலமனின் பாடல் அத்தியாயத்தின் பாதிரியாரின் மொழிபெயர்ப்பை ஆறுமுகனும் கனகியும் சேர்ந்து முற்றாகவே மாற்றி புதிதாக மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. அப்போதுதான் அவர்களின் காதல் முற்றியது. 

பாதிரியாரின் சாலமன் பாடல் மொழிபெயர்ப்பு மிக வரண்ட தூய்மையான மொழியிலிருந்தது. காமக்கடலில்  திளைத்துக் கொண்டிருந்த, இந்தச் சோலியை முடித்துவிட்டு கனகியோடு ஓட அவசரப்பட்ட ஆறுமுகனின் மொழி ஆபாசமாக இருந்தது. கனகிதான் இரண்டிற்கும் இடையில் காமரசமான  பெயர்ப்பை மொழிந்தாள். 

ஆறுமுகனின் நீண்டநாளைய ஆசை தான் கனகியை முதல் முதலில் கண்ட குளத்தில் அவளோடு நிர்வாணமாக நீந்தவேண்டும். நீராடவேண்டும் என்பது. சாலமனின் பாடல் அத்தியாயத்தை செம்மையாக்கிய இளவேனிற்கால அமாவாசை இரவு வெள்ளிக்கிழமை கனகி ஆறுமுகனின் ஆசையை நிறைவேற்றத் துணிந்தாள். செந்நாய் முன்செல்ல யாமத்திற்கும் வைகறைக்கும் இடைப்பொழுதில் காதலர்கள் குளத்திற்கு சென்றார்கள். செந்நாய் குரைக்கவில்லை. ஆனால் கனகிக்கு மட்டும் கேட்கக்கூடிய ரகசியமாக உறுமியது. 

ஆறுமுகனுக்கு நீந்தத்தெரியாது. ஆடைகள் களைந்து இருவரும் நீரில் இறங்கினார்கள். கும்மிருட்டு. யாருக்கு யாருமே தெரியாத கும்மிருட்டு. இளவேனில் இறுதி நாட்களின் வெப்பத்தில் குளிர் தண்ணீரில் இந்த சாகசத்தில் கழுத்து தண்ணீரில் நின்ற காதலர்கள் பரசவப்பட்டார்கள். உதடு, நாக்கு கடித்து முத்தமிடும்போது ஆறுமுகன் தன் நடு இரண்டு விரல்களயும் கனகியின் அல்குலில் போட கனகி அவனின் ஆண்குறியை தன் கைவிரல்களால் ஆட்டிவிட்டாள். பரஸ்பர சுயமைதுனம். சடங்கை விட ஒரு சாகசம் போலிருந்தது. 

கனகி குளத்தின் நடுவரை நீந்திப்போனாள். கழுத்தளவு தண்ணீரில் நின்ற ஆறுமுகனுக்கு நீச்சல் சத்தம் மட்டுமே கேட்டது. கனகி மீண்டு வருவதற்கு முதல் செந்நாய் குளத்தில் பாய்த்து கனகியைநோக்கி நீந்திவரும் ஒலியைக் கேட்டான் ஆறுமுகன். 

கனகி கழுத்தளவு தண்ணீரில் நின்ற ஆறுமுகனை சந்திக்கும்போது நட்சத்திரங்களின் ஒளியில் ஆறுமுகன் அவளுக்கு போட்ட பொன் தோடுகளும் அவள் கண்களும் மின்னின. கனகி பதட்டமாக ஆறுமுகனின் காதை வலியும் ரத்தமும் வருகிற அளவுக்கு கடித்து ரகசிய குரலில் 

“ ஆபத்து வந்துவிட்டது சாமி. என்றைக்குமில்லாதவாறு இன்று என் செந்நாய் அரசமரக்கிளையிலிருந்து என் சேலையையும் உங்கள் வேட்டியையும் வாயில் கௌவி என்னிடம் நடுக்குளம் வரை நீந்தி வந்திருக்கிறது.  யாரோ நம்மை அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்” 

என்றாள். 

கழுத்தளவு தண்ணீரிலேயே காதலர்கள் செந்நாய் கொணர்ந்த தம் ஆடைகளை அணிந்துகொண்டார்கள். அவர்கள் கரையேறியபோது செந்நாய் குரைத்து அவர்களைச் சுற்றிச் சுற்றி ஓடியது. செந்நாயின் குரைப்பை நிறுத்த கனகி அதைப்பிடித்து தன் கைகளில் தூக்கி நடந்தாள். 

அந்த சனிக்கிழமை பகல் முழுக்க ஆறுமுகன் கனகி வீட்டு குடிசையிலேயே ஒளிந்திருந்தான். தனது உயிருக்குப்பயந்து ஒளித்திருக்கவில்லை. அவன். கனகியின் உயிருக்குப் பயந்தே அவளோடிருந்தான். 

அந்தக்காலத்து யாழ்ப்பாணத்தில் அழகான தாசிகளுக்காக வாடிக்கையாளர்களுக்கிடையே நடக்கும் சண்டையில் கொல்லப்படுவது போட்டியிடும் வாடிக்கையாளர்கள் அல்ல. அந்த தாசியே. வைகறையில் யாரும் வருவதற்கு முதலில் குளத்திற்கு சென்று நீராடுவது தேவதாசிகளே. அவர்கள் நீராடும்போது பாதுகாப்புக்கு வந்த மாமனை, வாடிக்கையாளனை, நாயை மரத்தில் கட்டிவைத்துவிட்டு போட்டி வாடிக்கையாளன் அவளை வன்புணர்ந்துவிட்டு நீரில் மூச்சடக்கி கொன்றுவிட்டு  சடலத்தில் சேலையைக்கட்டி குளத்தில் மூழ்கிச் செத்தமாதிரி தாசியை நடுக்குளத்தில் போட்டுவிடுவார்கள். 

அன்று பின்னேரம் குடிசையில் காதலர்கள் தூங்கியெழுந்த பின் கனகியின் மாமன் வந்தான். மாமனுக்கு நாட்டுக்கோட்டை செட்டியிலும் வெள்ளாள முதலியிலுமே சந்தேகம். கைத்தீஸ்வரச் செட்டியாரிடம் இவ்விடயத்தை முறையிடுவோம் என்றான் மாமன். ஆறுமுகன் இந்தக்கதை செட்டியாருக்கு தெரியவே கூடாது என்றான். கனகியை இனி இரவில் குளத்தில் குளிக்க விடக்கூடாது. காலையில் ஒளி வந்தபின் மட்டும் குளிக்க ஏற்பாடு செய்யவும் என்று உத்தரவிட்டு விட்டு தன் பொன் சங்கிலியை  மாமனின் கையில் வைத்துவிட்டு இரவில் நடந்து வீட்டுக்குப் போய்விட்டான். 

                                3

அவ்விரவில் காதலர்களை பின்தொடர்ந்து குளத்தங்கரைக்கு போனது கனகியின் முறை மச்சான் நட்டுவச் சுப்பையன். சுப்பையன் தந்தை யாழ்ப்பாணத்தில் பேர்பெற்ற நாதஸ்வரச் சக்கரவர்த்தியான ருத்ரமூர்த்தி. செல்வந்தர். கனகியின் தாசித்தாய் தன்னைப்போல மகள் ஒரு தாசி ஆகக்கூடாது என்று அவளை ஆங்கிலப் பாடசாலைக்கு அனுப்பி படிப்பித்தபோது போட்டிபோட்டு சுப்பையனையும் அவன் தந்தை சகோதர ஆங்கிலப்பாடசாலைக்கு அனுப்பினார். அப்போதிருந்தே சுபபையன் கனகியைக் காதலித்து வந்தான். கனகியையை அதிகாரத்தால் ஆங்கிலப் பொலீஸ்காரன் அடைந்தபோது மனமுடைந்த சுப்பையன் தகப்பனோடு கொழுவிக்கொண்டு தூத்துக்குடிக்கு ஓடிப்போனான். ஆங்கிலக் கப்பல் கம்பனியொன்றில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்து ஒன்றரை ஆண்டுகள் வேலைசெய்து திரவியம் தேடிக்கொண்டு ஊருக்கு திரும்பினான். தன் திரவியத்தைக் காட்டி கனகியை மீட்டு திருமணஞ்செய்துகொண்டு தூத்துக்குடிக்கு போகலாம் என்ற நம்பிக்கையோடு வந்திருந்தவனுக்கு பெருத்த ஏமாற்றம். 

கனகியை அப்போது செல்வாக்கான ஒரு நாட்டுக்கோட்டை செட்டியாரும் இன்னொரு வெள்ளாள முதலியாரும் வைத்திருந்தார்கள். 

சுப்பையன் கொஞ்சம் பெண்தன்மை கொண்டவன். அவன் குரல் பெண்குரல் போலவே இருக்கும். பெற்றோருக்கு ஒரே குழந்தையான சுப்பையன் பிறந்து ஆறு வயது வரையும் பேசவே இல்லை. நாதஸ்வர வித்துவான் ருத்ரமூர்த்தி தமிழக திருத்தலங்களுக்கெல்லாம் போய் வணங்கி வந்த பின் ஆறாவது வயதில்  சுப்பையன் குயிலின் கூவலைக் கேட்டு கூவினான்.அதிகாலையில் சேவலைப்போலக் கூவினான்.  கிளிக்குரலைக்கேட்டு கிளியானான். காகம் போலக்கரைந்தான். 

அவன் எட்டு வயசில் பெண் குரலில் பேசத்தொடங்கியபோது ருத்ரமூர்த்த்தி அவனை வட்டுக்கோட்டை செமினறி ஆங்கிலப்பாடசாலையில் சேர்த்தார். வீட்டுக்கு வந்து அந்த அமெரிக்கன் மிசனறி ஆங்கில இளம்பெண் ரீச்சரின் பெண்குரலிலும் அமெரிக்க உச்சரிப்பிலும் பேசினபோது ருத்ரமூர்த்தி தம்பதிகள் பரவசப்பட்டார்கள். 

வடநாட்டிலிருந்து திரும்பிவந்தபின் சுப்பையன் கனகியைச் சந்தித்து தன்னைத்திருமணஞ் செய்துகொள்ளும்படியும் அவளைக் கூட்டிக்கொண்டு தூத்துக்குடிக்குப் போய் குடித்தனம் செய்வோம் என்றும் கெஞ்சி மண்டாடினான். கனகி அவனைக்கண்டு கொள்ளவே இல்லை. மனமுடைந்த சுப்பையன் நாள் முழுக்க கள்ளுக்கடைகளில் தன் பொழுதுகளைப் போக்கினான். போதை ஏறியதும் கணிகை கனகியைப்பற்றி காமரசப் பாடல்கள் இயற்றி கர்நாடக சங்கீத ராக தாளங்களுக்கேற்ப பாடுவான்.

கனகி மீதான காதலில் பொறாமைத்தீயில் அவன் போதையில் பாடிய காமப்பாடல்களைக் கேட்கவே பல குடிகாரர்கள் ஆனைக்கோட்டை கள்ளுக்கொட்டிலுக்கு வரத்தொடங்கினார்கள். கனகிக்கு இதுவரை நூறு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். கனகிக்கு பொல்லாத பாலியல் நோய்கள் எல்லாமிருக்கின்றன. வாடிக்கையாளர்களுக்கு  நோய்கள் முற்றுகின்றன என்றெல்லாம் கனகியைச் சபித்துப் பாடுவான். கள்வெறியில் வக்கிரமான இக்காமப் பாடல்களை குடிகாரர்களும் பாடத்தொடங்கினார்கள். ஊருக்குள் எடுத்துச்சென்றும் பாடினார்கள். இந்த வாய்மொழி இலக்கியம் யாழ்பாணத்தில் பிரபல்யமானது. சுப்பையனது நப்பாசை தன் பாடல்களால் கனகியயை வைத்திருந்த செட்டியாரும் வெள்ளாள முதலியும் அவளைவிட்டு அவமானத்தால் விலகுவார்கள். அப்போது அவளை தான் அடைந்து அவளோடு வடநாட்டுக்கு ஓடிப்போகலாம் என்பதே. 

அவன் எதிர்பார்க்காதவாறு நிலமை மாறியபோது,  அப்போதைய யாழ்ப்பாணத்தின் மிகச் செல்வாக்கான இளைஞன் ஆறுமுகன் அவளது ஒரே வாடிக்கையாளனான போது சுப்பையன் நடக்கப்போவதை அறிந்து துடித்தான். 

ஆறுமுகன் கனகியோடு வடநாட்டுக்கு ஓடுவான் என்றே சுப்பையன் பயந்தான். அவனுக்கு அப்போது இருந்த ஒரே நம்பிக்கை கைத்திலிங்கச் செட்டியார்தான். அந்த அமாவாசை இரவில் சுப்பையன் காதலர்களைப் பின் தொடர்ந்தது அவர்களின் உரையாடல்களைக் கேட்டால்  செட்டியாரரை நம்பவைக்கக்கூடிய உளவுத்தகவல்கள் ஏதாவது கிடைக்கும் என்பதால்தான். செந்நாயின் பிரசன்னத்தால் அது சாத்தியமாகவில்லை. 

கனகி பிறகு ராக்காலத்தில் குளத்துக்கு போகவில்லை. இந்ந தகவல் மட்டுமே செட்டியாரை நம்பவைக்க போதுமானது என்பதையறிந்து சுப்பையன் கைத்திலிங்கச் செட்டியாரை அணுகி அனைத்தையும் சொன்னான். 

கனகியும் ஆறுமுகனும் காதலர்களாகி அப்போது ஆறு மாதமாகியிருக்கும். செட்டியாரும் ஆறுமுகனின் நடத்தைகளையிட்டு பயந்து கொண்டிருந்த காலம். செட்டியார் கூப்பிட்ட போதெல்லாம் ஆறுமுகன் வருவதில்லை.  

முதுவேனிற்கால காற்றுவீசாது அனல் தெறிக்கும் வெய்யில். செட்டியார் வீட்டு கொல்லைப்புறத்தில் பெரிய ஆலமரத்தின் நிழலிலிருந்த  முற்றிலும் வைக்கோலால் மூடப்பட்ட செட்டியாரின் அலுவலக குடிசையில் செட்டியார் கட்டிலிலிருந்தார். சுப்பையன் கீழேயிருந்த பாயிலிருந்தான். விடயம் ஆறுமுகனையும் கனகியையும் பற்றியது என்று சுப்பையன் விக்கிக்கொண்டு சொன்னபோது செட்டியார் உசாரானார். வழமையாக வீட்டுக்கு வருபவர்களுக்கு பாலோ மோரோ தான் அதிரச பணியாரத்தோடு கொடுப்பார். செட்டியார் தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு அவனது காதில் ஏதோ ஓதினார். சில நிமிடங்களில் வேலைக்காரன் ஒருமுட்டி கள்ளையும் சிரட்டையையும் செட்டியாரின் காலடியில் கொணர்ந்து வைத்தான். செட்டியார் தானே சிரட்டையில் கள்ளைவிட்டு சுப்பையிடம் கொடுத்தார். 

“சுப்பையா நீ என்னட்ட வந்திட்டாய் இனிப்பயப்படாதை” 

என்று சொல்லவும் சுப்பையன் பல சிரட்டைகளை அருந்தியபடி முழுவதையும் உளறினான். 

ஆறுமுகன் தன்னை மீறிப்போவதை அறிந்து செட்டியார் பெருங்கோபங்கொண்டார். கண்ணை கைத்தீஸ்வரப் பெருமாள் தான் சுப்பையனை தன்னிடம் அனுப்பிவைத்திருக்கிறார் என்று நம்பினார். 

அன்றிரவே கனகியின் மாமனுக்கு ஆள் அனுப்பினார் செட்டியார். மாமன் பயந்தபடி வந்தான். 

“ நீ எனக்கே துரோகஞ்செய்யத் துணிந்தாயா அற்ப நட்டுவனே. ஆறுமுகனின் நடத்தை மாற்றங்கள் உனக்குத்தெரியவில்லையா? மாதாமாதம் பொன் பெறமட்டும் வந்துபோகும் நீ ஒரு சொல் சொன்னாயா?”

என்று கோபத்தில் விக்கி மூச்செடுக்கத் தடுமாறி செட்டியார் வைதபோது மாமன் நடுங்கி செட்டியாரின் காலில் விழுந்து அழுதான்.

செட்டியாருக்கே தான் கட்டுமீறிச் சினங்கொண்டது தெரிந்தது. அவர் சுதாரித்து தன் நிலைக்கு மீள சில நிமிடங்கள் தேவைப்பட்டது. வேலைக்காரனைக் கூப்பிட்டார். அந்த நம்பகரமான வேலைக்காரனுக்கு செட்டியாருக்கு கோபம் வந்தால் என்ன பரிமாறுவது என்று தெரியும். 

அவன் ஒரு  இலண்டன் சீமை விஸ்கிப்போத்தலோடும் ஒரு கண்ணாடிக் கிளாசோடும் வந்தான். செட்டியார் தன் கட்டிலில் போத்தலை வைத்து மூடியைத் திறந்து கிளாசில் விட்டு ஒரு வாய் பருகினார். அப்போதும் கனகியின் மாமன் அவரது காலடியில் விழுந்தபடியே இருந்தான். செட்டியார் மேலுஞ்சில வாய் பருகிய பின்னரே அவனை கண்களால் பாயில் போய் அமரும்படி பணித்தார். 

“ நட்டுவா நிலமை என் கைமீறிப் போகமுதல் ......(தன் இரண்டு விரல்களை காட்டுகிறார்) இரண்டே இரண்டு வாரங்கள் தான் உனக்கு நான் தருவேன். இந்த இரண்டு வாரங்களில் நீ என்ன செய்வாயோ ஏது செய்வாயோ எனக்குத் தெரியாது. கனகியின் மனசை மாற்றி அவள் மச்சான் சுப்பையனுக்கு வடநாட்டுக்குக் கூட்டிச்சென்று திருமணஞ்செய்து வைக்கவேண்டும். கனகியை வைத்து நீ உன் ஆயுட்காலத்தில் ஈட்டும் பொன்னை நான் ஒரே தடவையில் உனக்குத்தருவேன். திருமணச் செலவும் புதுமணத்தம்பதியர் வாழ்வைத் தொடங்கவும் நானே பொன்னும் பவுணும் தருவேன்.

ஆறுமுகனின் மனசை மாற்றுவது என் வேலை. 

பாவம் கனகிச் சிறுமி. இந்த சின்ன வயசிலேயே இவ்வளவு காயப்பட்டுவிட்டாள். அவள் இனியும் ஒரு தாசியாக வேசியாக அல்லற்பட வேண்டாம். சுப்பையன் வடநாட்டில் ஆங்கிலக் கப்பல் கொம்பனியில் நல்ல வேலையிலிருக்கிறான். அவளை நல்லபடி பார்த்துக்கொள்ளுவான்”

கனகியின் மாமனுக்கு எதுவுமே பரிமாறப்படவில்லை. கனகி சுப்பையனை கட்ட இணங்கவே மாட்டாள் என்பது மாமனுக்கு நன்கு தெரியும். அவன் பீதியோடு நடுங்கிக்கொண்டிருந்தான். 

அரிய ஆங்கில விஸ்கி செட்டியாரின் மனசை இன்னுந் தெளிவாக்கியது. ரகசியக் குரலில் சொன்னார்.

