யார் இந்த யதார்த்தன்

 


By நட்சத்திரன் செவ்விந்தியன் 

கடந்த இருவாரங்களுக்கு மேலாக விதை குழுமம் மீது அதன் உறுப்பினர்கள் மீதான பாலியல் குற்றங்கள் மற்றும்  பாலியல் சுரண்டல்கள் அடிப்படையிலான குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக வைத்து பல பெண்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

ஒரு  முற்போக்கான சமூக செயற்பாட்டாளர் அமைப்பாக அறியப்பட்ட விதை குழுமத்தின் தலைவர் கிரிசாந் சிவசுப்ரமணியம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தன் இணையத்தில் அளித்த பதில் கட்டுரைகள் அதிர்ச்சியூட்டுமளவுக்கு மட்டும் இருக்கவில்லை. அவை தலைவர் கிரிசாந் தன்னையே குற்றவாளியாக்கும் அளவுக்கு (Self incriminating) இருக்கின்றன.

இதைத்தொடர்ந்து Jaffnafashion.com இணையத்தின் புலனாய்வுப் பிரிவு விதை குழுமத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களின் பட்டியலை தயாரித்தது. இதில் மூவரின் பெயர்கள் முதலிடத்தில் வந்தன. முதலில் வந்த பெயர் யதார்த்தன். 

பின்வருவது நமது இணையத்தின் புலனாய்வுப் பிரிவு சேகரித்த யதார்த்தனின் கோப்பு. 

எப்போது, எங்கே இருவரும் சந்தித்தார்கள் என்கிற தகவல்கள் நமது குழுவுக்கு இன்னமும் வந்துசேரவில்லை. கிரிசாந்தை சந்திக்கும்போது யதார்த்தன் மட்டரகமான வைரமுத்து கவிதைகளையே படித்துக் கொண்டிருந்தார். கிரிசாந் தான் தரமான தமிழ்  இலக்கியத்தை யதார்த்தனுக்கு அறிமுகப்படுத்தினார். சுய படிப்பாளியாக வளர்ந்துகொண்டிருந்த கிரிசாந்தே சமகாலத் தமிழ்ப் பதிப்பகங்களால் வெளியிடப்படும் புனைவு மற்றும் புனைவு சாரா புத்தகங்களையும் எழுத்துக்களையும் யதார்த்தனுக்கு அறிமுகப்படுத்தினார். 

கிரிசாந் இலங்கைப் பல்கலைக்கழகமொன்றில் படிப்பதற்கு தேர்வாகவில்லை. யதார்த்தன் யாழ் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டப் படிப்பு  படிக்க தேறினார். 

ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன் விதை குழுமம் என்கிற பதிவு செய்யப்படாத செயற்பாட்டாளர்களின் அமைப்பு கிரிசாந்தால் ஆரம்பிக்கப்படுகிறது. அப்போதிலிருந்து இன்றுவரை விதை குழுமத்தின் இரண்டாவது தலைவராக அறியப்படுபவர் யதார்த்தன். ஆனால் ஆரம்ப காலங்களில் கிரிசாந்துக்கும் யதார்த்தனுக்குமான உறவு சீராக இருக்கவில்லை. 

விதை குழுமம் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை பதிவு செய்யப்படாத அமைப்பு. அதனால் அவ் அமைப்புக்கு யாப்போ சனநாயக விழுமியங்களோ இருக்கவில்லை. சில புலம்பெயர் தமிழர்கள் இவ்வமைப்பை நல்லதுக்கோ கெட்டதுக்கோ தம் நலன்களுக்கேற்ப வைத்திருந்து ஆட்ட முயன்றார்கள். இதில் குறிப்பிடத் தக்கவர்கள் இருவர்.

1. சுவிஸ்ஸில் வாழும் புலம்பெயர் ஈழ எழுத்தாளர் சயந்தன். 

