சேரனும் ஜெயன் தேவாவும்: இரு போலி பொய்மான்களின் கதை

 


By நட்சத்திரன் செவ்விந்தியன்

தமிழினியின் கணவர் ஜெயன் தேவாவுக்கு முகநூல் அஞ்சலி ஒன்றுக்கு பின்னூட்டமிட்ட கவிஞர் சேரன் பின்வருமாறு எழுதியிருந்தார்.

“தோழரல்லர். போலி. பொய்மான். முன்னொருகாலத்தில் கொஞ்சம் விடுதலை வேட்கை இருந்தமையால் துயரில் பங்கெடுக்கிறேன்.”

மேலும் தொடர்ந்த பின்னூட்டங்களில் சேரன் அறம் பற்றியும் பேசியிருந்தார். 



ஜெயன் தேவாவைவிட மிக மோசமான போலியும் பொய்மானுமான அறமற்ற சேரன் ஜெயனை குற்றஞ்சாட்டுவது நம்காலத்தின் மிகப்பெரிய வரலாற்று  மோசடி

இருவருக்குமே பல ஒற்றுமைகள் இருக்கின்றன. சேரனும்(1958) ஜெயனும்(1960) சமகாலத்தவர்கள். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். சேரன் பட்டப்படிப்பை நிறைவுசெய்து பின் கலாநிதிப்பட்டம்வரை பெற்றவர். ஜெயன் முதல் பட்டப்படிப்பையே நிறைவு செய்யாதவர். இருவரும் பெண் பொறுக்கிகள்(Womaniser). அறத்தை அடகுவைத்து தம்மை முன்னிறுத்திய Narcissistic Personality disorder குறைபாடுள்ளவர்கள். சேரன் வாழ்வில் வெற்றிகரமான Sociopath ஆக கரையேறியவர். ஜெயன் ஒரு தோற்ற Sociopath.

ஜெயனின் மரணம் மிக அவலமானது. இங்கிலாந்தில் தன் வசிப்பிடத்தில் யாருமறியாது மரணமடைந்தார். தனிமையில் அவர் இறந்ததே சில மணிகளோ நாட்களோ சென்றே தெரியவந்தது. இப்படி அவலமாக இறந்த ஜெயன் சேரனுக்கு யாரி கிடையாது. இப்படி இறந்தும் சேரன் மிக வன்மத்தோடு ஜெயனை பகிரங்கமாக  தாக்குவதற்கான காரணம் என்ன? 

இரண்டு Sociopath களுக்கிடையிலான வன்மம் தீர்க்கும் தொழில் போட்டியாகவே அநியாயமாக சேரன் இதனை எதிர்கொண்டார். சேரன் மனிதாபிமானமும் குறைந்தபட்ச குற்ற உணர்ச்சியும் அறமும் கொண்ட சாதாரணமான மனிதனாக இருந்திருந்தால் இவ்வளவு மோசமாக ஜெயனை தாக்கியிருக்கவேண்டிய தேவையில்லை. ஜெயனைப்போன்ற அதைவிடக்கூடிய சிறுநீரகம் இருதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டு அவற்றுக்கு சிகிச்சை பெற்றுவருபவர்தான் சேரனும். 