“ நட்டுவா ஆறுமுகனை விட்டுத்தான் பிடிக்கவேணும். அவன்  அந்தப் பரதேசிப் பாதிரியாரின் செல்லப்பிள்ளை வேறு. அடுத்தவாரம் அவன் கனகியிடம் போய் வருவதை நாம் தடுக்கவேண்டியதில்லை. தடுத்தால் அவன் உசாராகிவிடுவான். இரண்டாம் வாரம் நான் ஆறுமுகனை ஏதோ ஒரு சாட்டுச்சொல்லி வடநாட்டுக்கு ஒரு வணிக விவகாரமாக அழைத்துச் செல்வேன். அவ்வாரமே நீ கனகியை இணக்கியோ இணங்கவைத்தோ வடநாட்டுக்கு தூத்துக்குடிக்கு கொண்டுவரவேண்டும். இன்னும் 3 நாளில் விபரங்களை நான் உனக்குச் சொல்லியனுப்புவேன்”

கனகியின் மாமன் பெரிய சங்கடத்தோடு வீட்டுக்குப் போனான். 

“செட்டியார் என்ன மசிர் கதை கதைக்கிறார். கனகி இணங்கவே மாட்டாள். நான் அவளின் வாயைக்கட்டி கைகால்களைக் கட்டி அவளைக் கடத்திக்கொண்டா தூத்துக்குடிக்கு போகவேணும்? செட்டி சொன்னபடி பொன்னும் பொருளும் தருவான். ஆனால் என்னால் இதைச் செய்யமுடியுமா”  

இப்படி நினைத்தபடி வீட்டுக்குப்போன கனகியின் மாமன் தன் மனைவியிடம் நடந்தவைகளைச் சொன்னான். மனைவியும் முன்னர் தேவதாசியாக இருந்தவள். வீட்டில் அடுத்த அறையில் படுத்திருந்த மனைவியின் தங்கை பொன்னம்மா இதனை ஒட்டுக் கேட்டுவிட்டாள். 

பொன்னம்மாவையும் கனகியின் மாமனே திருமணஞ்செய்து வைத்திருந்தான். அவளும் தாசியாக இருந்து வந்தவள்தான். 

பொன்னம்மா கனகிக்கு மிக நெருக்கமானவள். கனகிக்கும் பொன்னம்மாவுக்கும் ஒரே வயதுதான். அன்றிரவுதான் கனகியின் செந்நாயும் காணாமல் போனது. கனகி தனது உறவினச் சிறுவர்களையெல்லாம் ஊர்முழுக்கச் சென்று தேடவைத்தாள். நாள்முழுக்க அன்ன ஆகாரம் இல்லாமல் தன் குடிசைக்குள் அழுதபடியேயிருந்தாள். நாயைத்தேடி கனகியின் மாமனும் ஊர்முழுக்க அலையச்சென்றநேரம் ஒரே வளவுக்குள் இருந்த கனகியின் குடிசைக்குள் அவளைத்தேற்றும் சாட்டில் அவளுக்கு அன்னம் சமைத்து எடுத்துச்சென்ற பொன்னம்மா அவளிடம் தான் ஒட்டுக்கேட்டதைச் சொன்னாள். கனகியின் மேல் இரண்டாவது பேரிடியும் விழ பேச்சுவராமல் திக்பிரமை பிடித்தவள் போனாளாள்.

அடுத்த இரவு வெள்ளிக்கிழமை. ஆறுமுகன் கனகியிடம் வந்தபோது படலையைத் திறக்க கனகியும் இல்லை. ஆறுமுகனின் பாதங்களை நக்க செந்நாயும் இல்லை. மாமனே படலையைத்திறந்து ஆறுமுகனிடம் கனகி அன்னம் தண்ணீரில்லாமல் படுத்திருப்பதைச் சொன்னான். 

ஆறுமுகன் குடிசைக்குள் போனதும்தான் கனகிக்கு பேசச்சக்தி வந்தது. செந்நாயினதும் பொன்னம்மாவினதும் செய்திகளைச் சொல்லி அன்றிரவே வடநாட்டுக்கு தன்னை கூட்டிக்கொண்டு ஓடிப்போகுமாறு அழுதாள். ஆறுமுகன் அடுத்தநாள் சனிக்கிழமை இரவே கனகியோடு ஓடிப்போக முடிவெடுத்தான். சனிக்கிழமை காலையில் அளவெட்டி பெருமாள் கடவை பிள்ளையார் கோவிலில் கனகியின் உறவினர் திருமணம் ஒன்றுக்கு கனகி போவாள். அது முடிந்து சாயங்காலம் அவள் வீடு வந்தபின் ஓடிப்போக தயார் பண்ணவேண்டும். நள்ளிரவில் காதலர்கள் பேர்சிவல் பாதிரியாரின் வீட்டுக்கு ஓடிப்போவதே போட்ட திட்டம். திருமணத்திற்கு தான் போகமாட்டேன். போக மனமில்லை. சக்தியில்லை என்றாள் கனகி. நீ அழுதுகொண்டு அன்னம் தண்ணீரில்லாமல் படுத்திருந்தால் மாமன் பயப்படுவான். உன்னை தனியேவிட்டு விட்டுப்போனால் நீ ஓடிப்போய்விடுவாய் என்று உன்னைவிட்டுப் போகமாட்டான். நாம் ஏதாவது திட்டத்தோடிருக்கிறோம் என்று சந்தேகப்படுவான் என்றெல்லாம் சொல்லி அவளைத் தெம்பேற்றியது ஆறுமுகன்தான். 

பிறகு பொன்னம்மா சமைத்துகொணர்ந்த ஆகாரத்தை கனகிக்கு ஊட்டமுயன்றான் அவன். அவள் பசியே இல்லை என்று சாதித்தாள். சரி இன்றிரவு நானே உனக்காகச் சமைக்கிறேன். எனது கைப்பக்குவத்தையும் நீயே சாப்பிடாவிட்டால் நீ சாப்பிடும்வரை நானும் சாப்பிடாமலிருப்பேன் என்று சொன்னவாறு ஆறுமுகன் வெளியே போய் அடுப்பு மூட்டி உலை வைத்தான். 

இதை கனகி எதிர்பார்க்கவில்லை. எங்கிருந்து அவளுக்கு சக்தி வந்ததோ தெரியவில்லை. சுவாமி உங்களை நான் சமைக்க விடமாட்டேன் என்று எழுந்தாள். முகங்கழுவி விட்டு வந்து இருந்து அரிவாளில் வெங்காயம் வெட்டத்தொடங்கினாள். நீங்கள் எனக்குச் சமைத்துத்தருவேன் என்று சொன்னதைக்கேட்க என் செந்நாய்க்கு கொடுத்து வைக்கவில்லையே.. இன்றிரவு செந்நாய்க்கு யார் ஆகாரம் போடுவார்கள். எந்தக் காட்டிலோ கரம்பையிலோ அது இப்போதிருக்கும். எங்கு அதன் வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி வைத்திருக்கிறார்களோ. லோகத்தில் எங்கள் காதலை அங்கீகரித்த ஒரே சீவன் என் செந்நாய் ஏன் என்னைவிட்டு ஓடவேண்டும் என்றவாறு சிணுங்கிச்சிணுங்கி சினத்தில் வேகமாக வெட்டத் தொடங்கினாள். அப்போது ஆறுமுகன் அடுப்பில் பாசிப்பயறு வறுத்துக்கொண்டிருந்தான். 

கனகி ஐயோ என்று முனகினபோது ஆறுமுகன் திரும்பிப்பார்த்தான். கனகியின் பெருவிரலிலிருந்து ரத்தம் வடிந்துகொண்டிருந்தது. 

“தேவடியாச் சிறுக்கி” 

என்றவாறு அவள் கன்னத்தில் ஆறுமுகன் குனிந்து அறைந்தான். பிறகு  அவளது பெருவிரலை தன் வாயில் வைத்தான். அதிர்ச்சியில் கனகி விம்மிக்கொண்டிருந்தாள். ரத்தம் கசிவது நின்றபிறகே அவளது விரலை வாயிலிருந்து விடுவித்தான். ஒரு மூன்று வயதுப்பெண் குழந்தையை தந்தையொருவன் தூக்குவதுபோல அவளைத்துக்கி தன் இடுப்பில் வைத்தான். அவள் விம்மலை அடக்க தன் வலத்தோளில் அவள் தலையை வைத்து அழுத்தினான். அடுப்பை நிறுத்திவிட்டு குழந்தையை தூங்கவைக்கிற  ஒரு தகப்பன்போல குடிசையைச் சுற்றிச் சுற்றி நடந்தான். 

கனகி பேசவே இல்லை.

 “என்னை தேவடியாச் சிறுக்கியாம். தேவடியாச் சிறுக்கியின் காலில் விழுந்ததே இவர்தான். தேவடியாச் சிறுக்கியை கூட்டிக்கொண்டு ஓடத்துணிந்தவரும் இவர்தான். நாங்களெல்லாம் தாசிகள். எங்களுக்கெல்லாம் காதலிக்க உரிமை இல்லை. நயினார்தான் எனக்கு காதல் பாடம் சொல்லித் தருவாராம். பிறகு என்னை தேவடியாச்சிறுக்கி என்று வைவாராம். மவனே உன்னை எப்படி உயிரோடே கொல்லுவது என்று எனக்குத்தெரியும். நான் ஆகாரமில்லாமல் இறந்தால்  நீயும் ஆகாரமில்லாமல் இறப்பாயல்லவா?

ஆறுமுகனின் தோளில் சிறுமியைப்போல உறங்குவதாக பாசாங்கு பண்ணிக்கொண்டிருந்தாள் கனகி. உண்மையில் இந்த வன்காதலை கனகி உளமூர ரசித்தாள். செந்நாய் தொலைந்துபோன துயரை அவள் அக்கணத்தில் மறந்துவிட்டாள். ஆறுமுகன் அவள் காதலன்/கணவன் என்பதையும் மறந்துவிட்டாள். தன் தந்தை யாரென்றே தெரியாத அவளுக்கு கைத்தீஸ்வரப் பெருமாள் இவ்விரவில் அருளிய தந்தை ஆறுமுகன். 20 வயதில் தந்தையின் தோளில் உறங்கும் பேறு தேவதாசிகளுக்கு மட்டுமே கிடைக்கும்.பேறாம்.

கனகி அதன்பிறகு பேசவே இல்லை. தன் மௌனத்தால் ஆறுமுகனைக் கொன்றபடியிருந்தாள். ஆறுமுகன் அவளை பின் திண்ணையில் பாயில் உட்காரவைத்துவிட்டு தொடர்ந்து சமைத்தான். எளிமையான ஒரு பருப்புக்கறியோடு அன்னத்தை குடிசைக்குள் ஒரு வாழையிலையிலிட்டான். கனகியை தன் இடுப்பில் வைத்துக்கொண்டு

 “ நீ எத்தனை வாய் அன்னம் சாப்பிடுகிறாயோ நானும் அத்தனை வாய்தான் சாப்பிடுவேன்” 

என்றவாறு முதல் வாயை கனகிக்கு ஊட்டினான். அடுத்தவாய் ஆறுமுகனுக்கு. 

கனகி வெறும் பத்து வாய்தான் உண்டாள். ஆறுமுகனும் பத்துவாய்களின் பின் வாழையிலையை மடித்துவைத்துவிட்டு கையலம்பினான். 

செந்நாயை சுப்பையன்தான் கடத்திச்சென்று கொன்றிருப்பான் என்பதை ஆறுமுகன் ஊகித்தான். நேற்றிரவு ஒரு காட்டுமுயலை பொறிவைத்து சுப்பையன் பிடித்தான். பிறகு சாமத்தில்  அதனைக்கொணர்ந்து கனகி வீட்டு வேலியில் ஒரு பொட்டுவைத்து காட்டு முயலின் மூக்கில் ஒரு காஞ்சோண்டி செடியை வைத்தான். அம்முயல் தும்மியது. முயலின் தும்மலையும் நாற்றத்தையும் முகர்ந்துகொண்ட செந்நாய் வெறியில் உறுமியபடி பொட்டுக்குள்ளால் வெளியில்வர தயாராக வைத்திருந்த சாக்குக்குள் செந்நாயைப் பிடித்தான். ஈனஸ்வரத்தில் நாய் கத்த முன்னரே சாக்குக்குள் இருந்த நாயின் கழுத்தை திருகி கொன்றுவிட்டான். பிறகு காட்டுக்குள் போய் அதனைப் புதைத்துவிட்டான். செந்நாயை இழந்த கனகி மனமுடைந்து போவாள். அப்போது அவளின் மனதை மாற்ற மாமனுக்கு வசதியாக இருக்கும் என்பதே சுப்பையன் போட்ட கணக்கு. 

வைகறையில் கனகியைப் புணர ஆசைகொண்டான் ஆறுமுகன். அவளை முத்தமிட அவன் முயன்றபோது 

“சுவாமி நான் தேவடியாச் சிறுக்கி. என்னைத்தொடாதீர்கள். செட்டியார் சோழமண்டலத்திலிருந்து நல்ல செட்டிக் கன்னியை உங்களுக்கு கட்டிவைப்பார்” 

என்று அழுதபடி அவனிடமிருந்து தன்னை விடுவித்து பாயில் குப்புறப்படுத்துவிட்டாள். 

ஆறுமுகன் பெருஞ்சினக்காமம் கொண்டான். வெறிப்பலத்தோடு அவள் சேலையை மேலே உருவி அவள் இரு குண்டிகளிலும் கடித்தான். பிறகு அவள் குண்டிகளை விலக்கி அவள் ஆசனவாயை நாக்கால் நக்கி முத்தமிட்டான். முதல்முறையாக அவன் கனகியின் ஆசனவாயில் இட்ட முத்தம் கனகியின் கல்லான அல்குல்லை  கரைத்தது. அவளே இடுப்பைத்தூக்கி எழுந்து தன்கைகளால் தாங்கியபடி ஆறுமுகனுக்கு வழிவிட்டாள். அவன் அவள் அல்குலின் ஈரத்தை நாக்குபோட்டு நக்கி முத்தமிட்டபின் தன் ஆணுடம்பை இறக்கி நாயைப்போலப் புணர்ந்தான். அன்றிரவு கனகி கர்ப்பமானாள். சுவர்கத்துக்கோ நரகத்துக்கோ போகாமல் கனகியிடமே மீண்டுவர வழிதொலைந்து அந்தரத்தில் அலைந்துகொண்டிருந்த செந்நாயின் மறுபிறப்பு அது.

                                 4

சனிக்கிழமை காலை பத்துமணி. தன் வீட்டில்  தூங்கிக்கொண்டிருந்த ஆறுமுகனை அவன் அண்ணன்மார் 

“ டேய் செட்டியார் வந்திருக்கிறார். எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு வா உடனே” 

என்றார்கள். ஆறுமுகன் செட்டியாரைச் சந்திக்க விரும்பவில்லை. ஆனாலும் வேறு வழியில்லை. வழமையைவிட இருமடங்கு நேரம் எடுத்து கிணற்றில் நீராடினான். 

அக்கால யாழ்ப்பாணத்தில் செட்டியார்கள் வெள்ளாள வீடுகளில் தண்ணீர் கூட குடிக்கமாட்டார்கள். வெள்ளாள வீடுகளுக்கும் வரமாட்டார்கள். 

செட்டியார் ஆறுமுகனை மீட்பதற்காக எல்லா மரபுகளையும் உடைத்து வந்திருந்தார். ஆறுமுகனின் தந்தை செய்வதறியாது செட்டியாரை வணங்கி வரவேற்றார். 

85 வயது செட்டியார் பெரிய ராசதந்திரத்தோடு தானே குதிரை வண்டியை ஓட்டி வந்திருந்தார். அவரே உள்வீட்டுக்குள் போய் கட்டிலில் உட்கார்ந்தார். 

“தாகமாயிருக்கிறது. பருக ஏதாவது கிடைக்குமா”  

என்றார்.

செய்வதறியாது தயக்கத்தோடு செம்பில் மோர் கொணர்ந்து கொடுத்தார் ஆறுமுகனின் தந்தையார். அதனை அப்படியே அருந்தி முடித்தார் செட்டியார். 

ஆறுமுகன் மிகத் தாமதமாக வந்தான். அக்கால யாழ்ப்பாணத்தில் செட்டியாரின் கண்களைப்பார்த்து கதைக்கும் அதிகாரம் பெற்றிருந்தவன் ஆறுமுகன் மட்டுமே. ஆறுமுகன் அன்று செட்டியாரின் முகத்தைக்கூட பார்க்காமல் சாதித்தான். இது செட்டியாரைவிட ஆறுமுகனின் அண்ணன்களையும் தந்தையையும் கலவரப்படுத்தியது. 

செட்டியாரே எழுந்துவந்து ஆங்கில முறையில் ஆறுமுகனுக்கு கைகொடுத்தார். பிறகு அவர் அவன்  தோளில் கைபோட்டு அழைத்துச்சென்று  அவனுக்கு கட்டிலில் சரியாசனம் கொடுத்தார். 

“ ஆறுமுகா உன் சிற்றன்னை செட்டியம்மா நீ இப்போது வருவதில்லை என்று கவலையோடிருக்கிறாள். அதைவிட தூத்துக்குடியில் ஆங்கில வியாபாரக் கம்பனியோடு மிக நல்ல ஒரு வியாபார ஒப்பந்தம் வந்திருக்கிறது. அடுத்தவாரம் நான் அங்குபோய் ஒப்பத்தங்களில் கைச்சாத்திட வேண்டும். என் ராசகுரு நீதானே. நீதான் என்னோடு வந்து பத்திரங்களைப் படித்து எனக்கு உதவவேண்டும். இருவாரங்களில் திரும்பிவிடலாம். இன்று இப்போது நீ என் வீட்டுக்கு வரவேண்டும். ஒரு முக்கிமான பெட்டிசன் ஆங்கில மகாராணிக்கு  எழுதவேண்டும். அவசரம். அதுதான் நானே வந்தேன்” 

என்றார். 

ஆறுமுகனுக்கு செட்டியாரின் கபடம் புரிந்தாலும் இன்றிரவு தான் கனகியோடு ஓடிப்போக இருப்பதால் செட்டியாருக்கு சந்தேகம் ஏதும் வராமல் அவரோடேயே போக உடன்பட்டான்.

செட்டியாரே வண்டியைப் பூட்டினார். அவரே ஓட்டினார். வழக்கத்துக்கு மாறாக மிக மெதுவாக வண்டியை ஒட்டினார்

 “ ஆறுமுகா ஆசை அறுபதுநாள். மோகம் முப்பதுநாள். நீ கொஞ்சம் அதிக காலமெடுத்து கனகியோடு உறவாடுகிறாயா? நான் இன்னும் அதிக காலம் உயிரோடிருக்கமாட்டேன். நான் கண் மூடுவதற்கு முதல் உனக்கொரு விவாகஞ்செய்து வைக்க ஆசைப்படுகிறேன். செட்டியம்மாவின் அண்ணன் மகள் ஒருத்தியை உன் சிற்றன்னை அவள், உனக்கு கட்டிவைக்க ஆசைப்படுகிறாள்.” 

“.................”