2. கனடாவில் வாழும் அருண்மொழிவர்மன்

(இவ்விடயம் இங்கு குறிப்பிடக் காரணம் விதை குழுமத்தின் இன்றைய சீரழிவுக்கு இவர்களும் பொறுப்பு கூறவேண்டியவர்களே என்பதற்காகவே)

                             சயந்தன்



சயந்தனின் முதலீட்டில் விதை குழுமம் தொடங்கியதே புதிய சொல் என்கிற இலக்கிய சஞ்சிகை. முதலிட்டாலும் ஆட்களையோ பெண்களையோஓ உசார் படுத்த வலுவில்லாதவர் சயந்தன். (சயந்தனை உசார் படுத்தியது யார் என்பது இக்கட்டுரைக்கு பொருந்துமற்ற தகவல் என்பதால் அப்பெண்ணின் பெயர் தவிர்க்கப்படுகிறது) சயந்தன் அருண்மொழிவர்மனை புதிய சொல்லுக்கு Proof Reader ஆகவே அறிமுகப்படுத்தினார்.

அந்த Proof Reader அருண்மொழிவர்மன் மிக விரைவிலேயே விதை குழுமத்தை உசார் படுத்தி எடுத்துவிட்டார். தானே புதிய சொல்லின் பிரதம ஆசிரியர் என்று அருண்மொழி வர்மன் முகநூலில், கூவுமளவுக்கு "நெலம" இறுகியது.

                  அருண்மொழிவர்மன் 


இந்த வரலாறு அடுத்த Jaffnafashion.com கட்டுரைகளில் வரும். 

இப்போதைக்கு யதார்த்தனைப்பற்றிய சென்சிற்றான தகவல்கள். 

யதார்த்தன் ஒரு பொம்பிளைக்க்கள்ளர்(Womaniser). அவர் ஒரு பிறைவேற் சிட்டிசனாக இத்தனை பெண்களை ஆட்டையப் போட்டிருந்தால் அது அறம் இல்லாவிட்டாலும் அதைப்பற்றி எழுத நமக்கு அதிகாரம் கிடையாது. 

ஆனால் அவர் ஒரு Public figure. புத்தகஜீவி. எழுத்தாளர்.  குறிப்பிடத் தக்க ஒரு நாவலான நகுலாத்தையின் ஆசிரியர். விதை குழுமத்தின் முன்னணி உறுப்பினர். சமூகச் செயற்பாட்டாளர். யதார்த்தன் தன்னை நல்லவராகவும் வல்லவராகவும் காட்டி பெண்களை மடக்க தான் ஒரு விதை குழும சமூக செயற்பாட்டாளர் என்பதைப் பயன்படுத்துகிறார். விதை குழுமம் பெண்ணுரிமை, பெண் விடுதலை பற்றிப் பேசுமாம். இதன் முற்போக்கான பிரசங்கங்களைக் கேட்டு விதை குழும நிகழ்வுகளுக்கு வரும் பெண்களை வேலியே பயிரை மேய்வது போல யதார்த்தனும் மற்ற விதைகுழும செயற்பாட்டாளர்களும் ஆட்டையப் போடுவார்கள். அப்பெண்கள் மீது பாலியல் மற்றும் நிதிச்சுரண்டல் செய்வார்கள். அதன் பொம்மைத் தலைவர் விதை குழுமத்தில் தன் ஆயுட்காலத் தலைவர் பதவியைக் காப்பாற்ற தன் தலையைக் கொடுத்தே யதார்த்தன் முதலியோரை நியாயப்படுத்துவார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் போது விதை குழும உறுப்பினராக இருந்த யதார்த்தனின்  முதல் காதலியாக இருந்தது சக யாழ் பல்கலைக்கழக மாணவியாக இருந்த ஒரு முஸ்லீம் பெண். அப்பெண்ணோடு உறவிலிருந்த காலப்பகுதியிலேயே அவளுக்கு விசுவாசமில்லாமல் யதார்த்தன் வேறு பெண்களோடும் உறவிலிருந்தார். இவ்விடயம் விதை குழுமத் தலைவர் கிரிசாந்தின் கவனத்திற்கு வந்தபோது  அவர் அப்போது புதிய சொல் என்கிற விதை குழுமத்தால் வெளியிடப்படும் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலிருந்த யதார்த்தனை அதிலிருந்து அகற்றினார். 

விதை குழுமத்தை அப்போது 'வைத்திருந்த' அருண்மொழிவர்மன் எழுத்து வடிவில் மின்னஞ்சலில் யதார்த்தன் ஆசிரியர் குழுவிலிருந்து விலக்கப்படுகிறார் என்பதை தட்டச்சு செய்து அனுப்பினார். பிறகு சில காலம் விலக்கப்பட்ட  யதார்த்தனும் தலைவர் கிரிசாந்தும் பேசிக்கொள்ளவில்லை.

