விஜிதரன்: பொய்யாய் பழங்கதையாய்ப் போன கடைசி யாழ்ப்பாணப் பகல்கனவு
35 ஆண்டுகளுக்குமுதல் விஜிதரன் என்ற 21 வயது யாழ் பல்கலைக்கழக மாணவனை "கேணல்" கிட்டுவின் உத்தரவில் புலிகள் இரவொன்றில் கடத்திச்சென்று அடித்தே கொன்றார். புலிகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இவரின் சடலம் இன்றுவரை மீட்கப்படவில்லை. இந்த 35 ஆண்டுகளும் யாழ்ப்பாணம் சனநாயக விழுமியங்களை மறந்த 35 ஆண்டுகளும் கூட. விஜிதரன் கடத்தப்பட்ட நவம்பர் 4 தமிழுக்கு கூதிர் காலம். ஈழத்தமிழ் சனநாயகத்தின் கூதிர் காலம் கூட. ஈழப்போராட்ட வரலாற்றில் கடைசியாக பல்கலைக்கழக மாணவர்களும் பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் இணைந்து நம்மிடமிருந்தே முகிழ்த்து வந்துகொண்டிருந்த புலிகளின் பாசிசத்தை எதிர்த்துப் போராடிய மகத்தான போராட்டம் அது. முன்கதைச்சுருக்கம் 1985/6 முன்பனிக்காலம் (டிச 14 - பெப் 13) யாழ்ப்பாண வரலாற்றில் முக்கியமான காலம். ஸ்ரீலங்கா ராணுவம் நகருக்குள் வரமுடியாதவாறு ஈழப்போராளிகள் யாழ் நகரை காத்த முதல் முன்பனிக்காலம். அந்த சந்தோசம் அந்த இளவேனில் காலத்தில் புலிகள் சகபோராளிக்குழுவான ரெலோவை அழித்தபோது பாதிக்கனவில் மறைந்தது. ராங்கில் ஈடுபட்டார்கள் என்ற எவ்வித...