ஆறுமுகா உன் பிரகாசமான எதிர்காலம் உனக்கு தெரியவில்லையா? ஆங்கிலேயத் துலுக்கர்களுடன் நாங்கள் அவர்களின் மொழியில் தானே பேசிச் சாதிக்கவேண்டும். நளவன், பள்ளன், பறையன், அம்பட்டன், வண்ணான், எல்லோருக்கும் வாக்குரிமை கொடுத்து ஆங்கிலேயத் துலுக்கர் ஏதோ சனநாயகம் பண்ணப் போறாங்களாம். ஆயிரம் ஆண்டுகளாக நாம் கடைப்பிடித்த சனாதன தர்மத்தை இந்த ஆங்கில சனநாயகம் சிதைப்பதை நாம் அனுமதிக்கலாமா?”

“.............” 

“ஆறுமுகா! நீதானே என் ராசகுரு. நீதானே என் ஒற்றன். கைத்தீஸ்வரப் பெருமாள்தானே என்னிடம் உன்னை அனுப்பினார். நீ ஆங்கிலேயரின் மந்திர தந்திரங்களை பின்பற்றி சட்டசபை அங்கத்தவராக அவர்களின் சனநாயகமோ நாய் நாயகமோ வழியிலேயே வரக்கூடாதா, கனகி ஒரு தேவதாசி. செட்டியம்மா உனக்காக கேட்டதால் ஏற்பாடு செய்து கொடுத்தேன். ஒரு தேவதாசியிடம் போகும் உனக்கு யாழ்பாணத்தில் யார் வாக்குப் போடுவார்கள்? ஆறுமுகா உன்னைவிட நான் பெரிய காமுகன். என் இளமைக்காலத்தில் நான் அனுபவிக்காத போர்த்துக்கேசியப் பெண்களா? டச்சுப் பெண்களா? பிரெஞ்சுப் பெண்களா? ஆங்கிலப் பெண்களா? இந்தியப்பெண்களா? பொம்பேயிலும் கல்கத்தாவிலும் புதுச்சேரியிலும் நான் வாரக்கணக்காக ஐரோப்பியப் பெண்களை அனுபவித்திருக்கிறேன். விருந்தும் மருந்தும் மூன்று நாள் ஆறுமுகா. உன் சின்னம்மா செட்டியம்மாதான் என் தையல் நாயகி. இன்று வரையும் அவள்தான் என் வணிகத்தை, அதிகாரத்தை தைத்துக்கொண்டிருக்கிறாள். 27 வயதில் நான் அவளைக் கட்டியிருக்காவிட்டால் பொம்பாயில் ஒரு வேசைவீட்டில் நான் மேக நோயால் செத்திருப்பேன்” 

“.............”

ஆறுமுகா காமத்தைவிடப் பெரிய வரம் அதிகாரம். அதிகாரம் கால தேச வர்த்தமானங்களைக் கடந்த வரம். அதிகாரம் காமத்தைவிட நிரந்தரமானது. இளமையிலும் அதிகாரம் வரம். முதுமையிலும் அதிகாரம் வரம். காமம் இளமையின் வரம் மட்டுமே. ஒரு பறவையின் செட்டையைப்போல மரத்தின் இலையைப்போல  தம் தலைமுடிபோல உதிர்ந்து விடுவது காமம்”

“ .............”

“ என்ன ஆறுமுகா நான் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறேன். நீ பேசமாட்டாயா. நீ கனகியைக் காதலிக்கிறாயா? அவளைவிட்டுப் பிரிய முடியாதா? உண்மை சொல் ஆறுமுகா”

இதற்கு மேலும் செட்டியாரின் பிரசங்கத்தை தாங்கமுடியாத ஆறுமுகன் 

“ செட்டியாரே எனக்கு அதிகாரமும் வேண்டாம். ஒரு மயிரும் வேண்டாம். நான் கனகியின் கணவனாக ஆயிரம் காலம்  வாழவிரும்புகிறேன்” 

என்றான். 

செட்டியார் இதனை எதிர்பார்க்கவில்லை. தன்னையறியாது கோபத்தில் 

“என்னைப்பகைத்துக் கொள்ள துணிந்துவிட்டாயா” என்று கத்திக்கொண்டு சாட்டையால் தன் குதிரைக்கு மிகப்பலமாக அடித்தார். குதிரை வண்டி மிகவேகமாக ஓடத்தொடங்கியது. அதே கணத்தில் ஆறுமுகன் வண்டியிலிருந்து குதித்து இறங்கினான். 

விறுவிறுவென்று தன் வீட்டுப்பக்கமாக நடக்கத்தொடங்கிய ஆறுமுகனுக்கு அப்போதுதான் தான் அவசரப்பட்டுவிட்டேன் என்பது உறைத்தது. அக்கணத்தில் கனகியின் பாதுகாப்புத்தான் அவனை கலவரப்படுத்தியது. 

முதுவேனிற்கால உச்சிவெய்யில் சுட்டெரித்தது. கனகியை இப்போதே போய் மீட்டுக்கொண்டு ஓடத்தீர்மானித்தான். சால்வையை முகத்தையும் தலையையும் மறைக்க முக்காடாகப் போட்டுக்கொண்டு அளவெட்டி பெருமாள் கடவைப் பிள்ளையார் கோயிலைநோக்கி நடக்க ஆரம்பித்தான். பிரதான வண்டில் பாதைகளைத்தவிர்த்து தோட்டம், துரவு, குளம், காடு, கரம்பை, சுடுகாடு, வயல்வெளி பனஞ்சோலைகள் வழியாக நடந்தான். சரியாக மூன்று மணித்தியாலங்களில் ஒரு காததூரங்கடந்து அளவெட்டி பெருமாள் கடவை கோயில் நல்லதண்ணீர்க் குளக்கரையை அடைந்தான். 

சில சிறுமிகள் தண்ணீர்க்குடத்தோடு வந்தார்கள். அவர்கள் நட்டுவச்சிறுமிகளே என்பதை அறிந்த ஆறுமுகன் அவர்களில் ஒருத்தியிடம் தாகத்துக்கு தண்ணீர் வாங்கிக் குடித்தான். பிறகு 

“கனகி அக்காவை உனக்குத்தெரியுமா”

 என்றான். அவள் ஆமென்று தலையாட்ட தன் மோதிரத்தைக் கழற்றி அவளிடம் கொடுத்து இதை உடனடியாகச் சென்று கனகியிடம் கொடுத்து அவளுக்காக இங்கு நான் காத்திருக்கிறேன் என்று சொல். இந்தப் பெரிய உபகாரத்துக்கு கனகி உனக்கு நல்ல பரிசு தருவாள்”

 என்றான். 

சில நிமிடங்களில் கனகி அங்கு அதே சிறுமியோடு வந்தாள். ஆறுமுகன் ஆங்கிலத்தில் இப்போதே ஓடவேண்டும் என்ற செய்தியைச் சொன்னான். இதே இப்போதே வருகிறேன் சுவாமி என்றுவிட்டு கனகி குடத்தில் நீரெடுத்துக் கொண்டு மீண்டாள். 

காலையிலிருந்து சாப்பிடாத ஆறுமுகனின் பசிக்களையைப் போக்கவே அவள் மீண்டாள். கோயிலுக்குப்போய் ஒரு வாழையிலையில் திருமண விருந்தை பொட்டலமாகக் கட்டி தன் சேலைக்குள் மறைத்தபடி வந்தாள். 

காதலர்களுக்கு அப்போது எங்கு ஓடிப்போவது என்று தெரியவில்லை. ஆறுமுகனிடம் அப்போது ஒரு பொற்காசும் இல்லை. ஆறுமுகன் கனகிக்கு அணிவித்த தங்கத்தாலான சங்கிலிகள், மோதிரங்கள், தோடுகள், கைவளையல்கள், அட்டியல்கள்  காற்சிலம்புகள் எல்லாவற்றையும் அணிந்து வந்திருந்த நீலக்கண்ணி கனகி இளநாவல் காஞ்சிபுரப்பட்டுப் புடவையில் அப்போதுதான் திருமணமான பெண் போல ஜொலித்தாள். 

“ எல்லாமே நீங்கள் அருளிய பொன்கள் சுவாமி, இவையே நம் வாழ்வைத்தொடங்கப் போதும்”  என்றாள். 

கோயிலில் இருந்து ஒடும் வழுக்கி ஆற்றங்கரை வழியாக அவர்கள் நடந்தார்கள். பினாக்கைப் பெருங்குளக்கரையில் இருந்த பனஞ்சோலை யாருமற்ற மயானமாயிருந்தது. கனகி தன் சேலைக்குள் வைத்திருந்த விருந்தை எடுத்து விரித்து ஆறுமுகனுக்கு ஊட்டினாள். சில வாய்கள் உண்ட ஆறுமுகன் பேசவே இல்லை. மிச்ச அன்னத்தை தன் சேலையில் கனகி முடிந்தாள். 

அந்த ஆற்றங்கரை வழியாக தொடர்ந்து நடந்தார்கள். யாழ்ப்பாணத்தின் ஒரேயோரு ஒரு காததூர ஆறு அது. வழுக்கியாறு.  முதுவேனிலிலும் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. 

உரல் இடிக்கிற சத்தம் கேட்டதால் பூக்காத பாலை மரங்கள், மருதமரங்கள், முள் முருக்குகள், வாகை மரங்கள், நாவல் மரங்கள், தேத்தா மரங்கள்,  பூவரசுகள், ஆல் அரசுகள் எல்லாம் ஆற்றங்கரை நெடுக இருந்தன. காய்ந்த காட்டு மல்லிகையின் வாசம் வீசிக்கொண்டிருந்தது. காய்ந்து உதிரும் முல்லைக்கொடிகள் கனகியின் இளநாவல் பட்டுப்புடவையில் சறுக்கி விழுந்தன. 

காதலர்கள் பயந்து கொண்டுதான் நடந்தார்கள். தங்களை யாரும் கண்டுகொள்ளக்கூடாது என்று. வெறும் பாதத்தோடு நடக்கும் போது நிலம் சுட்டது. ஆறு கணுக்காலளவு ஓடிக்கொண்டிருந்தாலும் ஆற்றில் நடக்காமல் ஆற்றங்கரைக் காட்டோரமாகவே நடந்தார்கள். காட்டோரத்தில் இடுப்புக்கு மேலே வெக்கையில்லை. இடுப்புக்கு கீழே வெக்கை. கனகிதான் முன்னுக்கு போய்க்கொண்டிருந்தாள். முகத்தில் விழும் சிலந்தி வலைகளை கடக்கிறபோதெல்லாம் யாரும் இன்னமும் போகாத பாதை என்று அவளுக்கு துணிவு வரும்.  

ஆறுமுகனுக்கு வெறும் வேட்டியும் சால்வை முக்காடும் தான். கனகிக்கு உடலைச் சுற்றி மறைத்த சேலை. கனகிக்குத்தான் அதிகம் வியர்த்தது. 

கற்பூர வாசனையைவிட ஆறுமுகனுக்கு கனகி சதிராடும்போது வரும் அவளின் வியர்வை நாற்றம்தான் பிடிக்கும். அந்நறுமணம் அவனைக் கட்டிப்போடும். அவனுக்கு மகா சக்தியையும் மகா நிம்மதியையும் கொடுக்கும். 

ஆனால் இன்றோ ஆறுமுகனுக்கு கனகியின் வியர்வை நறுமணம்  பீதியைக் கொடுத்தது. இப்பெண் நாற்றத்தை தேடி ஒரு பெருங்காமுகன் வருலாம் என்று பயந்தான். முதுவேற்கால வெக்கையில் இறந்த ஒரு பொன்வண்டு கனகியின் சேலையில் உரசியபடி நிலத்தில் விழுந்தபோது ஆறுமுகன் உசாரானான்.  கனகியை காட்டுப்புதருக்குள் இழுத்துச் சென்று அவள் கமக்கட்டுகளை தன் நாக்கால் நக்கினான். அவள் கண்ணிமைகளில் வடிந்த வியர்வையை நக்கினான். கழுத்தைச் சுற்றி நக்கினான்     பிறகு முழங்காலிலிருந்து நிற்கும் அவளின் சேலைக்குள் தன் முகத்தை புகுத்தி அவள் பின் முழங்காலிலிருந்து வியர்வையை நக்கத் தொடங்கினான். அப்போது காற்றால் விழுந்த ஒரு முழுச் சிலந்திவலை முக்காடு போல கனகியின் முகத்தில் விழுந்தது. ஆறுமுகன் அவளின் பின் முழங்காலை நக்கி,  பின் தொடைகளை நக்கி அவள் குண்டிகளை நக்கினான். பின் முழங்காலை நக்கி முன் தொடைகளை நக்கினான். அவள் அல்குல்லை நக்கினான்.

அந்திசாயும் நேரம் அவர்கள் களையோடை கண்ணகிகோயில் மலைக்காட்டுக்குள் ஒதுங்கினார்கள். மீதி அன்னத்தை உண்டபின் சாமம் வரும்வரை அங்கேயே ஒளித்திருந்தார்கள். 

சாமத்தில் வழுக்கியாறு முடியும் கடற்கரையை அடைந்ததும் ஆறுமுகனுக்கு திக்குத் திசை தெரிந்தது. கடற்கரை  வழியாக நட்சத்திரங்களின் ஒளியில் தெற்காக அவர்கள் நடந்தார்கள். யாழ் மத்திய கல்லூரி அண்டையிலிருந்த பேர்சிவல் பாதிரியாரின் தகர கதவை அவர்கள் தட்டியபோது அதிகாலை இரண்டுமணி. பாதிரியாரே எழுந்துவந்து கதவைத்திறந்தார். 

பாதிரியாருக்கு ஆறுமுகனின் காதல் கதை தெரியும். ஒரு பெண்ணோடு அவன் பரதேசியைப்போல  வந்ததைக்கண்ட அவர் எதுவும் பேசவில்லை. உள்ளே அழைத்துப்போய் தாகத்துக்கு அருந்த தண்ணீர் கொடுத்தார். சாப்பிட்டீர்களா என்று கேட்டார்.  பிறகு தானே அடுப்புமூட்டி சுடச்சுட தேநீர்  வைத்துக்கொடுத்தார். 

ஆறுமுகன் 

“சேர், நீங்களே இப்போது எனது ஒரே தஞ்சம்” 

“ஆறுமுகா நான் பார்த்துக்கொள்கிறேன். பயமேதுமில்லை. ஒரு தேசத்தையே நடந்து வந்த களையிலிருக்கிறீர்கள் நீங்கள். இப்போது உங்களுக்கு தேவை உறக்கம்” 

பாதிரியார் தன்வீட்டு விருந்தினர் அறையில் அவர்களைத் தூங்கவிட்டார். 

காலை ஒன்பது மணிக்கு தேநீரோடு பாதிரியார் கதவைத் தட்டினார். கனகிதான் முதலில் விழித்து ஆறுமுகனை எழுப்பினாள். மூன்று காததூரங்களை ஒரு  முதுவேனிற்காலத் தினத்தில்  நடந்த களையில் ஆறுமுகன் ஆழ்ந்த நித்திரையிலிருந்தான். 

பாதிரியார் மாற்றுடைகளைக்கொடுத்து அவர்களை நீராடி வரப்பணித்தார். காலை உணவாக பாதிரியாரின் சமையல்காரன் அவர்களுக்கு அப்பமும் பாலப்பமும் சம்பலும் பரிமாறினான். அப்போதுதான் பாதிரியார் முதல்நாள் இரவு ஆறுமுகனின் அண்ணன்கள் பாதிரியாரிடம் வந்து ஆறுமுகனை தேடிய கதையைப் போட்டுடைத்தார். 

அப்போது பாதிரியாரின் வேதாகம தமிழ்மொழிபெயர்ப்பு முக்கால்வாசி ஆறுமுகன், கனகியின்  செம்மையாக்கலில் முற்றாகிவிட்டது மீதி கால்வாசியை அவர்களின் செம்மையாக்கல் இல்லாமல் தனது மொழிபெயர்ப்பில் மட்டுமே வந்தால் தான் இலக்கியத்திருட்டு செய்தவன் என்று அம்பலப்படுவார் என்பது பாதிரியாருக்கு தெளிவாகத் தெரியும். ஆகவே துணிந்து காதலர்களுக்கு தஞ்சம் கொடுக்க முடிவு செய்துவிட்டார். 

காலை ஆகாரத்தின் பின் பாதிரியார் ஆறுமுகன் தம்பதியரை வெளியே தலைகாட்டாமல் இருக்கும்படி எச்சரித்துவிட்டு சமையல்காரனும் தன் உதவியாளனுமான வடநாட்டுத் தெலுங்கனுக்கு இரகசிய உத்தரவுகளை வழங்கிவிட்டு தனது குதிரைவண்டியில் வெளியே போனார். கனகி பயத்தில் மிரண்டபடியேயிருந்தாள். ஆறுமுகன் அவள் பயத்தைப்போக்க அவளது மனத்தை வேறு திசையில் செலுத்த வேதாகமத்தில் பாதிரியாரின் தமிழ் மொழிபெயர்ப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை எடுத்து அவளோடு சேர்ந்து செம்மைப்படுத்தத் தொடங்கினான். பாதிரியார் சொன்னபடியே அவரது நூலக அறைக்குப்போய் அடுக்கிவைக்கப்பட்டிருந்த வேதாகமப் புத்தகங்களில் ஓசியாவின் புத்தகம் ஒரு அதிகாரமாக இருந்தது. அதனை எடுத்து இருவரும் படித்து ஆங்கில மூல King James Version உடன் ஒப்பிட்டு  வரிக்கு வரி வசனத்துக்கு வரி செம்மைப்படுத்தி புதிய தாள் புத்தகமொன்றில் செம்மைப்படுத்தி எழுதினார்கள். ஆறுமுகன்தான் ஒவ்வொரு வசனத்தையும் கனகியோடு சம்பாசித்து இறுதிவரியை முடிவு செய்தபின் இருதடவை படித்துக்காட்டியபின் கனகி தலையாட்டி இறுதி உடன்பாடு எட்டிய வசனத்தை எழுதினான். இப்படி சில பக்கங்கள் எழுதி முடித்துக் கொண்டிருக்கும்போது மதியம் ஒருமணிபோல் பாதிரியார் திரும்பினார். பல காததூரம் சென்றுவந்தவர் போல வியர்வையோடும் களைப்போடும் உள்ளே வந்தார். உதவியாளன் கொடுத்த ஈரத்துணியால் முகத்தையும் தலையையும் துடைத்தபின் கையலம்பி சாப்பாட்டு மேசையில் வந்தமர்ந்தார். ஆறுமுகனையும் கனகியையும் மேசைக்கு அழைத்தார். உதவியாளன் வண்டியிலிருந்து சில துணிப்பொட்டலங்களை கொணர்ந்து உள்ளே வைத்தான். 

உதவியாளன் மூவருக்கும் உடன்பிழிந்த மாதுளம்பழச்சாறு பரிமாறினான். ஆறுமுகன் அதுவரை தாம் செம்மைப்படுத்திய ஓசியாவின் புத்தகங்களின் பக்கங்களை பாதிரியாரிடம் காண்பித்தான். பாதிரியார் சிறிது நேரமெடுத்து தன்மூல மொழிபெயர்ப்போடு ஒப்பிட்டு படித்தார். பரவசப்பட்டு தலையாட்டியபடியே படித்தார். கனகி வாங்கிலில் ஆறுமுகனை ஒட்டியபடியேயிருந்தாள். ஆங்கிலத்தில் தான் பாதிரியார் பேசினார். இடையிடையே தமிழில் செம்மையாக்கல் நன்றாக வந்திருக்கிறது என்பதைச்சொல்ல வசனங்களையும் சொற்களையும் தமிழில் சொன்னார். 