சேரனுடைய முதல் Girlfriend சேரனைவிட இருவயது கூடிய  யாழ் பல்கலைக்கழக மாணவியும் கவிஞையுமான ஊர்வசி(யுவனேஸ்வரி). சேரன் அவரைக் காதலித்து அனுபவித்துவிட்டு அவர் வேண்டுகோளை தட்டிக்கழித்து பல தடவைகள்  அவரைத் திருமணம் செய்வதைத் தவிர்த்து வந்தார். ஒரு தடவை திருமணஞ்செய்ய ஒப்புக்கொண்டு விட்டார். ஊர்வசி வீட்டில் ஏற்பாடுகள், பலகாரங்கள்  செய்து காத்திருந்தால் சேரன் திருமணத்திற்கு வரவில்லை. ஊர்வசி கடைசியில் “முற்போக்கு பேசி ஏமாற்றுகிற ஆளா நீயும்” என்று சேரனை பதிவுத்திருமணத்திற்கு இணங்க வைத்தால் அன்று “ பதிவு நடக்கும் நாள்தான் எம் பிரிவுநாளும்”  என்று சொல்லி அதற்குப்பிறகு ஊர்வசியோடு உடலுறவு கொள்வதை விட்டு விலகினார். உடலுறவை வைத்து சேரன் செய்த மிரட்டல் இது.( இந்த தகவலை எனக்கு அதில் தவறோ மிரட்டல்  என்கிற பாரதூரமான குற்றமோ இல்லை என்பதை அறியாது என்னிடம் ஒப்புவித்தவர் சேரனின் தங்கையும் அவரை நியாயப்படுத்துபவருமான பெண்ண்ணியல்வாதியும் கவிஞையுமான ஔவை. (நான் சேரனை விமர்சிக்கதொடங்கியபின் என்னை ஒரு மனநோயாளி என்ற அவதூறை யாழ்ப்பாணத்தில் போருக்குப்பின் வெளிவந்த இலக்கிய இயக்கமான புதிய சொல்லிடம் பரப்பமுயன்று தோற்றவரும் இந்த ஔவைதான்) தன்னை திருமணஞ்செய்த சேரன் தன்னிடம் திரும்பிவருவார் என்று காத்திருந்த ஊர்வசி ஆசிரியராகி தொழில் செய்தபோது கணவனின் பெயரான சேரன் ரீச்சர் என்ற பெயராலேயே மாணவர்களால் அழைக்கப்பட்டார். 

                       

                             ஊர்வசி 2017ல்                        


ஜெயன் முதலில் திருமணஞ்செய்தது கரவெட்டி பண்டிதர் வீரகத்தியின் மகளை. அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை  பிறந்தது. ஜெயன் குடும்பத்தை விட்டு விலகினார். வேறொரு அழகிய திறமையான போருக்கு பின்னாளில் யாழ் பல்கலைக்கழக நூலகராக வந்த பெண்ணோடு இந்தியாவில் ஒரு உறவைத்தொடர்ந்தார். 

சேரனும் ஜெயனும் இணையும் இன்னொரு புள்ளி அவர்கள் சார்ந்த இடதுசாரி விடுதலை இயக்கமான NLFT. 

புலிகள் மாற்று இயக்கங்களை அழித்து தடைசெய்தபின் ஜெயன் இந்தியாவில் நிர்மலா ராஜசிங்கத்தின் துணைவரான ராகவன்(Chinniah Rajeshkumar) போல ஒரு ஆட்கடத்தல் முகவர்(ஏஜெண்ட்) ஆனார். இக்காலத்தில் ஜெயன் செய்தவை பற்றிய பல குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஒரு கட்டத்தில் தொழில் மோசடிகளால் அவர் இந்தியாவை விட்டு ஓடவேண்டிய தேவை வந்தது. அப்போது ஜெயனுக்கு வயது 35.

35 வயதில் 1995ல் லண்டனில் செற்றிலான ஜெயன் சில வருடங்கள் மட்டுமே வேலை செய்தார். அவரின் வளரும் மகளுக்கு பின்னாட்களில் அவர் பணம் அனுப்புவதை கைவிட்டார்.  வேலை செய்யாது இங்கிலாந்து அரச கொடுப்பனவுகளை எடுத்துக்கொண்டு லண்டன் தமிழ் அமைப்புக்கள் சார்ந்து சொகுசாக வாழப்பழகிக்கொண்டார். அவருக்கு எப்போதுமே ஒரு போஷகர் தேவைப்பட்டார். தமிழ் நடுவம் மைய வரதகுமார், நியூகாம் தமிழ்ச்சங்க பத்மநாம ஐயர் ஆகியோரை ஜெயன் அண்டிப்பிழைத்த வரலாறு இதுதான். 