இன்று கிரிசாந் யதார்த்தன் விலக்கப்பட்டதை மூடி மறைக்கிறார். யதார்த்தன் விலக்கப்படவில்லை தானாகவே விலகினார் என்று  பச்சைப்பொய் சொல்கிறார். பிறகு தானாகவே வந்து இணைந்தாராம். இன்றும் அருண்மொழிவர்மனிடம் யதார்த்தனை விலக்க அவர் எழுதிய கடிதம் இருக்கிறது. தன்னை நல்லவராகக் காட்ட இன்று முயலும்  அருண்மொழிவர்மன் அக்கடிதத்தை இப்போது வெளியிடுவது அவருக்கு நல்லது.

பின்னர் யதார்த்தனின் பொம்பிளைக்களவுகள் சங்கிலித் தொடராக நீண்டது. தன்னை நியாயப் படுத்த சில திறமுறைகளையும்(strategy) வகுத்துக்கொண்டார்.  அவரது முதல் திறமுறை  உத்தியோகபூர்வ காதலியாக ஒருவரை வைத்துக்கொள்வது. அதே சமயம் பல சாதாரண casual உறவுகளையும் தொடர்வது. உத்தியோக காதலியிடம் மாட்டுப்படும் போது 

"நான் உன்னைத் தான் கட்டுவேன். எனக்கு நீதான் வேண்டும். நான் பலவீனமானவன். எனக்கு சலரோக/சக்கரை வியாதி இருக்கு. ரத்தத்தில் சீனி குறைந்தால் நான் எக்கணத்திலும் இறந்து விடுவேன் என்று காதலி முன் அழுது மாய்மாலம் செய்வது. 

இந்த திறமுறை நீண்டகாலம் வேலைசெய்யவில்லை. சுதாரித்த காதலி யதார்த்தனின் உண்மை முகம் அறிந்து விலகிச் சென்றுவிட்டாள். 

அப்பெண்ணின் காதலனாக யதார்த்தன் இருந்தபோதே அவனுக்கு குறைந்தது பத்து  பாலுறவுகள். இன்று குறைந்தது 40 க்கு மேற்பட்ட பாலுறவுகள். A textbook womaniser. 

இரண்டாவதாக யதார்த்தன் பயன்படுத்திய திறமுறை தன்னை நல்லவனாகக் காட்ட உத்தியோக பூர்வமாக ஒரு காதலியை திருமணம் செய்தது. ஒரு Public Figure ஆன யதார்தனுக்கு முகநூல் மட்டுமில்லை. ஒரு இணைய Blog ம் உண்டு. இந்த இரண்டு பிளாட்போரங்களிலும் யதார்த்தன் தனக்கு திருமணமாகிவிட்டது என்பதை இன்னமும் அறிவிக்கவில்லை. அதைக்கூட Privacy காரணங்களுக்காக நாம் ஏற்கலாம் என்று வைத்துக் கொண்டாலும்......

தொட்டுத் தாலி கட்டின மனைவியோடு யதார்த்தன் இப்போது கூடி வாழவில்லை. என் ஈழப்பயணத்தில் விதை குழும உறுப்பினர்களை அவர்களது குகையான புலிகளின் புலனாய்வுத் தளபதியின் ஊரான அரியாலையில் ஓரிரவு சந்தித்து மதுவருந்தினேன். சாராயம் குடுத்து பூராயம் கேட்பது பொட்டம்மானை விடப்பெரிய புலிகளின் ஒற்றரான அன்ரன் பாலசிங்கத்தின் திறமுறை.