“கனகித்தங்கா, ஆறுமுகா நான் இன்று மெனைக்கெட்டு மானிப்பாய்க்குப் போயிருந்தேன். காதலர்கள் உங்களுக்காக ஒரு கூடை மாதுளம்பழங்கள் வாங்க. ஏன் தெரியுமா? ஆறுமுகா நீ  வாயைப் பொத்து. தங்கா நீயே பதில்சொல்” 

கனகி அக்கணத்தில் தன் பயம் மறந்து ஆறுமுகனின் தன் தோளில் தன் தலை  வைத்தபடி 

“ஆதியாகமத்தில் சொன்ன ஏழு பயிர்களில் ஒன்று மாதுளை”

“And"

“.......” 

பாதிரியார் உடனே எழுந்து தன் நூலக அறைக்குப்போய் ஆறுமுகனும் கனகியுமும் செம்மைப்படுத்தி எழுதிய சாலமனின் பாடல் புத்தகத்தை எடுத்து வந்து 

“தங்கா ஆறுமுகனை விட ஸ்மாட் நீ. ஆறுமுகன் அனைத்தும் பறைந்தான். இந்த வரிகள் உன்னுடையவைதானே?” 

என்றுவிட்டு அவ்வரிகளை தேடிப்படித்தார்.

“ உன் கவிடு மருதாணி பூசிய நறுமணம் வீசும் மாதுளம்பழச் சுவர்க்கத் தோட்டம்” 

“...........”

நேற்றிரவு நீங்கள் என் தகரப்படலையைத் தட்டும்போது நான் இவ்வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். தேவனுடைய செய்தியை பரப்புவதே என் ஊழியம். இலத்தீனிலும் ஆங்கிலத்திலும் வந்த சில வேதாகம மொழிபெயர்ப்புகளோடு உங்கள் தமிழ் மொழிபெயர்ப்பையும் ஒப்பிட்டுப் படித்தேன். மொழிகளின் இரும்புத் திரைகளுக்கப்பால்  தேவனுடைய உண்மையான செய்தி உங்கள் தமிழிலேயே இருந்தது. மெதடிஸ்த ஊழியனாக நான் திருமணஞ்செய்து கொள்ளலாம். இப்போதும் என் லண்டன் சீமைக் காதலி எனக்காகத் திருமணஞ் செய்யாதிருக்கிறாள். அவள் முகம் முழுக்க மாதுளம்பழ விதைகள் போல செந்தேமல். இன்றும் எனக்கு கடிதத்திற்கு மேல் கடிதமாக காதல் கடிதங்கள் எழுதிக்கொண்டிருக்கிறாள். தங்கா உன் மொழிபெயர்ப்பு அவளுடைய காதல் கடிதங்களை நினைவுபடுத்தியது. ஊருக்குப்போய் அவளைத்திருமணஞ்செய்து அவளோடு இங்கு வந்து தேவனுடையை செய்தியைப் பரப்ப முடிவுசெய்துவிட்டேன்.”

பாதிரியார் எழுந்துபோய் ஒரு துணிப்பொட்டலத்தை எடுத்துவந்தார். இரண்டு சோடி ஆண் பெண் பாதிரியார் உடைகள். உடனேயே ஒன்றை   அணிந்துவரப் பணித்தார். ஆறுமுகனும் கனகியும் தூயவெள்ளை ஆண் பெண் பாதிரி உடைகளில் வந்தபிறகே உதவியாளன் உணவு பரிமாறினான். முற்றிலும் அந்தக்கால யாழ்ப்பாண சைவ உணவு மேசையில் பரிமாறப்பட்டது. பாதிரியார் ஆறுமுகனுக்கு ஜோசப் என்றும் கனகிக்கு றீபெக்கா என்றும் புதிய நாமங்களை சூட்டினார்.  

விருந்தின் முடிவில் பாதிரியார் தன் இரகசிய திட்டத்தை சொல்லிவிட்டு காதலர்களை அறைக்குள் சென்று உறங்கப் பணித்தார். 

யாமம் ஒருமணிக்கு பாதிரியாரின் உதவியாளன் வெளியே போய் உளவுபார்த்து வந்தான். பிறகு அவன் முன்னே செல்ல  பாதிரியாரும் வெண் பாதிரி உடைகளிலிருந்த ஆறுமுகனும் கனகியும் குருநகர் இறங்குதுறைக்கு தமது பயணப்பொதிகளைக் காவிக்கொண்டு நடந்துபோனார்கள். அவ்வப்போது இரகசியமாக ஆங்கிலத்தில்தான் உரையாடிக்கொண்டார்கள். 

இறங்குதுறையில் பாதிரியார் ஏற்பாடு செய்து வைத்திருந்த நாலு வடநாட்டுப் படகோட்டிகள்  காத்துக்கொண்டிருந்தார்கள். பாதிரியார் தன் உதவியாளனுக்கு விடைகொடுத்தபின் பாய்க்கப்பல் நெடுந்தீவு நோக்கிப் பயணப்பட்டது. 

காற்று அவர்களின் பயணத்திற்கு ஆதரவாக வீசிக்கொண்டிருந்த  அருமையான கடல் இரவு அது. கனகி விண்மீன்களை எண்ணிக்கொண்டிருந்தாள். 

இரண்டு மணித்தியாலத்தில் நெடுந்தீவு மாவலித்துறையில் வத்தை கரைதட்டியது. பாதிரியாரும் ஆறுமுகனும் கனகியும் கடற்கரை வழியாக வடக்காக முக்கால் மணிநேரம் நடந்தார்கள். 

ஆறுமுகன் தன்னையும் கனகியையும் திருப்பெருந்துறை ஆவுடையார் கோயிலுக்கு செல்ல பாய்க்கப்பல் ஏற்பாடு செய்து தரும் உதவியையே பாதிரியாரிடம் கேட்டிருந்தான். வேதாகம மொழிபெயர்ப்பை முற்றாக மெய்ப்புப்பார்த்துக் கொடுக்க தனக்கும் கனகிக்கும் இன்னும் இரண்டே வாரங்கள் தான் தேவை என்றும் தனக்கு வேண்டப்பட்ட ஆவுடையார் கோயில் மடம் ஒன்றிலிருந்து இதனைச்செய்து தருவேன் என்றும் சொன்னான். பாதிரியாருடைய திட்டம் வேறொன்றாக இருந்தது. அப்போது மெதடிஸ்த சபை நெடுந்தீவில் ஒரு புதிய கல் தேவாலயம் ஒன்றை கட்டிக்கொண்டிருந்தது. இதற்கு பொறுப்பாக பாதிரியார் தான் இருந்தார். முற்றிலும் வைக்கோலால் மூடிக்கட்டப்பட்ட ஒரு குடிசை விடுதி  கட்டப்படும் தேவாலய வளவுக்குள்ளேயே இருந்தது. அங்கு கனகியும் ஆறுமுகனும் தேவனுடைய ஊழியர்களாக மாறுவேடத்திலிருந்து வேதாகமத்தை முடித்துத்தரலாம். கட்டட வேலைசெய்து கொண்டிருக்கும் மேஸ்திரிகளும் கூலிக்காரர்களும் வடநாட்டைச் சேர்ந்தவர்கள். மாலையில் வேலை முடிந்ததும் அவர்கள் சிறிது நடைத்தூரத்திலிருக்கும் அவர்களுடைய கொட்டில் வசிப்பிடத்திற்குப்  போய்விடுவார்கள். பாதிரியாருடைய குடிசையைப் பார்த்துக்கொள்ளும் தெலுங்கு கிழவரே பாதிரியார் இருவாரங்களுக்கொரு முறை தேவாலய கட்டட வேலையை மேற்பார்வை செய்ய வருகிறபோது பாதிரியாருக்கு உணவு சமைத்துக்கொடுப்பவர். அவர் இந்த இரு வாரங்களும் ஆறுமுகனுக்கும் கனகிக்கும் மூவேளை உணவு சமைத்துக்கொடுப்பார். உடைகளையும் சலவைசெய்து கொடுப்பார். குடிசையை விட்டு வெளியே எங்கு போனாலும் ஆறுமுகனும் கனகியும் வெண்ணிற பாதிரியார் பாதிரியாரம்மா உடைகளிலேயே இருக்கவேண்டும். ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்ளவேண்டும். நெடுந்தீவில் யாருக்குமே ஆறுமுகனையும் கனகியையும் தெரியாது. நெடுந்தீவில் கனகியைப்போல நீலக்கண்களும் ஒலிவ்  தோலுங்கொண்ட பெண்கள் புதினமுமல்ல. போர்த்துக்கேசியர் வம்சாவளி வந்த சில உள்ளூர்  நெடுந்தீவுப்பெண்களே அங்கிருக்கிறார்கள்.  மூன்றாம் வாரத்தொடக்கத்தில் பாதிரியார் காதலர் ஆவுடையார் கோயிலுக்கு போக ஏற்பாடு செய்வார். 

அதிகாலை  நாலு மணிபோல அவர்கள் அந்த கடற்கரை குடிசையை அடைந்தபோது வயதான ஒரு தெலுங்கு கிழவர் ஓடிவந்தார். பாதிரியார் அவரோடு தெலுங்கில் பேசினார். கிழவர் உடனேயே அடுப்பு மூட்டி இவர்களுக்கு தேநீர் தயாரித்து பரிமாறினார். ஒரு சீப்பு இரதை வாழையையும் தட்டில் வைத்தார். பாதிரியார் இரண்டு பழங்கள் சாப்பிட்டார். ஆறுமுகனும் கனகியும் ஒரே பழத்தை பகிர்ந்து கொண்டார்கள்.  

வைக்கோல் குடிசையில் இரண்டு அறைகள் இருந்தன. காதலர்கள் ஒரு அறையிலும் பாதிரியார் மற்ற அறையிலுமாக படுத்தார்கள். தெலுங்கு கிழவர்  சமையல் செய்யும் வெளியே தள்ளியிருந்த சமயலறைக் குடிசையில் படுத்தார். 

அடுத்தநாள் திங்கட்கிழமை பத்துமணிபோல் தான் பாதிரியாரும் காதலர்களும் நித்திரையிலிருந்து மீண்டார்கள். யாழ் மத்திய கல்லூரி தலமை ஆசிரியர் பாதிரியாரும் ஆசிரியன் ஆறுமுகனும் அன்று பள்ளிக்கு போகவில்லை.  மூவரும் கிணற்றில் நீராடியபின் வளவிலிருந்த ஓர் அசுரப்பெரிய காட்டுப்பூவர மரத்தின் கீழிருந்த மேசையிலிருந்து காலை ஆகாரம் உண்டார்கள். பாதிரியாருக்கு புட்டும் சங்குவான் நண்டுப் பிரட்டலும்..கனகிக்கும் ஆறுமுகனுக்கும் பிட்டும் பலாப்பழமும். 

கனகிக்கு இது கனவா நனவா என்பது தெரியவேயில்லை. மாவிட்டபுரம், அளவெட்டி, உடுவில், வட்டுக்கோட்டை, கண்ணார் பண்ணை, நல்லூர் ஆகிய ஆறு  ஊர்களை விட அவளுக்கு யாழ்ப்பாணத்தில்  வேறு ஊர்கள் தெரியாது. வேறு ஊர்களுக்கு ஒரு தடவையும் அவள் பயணித்ததில்லை. வாழ்வில் முதல்முறையாக அவள் தான் அறிந்த ஊர்களை விட்டு பயணித்தது ஆறுமுகனோடு ஓடியபோதுதான். முதுவேனிற்கால வெய்யிலில் ஒரேயொரு காததூரம் ஓடும் அரிய யாழ்பாண குறுநதி வழுக்கியின் கரையில் காட்டில் நடந்த போதுதான். அவ்விரவில் பிறகு நட்சத்திரங்களுக்கு கீழே கடற்கரையில் தன் காதலனோடு நடந்தபோதுதான். அவள் முதல் முறை கடல் கடந்து பயணித்தது யாமத்தில் பாதிரியாரோடும் ஆறுமுகனோடும் நெடுந்தீவுக்கு வந்ததுதான்.  தேவதாசியான அவளுக்கு கனவுகள் புதியவையல்ல. ஆயிரம் கனவுகள். கண்டிருப்பாள். அதில் ஒரு  நூறு இன்பக்கனவுகளை  அவளால் இப்போதும் நினைவு மீட்டமுடிகிறது. கனகி தான் ஒரு கனவு தேவதை என்று நம்புமளவுக்கு கனவுகள் அவளுக்கு வரும். சாதாரணமான பெண்களுக்கு கனவு வருகிறபோது அது கனவா நனவா என்பது தெரியாது. கனகிக்கு  இன்பக்கனவுகள் வருகிறபோது அது கனவு என்று தெரிந்துகொண்டே அனுபவிக்கும் அசாத்திய சக்தி இருந்தது. கனகியின் இன்ப இரவுக்கனவுகளை மனிதரின் பகல் கனவுபோல கட்டுப்படுத்தும் சக்தியும் அவளுக்கிருந்தது. 

கடைசியாக கனகி கண்ட துன்பக்கனவு அவளின் செந்நாய் தொலைந்துபோன இரவில்தான். அவளுடைய கனவொன்றில் முதலும் கடைசியுமாக செந்நாய் வந்ததும் அப்போதுதான். 

ஓர் இளவேனிற்கால நிலவு நாளில் செந்நாய் கனகியோடு பேசமாட்டேன். கண்ணைக் கட்டிக் கோபம், பாம்பு வந்து கொத்தும், கண்ணாடி வந்து வெட்டும், செத்தாலும் கோபம் என்று சாதிக்கிறது. கனகி செந்நாயை தன் இடுப்பில் வைத்து என்னோடு பேசு செந்நாயே என்று கெஞ்சுகிறாள். 

“ உனக்கென்ன நாச்சியாரே ஆறுமுகன் என்றொரு அருமையான காதலனை நீயடைந்துவிட்டாய். இனி என்னை நீ மறந்து விடுவாய். எனக்கும் ஒரு காதலி இருக்கிறாள். எனக்கும் திருமண வயசாகிவிட்டது என்பது உனக்குத் தெரியாதா என்கிறது செந்நாய். உன் காதலியைக் காட்டு. நானே திருமணஞ்செய்து வைக்கிறேன் என்கிறாள் கனகி. செந்நாய் அவளை அந்நிலவில் ஓர் ஆற்றங்கரையோரம் கூட்டிச்செல்கிறது..கனகிக்கு அது வைகையா, பொன்னியா வெள்ளாறா என்று தெரியவில்லை. ஒரு காத தூர நடைமுடிவில் ஒரு ஆற்றங்கரை மாளிகைகையை அவர்கள் அடைகிறார்கள். செந்நாய் சொல்கிறது. 

“ நாச்சியாரே இது நாய்களுக்கிடையிலான போராட்டம். மாமன், மச்சான், தாய், தேப்பன், சித்தப்பன், சித்தி, என்று ஒரு பத்து என் காதலியின் சொந்தக்கார நாய்களோடு போராடப்போகிறேன். மனித உறவுகள் வேறு. நாய்களின் உறவுகள் வேறு.  நான் வென்றால் பூனை தன் குட்டியை பின் கழுத்தில் கௌவிக்கொண்டு வருவதுபோல என் காதலியைக் கௌவி வருவேன். நாச்சியாரே நாய்களின் இந்தப் போரில் நீ தலையிடாதே. நான் தோற்றால் உன்னுடைய மகனாகப் பிறப்பேன்”

கனவில் செந்நாய் “பாதிக்கனவில் மறையும் பறவைப்போல” திரும்பவில்லை. கனகியின்  துன்பக்கனவு அவள்  கனவையும் மறந்துவிட்டாள்.

இப்போது நெடுந்தீவு காட்டுப்பூவரசின் கீழ் கனகியும் அவள் காதலன் ஆறுமுகனும் பாதிரியாரும்  இருக்கிறார்கள். கொடிய முதுவேனில் வெக்கையை கடற்காற்றும் காட்டுப் பூவரசும் கொல்கின்றன. கடல் மணக்கின்றது. அலையோசை கேட்கிறது. ஆனால் இது கனவா நனவா? இப்படியொரு பிரமையில் இருக்கிறாள் கனகி. 

நல்லதண்ணிக் குளத்தில் ஆறுமுகனை சந்தித்த கணத்திலிருந்து இப்போது காட்டுப்பூவரசின் கீழ் புட்டும் பலாப்பழமும் சாப்பிடும் கணம் வரையான தருணங்கள் கனவா நனவா என்பது கனகிக்கு தெளியவேயில்லை. 

கனகியின் பிரமையை பாதிரியார் உணர்ந்தார். நிலமைக் கட்டுப்படுத்த சில மஞ்சள் பூவரசப் பூக்களை கொய்து பூமாலை கட்டினார். ஒரு பூமாலையை ஆறுமுகனிடம் கொடுத்து றீபெக்கா என்ற நாமம் சூடிய கனகிப்பாதிரியம்மாவுக்கு மாலை சூடக்கொடுத்தார். வெண்ணிற ஆடையில் ஆறுமுகன் போட்ட பூவரசம்  பூமாலையில் நீலக்கண்ணி கனகி தேவதையைப்போல ஜொலித்தாள்.  பாதிரியார் ஒரு குழந்தையாகி ஒரு பூவரசம் இலையை சுருட்டி நாதஸ்வரம் வாசித்தார். அந்த நாதஸ்வர இசையில் கனகி கொஞ்சம் தேறினாள். 

பிறகு கனகியின் கைகளை ஆறுமுகனை பிடிக்கச்சொல்லிவிட்டு காதலர்கள் நீங்கள் மொழிபெயர்த்த ஒரு சாலமனின் பாடல் என்றுவிட்டு தன் கண்களை மூடி அந்தப் பாடலை அவர்களுக்கும் கேட்கக்கூடியவாறு ஜெபித்தார்.

“என்னை உமதருகில் வைத்துக்கொள்ளும்

உம் இதயத்தின்மேல் ஒரு முத்திரையைப்போல் கையில் அணிந்துகொள்ளும்

நேசமானது மரணத்தைப்போன்று வலிமையானது.

நேச ஆசையானது(Jealousy)

கல்லறையைப்போன்று வலிமையானது

அதன் பொறிகள் சுவாலை ஆகின்றன

பின் அது பெரிய நெருப்பாக வளர்கின்றது

ஒரு வெள்ளத்தால் காதலை அழிக்க முடியாது

ஒரு நதியால்  அன்பை இழுத்துச் செல்லமுடியாது”

 - உன்னதப் பாட்டு 8:6-7

    வேதாகமம்.

கனகியை எப்படி சாந்தப்படுத்துவது என்பது ஆறுமுகனுக்கு தெரியும். பாதிரியாருடைய வேதாகம மொழிபெயர்ப்புச் செம்மையாக்கல் தான் காதலர்கள் ஓடிப்போவதை தாமதப்படுத்திக் கொண்டிருந்தது. வேதாகமத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் செம்மைப்படுத்தி ஆறுமுகனோடு சேர்ந்து  முடிக்கும்போது கனகி தன் வாழ்வின் ஒரு கண்டம் முடிந்ததாக ஆறுதலடைவாள். ஆறுமுகன் இறுதி அத்தியாயங்களிலொன்றை இப்போது பாதிரியாரோடு சேர்ந்தே செம்மைப்படுத்துவோமே என்றான். பாதிரியார் குடிசைக்குள் போய் தன் வேதாகம மொழிபெயர்ப்பு பிரதிகளை எடுத்துவந்தார். கடற்காற்று வீச காட்டுப்பூவரசின் கீழிருந்து மூவரும் உரையாடி ஒரு அத்தியாயத்தை செம்மைப்படுத்தினார்கள். கனகியியின் முகத்தில் கல்யாணக்களை வந்தது. பாதிரியாரும் ஆறுமுகனும் அதையிட்டு சந்தோசப்பட்டார்கள். 