ஜெயன் மரணமடைந்தபின் இப்போது பலர் ஜெயன் எப்போதும் கொள்கை சார்ந்து புலிகளை விமர்சிப்பவராக இருந்தார் என்று எழுதுகிறார்கள். அதில் உண்மையில்லை. தன் பிழைப்புக்காக புலிகள் அழிவதற்கு முதலே, சேரன் புலிகளோடு 2000ல் சமரசம் செய்வதற்கு முதலே புலிகளோடு சமரசமானவர் ஜெயன். 

பெண் பொறுக்கித்தனத்தில் ‘அளவிலும் தரத்திலும்’(‘Quality and Quantity) அதிகளவான பெண்களை ஆட்டையைப் போட்டதில் யார் ஹீரோ என்றால் சந்தேகமில்லை அது கவிஞர் சேரன்தான். சேரன் ஒரு Professional Womanizer. 2000ல் சேரன் என்னோடு நட்பாக இருந்த கடைசி ஆண்டில் , சேரன்  தன் 42வது வயதில் தான் அதுவரை 44 பெண்களுடன் உறவிலிருந்ததாக ஒரு மின்னஞ்சல் எனக்கு எழுதியிருக்கிறார். அந்தளவு “சீன்” எல்லாம் ஜெயனுக்கு கிடையாது  பொதுவெளியில் மாமி என்று அழைத்த மாமி உறவான இன்னொருவரின் மனைவியோடெல்லாம் உடலுறவு கொண்ட வரலாறு சேரனுடையது. தன்னைவிட வயதுகூடிய 40 வயதுக்குட்பட்ட பெண்களில் சேரன் கொண்டிருந்த காமத்தை பெண்பொறுக்கிகளின் இலக்கணத்தில் வைத்துப் புரிந்துகொள்ளலாம். 

அறம்சார்ந்தும்  அளவிலும் தரத்திலும்  சேரனா ஜெயனா கடைகெட்டவர் என்றால் அதுவும் சேரனே.  இருவரும் அறம் பிழைத்தவர் என்றாலும் சேரன் அன்ரன் பாலசிங்கம் போல அசல் புத்திஜீவி. அசல் சமூகவிஞ்ஞானி.  ஜெயன் இதிலும் சேரனுக்கு யாரி இல்லை. ஜெயனுக்கு நம்  மண்டை ஸ்ரெனோகிராபர் சாரு நிவேதிதாவுக்கு தெரிந்தளவு ஆங்கிலம் தெரியும். ஒரு ஆங்கிலப் பிரதியைப் படித்து புரிந்துகொள்வார்.  ஆனால் சாருவால் முடிகிற அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்று பேசவோ எழுதவோ ஜெயனால் முடியாது. 

ஜெயன் அழகான பணக்காரப் பெண்களை இலக்குவைத்து மாட்டுவார். தான்  தொழில் செய்யாது அப்பெண்ணின் உழைப்பில் ஒட்டுண்ணியாக வாழமுற்படுவார். அவ்வுறவை துர்ப்பிரயோகம் செய்வார். இவரது தவறை அப்பெண் சுட்டிக்காட்டினால் அவ்வுறவைத் துண்டித்து இன்னொரு பெண்ணோடு உறவை ஆரம்பிப்பார். திருமணஞ்செய்து ஒரு மகள் பிறந்தபின் லண்டன் சென்ற பின் மனைவி மகளை லண்டனுக்கு கூப்பிடவில்லை. மகளுக்கு காசு அனுப்பவுமில்லை. காசு அனுப்பாததற்கு குதர்க்கமான நியாயமும் சொல்வார். தான் உறவைத்துண்டித்தபின் அப்பெண்களைப் பற்றிய மோசமான பொய் வதந்திகளைப் பரப்புவார். 