அன்றைய இரவுச் சந்திப்பில் கலந்துகொண்ட ஒரேயொரு பெண் கிரிசாந்தின் மனைவி பிருந்தா. "எனக்கு முன்னாலிருந்து புகைக்காதீர்கள்" என்று பிருந்தா எங்களைக் கலைத்து விட்டார். நானும் யதார்த்தனும் சற்றுத் தள்ளிப்போய்ப் புகைத்தோம். யாழ் நகரில் அதிகம் குறைத்து மதிப்பிடப்பட்ட அழகிய ஊர் பொட்டம்மானின் ஊர். அரியாலை.  குடாநாட்டுக்குள்ளேயே இருக்கும் மினி குடாநாடு அரியாலை. கடற்காற்று வீசும் அழகிய இரவில் யதார்த்தனிடம் இன்றிரவு எங்கு நீங்கள் போகவேண்டும் என்று கேட்டேன். பிறந்த ஊரான சரசாலை என்றார். மனைவியின் ஊரிலில்லையா என்று கேட்டேன்.இல்லையென்றார். மனைவி தாயோடு வடமராட்சியில் வாழ்வதாகவும்  தனக்கு கிளிநொச்சியில் வேலையென்றும் தான் சரசாலையில் தான் வரும்போது தங்குவதாகவும் சொன்னார். தொட்டுத் தாலிகட்டின மனைவியோடு வாழ்வதில்லையா என்று கேட்க எனக்கு வாய் வந்தது. அரியாலைக் கடற்காற்று உனக்கு ஏன் தேவையில்லாத வேலை என்று எச்சரித்தது.

இக்கட்டுரையாசிரியர் விதை குழுமத்தின் குகைக்குள் சென்று றெக்கி எடுத்த முன்பனிக்கால இரவு

யதார்த்தன் கடைசியாக வேலை செய்த உள்ளூர் அரசுசாரா  அமைப்பிலிருந்து(NGO) ஒரு பாலியல்சார் குற்றத்திற்காக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்கிற தகவல் இறுதியாக எனக்கு கிடைத்தது. தகவலின் உண்மைத் தன்மையை/நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது பத்திரிகையாளரின் கடமை. இந்த தகவலின் மூலத்தை தேடிப்போனால் அது சுவிஸ் வாழ் எழுத்தாளர் சயந்தனதும் அவரது யாழ்ப்பாணத் துணைவியான வைதேகி நரேந்திரனிடமிருந்தும் இருந்தே வருகிறது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

                          வைதேகி 



சயந்தன் புதிதாக ஒரு அச்சு இலக்கிய இதழைத் தொடங்கியபோது யதார்த்தனை சம்பளம் கொடுத்து அதன் ஆசிரியராக்கினார்.  கொடுத்த சம்பளத்திற்கு ஏற்றதாக யதார்த்தன் வேலை செய்வதில்லை என்ற அடிப்படையில் அவரை வேலையை விட்டு  விலக்கினார். அப்போதுதான் யதார்த்தன் திருமணஞ் செய்தார். மாப்பிள்ளை வேலையில்லாமல் இருக்கிறான் என்ற இரக்கத்தில் ஈழத்து NGO/INGO க்களில் வேலைசெய்யும் சயந்தனின் துணைவியான வைதேகி நரேந்திரனே யதார்த்தனுக்கு உள்ளூர் NGO வில் வேலை கிடைக்க உதவினார். இப்போது அதே வைதேகியே,  யதார்த்தன் அந்நிறுவனத்திலிருந்து பாலியல் முறைகேடு சம்பந்தமாக வேலைநீக்கம் செய்யப்பட்ட தகவலின் மூலமாக இருக்கிறார்.

தொடர்பான கட்டுரைகள்

1. மயூரன் கேஸ்: ஈழப்பெண்டிர் புரட்சி

2. சேரனும் ஜெயன் தேவாவும்: இரு போலிப் பொய்மான்களின் கதை

Comments

  1. உங்களை நம்பி சபைக்கு அழைத்தவர்ககுக்கு செய்யும் துரோகமாக இது உங்களுக்கு தெரியவில்லையா?
    யதார்த்தன் ஒரு womanizer ஆக இருந்து விட்டு போகட்டும் கிரிசாந்தன் தன்னை சார்ந்தவர்களை காப்பாற்ற முற்படுபவராக இருக்கட்டும் இதில் உங்களுடைய வகிபாகம் என்ன? முதலில் உங்களின் வாழ்க்கையை காப்பாற்றி கொள்ள அருகதை அற்றவர் நீங்கள் உங்கள் மனைவி மறு திருமண ம் செய்து மகளை கூட உங்களை நெருங்க விட வில்லை என்றால் அவற்றுக்கு உங்களால் காரணம் கூற முடியுமா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

 யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், விரிவுரையாளர்களின்   கல்வி அறிவு மோசடிகள்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்