தெலுங்கு கிழவர் அவர்களுக்கு தேநீர் பரிமாறினார். பாதிரியாருடைய சுருட்டுப் பெட்டியையும் கிழவர் பாதிரியாரிடம் கொடுத்தார். பாதிரியார் ஒரு சுருட்டை எடுத்து ஆறுமுகனிடம் நீட்டினார். ஆறுமுகன் கனகியைப்பார்த்தான். கனகி

“ வாங்கிக்கொள்ளுங்கள் சுவாமி. உங்கள் குருச்சுவாமி தருகிறார்” என்றாள். 

ஆறுமுகன் அதனை வாங்கி தன் வாயில் வைத்ததும் பாதிரியார் அதனைப் பற்றவைத்து விட்டு தனதையும் பற்றவைத்தார். முதல் புகை ஆறுமுகனை சாந்தப்படுத்தியது. பயங்களைப்போக்கி பரவசமாக்கியது.

“ கனகித்தங்கா, ஆறுமுகா, நீங்கள் இருவருமில்லாவிட்டால் என் வேதாகமம் தமிழில் வந்திருக்காது. வந்திருந்தாலும் யாரும் கண்டுகொண்டிருக்க மாட்டார்கள். மிக்க நன்றி. தம்பதிகளே. நீங்கள் வாழ என் உயிரைக்கொடுத்தேனும்  அனைத்து உதவியும் செய்வேன்” 

என்று பாதிரியார் சொன்னபோது கனகியும் ஆறுமுகனும் ஒருவரை ஒருவர் பார்த்து பரவசப்பட்டார்கள். 

இரண்டாவது புகையிழுப்பில் ஆறுமுகன் இன்னும் இருவாரங்களில் தானும் கனகியும் திருப்பெருந்துறையில் நடப்பதாக பகல் கனவுகண்டான். அவளுக்கு மேலும் பல காஞ்சிபுரப் பட்டுப்புடவைகள் வாங்கிக்கொடுக்கவேண்டும். ஆனால் தன்னோடு ஓடிவரும்போது கட்டிவந்த இளநாவல் பட்டுப்புடவையில் தான் அதே நகைகளோடு கனகி தன்னோடு திருப்பெருந்துறையில் நடக்கவேண்டும். அவளுடைய புடவை சரசரப்பையும்  காற்சிலம்பு திருப்பெருந்துறையில் ஒலிப்பதையும் ஆறுமுகன் அப்போது கேட்டான். 

புகைத்து முடிந்து தேநீர் அருந்தி மேலும் ஒரு அத்தியாயத்தை மூவரும் செம்மையாக்கியபின் கிழவர் மதிய உணவு பரிமாறினார். அப்போது நெடுந்தீவில் பின்னேரம் நாலுமணி. 

சாப்பிட்டபின் ஒரு முவரும் குடிசைக்குள் போய்த்தூங்கப்போனார்கள். ஆறுமுகனுக்கும் பாதிரியாருக்கும் நல்ல தூக்கம் வந்தது. ஆறுமுகனின் அருகில் படுத்திருந்த கனகிக்கு தூக்கம் வரவேயில்லை. 

பாதிரியார் இன்றிரவே யாழ்ப்பாணத்திற்கு திரும்பவேண்டும். செவ்வாய்க்கிழமை தன் பாடசாலைக்கு போகவேண்டும்.

ஐந்தரை மணிபோல் பாதிரியார் எழும்பி முகம் கழுவி வந்த ஒலிகள் கனகிக்கு கேட்டது. அவள் ஆறுமுகனை எழுப்பினாள். காதலர்களும் முகம் கழுவி வந்தார்கள். காட்டுப் பூவரசின் கீழ் மூவருக்கும் தேநீரும் ஆதியாகமத்தில் சொன்ன ஏழு பயிர்களில் ஒன்றான  அத்திப்பழம் போட்டு சுட்ட இனிப்பான குரக்கன் ரொட்டியும் பரிமாறினார் கிழவர். 

பாதிரியார் தம்பதிகளை மறுபடியும் எச்சரித்தார். 

“எக்காரணம் கொண்டும் குடிசையை விட்டு பாதிரி உடைகள் இல்லாமல் வெளியே வராதீர்கள். விடிவதற்கு முதலே இருளிலேயே காலைக்கடன் முடித்து குளித்துவிடுங்கள். மாவலித்துறைக்கு ஒருபோதும் போகாதீர்கள். அந்தி சாய்ந்தபின் நடைத்தூரத்திலிருக்கிற கடற்கரையில் மட்டும் நீங்கள் பாதிரி உடையில் காலாற ஒருமணிநேரம் நடக்கலாம். குடிசைக்கு வெளியே வந்ததும் எப்போதும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள். நீங்கள் கடற்கரையில் நடக்கும் போது எப்போதும் இந்த தெலுங்கு கிழவன் கூடவே வருவான். அவனுக்கு கொஞ்சம் ஆங்கிலம் தெரியும். உள்ளூர் மீனவர்களோ வேறு யாரோ உங்களோடு பேச்சுக்கொடுத்தால் உங்களுக்கு தமிழே தெரியாது என்று நடியுங்கள். கிழவர் உங்கள் மொழிபெயர்ப்பாளராக நடிப்பார். கிழவர் என் நம்பிக்கைக்குரியவர். அவருக்கு உங்கள் கதை தெரியும். அவர் முன்னிலையில் இரகசியமாக நீங்கள் தமிழில் கதைக்கலாம். அவருக்கு தெலுங்கை விட தமிழ் அத்துப்படி. ஆனால் யாழ்ப்பாணத் தமிழை முழுமையாக புரிவதில் அவருக்கு சிரமமிருக்கிறது.

தேவாலய கட்டுமானப்பணிகளில் ஈடுபடும் மேஸ்திரி, கூலியாட்களுடன் எந்தக்கதையும் வைத்துக்கொள்ளாதீர்கள். எப்போதாவது ஒரு கூலியாள் உங்கள் முன் முழங்காலிலிருந்து தனக்காக ஜெபிக்கும்படி உங்களைக் கேட்பான். அவங்கள் எல்லோருமே தெலுங்கர்கள். தமிழ் கொஞ்சம் புரியக்கூடியவங்கள். அப்போதும் என் சமையல் கிழவனை கூப்பிட்டுத்தான் ஆங்கிலத்தில் உரையாடுங்கள். அவனுக்கு தெரிந்த பாதி ஆங்கிலத்தை வைத்து நீங்கள் சொல்லாததையும் விட புதினமான மொழிபெயர்ப்பை கிழவர் வழங்குவார். அதையிட்டு சிரித்துவிடாதீர்கள்.”

ஏழு மணிக்கு இருட்டில் பாதிரியார் காதலர்களுக்கு விடைகொடுத்தார். கனகிக்கு அழுகை வந்தது. பாதிரியார் கனகியின் இருகைகளையும் தன் கண்களில் ஒற்றியபடி நின்றபடியே ஜெபித்தார். ஆறுமுகனுக்கு கைகொடுத்தார். அடுத்த வெள்ளிக்கிழமை முன்னிரவில் வருவேன் என்றார். பிறகு தெலுங்கு கிழவனோடு பாதிரியார் மாவலித்துறை நோக்கி நடக்கத்தொடங்கினார்.

                                 5

செட்டியார் தன் குதிரையைச் சவுக்கிய கணத்தில் ஆறுமுகன் குதிரை வண்டியிலிருந்து இறங்கிய கணத்தில் இருந்து இரு நிமிடத்தில் செட்டியாரின் குதிரை வண்டி கண்ணை கைத்தீஸ்வரன் கோயிலண்டையிலிருக்கும் அவரின் மாளிகையை வந்தடைந்து விட்டது. எவ்வளவு முயன்றும் செட்டியாரால் தன் குதிரையின் வேகத்தை நிறுத்த முடியவில்லை. செட்டியாரின் கிழட்டுக் குதிரையின் பெயர் செங்கரப்பிள்ளை. ஆறுமுகனுக்கும் செங்கரப்பிள்ளைக்கும் ஒரே வயதுதான். 24. இருபது வருடங்களாக செட்டியார் வைத்திருந்த குதிரை. ஒரு தடவைகூட சவுக்கால் இவ்வளவு கடுமையாக அடித்ததில்லை. செட்டியாரின் குதிரைக்காரனையும் அடிக்க அனுமதித்ததில்லை. செங்கரப்பிள்ளைக்கு தான் அடித்தில் கூட கோபமில்லை என்பது செட்டியாருக்கு தெரியும். ஆறுமுகனை கடுந்தொனியில் வைததுதான் குதிரைக்கு கோபம். 

மூச்சிரைக்க செட்டியார் வீட்டில் வந்திறங்கும் போது குதிரைக்காரன் வாயிலில் காத்திருந்தான். ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்பதை அறிந்தவன் செட்டியார் வண்டியைவிட்டு இறங்க உதவினான். பெருங்குற்ற உணர்ச்சியோடு வண்டியை விட்டிறங்கினார் செட்டியார். 

செட்டியாரம்மா ஒரு செம்பு மோரோடு வீட்டு வாசலில் நின்றார். செட்டியார் புறங்கையால் உள்ளே போ என்று சைகை செய்துவிட்டு கொல்லைப்புறத்திலிருந்த தன் வைக்கோல் குடிசை அலுவலகத்திற்கு விறுவிறுவென நடந்துபோனார். அவரது உதவியாளனும் அதே வேகத்தில் பின்தொடர்ந்தான். குடிசையில் தன் சால்வையை உதவியாளனிடம்

 “ வேசைமோன் ஆறுமுகன்”  

என்றவாறு கோபத்தில் உடலும் குரலும் நடுங்க வீசிவிட்டு அவன் தந்த ஈரச்சால்வையால் தன் மொட்டை மண்டையையும் முகத்தையும் துடைத்துவிட்டு  அவனிடமெறிந்தார். 

உதவியாளனிடம் கண்ணாடி கிளாஸ் என்ற அர்த்தம்பட்ட சைகையைக் காட்டிவிட்டு கட்டிலில் போய் அமர்ந்தார். உதவியாளன் கொணர்ந்த ஸ்கொச் விஸ்கியை ஒரு வாய் மட்டுமே பருகினார். சினத்தில் அந்த விஸ்கி மிகக் கசப்பாக இருந்தது. அதற்கு மேல் அவரால் பருகமுடியவில்லை. ஆறுமுகன் அவருக்கு செய்த அவமானமும் துரோகமும் 85 வயது ஜீவிய வந்தரான செட்டியாரைக் கொன்றுகொண்டிருந்தது. தன் வர்த்தக சாம்ராச்சியத்தின் அழிவு அவர் மனக்கண் முன் வந்தது. தான் சாகப்போகிறேன் என்ற பயம் வந்தது. கட்டிலிலேயே விழுந்து படுத்தார். களைப்பிலும் சினத்திலிருந்தும் மீள தூங்க விரும்பினார். தூக்கம் வந்தது. அது வந்த வேகத்திலேயே விழிப்பும் வந்து கொண்டிருந்தது. 

ஆறுமுகனுடைய தூரோகக் கிளர்ச்சியை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என்னுடைய பெறாமகனாக அவனை நான் வளர்த்தேனே. என்ன குறைவைத்தேன் அவனுக்கு? என்னுடைய மகன்கள் என்னைப்போன்ற கெட்டிக்காரர்கள் இல்லையே என்பதால் அவனிடம் என் மகன்களை விடப் பாசம் கொண்டாடினேனே. கடைசியில் ஒரு தேவடியாச் சிறுக்கி எனது வளர்ப்பு மகனையே எனக்கெதிராகத் தூண்டிவிட்டாளே

செட்டியாரம்மா கேட்டு செட்டியார்  கனகியை ஆறுமுகனுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்காவிட்டால் இப்போது அவர் திட்டமிட்டபடி காசிப் புனித யாத்திரையில் ஆறுமுகனோடிருந்திருப்பார். ஆறுமுகனுக்காக ஒரு வருடம் தன் புனித யாத்திரையை செட்டியார் ஒரு வருடம் பின்போட்டிருந்தார். தன் யாழ்பாண வர்த்தக சாம்ராஜ்யத்தை தன் இரு மகன்களிடமும் ஆறுமுகனின் மேற்பார்வையில்  கொடுத்துவிட்டு காசியில் தன் 85 வயதில் சமாதி அடையவேண்டும் என்பதே செட்டியாரின் இறுதி ஆசை. இப்போது யாழ்ப்பாணத்தில் ஒரு கோழையைப்போல இவ்விரவிலேயே தூக்கத்தில் செத்துவிடுவேனோ என்றுதான் செட்டியார் பயந்தார்  

ஆறுமுகன் உண்மையிலேயே யார்? இவன் ஆங்கிலத் துலுக்கரின் ஒற்றனா? இவன் ஒரு யாழ்ப்பாண சைவ வேளாளனாம். யாழ்ப்பாண வெள்ளாளர்கள் அசல் சோழ சேர பாண்டி நாட்டு வெள்ளாளரா? டச்சுக்காலத்தில் பொன்னும் பொருளுமிருந்த கள்ளர் மறவர் அகம்படியார் முதலிய எல்லோரும் வெள்ளாளர் எனப்பதிந்து வந்தவர்களே. இந்த வேசைச் சாதியில் பிறந்து வந்த வேசைமோன்  ஆறுமுகன். இவனையே கொன்று விடாவிட்டால் என் வர்த்தக சாம்ராஜ்யத்தின் பலவீனத்தை  ஆங்கிலத் துலுக்கர் கண்டுவிடுவார்களே. ஆறுமுகனையே கொல்லாவிட்டால் நான் வீழ்ந்துவிடுவேனே என்று கூட கோபத்தில் யோசித்தார். 

ஆனால் செட்டியாருக்கு இந்த ஆங்கிலேயர் ஆட்சியில் பிரித்தானியப் பிரபுக்கள் சபையும் அறிந்த ஆறுமுகனை கொல்லமுடியாது என்பது தெரியும்.

ஆறுமுகன் எங்கு ஓடுவான்? அவன் ஓடமுதல் கனகியை இன்றிரவே கொன்றுவிட்டால் ஆறுமுகன் எங்கு போவான். கடைசியில் என்னிடம் திரும்பிவரத்தானே வேண்டும். நான் தான் ஆள்வைத்து கனகியைக்கொன்றேன் என்பது தெரிந்து அவன் ஆங்கிலத்துலுக்கரோடும் பாதிரியாரோடும் நெருக்கமானாலும் பரவாயில்லை. ஆறுமுகனுக்கு என்னை எதிர்க்க சக்தி எங்கிருந்து வருகிறது. அந்தத் தேவடியாச் சிறுக்கி மீதான காதலால்தானே. அவளை ஒழித்துவிட்டால் ஆறுமுகன் மனமுடைந்து பழையபடி மனந்தேறி நம் சனாதன தர்ம நியாயங்களை நம்பித்தானே ஆகவேண்டும். அப்போது பேர்சிவல் பாதிரிக்கும் ஆங்கிலத்துலுக்கருக்கும் யாழ்ப்பாணத்தில் என் பலம் என்னவென்று தெரியவருமில்லையா?

இப்படி யோசித்துக்கொண்டு செட்டியார் புரண்டு புரண்டு படுத்தார். 

செட்டியார் வீடு கலவரப்பட்ட நாள் அது. செட்டியம்மாவும் பட்டினி கிடந்துகொண்டிருந்தாள். செட்டியாரின் உதவியாளன் செட்டியாரின் வைக்ககோல் குடிசைக்கும் மாளிகைக்குமிடையில் ஓடிக்கொண்டிருந்தான். 

கனகி ஆறுமுகனோடு ஓடிப்போன அந்த கோயில்  திருமணத்துக்கு சுப்பையனும் போயிருந்தான். கூட்டத்தில் மறைந்துகொண்டு கனகியையை அவதானித்தபடியே இருந்தான். நல்லதண்ணீர்க் குளத்தில் தண்ணியள்ளப் போன கனகி மீண்டுவரவில்லை. காணாமல் போய்விட்டாள் என்பதையறிந்து அறிவித்தவன் அவனே. ஊரே திரண்டு கனகியைத் தேடத்தொடங்கியது. அப்போது பொறாமைத் தீயில் வதங்கிக்கொண்டிருந்த சுப்பையனுக்கு ஞானம் வந்தது. கனகி இனி எக்காலத்திலும் அவனுக்கு உரிமையாக மாட்டாள். செட்டியாரின் அதிகாரத்தின் சூனியத்தை அக்கணத்தில் உணர்ந்த சுப்பையன் தன் வாழ்வின் இலட்சியமாக கனகியைக் கொல்லச் சபதமெடுத்தான். 

சுப்பையனுக்கு மதுத் தாகமெடுத்தது. அவன் ஓடத் தொடங்கினான். ஆனைக்கோட்டை கள்ளுக் கொட்டிலுக்கு ஓடினான். இரண்டு முட்டி கள்ளருந்திக் கொண்டு கனகியின் கொலையைத் திட்டமிட்டான். 

பிந்நேரம் ஆறுமணிக்கு செட்டியாரின் தகரப்படலையை நிறைவெறியில் சுப்பையன் தட்டியபோது செட்டியாரின் உதவியாளன் உசாரானான். அவன் செட்டியாரம்மா சொன்னதையும் அசட்டை செய்து செட்டியாரின்  வைக்கோல் குடிசைக்குச்சென்று அறிவித்தான். மிகக் குறுகிய கெட்ட கனவொன்றின் உபாதையிலிருந்து விழித்த செட்டியார் 

“அவனை உடனே உள்ளே அனுப்பு”  என்றார்.

செட்டியாரைப் பார்த்ததும் சுப்பையனுக்கு வெறி இறங்கினமாதிரி இருந்தது. கனகியைக் காணவில்லை. ஓடிப்போய்விட்டாள் போலுள்ளது. இனி எனக்கு ஒருபோதும் அவள் கிடைக்கப்போவதில்லை. என்று அழத்தொடங்கினான். 

செட்டியாருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆறுமுகன் தன் வண்டியிலிருந்து குதித்த கணத்திலிருந்தே பெருமாள் கடவை கோயிலுக்கு நடந்தே போய் அவளைக் கூட்டிக்கொண்டு ஓடிப்போன புதிரை அவிழ்ப்பதில் அவருக்கு சிரமமிருக்கவில்லை. ஆறுமுகன் இப்படி விரைவாக காரியஞ்சாதிப்பான் என்பது அவர் எதிர்பார்க்காதது. 

“கனகியைக் கொல்லவேண்டும் என்ற வெறி எனக்குவருகிறது. வடநாட்டில் எங்கு ஓடிப்போனாலும் அவளைக்கண்டுபிடித்து கொல்லாமல் விடமாட்டேன்” 

என்று சுப்பையன் சொல்லிக்கொண்டிருக்கும் போது செட்டியாரின் உதவியாளன் வந்து ஆறுமுகனின் இரண்டு அண்ணன்மாரும் செட்டியாரைப் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று அறிவித்தான். 