வரலாறு ஒரு  மாயக் குகையோ என்று நம்பக்கூடிய தருணத்திலேயே நான் ஜெயனை  சிட்னியில் சந்தித்தேன். முள்ளிவாய்க்கால் இறுதியுத்த காலமான 2009 ஏப்ரல் மாதத்தில். அப்போது ஜெயனுக்கு 49 வயது. மச்சக்காளையான அவரது அதிஸ்டம் தீர்ந்துவிட்டது. 

சிட்னி ஒஸ்றேலியாவில் ஜெயனது சொந்த மச்சாள் ஒருவர் இருந்தார். அவரது கணவர் இன்னொரு பெண்ணோடு உறவைத்தொடங்கி அவரைவிட்டு விலகியபின் ஜெயன் மச்சாளோடு தொடர்ப்கொண்டார். கணக்கியலாளரான மச்சாள் பொருளாதாரத்தில் வசதியாக இருந்தவர். மச்சாளோடு உறவைத்தொடர்ந்து கொண்டு சிட்னிக்கு வந்து மச்சாளோடு குடியேறினார். ஒன்றாக வாழ்ந்த சில வருடங்களில் ஜெயன் வேலைக்குப் போகவே இல்லை. மச்சாள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஜெயன் கேட்கவில்லை. இவரது துஸ்பிரயோகம் தாங்கமுடியாது கடைசியில் மச்சாள் இவரைக் கலைத்துவிட்டார். அப்போதுதான் ஜெயனை நான் சிட்னியில் சந்தித்தேன். ஜெயனுக்கு வேறு வழியிருக்கவில்லை. இலண்டனுக்கு போனால் அரச கொடுப்பனவுகளாவது கிடைக்கும் என்று லண்டனுக்குப்போனார். அவர் போவதற்கு முதல்நாள் இரவு என்னோடுதான் தங்கினார். நான் தான் அவரை விமானநிலையத்துக்குச் சென்று அனுப்பிவைத்தேன். பிறகு என்னோடு முரண்பட்டு என் தொடர்பைத் துண்டித்தார். 

நான் ஜெயனோடும் என் நண்பர்களோடும் மதுவருந்திய அந்த ஒரே இரவில் தான் அவரின் இடதுசாரித் தந்தையான மகாதேவா கொல்லப்படுவதற்கு காரணம்  தமிழ்மக்கள் பாதுகாப்பு பேரவை இயக்கத் தலைவர் தோழர் பாலன் தான் என்ற உண்மையையும் சொன்னார். 

கரவெட்டியில் ஜெயன் தேவாவின் குடும்பம் செல்வாக்கானது. வசதியானது. ஜெயன் என்கிற ஜெயக்குமாரனின் தந்தை மகாதேவா ஒரு இடதுசாரி. அவருக்கு நிறைய இடதுசாரி சிங்கள நண்பர்கள் இருந்தார்கள். ஈழப்போராட்டம் தொடங்கியபோது பல இளைஞர்கள் கைது செய்யப்படுகிறபோது தனது சிங்கள நண்பர்களின் தொடர்பால் கைது செய்யப்பட்டவர்களை இராணுவ முகாம்களுக்குச் சென்று விடுவிக்கக் கூடியவராக மகாதேவா இருந்தார். இதனையிட்டு அப்போது கரவெட்டியிலிருந்த இயக்கமான தமிழ்மக்கள் பேரவை அவரைக்கண்டு அஞ்சியது. சந்தேகித்தது. அவ்வியக்கத் தலைவரான பாலன் தோழர் மகாதேவாவைக் கொல்லும் ஒப்பந்தத்தை தம்பாப்பிள்ளை மகேஸ்வரனிடம் கொடுத்தார். 