செட்டியார் உசாரானார். உற்சாகமானார். அவர்களை தன் மாளிகையின் கூடத்தில் அமரவைக்குமாறு சொன்னார். 

பிறகு சுப்பையனிடம்

 “நீ இங்கே வந்திருப்பது அவர்களுக்கு தெரியக்கூடாது. மூச்சுவிடாமல் இங்கேயே இரு. கொஞ்சநேரத்தில் அவர்களைப் பேசி அனுப்பிவிட்டு வருகிறேன்” என்றார். 

செட்டியார் மாளிகைக்குள் போனபோது ஆறுமுகனின் அண்ணன்கள் கட்டிலிலிருந்து எழுந்து தலை குனிந்தபடி நின்றார்கள். அவர்கள் என்ன செய்தி கொண்டு வந்திருப்பார்கள் என்பதுதான் செட்டியாருக்கு ஏற்கெனவே தெரியுமே. 

அவர்களை இருக்குமாறு பணித்துவிட்டு  எதிர்க்கட்டிலிலிருந்து செட்டியாரம்மாவிடம் மூன்று செம்பு மோர் கொண்டுவா என்றார். 

ஆறுமுகனின் மூத்த அண்ணன் எழுந்து சென்று செட்டியாரின் காதில் இரகசியமாக

‘செட்டியாரய்யா மிக்க அவமானமான செய்தி. ஆறுமுகன் கனகியோடு ஓடிப்போய் விட்டான் என்று கேள்விப்பட்டோம். கனகியின் மாமன் வீட்டுக்கு வந்து நம் தந்தையிடம் இந்த செய்தியைச் சொல்லி அழுதான். அவன் உங்களைச் சந்திக்க பயப்படுகிறான். நாங்கள் இப்போது என்ன செய்யவேண்டும் என்பதை நீங்கள்தான் எங்களுக்கு அருளவேண்டும். “

செட்டியாரம்பா தட்டில் மூன்று செம்புகளை கொண்டு வரும்போது ரகசியம் பறையும் இந்தக்காட்சியைப் பார்த்தாள். செட்டியாரைவிட மிக விவேகமான செட்டியாரின் தையல் நாயகி அவள். ஆறுமுகன் கனகியோடு ஓடிப்போய்விட்டான் என்பதுதான் இரகசியம் என்பதை அவள் தன் ஞானக் கண்களால் அறிந்தாள். ஆறுமுகனுடைய துரோகம் பேரிடிபோல் அவள் தலையில் விழுந்தது. ஆறுமுகா என்று கத்திக்கொண்டு மயங்கிவிழுந்தாள். மூன்று செம்பு மோர்கள் கங்கை நதிபோல செட்டியாரின் மாளிகை நிலத்தில் ஓடியது. 

செட்டியார் செய்வது அறியாது திகைத்தார். ஆறுமுகனின் முத்த அண்ணன்தான் சமயலறைக்கு ஓடிப்போய் ஒரு செம்பு தண்ணீர் கொணர்ந்து மூதாட்டி செட்டியாரம்மாவின் முகத்தில் தெளித்து அவளை விழிப்பித்தான். தட்டிலிருந்து செம்புகள் விழுந்த சத்தம் கேட்டு உதவியாளன் ஓடிவந்தான். அண்ணன்களும் உதவியாளனும் சேர்ந்து செட்டியாரம்மாவை சயன அறைக்கு தூக்கிச்சென்று கட்டிலில் படுக்க வைத்தார்கள். 

இவ்வளவு நடக்கும்போதும் எழும்ப சக்தியின்றி திக்பிரமை பிடித்தவர் போல செட்டியார் கட்டிலிலேயே உட்கார்ந்திருந்தார். ஆறுமுகனின் துரோகத்தை அவர் இக்கணத்தில் மறந்துவிட்டார். ஆறுமுகனை தன் சொந்த மக்களைவிட செட்டியாரம்மா நேசித்ததுதான் செட்டியாருக்கு வலித்தது. 

பிறகு ஆறுமுகனின் அண்ணன்களிடம் 

“ஆறுமுகனை கனகியிடமிருந்து பிரித்து மீட்டு உங்களிடம் சேர்க்க முயல்கிறேன். இந்த முயற்சியில் நான் வெல்வேனோ தோற்பேனோ தெரியாது. நீங்கள் வெள்ளாளர்கள். தைரியமாக இருங்கள். உங்கள் தந்தையிடமும் தைரியமாக இருக்கச் சொல்லுங்கள். இப்போதே நீங்கள் பேர்சிவல் பாதிரியாரிடம் போய் விசாரியுங்கள். அவர் மட்டுமே இப்போது ஆறுமுகனுக்கும் அவன்  தேவடியாச் சிறுக்கிக்கும் அடைக்கலம் கொடுக்கக்கூடியவர். ஆறுமுகன் கனகியோடு இப்போது எங்கிருக்கிறான் என்பதை அறிந்தால் எனக்கு உடனே அறிவிக்கவேண்டும். ஆறுமுகனுக்கு நான் அருளிய குதிரை வண்டியையும் வண்டிக்காரனையும் இப்போது இந்த முயற்சிக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்” 

அண்ணன்களை தன் வீட்டு வாசல்வரை வந்து வழியனுப்பிவிட்டு செட்டியார் சயன அறைக்குப்போய் தன் தையல் நாயகியைப் பார்த்தார். அவள் ஆறுமுகா ஆறுமுகா என்று  பிதற்றிக்கொண்டிருந்தாள். 

“என் தையல் நாயகியே நீ தளரக்கூடாது. நான் யார் நீ யார். நாங்கள் செட்டியார்கள். எங்கள் பெயரில் கடவுளர்களுக்கு கோயில் அமைத்தவர்கள். நாங்கள் கடவுளர்கள். இந்த ஆறுமுகனும் அவன் குடும்பமும் அற்ப வெள்ளாளர்கள். அற்ப மனிதர்கள். கைத்தீஸ்வரப்பெருமாள் மீது சத்தியம். நான் ஆறுமுகனை மீட்டு உன்னிடம் கொண்டுவருவேன்”

“உண்மையாகவா சுவாமி” என்று அக்கணத்திலேயே கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள் செட்டியாரம்மா.

“ எனக்குப் பசிக்கிறது” என்றார் செட்டியார். 

எங்கிருந்து சக்தி செட்டியாரம்மாவுக்கு வந்ததோ தெரியாது. அவள் எழுந்து மதியம் சமைத்த விருந்தை அடுப்பில் போட்டு சூடாக்கினாள். ஒரு இலை போதும் என்றார் செட்டியார். கைத்தீஸ்வரனுக்கு தையல் நாயகி ஊட்டிவிட்டாள். தையல் நாயகிக்கு கைத்தீஸ்வரன் ஊட்டிவிட்டான். ஒரு எண்பத்தைந்து வயது செட்டியாரும் எழுபத்தைந்து வயது செட்டியாரம்மாவும் சோறு தீத்தும் சடங்கை பார்த்து செட்டியாரின் உதவியாளன் பரவசப்பட்டான்.

செட்டியார் கேட்காமலேயே செட்டியாரம்மா சுப்பையனுக்கு வாழையிலையில் போட்டு ஒரு விருந்துப் பொட்டலம் கட்டிக்கொடுத்தாள். தன் மாளிகையிலிருந்து தன் வைக்கோல் குடிசைக் காரியாலயத்திற்கு நடக்கும்போது 

“சுப்பையன் தான் என் Assassin” என்று டச்சு மொழியில் சொன்னார். 

செட்டியார் எனக்கும் பசிக்கிறது

என்றான் சுப்பையன். செட்டியார் விருந்துப் பொட்டலத்தை பிரித்து அவனுக்கு பரிமாறினார்.  அவன் அபக் அபக் என்று சாப்பிடுவதை ரசித்தபடி தன்  கிளாசில் ஒரு பெக்   ஸ்கொச் விஸ்கி அனுபவித்தார். 

அவன் உண்டபின் இன்னொரு கிளாசில் ஸ்கொச் விஸ்கி அவனுக்கும் பரிமாறிவிட்டு

செட்டியார் சுப்பையனை சோதித்தார். 

“நீ உண்மையிலேயே கனகியைக் காதலித்தாயா? அப்படியாயின் நீ ஆறுமுகனை அல்லவா கொல்லவேண்டும்.  ஏன் உனக்கு கனகியையைக் கொல்லும் வெறி வருகிறது”  

  “செட்டியார் உங்களுக்கு காதல் தெரியாது. அதிகாரம் மட்டுமே தெரியும். காதலின் விதிகள் வேறு. அதிகாரத்தின் விதிகள் வேறு. காதலின் முக்கியமான விதி Jealousy. உங்களுக்கு தெரியாத ஆங்கில வார்த்தையில் சொல்வதையிட்டு மன்னிக்கவேண்டும். ஏனெனில் தமிழில் இச்சொல்லுக்கு இன்றும் சரியான சொல் கிடையாது. அழுக்காறு, பொறாமை என்ற தமிழ்ச் சொற்கள் Jealousy க்கான சரியான அர்த்தத்தை வெளிப்படுத்தாதவை. நானும் கனகியும் ஆறுமுகனும் ஆங்கில மொழியில் படித்தவர்கள். எங்களுக்கு தமிழையும் ஆங்கிலத்தையும் ஒப்பிட்டு ஆராயத் தெரியும்”

“ஆறுமுகனை நீ கொன்றால் வேறு வழியின்றி கனகி  உன்னை கட்டலாம் என்ற நம்பிக்கை உனக்கு இல்லையா? கனகியை உனக்கு கட்டிவைக்க நானும் கனகியின் மாமனுடன் பேசினேனே” 

“செட்டியாரே நான் ஆண்மகன். எனக்கு பெண்களைப் புணரத்தான் ஆசை, நான் ஓர் ஆணுடலில் உள்ள ஆண். நான் அலி அல்ல. ஆனால் கடவுள் எனக்கு பெண்குரலை தவறிப்படைத்து விட்டார். கனகி என்னை வெறுப்பதற்கான பிரதான காரணம் என் பெண்குரல்தான். நீங்கள் போட்ட திட்டத்தை உடைத்து இப்போது கனகி ஆறுமுகனோடு ஓடிவிட்டாள்.

 இனி உங்களின் அதிகாரத்தால் நீங்கள் என்னை கனகிக்கு கட்டிவைத்தாலும் அந்த காமத்திலும் காதலிலும் உயிர் இருக்காது. கனகி ஒரு தேவடியாச் சிறுக்கி. வேசை. வேசைகளைப் புணரும்போதும் இன்பம் அனுபவிக்கலாம். ஆனால் என்னை வெறுக்கிற கனகியைப் புணர்வது செத்த  பிணத்தோடு புணர்வதற்கொப்பானது. அந்த கனகியைக்கொன்றால் என் மனம் சாந்தியடையும். நான் இன்னொரு பெண்ணோடு புதிய வாழ்வைத் தொடங்கலாம்”

“சரி, பொறாமை, அழுக்காறு என்கிறாய்.. உனக்கு ஆறுமுகனை கொல்லும் ஆசை, வெறி இல்லையா? அவர்கள் வடநாட்டுக்கு ஓடிப்போனாலும் தேடி கனகியைக் கொல்லுவாய் என்கிறாய்..கனகி ஆறுமுகனோடுதானே இருப்பாள்? கனகியைக் கொல்லும்போது உனக்கு ஆறுமுகனையும் கொல்ல வாய்ப்பு கிடைக்குமே”

“ செட்டியார், என் குரல் பெண்குரல்தான். ஆனால் நான் பேயன் அல்ல..ஆறுமுகனுடைய பலமும் செல்வாக்கும் எனக்குத் தெரியும். தூத்துக்குடியில் நான் கப்பல் கம்பனியில் வேலைக்கு சேரும்போது எனக்கு யாழ்ப்பாண ஆறுமுகனை தெரியுமா என்று கேட்டார்கள். அவன் என் சமகாலத்தவன் என் வயதுதான் அவனுக்கும் என்றுசொல்லி அவனைப்பற்றிய அவர்களுக்குத் தெரிந்த விபரங்களை நான் சொன்ன பின்னரே என்னை வேலைக்கு சேர்த்தார்கள்  ஆறுமுகன் லேசுப்பட்ட ஆள் அல்ல. ஆங்கில சாம்ராஜ்யத்திற்கு முறைப்பாட்டு காகிதம் எழுதுபவன், யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய பணக்கார வணிகரான கைத்தீஸ்வரச் செட்டியார் ஆகிய உங்களின் தலமை மந்திரி  என்பது தென்னகம் எங்கும் தெரியும். அவன் கொல்லப்பட்டால் ஆங்கில மகாராணியே ஒரு விசாரணைக்கு உத்தரவிடுவாள்”

சுப்பையன் கெட்டிக்காரன் என்பதை செட்டியார் உணர்ந்த அக்கணத்தில்  கனகியைக் கொல்லும் ஒப்பந்தத்தை செய்ய இவனைவிடச் சிறப்பான யாரும் கிடைக்கமாட்டார்கள் என்பதை முடிவுசெய்தார். 

செட்டியாருக்கு நிம்மதி வந்தது. நல்ல தூக்கமும்  வந்தது. அப்போது இரவு பதினொரு மணி. 

“சுப்பையா கள்வெறியில் கொலைசெய்ய முடியாது. இங்கே வா என்றழைத்தார். எழுந்து வந்த சுப்பையனை கன்னத்தில் அறைந்தார்.

“கனகி கொல்லப்படும் வரை குடிக்க மாட்டேன்  என்று சத்தியம் செய்” என்றார். 

சுப்பையன் முழங்காலிலிருந்து செட்டியாரின் பாதங்களை முத்தமிட்டு சத்தியம் செய்தான். 

செட்டியார் நூறு பவுண் காசுகள் சுப்பையனுக்கு கொடுத்தார். 

“இது கொலைச்செலவுக்கு. தகவல்கள் எடுக்க, பயணம், கடல் பயணம் எல்லாவற்றுக்கும் தாராளமாக செலவழிக்க வேண்டிவரும்.    தயங்காமல் செலவிடு. நீ கொலையைச் செய்தபின் புதிய மனைவியோடு உன் புதுவாழ்வைத் தொடங்க வேண்டிய அளவு  பொன்னும் பவுணும் தாராளமாக வழங்குவேன்” 

என்றார். 

“பாதிரியாருடைய நடமாட்டங்களையே நீ இப்போது உளவுபார். வடநாட்டுக்கு ஆறுமுகன், கனகி ஓடியிருந்தால் அந்த தகவல்கள் நமக்கு வர காலமாகும். நான் என் வட்டாரங்களை வைத்து விசாரிக்கிறேன். எனக்கு கிடைக்கும் தகவல்களை உனக்குச் சொல்லுவேன். உனக்குத்தெரியும் தகவல்களை உடனுக்குடன் எனக்கு நீ சொல்லு. இனி என் வீட்டுக்கு வராதே. இனி  அனுதினமும் உசத் காலைப்பூசைக்கு கைத்தீஸ்வரன் கோயிலுக்கு வருவேன். மெருமாள்தான் எனக்கு இப்ப ஒரே துணை. தெப்பக்குளத்தில் இருட்டில் சந்திப்போம்” 

என்று விடை கொடுத்தபின் தன் மாளிகைக்கு தூங்கப்போய்விட்டார். 

சுப்பையன் அன்றிரவு செட்டியாரின் குடிசையிலேயே தூங்கினான்.

அதிகாலை மூன்று மணிக்கு அவன் விழித்தான். செட்டியாரின் உதவியாளன் வாயில் கதவைத் திறந்துவிட்டான். சுப்பையன் நேரே தன் வீட்டுக்குப் போனான். அதிகாலையில் அவன் தன் வீட்டுக்குப்போன போது அவன் அன்னை திருமதி ருத்திரமூர்த்தி விழித்தார். கனகி ஆறுமுகனோடு ஓடிய கதை அவளுக்கு தெரியும். நிறையக் குடித்துவிட்டு வந்திருப்பான் என்று ஊகித்து சாப்பிட்டாயா என்று தன் மகனைக் கேட்டாள். இலை போடு என்றான் சுப்பையன். தனக்குப் பசி மாதிரி நடித்தபடி கொஞ்சம் அன்னம் உண்டான். 

“மகனே அந்தத் தேவடியாச் சிறுக்கியை இனி மறந்துவிடு. எட்டாப்பழம் புளிக்கும். நீ எங்களோடு இருக்காவிட்டாலும் பரவாயில்லை. எங்கிருந்தாலும் சந்தோசமாக இரு. தூத்துக்குடிக்கே போய் வேலையில் சேர்ந்துவிடு. இனி இந்த ஊரில் நீ சந்தோசமாக இருக்கமாட்டாய்” 

என்றாள் தாய்.

அடுத்த அறையில் படுத்திருந்த திரு உருத்திரமூர்த்தி தானும் இதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதைக் காட்ட இருமுறை இருமிச் செருமினார். தந்தைக்கு கேட்கக் கூடியவாறு 

“அம்மா நான் இரண்டு நாளில் தூத்துக்குடிக்கு போகிறேன். போய்க் காகிதம் போடுகிறேன்” 

என்று உரத்த குரலில் சொன்னான். 

பிறகு தூங்குகிறமாதிரி ஒரு அரைமணித்தியாலம் நடித்தான். மாதா பிதா தூங்கியதை உறுதிப் படுத்தபின் தன் அறையில் பலமான தன் பட்டு வேட்டியை விரித்தான். அதில் தாயினுடைய இரண்டு பட்டுப்புடவைகளை எடுத்துப்போட்டான். ஆங்கிலக் கப்பல் கப்பல் கொம்பனியில் அவன் வேலைசெய்யும் போது வைத்திருந்த இரண்டு லோங்ஸ், இரண்டு சேட்டுக்களையும் எடுத்துப்போட்டான். இரண்டு பட்டு வேட்டிகள், தூத்துக்குடியில் ஒரு முஹம்மதிய நண்பன் பரிசளித்த ஒரு தொழுகைத்தொப்பி, சில சால்வைகள். தன்னுடைய சில கச்சைகள் என்பவற்றைப் போட்டான். பட்டுவேட்டியை ஒரு பொட்டலமாக முடிந்தான். பொட்டலத்தை காவிச்செல்லும் மூன்றடித் தடி எடுத்தான். 

தன் வேட்டியை உரிந்துவிட்டு தாயின் இன்னொரு புடவையை  எடுத்து அணிந்து பெண்வேடம் பூண்டான். செட்டியார் கொடுத்த நூறு பவுண் நோட்டுக்களையும் சேலைக்குள் முடிந்தான். தூத்துக்குடியில் அவன் வாங்கிய ஒரு கிறீஸ் கத்தியை தோல் உறையோடு எடுத்து தன் இடுப்புச் சேலைக்குள் செருகினான். 

சுப்பையனுக்கு அப்போது தனது ‘புனிதப்பணி’ தோல்வியிலும் முடியலாம்.  என்பது உறைத்தது. கனகிக்குக்கு பதிலாக கூட இருக்கிற  ஆறுமுகனால் தானே கொல்லப்படலாம். . கடைசியாக ஒரு தடவை தன் மாதா பிதாவைப்பார்க்க ஆசைகொண்டு அவர்களின் அறையருகே சென்றான். முழு இருட்டு. அந்த மரக்கதவைத்திறக்கும் துணிவு சுப்பையனுக்கில்லை. கதவோரம் நின்று ஒட்டுக்கேட்டான். மாதாவும் பிதாவும் மகத்தான ஒத்திசைவில் மூச்சுவிட்டு அந்த முதுவேனிற்கால இரவில் தூங்கும் ஒலிகள் கேட்டன. 

தடியில் பொட்டலத்தை தாங்கிக்கொண்டு பெண்வேடத்தில் சுப்பையன் பாதிரியாரின் யாழ் மத்திய கல்லூரி அருகிலுள்ள வீட்டுக்கு வந்தபோது அதிகாலை ஐந்தரை மணி. அன்று ஞாயிற்றுக்கிழமை .குதிரைகள், குதிரை வண்டிகள் ஒலிகள் எதுவுமில்லை.

சுப்பையனுக்கு யாழ் நகரத்திலுள்ள சிறுகாடுகள் புதர்கள், பற்றைகள் எல்லாம் தெரியும். அவன் குடிக்காத நேரங்களில் மிருகங்கள் பறவைகளின் குரலில் அவற்றோடு உரையாடியபடி காடுகளில் திரிபவன். ஒரு புதருக்குள் தன் துணிப்பொட்டலத்தை மறைத்து வைத்துவிட்டு பெண்வேடத்தில் பாதிரியாரில் வீட்டைச்சுற்றி அலைந்தான். பாதிரியார்தான் வீட்டில் இல்லையே.

பகல்முழுக்க பெண்வேடத்தில் திரிபவன் இரவானதும் முஸ்லீம் வியாபாரியின் வேடம் பூணுவான். அன்று நள்ளிரவில் பாதிரியார் நடந்தே தன் வீட்டுக்கு வருவதைக்கண்டான். அடுத்தநாள் குதிரைவண்டியில் பாதிரியார் யாழ் மத்திய கல்லூரிக்கு போகும்போது ஓட்டமும் நடையுமாக பின்தொடர்ந்தான். அவர் பாடசாலையில் இருக்கும் பகல் நேரத்தில் மட்டும் அருகிலுள்ள சிறுகாட்டுக்குள் போய் பெரிய காட்டுப்பூவரச மரத்தின் கிளையில் நித்திரை கொண்டான். பாடசாலை முடிகிறநேரம் மறுபடியும் பாதிரியாரின் குதிரை வண்டியைத்தொடர்ந்து அவர் வீட்டடிக்கு போனான். சத்திரங்களிலும் கோயில்களிலும் உணவுண்டான். இரவில் விழித்திருந்து உளவுபார்ப்பதற்காக கஞ்சா புகைத்தான். 

வெள்ளிக்கிழமை வரையும் அவனுக்கு துப்பு எதுவும் கிடைக்கவில்லை. வெள்ளிக்கிழமை நள்ளிரவு அவன் கஞ்சா புகைத்துக் கொண்டிருக்கும்போது பாதிரியாரும் உதவியாளனும் வீட்டைவிட்டு நடையில் வெளியேறுவதைக் கண்டான். அவர்களைப் பின்தொடர்ந்தான். குருநகர் துறைமுகத்தில் பாதிரியார் படகேறுவதைக் கண்டான். சுப்பையனிடம் படகு வசதிகள் எதுவும் அப்போது இல்லாதிருந்தால் அவனால் கடலில் அவரைப் பின்தொடர முடியவில்லை. உடனே கைத்தீஸ்வரன் கோயிலுக்கு ஓடினான். உசத் காலப்பூசையில் செட்டியாரைச் சந்திக்க தேர்முட்டியருகில் படுத்திருந்தான்.

வெள்ளிக்கிழமை செட்டியாருக்கும் ஒரு முக்கியமான துப்பு கிடைத்திருந்தது. நெடுந்தீவில் மெதடிஸ்த திருச்சபை கட்டும் தேவாலயத்தின் மேற்பார்வையாளராக பாதிரியாரே இருக்கிறார் என்பதே அது. அந்தக்கால நெடுந்தீவு ஈழ ஆங்கில ஆளுனரின் ஆளுகைக்குட்பட்டிருந்தாலும் நெடுந்தீவு ஒரு சர்வதேச தீவு. நெடுந்தீவு மக்கள் ஈழத்தைவிட வடநாட்டு ராமேஸ்வரத்தையும்  ஆவுடையார் கோயிலையுமே தங்கள் திருத்தலங்களாக வழிபட்டார்கள். வேதாகம மொழிபெயர்ப்பு பணி முடியாததால் காதலர்கள் நெடுந்தீவிலேயே ஒளித்திருக்க வாய்ப்பு உண்டு என்று செட்டியாரின் உள்ளுணர்வு சொன்னது. 

சுப்பையனின் புலனாய்வுத் தகவலைக்கேட்ட செட்டியார் சுப்பையனை நெடுந்தீவுக்கே போ என்று உத்தரவிட்டார். சனிக்கிழமை நண்பகலில் பாதிரியார் ஏற்பாடு செய்த நாலு வடநாட்டு கடலோடிகளோடு சுப்பையன் ஒரு முஸ்லீம் வியாபாரி வேடத்தில்  குருநகர் துறைமுகத்திலிருந்து படகேறினான். கடலும் காற்றும் அவர்களுக்கு வாய்ப்பாக இல்லை. நெடுந்தீவு மாவலித்துறையை அடைய அவர்களுக்கு ஏழு மணித்தியாலங்கள் சென்றது. சுப்பையனுக்கு கடல் பயணங்கள் புதிதல்ல. தன்னுடைய கஞ்சாவை படகோட்டிகளோடு பகிர்ந்து கொண்டான். 

அந்திசாயும் நேரம் அவர்கள் மாவலித்துறையை அடைந்தார்கள். செட்டியாரின் ஏற்பாட்டின்படி சுப்பையனுக்காக பாய்க்கப்பலும் நாலு படகோட்டிகளும் எப்போதும் காத்துக்கொண்டிருப்பார்கள். தலமை ஓட்டியுடன் சுப்பையன் தீவுக்குள் புகுந்தான். அறபி, ஹிந்தி, உருது, திராவிட மொழிகள் எல்லாம் அறிந்த அந்த படகோட்டி மாவலித்துறையிலிருந்த உள்ளூர் மீனவர்களிடம் எதுவும் விசாரிக்கவில்லை. அங்கிருந்த பரதேச கடலோடிகளிடமே புதிதாகக் கட்டப்படும் தேவாலயம் எங்கிருக்கிறது என்று விசாரித்தான். அதற்கேற்ப சுப்பையனை நடத்திக் கூட்டிக்கொண்டுபோய் தூரத்திலிருந்து புதிதாகக் கட்டப்படும் தேவாலயத்தை காட்டிவிட்டு மாவலித்துறைக்கு திரும்பினான். 

சுப்பையன் அவ்விடத்தை நெருங்கும் போது இரவு எட்டுமணியிருக்கும். முதுவேனிற்கால நெடுந்தீவு கடற்காற்று யாரையும் பரவசப்படுத்தக்கூடியது. காதோரம் இரகசியம் பேசும் ஒரு காதலியின் காதலனின் குரலைப்போல உரசிச்செல்லும். சுப்பையன் தூரத்தில் நின்றுகொண்டே ஒரு கஞ்சா புகைக்க ஆசைகொண்டு பற்றவைத்தான். இரண்டு தம் இழுத்திருப்பான். கஞ்சாவின் சுகந்த மணம் கடற்காற்றில்  தேவாலயம் நோக்கிப்போகுமே என்று எச்சரிக்கையாகி காலடியில் போட்டு அதனை அணைத்தான். 

அப்போது அந்தக்காட்டுப்பூவரச மரத்தின் கீழிருந்து பாதிரியாரும் ஆறுமுகனும் கனகியும் இரவு ஆகாரம் உண்டு கொண்டிருந்தார்கள். பாதிரியாருக்கு கூனி இறால் பொரியலும் அரிசிப்புட்டும் . ஆறுமுகனுக்கும் கனகிக்கும் அரிசிப்புட்டும் தேங்காய்ப்பால் கத்தரிக்காய் குழம்பும். 

அறியாத ஒரு தீவில் தன் காதலன் ஆறுமுகனோடு கனகி இப்போது ஐந்து நாட்கள் வாழ்ந்துவிட்டாள். பயமும் காதலும் கலந்த அவளது நாட்கள் அவை. இப்போது பாதிரியார் திரும்பி 

வந்தபின் அவளுக்கு பயம் போய்விட்டது. அவளுக்கு சகோதரன் இல்லை. சகோதரி இல்லை. பாதிரியாரை தன் சொந்த அண்ணனைப்போல உணர்ந்தாள். 

பயம் என்பதை முதன்முதலில் கனகி அறிந்தது தனது கன்னி கழித்த அந்த வெள்ளைக்கார ஆங்கிலப் பொலீஸ்காரனிடம் தான். அவன் தன்னை கெடுத்த இரவில்தான். அவனது வியர்வை நாற்றம் கனகி அறியாதது. அவளுக்கு குமட்டியது. வாந்தியெடுத்தாள். அவளைக் கெடுத்தபின் அவள்  வாந்தியெடுத்த அதே வாயில் தன் ஆண்குறியை விட்டுப் புணர்ந்தான் ஆங்கிலேயப் பொலீஸ்காரன். கனகிக்கு மூச்செடுக்க முடியவில்லை. மயங்கி விழுந்தாள். அடுத்தநாள் வந்தும் அதே கொடுஞ் சடங்குகளைச் செய்தான் அந்தப் பொலீஸ்காரன்.

கனகிக்கு தன் அம்மா இறந்தபின்  தன் ஆங்கிலப்படிப்பை முறித்து தன்னை தேவதாசியாக்கிய மாமனில் கோபமிருக்கிறது. அதேயளவுக்கு அவனில் மதிப்புமிருக்கிறது. மாமன் அவளை ஒரு தடவையும் வன்புணர்ந்து அவளைக் கொடுமைப் படுத்தவில்லை. அந்தக்கால யாழ்ப்பாணத்தில் மாமன் புணர்ந்தபின்னரே தன் மருமகளை தேவதாசியாக்குவான். அதையொரு சடங்கு போலச்செய்வான். முதல்முறையாக வேற்று ஆடவன், கிழவனொருவன் தன் சகோதரியின் மகளை புணரவருகிறபோது அவள் அதனை வன்மமாக எதிர்த்தால் காயமடையும் அல்லது கொல்லப்படும் ஆபத்து இருதரப்பிலும் ஏற்படுவதைத் தடுப்பதே இச்சடங்கின் நோக்கமாம். காமுகனொருவன் எப்படி ஒரு தேவதாசியை அணுகுவான் அதை எப்படி எதிர்கொள்ளுவது என்பதை மாமன் நடைமுறையில் வாடிக்கையாளன் போல புணர்ந்து செய்து காட்டுவானாம். அவளுடைய எதிர்ப்பு மிக வன்மமாக இருந்தால் சில நாட்கள் விட்டுத்தொடர்வான். சில கடுமையான வாடிக்கையாளர்களை அவளின் வார்த்தைகளால் செயல்முறைகளால் எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதை நடைமுறை காம உத்திகளின் மூலம் செய்து காட்டுவானாம்.

பாதிரியாருக்கும் அந்த வெள்ளைக்கார பொலீஸ் காரரின் வெள்ளைத் தோல்தான். ஆனால் பாதிரியாரின் நாற்றத்தில் குற்றமெதுவுமில்லை. தனக்கொரு அண்ணன் இருந்திருந்தால் அவனும்  பாதிரியார் சாப்பிடும் கடலுணவுகள், மாமிசம்  எல்லாம் இரகசியமாக உண்டிருப்பான். அவனிடத்திலிருந்தும் பாதிரியாரின் அதே மூச்சு, தோல் நாற்றம் வந்திருக்கும். இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டு கனகி அவ்விரவில் சந்தோசமாக இருந்தாள். 

சுப்பையன் இரவு முதிரட்டும் என்று காத்திருந்தான். ஊர் அடங்க இன்னும் இரண்டு மணிநேரம் சென்றது. ஊர் அடங்கியபின் தான் கடல் ஆர்ப்பரிக்க தொடங்கியது. சுப்பையன் தேவாலய வளவை நோக்கி நடந்தான். 

தேவாலய வளவைச் சூழ முருகைக்கல் வேலி அமைக்கப்பட்டிருந்தது  புதிய வேலி. தள்ளினால் விழும்போல இருந்தது.. சுப்பையன் கல்வேலியையும் தாண்டி வளர்ந்திருந்த காட்டுப்பூவரசின் கிளையில் தொங்கி உள்ளே புகுந்து ஓசைப்படாமல் குதித்தான். இரவு பத்து மணிக்கு பாதிரியாரும் காதலர்களும் வைக்கோல் குடிசைக்குள் போய்விட்டார்கள்.

சுப்பையன் பூனையைப்போல ஓசைப்படாமல் வளவைச்சுற்றி நடந்து வேவு பார்த்தான். சமையலறைக் குடிசைக்கு கதவு இருக்கவில்லை. உள்ளே புகுந்தான். கிழவனொருவன் தூங்கிக்கொண்டிருந்தான். பாதி கட்டப்பட்ட தேவாலயத்தினுள் போய்ப்பார்த்தான். யாருமில்லை. பிறகு பெரிய குடிசையை நெருங்கினான். முற்றிலும் அடைக்கப்பட்டு வைக்கோல் கதவுபோட்டு மூடப்பட்டிருந்தது. குடிசையினுள் சில குரல்கள் கேட்டது. வைக்கோல் சுவரில் காது வைத்து ஒட்டுக்கேட்டான். 

 பாதிரியார் நிறையக் களைத்திருந்தார். தன்னறையில் பாயில் விழுந்ததும் தூங்கிவிட்டார். ஆறுமுகனுக்கும் தூக்கம் கண்ணைக்கட்டியது. காதலர்களின் அறையில் கனகி ஓடிப்போன நாளிலிருந்து இன்றுதான் பயமின்றி மிகப்பரவசமாக இருந்தாள். கடந்த ஒருவாரகாலமாக அவர்கள் புணரவில்லை. புணரும் வேட்கை எழவில்லை ஆறுமுகனின் உதடுகள் நாக்கை வன்முத்தமிட்டு விட்டு முழங்காலிலிருந்து ஆறுமுகனின் பாதிரியார் ஆடைக்குள் புகுந்து அவனுடைய ஆண்குறியையும் விதைகளையும் சுவைத்து நக்கி ஊம்பினாள். ஆறுமுகனுக்கு தயக்கம். குரு பாதிரியார் இருக்கும்போது தாங்கள் புணருவது அவரை அவமரியாதை செய்வதாகும் என்று ஆறுமுகன் நினைத்தாலும் அவன் ஆணுடம்பு அவன் சொற்கேளாமல் புடைத்தது.

கனகியின் வசியத்தால் ஆறுமுகன் பாயில் மல்லாக்க விழுந்தான். கனகி தன் பாதிரி உடைகளைக் களைந்துவிட்டு ஆறுமுகனின் பாதிரி  உடைகளையும் களைந்தாள். அப்போதும் ஆறுமுகன் தன் வாயில் விரலை வைத்து பாதிரியிருக்கு கேட்குமே என்று எச்சரித்தான்  

“சுவாமி டேய் நான் முனகமாட்டேன் சத்தமில்லாமல் செய்யடா”  என்று ரகசியம் பறைந்தபடி அவன் மேல்விழுந்து  புணரத்தொடங்கினாள். 

காமத்தின் உச்சத்தில் அவள் ஆறுமுகனை உரிமை எடுத்து டேய் போட்டது ஆறுமுகனின் ஆணுடம்பை இன்னும் விறைப்பாக்கியது. அவனும் பயம் மறந்து புணர்ந்தான். நல்லாயிருக்கடா சாமி என்று தன்னை மறந்து இன்னும்  வேகவேகமாய்ப் புணர்ந்தாள் கனகி.   

இருவருக்கும் ஓர்கசம் ஒருங்கே வந்த அக்கணத்தில் பாதிரியாரின் குறட்டை ஒலி கேட்டது. கலவியின் ஒலிகளையும் காதலர்களின் குரலையும் மிகத்தெளிவாகக் கேட்டான் சுப்பையன். அவனுக்கு பொறாமையும் திருப்தியும் கலந்த விநோத உணர்வு வந்தது. தனக்கேயுரியவள் ஆறுமுகனை அனுபவித்து புணருவதைக்கேட்டு பொறாமை. காதலர்களைக் கண்டுபிடித்துவிட்டான் என்பதால் திருப்தியும் வெற்றிக்களிப்பும். 

இனி கனகியைக் கொல்லவேண்டியது தான் பாக்கி. இப்போது பாதிரியாரும் கிழவனும் இருக்கும்போது கொல்லமுடியாது. என்று யோசித்துக்கொண்டு தேவாலய வளவை விட்டு அதே பூவரச மரத்திலேறி அதன் கிளை வழியாக வெளியேறினான். நட்சத்திரங்களுக்கு கீழே கஞ்சா புகைத்துக்கொண்டு கடலோடிகள் இருக்கும் வாடியை நோக்கி நடக்கத் தொடங்கினான். மேலும் சில இரவுகள் வேவு பார்த்துவிட்டு கொலை இரவை அவன் திட்டமிடவேண்டும். 

வாடியில் தலமைக் கடலோடி எழுந்து அவனுக்கு அன்னமும் பருப்புக்கறியம் பரிமாறினான். ஒன்றுமே பறையாமல் தூங்கிவிட்டான். 

ஞாயிற்றுக் கிழமை காலை அதிகாலையிலேயே பாதிரியாரும் காதலர்களும் எழுந்து காலைக்கடன்களை முடித்து நாள் முழுக்க காட்டுப் பூவரசின் கீழிருந்து வேதாகம மொழிபெயர்ப்பை செம்மைப் படுத்தினார்கள். கடைசி அத்தியாயம் மட்டுமே இன்னமும் செம்மைப் படுத்தவேண்டியிருந்தது. 

சுப்பையன் நாள் முழுக்க வாடியில் தூங்கினான். அந்திப்பொழுதில் எழுந்து காலைக்கடன்களை முடித்து இரவானதும் தேவாலயத்தை நோக்கி நடந்தான். இரவு 7 மணிபோல பாதிரியாரும் காதலர்களும் காட்டுப்பூவரச மரத்தின் கீழிருந்து உணவருந்திக் கொண்டிருந்தார்கள். கல்வேலியின் கீழ் குனிந்திருந்து அவர்களின் பேச்சை ஒட்டுக்கேட்டான் சுப்பையன்.

பாதிரியார் இந்த வெள்ளிக்கிழமை இரவு வருவார். ஞாயிற்றுக்கிழமை இரவு காதலர்களை வடநாட்டுக்கு படகேற்றிவிட்டு அவ்விரவே அவர் யாழ்ப்பாணத்திற்கு திரும்புவார் என்பதே அவர்களின் உரையாடலிலிருந்து சுப்பையன் அறிந்தது. சிறிது நேரத்தில் பாதிரியார் அவர்களுக்கு விடைகொடுத்துவிட்டு மாவலித்துறை நோக்கி நடந்தார். சுப்பையன் பின்வாங்கி ஒரு புதரில் சிலமணிநேரம் ஒளித்திருந்தான்.