மகாதேவா தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர்களில் ஒருவரான மு. சிவசிதம்பரத்தின் நெருங்கிய உறவினர். அயல் வீட்டுக்காரர்.

மகாதேவாவைக் கொல்ல வந்த தம்பா குறூப் கொலைஞர்களுக்கு மகாதேவாவைத் தெரியாது. சிவசிதம்பரம் வீட்டுக்குச் சென்று அவரா மகாதேவா என்று மிரட்டியிருக்கிறார்கள். பயத்தில் வேறு வழியின்றி சிவசிதம்பரம் அயல்வீட்டைக் காட்டியிருக்கிறார். கொலைஞர் அவரை நெல்லியடிச்சந்திக்கு கூட்டிச்சென்று மண்டையில் போட்டிருக்கிறார்கள். 

                   பாலன் தோழர்                        ஜெயன் தந்தை கொலையின்          சிற்பி 



ஜெயன் சொன்னதை அதன்பிறகு நான் பல நம்பகரமான சாட்சிகளிடம் விசாரித்தேன். அவர்கள் அனைவரும் இக்கொலையைத் திட்டமிட்ட Mastermind பாலன் தோழரே என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். 

பிறகு போர் முடிந்தபின் தமிழினி புனர்வாழ்வுபெற்று விடுதலையாகி வந்தார். தமிழினி ஒரு எழுத்தாளராகி முகநூலுக்கு வந்தார். லண்டனில் வேலைசெய்யாது முகநூலே கதியென்று இருந்த ஜெயன் தமிழினியோடு முகநூல்வழியாக தொடர்பு எடுத்தார். ஜெயனைவிட 12 வயது இளமையானவர் தமிழினி. தன் நாற்பது வயதில் மணவாய்ப்புகள் இல்லாதிருந்த முன்னாள் போராளியான அபலை அவர். ஜெயனின் வரலாறு அவருக்கு தெரியாது. உண்மை இவ்வாறு இருக்க தமிழ் நடுவர் மைய வரதகுமாரோடு சேர்ந்து தமிழினியின் விடுதலைக்காக தான் உழைத்ததாக ஜெயன் தேசம் நெற்றுக்கு வழங்கிய பேட்டியில் அதுவும் வரதகுமார் இறந்தபின் பச்சைப்பொய் சொல்கிறார். தமிழினியின் புத்தகத்திலும் திருமணத்தை பற்றியோ ஜெயன் தன் விடுதலைக்கு உழைத்ததாகவோ எந்த தகவலுமில்லை. 

தமிழினியைத் திருமணஞ்செய்ததை ஜெயன் இரகசியமாகவே வைத்திருந்தார். தமிழினியின் முகநூலும் அவரது சொந்தப்பெயரில் இருக்கவில்லை. தமிழினி இறந்தபின்னரே தமிழினி திருமணஞ்செய்த விடயம் பொதுவெளிக்கு வந்தது. ஜெயன் தமினினியை இங்கிலாந்துக்கு அழைக்கவில்லை. ஊருக்குப்போகிறபோது ஆட்டையைப் போடுகிற விடுமுறை மனைவியாகவே தமிழினியை ஜெயன் வைத்திருந்தார். இப்படிப் பல வெளிநாட்டுத் தமிழர்கள், புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் ஊரில் விடுமுறை மனைவி அல்லது வைப்பாட்டி  வைத்திருக்கிறார்கள். இப்போது கனடாவில் வாழும் இளங்கோ(சுப்ரமணியம் ரவிச்சந்திரன்) என்ற முன்ளாள் விடுதலைப்புலித் தளபதியும் ஊரில் ஒரு பெண் எழுத்தாளரை திருமணஞ்செய்து பிள்ளைகொடுத்து  அவரை கனடாவுக்கு அழைக்காமல் விடுமுறை மனைவியாக வைத்திருக்கிறார். 

      ஜெயன் தமிழினி இறந்தபின் தமிழினியை வைத்து பிரபல்யம் தேடினார். தமிழினியின் புத்தகம் அச்சில் வரக்காரணமாக இருந்தவர் ஜெயன் என்பது உண்மை. ஆனால் இது தமிழினி எழுதிய புத்தகமல்ல, ஜெயன் எழுதியது, எடிட் பண்ணியது என்கிற புலிப் பாசிச வெறியர்களின் குற்றச்சாட்டில் ஒரு துளி உண்மைகூட இல்லை. ஒரு கூர்வாளின் நிழல் என்பது அசலான புத்தகம். அதில் எழதிய தகவல்கள் உண்மை என்பதை அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். எந்த தகவல் பிழையோ வாதங்களோ இதில் இருப்பதாக நேர்மையான அறிஞர்கள் யாரும் சுட்டிக்காட்டவில்லை. மேலும் தமிழினி புலிகளில் வைக்கின்ற விமர்சனங்கள் மென்மையானவைதான். புலிகளின் முதல் நிதியமைச்சரான கணேசன் ஐயர் எழுதிய  “ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்” புத்தகத்திலும் பிரபாகரனின் மருத்துவரான பேராசிரியர்  மகேஸ்வரன் உமாகாந் எழுதிய “ஈழத்தின் வலி” என்ற புத்தகத்திலும் இருப்பது போல புலிகள் மீதான மிகக்கடுமையான விமர்சனங்கள் இப்புத்தகத்திலில்லை. ஜெயன் எழுதியதாகவோ எடிட் பண்ணியதாகவோ கூர்வாளின் நிழல் இருந்திருந்தால் ஜெயன் மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்திருப்பார். 

தமிழினி தன் முகநூலூடாக தமிழகப் பேராசிரியர் அ. ராமசாமி எழுதியயோடும் தொடர்பிலிருந்தவர். அ.ராமசாமியும் தமிழினி தன்னோடு உரையாடிய தகவல்களின் அடிப்படையில் இப்புத்தகம் தமிழினியே எழுதியது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். 




ஜெயக்குமாரனின் கழங்க வரலாற்றைப் பயன்படுத்தி ஒரு கூர்வாளின் நிழலை நம்பகரமற்றதாக மாற்ற முயன்றவர்கள் தோற்றுவிட்டார்கள். இது ஒரு அசலான புத்தகம் என்பதால்தான் காலச்சுவடு பதிப்பகமூடாக வெளிவந்து அதிகப் பிரதிகள் விற்பனையானது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. 

ஜெயன் மீதான சேரனின் குரோதத்திற்கான காரணங்களிலொன்று தமிழினியின் புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகமூடாக வெளியிட நடந்த பேச்சுவார்த்தைகளின் போது புத்தகத்தின் பதிப்புரிமை பெற்ற ஜெயன் விதித்த ராயல்ரி முதலியன சம்பந்தமான கட்டுப்பாடுகள். இதன்போது காலச்சுவட்டின் இலக்கியத்  தரகராக சேரன் செயற்பட்டார். கடந்த ஆண்டு கிளப் ஹவுசில் ஜெயன் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி காலச்சுவடு நடந்துகொள்ளவில்லை என்றும் தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார். 

இன்னொரு பெண் சார்ந்த தொழில் போட்டி அடிப்படையிலான பொறாமையும் காரணமாக இருக்கலாம். யாழ் பல்கலைக்கழக  பிரதம நூலகரான  அமரரான சிறிகாந்தலட்சுமியோடு(1960)  ஜெயன் உறவிலிருந்தவர். இப்பெண் சேரனின் றேடாருக்குள்ளும் இருந்தவர். இறக்கும்போதும் பேரழகியாக இருந்த தனக்கு கிடைக்காத பெண் ஜெயனுக்கு கிடைத்துவிட்டாள் என்பது சேரனின் பொறாமை. 