பத்து மணிபோல் குடிசையில் சத்தங்கள் அடங்கியபின் வளவுக்குள் புகுந்தான். காதலர்கள், கிழவன் எல்லோருமே தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஆறுமுகனும் கிழவனும் அருகிலிருக்கும்போது கனகியை தன்னால் கொல்லமுடியாது என்பது சுப்பையன் அறிந்தது. அவ்விரவு முழுக்க அங்கேயே ஒளித்திருந்து உளவு பார்த்தான். 

சுப்பையனுக்கு சோதிடம் தெரியும். நட்சத்திரங்களைப் பார்த்து துல்லியமாக நேரங்கணிக்க தெரியும். அதிகாலை மூன்று மணிக்கு நெடுந்தீவு மீனவர்கள் கடலுக்கு போகும் ஒலிகள் கேட்டது. அதிகாலை நாலுமணிக்கு சேவல் கூவியது. சேவல் கூவுஞ்சத்தம் கேட்டு ஆறுமுகன் குடிசையில் சத்தம் கேட்டது. ஆறுமுகன் மலம்கழித்து கிணற்றில் நீராடிவிட்டு நாலரை மணிபோல் கடற்கரைநோக்கி நடக்கத்தொடங்க சுப்பையனும் பின்தொடர்ந்தான். கடற்கரை இருட்டில் கடற்கரையில் நட்சத்திரங்களின் ஒளியில் ஆறுமுகன் யோகாசனம் செய்வதைக் கண்டான். குடிசைக்கு மறுபடியும் ஓடிவந்தான் சுப்பையன். அப்போது ஐந்து மணியாகிக்கொண்டிருந்தது. கனகி தூங்கிக்கொண்டிருந்தாள். சரியாக ஐந்து மணிக்கு கிழவன் சமயலறைக் குடிசையிலிருந்து வெளியே வந்து காலைக்கடன்களை முடித்து நீராடினான். ஐந்தரை மணிக்கு ஆறுமுகன் குடிசைக்கு திரும்பும்போது விடியத்தொடங்கியது. சுப்பையன் ஒரு பிசாசைப்போல அவ்விடத்தை விட்டு மறைந்தான். 

சுப்பையன் அடுத்த செவ்வாய், புதன் இரவுகளில் வளவிலேயே ஒளித்திருந்து உளவுபார்த்தான். ஆறுமுகன், தெலுங்கு கிழவன் விழிக்கும் நேரங்களில் ஒரு மாற்றமுமில்லை. வெள்ளி அதிகாலை கனகியைக்கொல்ல நாள் குறித்தான் சுப்பையன். 

வெள்ளிக்கிழமைகளில் நெடுந்தீவு மீனவர்கள் கடலுக்கு போகமாட்டார்கள். அதிகாலையில் ஊரடங்கியிருக்கும். வெள்ளி அதிகாலை மூன்று மணிக்கு சுப்பையன் வளவுக்கு வெளியேயிருந்து சேவலைப்போலக் கூவினான். பல சேவல்களின் குரலில் கூவினான். 

விடிந்துவிட்டது என்று ஆறுமுகன் எழுந்து கிணற்றில் நீராடிக்கொண்டிருக்கும்போது சுப்பையன் காட்டுப்பூவரச மரத்திலிருந்து அவதானித்துக் கொண்டிருந்தான். மூன்றரை மணிக்கு ஆறுமுகன் கடற்கரைக்கு செல்லும்போது கிழவனின் குடிசையை நெருங்கி நோட்டம் பார்த்தான். கிழவன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் ஒலி கேட்டது. 

வைக்கோல் கதவைத்திறந்து ஓசைப்படாமல் கனகியின் குடிசைக்குள் போனான். கனகியின் அறையில் அவள் பாயில் மல்லாக்கப்படுத்து தூங்கிக்கொண்டிருந்தாள். இருட்டில் அவள் சேலையில் அவளறியாது தடவிப்பார்த்தான். சேலை விலகியிருந்ததால் அவள் தொடைகளிலும் தொட்டுவிட்டான். அவளைப்புணரும் வேட்கை சுப்பையனுக்கு வந்தது. புணர்ந்துவிட்டு கொல்வோமே என்று அவள் சேலையை விலக்கி தொடைகளை விலக்கி அவள் அல்குலை முகர்ந்தான். பெருவெறி வந்து சுப்பையனின் ஆணுடம்பு புடைத்தது. 

அப்போது கனகி ஆறுமுகன் தன்னை திருப்பெருந்துறையில் புணர்வதாகக் கனவு கண்டுகொண்டிருந்தாள். ஆவுடையார் கோயில் வெள்ளாற்றின் தீரத்திலிருந்த ஒரு பொய்கைக்கரை. இளவேனிற்கால நிலவு கருமேகங்களுக்கிடையில் அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது. மழை தூவானமாகப் பெய்கிறது. மயில்கள் அகவும் ஒலி கேட்கிறது. ஒரு முள்முருக்க மரத்தின் கீழ் அவர்கள் புணர்கிறார்கள். அப்போது சிவப்பு முள்முருக்கு பூக்கள் உதிர்கின்றன.

 நனவுக்கும் கனவுக்கும் வித்தியாசம் தெரியாத கனகியை புணரத்தொடங்கினான் சுப்பையன். ஆறுமுகன் தான் தன்னைப் புணருகிறான் என்று நினைத்து அவள் முனகிக்கொண்டு தன் கால்களால் சுப்பையனுக்கு பூட்டு போட்டாள். சுப்பையனுக்கு கொலை வேட்கையை விட, காம வேட்கையை விட பயம் அதிகமிருந்த இரவு அது. கனகி சுப்பையனை விட உயரமானவள்  பலமானவள். வேற்று ஆடவன் என்றறிந்து தன்னைத் திருகிக்கொல்லவே கனகி பூட்டு போடுகிறாள் என்ற பயத்தில் அக்கணமே தன் சால்வையை கனகியின் கழுத்தில் திருகி அவளை முச்சடக்கி கொன்றான் சுப்பையன். 

அவள் மூச்சடங்கிய கணத்தில்தான் சுப்பையன் உண்மையை உணர்ந்தான். சேலையை உருவிட்டு இருட்டில் சடலமான அவளின் பருத்த கொங்கைகளையும் ஈரமான அல்குலையும் தன் விரல்களால் வருடும்போதுதான் கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்று  பெரும் குற்ற உணர்ச்சிகொண்டான் சுப்பையன். அப்போது சுப்பையனின் ஆணுடம்பு சுருங்கியிருந்தது. 

சுப்பையன் ஒரு கஞ்சா புகைத்துக்கொண்டு அவளின் உடலை வருடினான். பிறகு சடலமான கனகியின் உடல் முழுக்க நக்கினான். அவன் ஆணுடம்பு மறுபடியும் புடைத்தது.

இறக்கும் தருணத்தில் அவள் கால்களால்  போட்ட பூட்டு அப்படியே இருந்தது. அதற்குள் புகுந்து வன் வெறியோடு கனகியின் பூத உடலைப் புணர்ந்தான். அவள் முலைக்காம்புகளை இரத்தம் வரும்வரை கடித்தான். 

வெற்றிக்களிப்பிலும் குற்ற உணர்ச்சியிலும் ஒரு பிசாசைப்போல சுப்பையன் காட்டுப் பூவரசமரத்திலேறி கல்வேலியைக் கடந்தபோது அதிகாலை நாலு மணி. 

நாலரை மணிக்கு ஆறுமுகன் வந்து வன்புணரப்பட்டு கொல்லப்பட்ட கனகியைக்கண்டு தன்னை மறந்து கத்தினான். கிழவர் ஓடிவந்தார். ஆறுமுகன் அவளின் நிர்வாண உடலை தன் இடுப்பில் வைத்திருந்திருந்து அழுது கொண்டிருந்தான்  கிழவர் கனகியை தன் மகள்போல நேசித்தவர். அவருக்கு குமட்டி சத்தியெடுக்க வந்தது. அருகிலிருந்த அவளின் சேலையை எடுத்து ஆறுமுகனிடம் கொடுத்தார். 

ஆறுமுகன் அவளுடலைச் சுற்றி சேலை அணிந்தான். கிழவரும் ஆறுமுகனும் எவ்வளவு முயன்றும் இறக்கும்போது அவள் பூட்டுப்போட்ட விறைத்த கால்களை நேராக்க முடியவில்லை. 

ஆறுமுகன் அன்று பகல் முழுக்க கனகி அருகிலிருந்து அழுதுகொண்டிருந்தான். கிழவருக்கும் ஆறுமுகனுக்கும் பசிக்கவேயில்லை அன்று. கிழவர் ஆறுமுகனிடம் யாழ்ப்பாணத்துக்கு படகில் போய் பாதிரியாரை கூட்டி வரட்டுமா என்றார்  ஆறுமுகன் எப்படியோ இன்றிரவு அவர் வந்துவிடுவார் காத்திருப்போம் என்றான். 

பேர்சிவல் பாதிரியார் இரவு ஒன்பது மணிக்கு வந்தார். கனகியின் சடலத்தைப் பார்த்து மயங்கி விழுந்தார். கிழவன் தண்ணீர் தெளித்து எழுந்ததும் இப்போது தான் மனமுடையாது இருக்கவேண்டும் ஆறுமுகனுக்காக என்ற ஞானம் அவருக்கு வந்தது. ஆறுமுகன் தன்னைக் கேட்டபடி கனகியையும் ஆறுமுகனையும் வடநாட்டுக்கு அனுப்பியிருந்தால் கனகி இன்றும் உயிரோடிருந்திருப்பாள் என்ற குற்ற உணர்ச்சி அவரை மிக வருத்தியது. 

கனகியின் கொலைக்கு நீதி கேட்கமுடியாது என்பது ஆறுமுகனுக்கு தெரியும். விசாரணையில் ஓடிவந்த காதலர்களுக்கு பாதிரியார கட்டப்படும் தேவாலய வளவில் அடைக்கலம் கொடுத்தது அம்பலமாகும். பாதிரியாரின் இங்கிலாந்து சபை அவர்மீது நடவடிக்கை எடுத்து அவரை இங்கிலாந்துக்கு திருப்பி அழைத்து அவரை அவமானப்படுத்தும் என்பது ஆறுமுகனுக்கு நன்கு தெரியும். நீதி கிடைத்தால் மட்டும் என் கனகி என்னிடம்  திரும்பி வருவாளா? அவள் வேதாகம தமிழ் மொழிபெயர்ப்பிலாவது வாழட்டும் என்று ஆசுவாசப்பட்டான் ஆறுமுகன். பாதிரியாரும் ஆறுமுகனும் நீதி விசாரணையைப் பற்றி பேசவே இல்லை. 

இரவு பத்து மணிக்கு பாதிரியாரும் ஆறுமுகனும் கனகியின் சடலத்தை காவிச்சென்று கிணற்றடியில் வைத்து குளிப்பாட்டினார்கள். கிழவர் தண்ணீர் அள்ளிக் கொடுத்தார். 

ஆறுமுகன் அவள் உடுத்தியிருந்த சேலையோடு அவளை பாயில் கிடத்தினான்  பாதிரியார் அறையை விட்டு வெளியேறினார். ஆறுமுகன் அவள் ஈர  சேலையை உருவிவிட்டு அவளுடலின் ஈரத்தை தன் சால்வையால் துடைத்தான். அவளின் ரத்தக் காயங்களை துடைக்கும்போது அவன் விம்மினான்  பிறகு தன்னோடு வழுக்கியாறு வழி அவள் ஓடிவரும்போது கட்டிய இளநாவல் காஞ்சிபுரப்  பட்டுப்புடவையை அவளுக்கு அணிவித்தான். அப்போது அவள் அணிந்திருந்த அனைத்து ஆபரணங்களையும் அவளில் சூடினான். 

பாதிரியாரரும் கிழவரும் உள்ளே வந்தார்கள். கனகிக்கு திருப்பொற்சுண்ணம் இடிக்க   இப்ப வசதியில்லை. அதையுணர்ந்து பாதிரியார்தான் திருவாசக பொற்சுண்ணம் பாடல்களை பாடுமாறு ஆறுமுகனைப் பணித்தார். ஆறுமுகன் மனமுருகிப் பாடினான். திருவாசகம் அவனைக் கொஞ்சம் தேற்றியது. பிறகு பாதிரியார் தன் கனகித் தங்காவுக்காக முழங்காலிலிருந்து ஜெபித்தார. 

பிறகு கனகியின் சடலத்தை ஒரு சாக்கில் போட்டுக்கட்டினார்கள். கனகியின் ஆபரணங்களை பாதிரியார் கழற்ற முனைந்தபோது ஆறுமுகன் அதனை மூர்க்கமாக எதிர்த்தான். பாதிரியார் அவன் வேண்டுகோள் படியே ஆபரணங்களுடன் சாக்கில் கட்ட அனுமதித்தார்  சாக்கில் புத்தகங்களே இருக்கின்றன எனக்காட்ட பாதிரியார் சில ஆங்கில வேதாகமப் பிரதிகளையும் கிழித்து உள்ளே போட்டார். சில பக்கங்களை வெளியே எட்டிப்பார்க்குமாறு சாக்கை கட்டினார். 

ஆறுமுகன் அப்போது கனகி தன் அழகிய பொன் கையெழுத்தால் நீல ஊற்றுப்பேனாவால் எழுதிய அத்தனை தமிழ்  மொழிபெயர்ப்பு வேதாகமப் பிரதிப் புத்தகங்களையும் பாதிரியாரிடம் எடுத்துவந்தான். ஆறுமுகனுடைய கையெழுத்தை விட அழகானது கனகியுடையவை. ஆறுமுகனுடைய கையெழுத்திலிருந்த அத்தனை வேதாகம செம்மைப்பிரதிகளையும் கனகி இந்த இருவாரத்திலும் தன் அழகிய கையெழுத்தில் புதிய பிரதிகளாக எழுதியிருந்தாள். 

பாதிரியாருக்கு இது புதினம். ஒவ்வொரு வேதாகமப் புத்தகங்களாகத் தேடி சாலமனின் பாடல் புத்தகத்தை எடுத்தார். 

“இது கனகி உனக்காக எழுதியது ஆறுமுகா. கனகியின் நினைவாக இதை மட்டும் நீ வைத்துக்கொண்டு உன் கையெழுத்தில் எழுதிய சாலமனின் பாடலைக் கொடு” என்றார். 

ஆறுமுகன் அப்படியே செய்தான். பாதிரியார் ஆறுமுகன் கொடுத்த  அனைத்து வேதாகம மொழிபெயர்ப்பு புத்தகங்களையும் ஒரு ட்றங்குப் பெட்டியில் போட்டுப் பூட்டியெடுத்தார். 

                                6

நள்ளிரவில் கனகியின் சாக்கு  சடலத்தை ஒரு நீளத்தடியில் போட்டு  காவிக்கொண்டு ஆறுமுகனும் பாதிரியாரும்  படகுத்துறை நோக்கி நடந்தார்கள். 

பாதிரியாரின் ஏற்பாட்டின் படி 5 வடநாட்டுப் படகோட்டிகள் காத்துக்கொண்டிருந்தார்கள்  கிழவருக்கு விடை கொடுத்தபின் படகு ராமேஸ்வரம் நோக்கிப் பயணப்பட்டது  

நடுக்கடலில் கனகியின் பூதவுடலை அடக்கம் செய்தார்கள். தவறாக அச்சிடப்பட்ட வேதாகப் புத்தகங்கள் கடலில் இடப்படவேண்டியவை என்று கடலோடிகளுக்கு கேட்கக் கூடியவாறு தமிழில்  பாதிரியார் சொன்னார்.

ஆறுமுகனும் பாதிரியாரும் கனகியைக் கடலில் போடும்போது தன்னையறியாது குழந்தைகளினதும் திருமணமாகாத பெண்களினதும்  சவப்பெட்டிகளே பாரமானவை என்ற பழைய இலத்தீன் சொலவடையை பாதிரியார் தன்னைமறந்து ஆங்கிலத்தில் உதிர்த்துவிட்டார்.  ஆறுமுகன் உடைந்துவிட்டான்.

கனகி அப்போது இருவாரக் கர்ப்பிணி என்பது ஆறுமுகனுக்குப் தெரியாது  பாதிரியாருக்கும் தெரியாது. 

இராமேஸ்வரத்திற்கும் நெடுந்தீவுக்கும் இடைப்பட்ட நடுக்கடலில் கனகி என்கிற கடற்கன்னி  பாடுவது இன்றும் மீனவர்களுக்கும் கடலோடிகளுக்கும் கேட்கும். பூவுலகில் ஒரு தேவதாசியாக(1827 – 1848) இக்கடற்கன்னி  வாழ்ந்தது வெறும் 21 வருடங்கள் மட்டுமே. ஆறுமுகன்(1822 – 1879) பிறகு திருமணமே செய்து கொள்ளவில்லை. தன்னுடைய 56 வயதில் ஆறுமுகன் ஆறுமுக நாவலராக இறந்தான். ஆறுமுகனின் இரகசிய உயிலின் படி அவனுடைய பூதவுடலும் அவன் எப்போதும் வைத்துப்பேணிய கனகியின் தமிழ் கையெழுத்துப் பிரதியான சாலமனின் பாடல் புத்தகத்தோடு  ஒரு வெள்ளிக்கிழமை இரவு கனகியை அடக்கம் செய்யப்பட்ட ராமேஸ்வரத்திற்கும் நெடுந்தீவுக்குமிடைப்பட்ட அதே நடுக்கடலில் அடக்கம் செய்யப்பட்டது. 

                              🧜‍♀️

நட்சத்திரன் செவ்விந்தியனின் சிறுகதைகள்

0. கொள்ளி

1. முள்ளும் மலரும்

2. முகாமுகம்

3. கர்னலின் காமம்




















  







Comments

  1. கனகி புராணம் படித்தேன். எனக்கு ஆறுமுகநாவலரையும் அவரது தமிழ்ப்பணிக்காக மட்டும், அவரது பிற்போக்கான தர்க்கமற்ற நம்பிக்கைகளுடன் ஏற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. புராணத்தின் ஆரம்பத்திலேயே அவரைக் கிழித்துக்காயப்போடும் ஆவேசம் தெரிகிறது. சுப்பையன் நெடுந்தீவுக்குட்போய் அவர்கள் வதியும் கொட்டகையுள் நுழைந்து ஆறுமகம் கனகியின் உரையாடலை ஒட்டுக்கேட்கும் இடங்கள் எம்.ஜி.ஆர் தன் படங்களில் எதிரியின் மாளிகைக்குள் புனைவுவேடத்தில் நுழைந்து சுவரோடு ஒட்டிநின்று ஒட்டுக்கேட்கும் காட்சிகளை நினைவுபடுத்தின. இதற்கு மேலும் விமர்சித்தால் ஒரு நண்பனை இழந்துவிடும் இடர்கழி இருப்பதால் இத்துடன் நிறுத்திவிட அனுமதிக்கவும்.

    ReplyDelete
  2. எந்தவொரு தாயாவது தன் மகனின் திருமணத்தைப் பின்போட அதுவரைக்கும் அவன் ஒரு வேசியை வைத்துக்கொள்ள அனுமதிப்பாளா என்பதுவும் நாவலில் எனக்குள்ள ஒரு பெரிய கேள்வி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

 யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், விரிவுரையாளர்களின்   கல்வி அறிவு மோசடிகள்

அவந்திகா: ஓர் அவல மனைவியின் வாக்குமூலம்