       ஸ்ரீகாந்த லட்சுமி: அறுபதிலும் அழகி


ஜெயன் அளவுக்கு பெண்களில் ஒட்டுண்ணியாக சேரன் வாழாவிட்டாலும் குறைந்தது ஒரு பெண்ணில் சேரன் ஒட்டுண்ணியாக வாழ்ந்த ஆதாரம் இருக்கிறது.  அவர் யாருமல்ல. சேரனின் தற்போதைய உத்தியோகபூர்வ மனைவியும் சேரனின் குழந்தைகளின் தாயுமான வழக்கறிஞரும் அக்கடமிக்குமான ஒரு யூதப்பெண்மணி. 

கவிஞை ஊர்வசி சேரனின் முதல் திருமணம். இந்த யூதப்பெண் சேரனின் இரண்டாவது திருமணம். இற்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன் தன் பெண் பொறுக்கித்தனத்தின் பொற்காலத்திலிருந்தே இப்பெண்ணையே தான் மணஞ்செய்யவிருப்பதாக சேரன் சொல்லிவந்தார். அவரையே மணஞ்செய்து பிள்ளைபெற்றார். இப்பெண் ஹிலரி கிளின்ரன் போன்றவர். கிளின்ரன் தனக்கு விசுவாசமாக இல்லாவிட்டாலும் ஹிலறி எவ்வாறு கிளின்ரனுக்கு விசுவாசமாக இருந்தாரோ அவ்வாறே சேரனின் மனைவியும் சேரன் மேய்வதற்கு பூரண சுதந்திரம் கொடுத்து சேரனுக்கு விசுவாசமாக இருந்தவர். இவ்வுறவு பரஸ்பர  open relationship அல்ல. ஓப்பிண் றிலேசன்சிப்புக்களை பெண்களால் தாங்க முடிந்தாலும் ஆண்களால் தாங்கமுடியாது. குறிப்பாக பொம்பிளைக்கள்ளனான ஆண்களால். சேரன் கனேடிய வதிவிட/ குடியுரிமை பெறுவதற்கு முன் கலாநிதிப்பட்ட மாணவராக இருந்தபோது இப்பெண்ணின் வீட்டிலேயே தங்கி வாழ்ந்தார். இப்பெண்ணோடு படுத்த படுக்கை அறைக்கட்டிலியேயே இப்பெண் ஊரில் இல்லாதபோது தன் மற்றக்காதலிகளைக் கொண்டு வந்து புணர்ந்திருக்கிறார். 

ஜெயன் அறமற்றவர்தான். ஆனால் ஜெயனுக்கு அறமில்லை என்றுபேச சேரறுக்கு என்ன தார்மீகம் இருக்கிறது? 

2000மாம் ஆண்டுவரையும் பாசிசப்  புலிகளை விமர்சித்த  நேர்மையான காத்திரமான விமர்சகராக இருந்த சேரன் இரண்டாயிரத்தில் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தால் விலைக்கு வாங்கப்பட்டு பாசிசப் புலிகளின் லாபியிஸ்டாக சோரம் போனவரே. அறம் என்கிற அழகான தமிழ் சொல்லை உச்சரிக்கவோ எழுதவோ சேரனுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது..சேரனுக்கும் ஜெயனுக்குமிடையில் ஆறு வித்தியாசங்கள் தான் கிடைக்கும்.

அறம்பாடுவது வேறு. அறப்படங்காட்டுவது வேறு.

தொடர்பான கட்டுரைகள்

1. பாலசிங்கத்தின் பாணபத்திர ஒணாண்டி சேரன்

2. புண்டை ஆண்டியார் கவிஞர் சேரன்

3. ஈழப்பெண்டிர் புரட்சி : Me Too




Comments

Popular posts from this blog

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

 யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், விரிவுரையாளர்களின்   கல்வி அறிவு மோசடிகள்

அவந்திகா: ஓர் அவல மனைவியின் வாக்குமூலம்