பட்டக்காடு சமர்க்கள றிப்போட்



By நட்சத்திரன் செவ்விந்தியன்

சிட்னியில் இவ்வாரம் ஐவர் கலந்து கொண்ட பட்டக்காடு விமர்சனம் ஒரு தரமான சம்பவம். Post War ஈழ நாவல்கள் பற்றிய வரலாற்று மைல் கல் 

  விவாதத்தை  தொடங்கிய ரஞ்சகுமார் தன்னுடைய வழமையான முதுகுசொறியும் நழுவலான "வாழைப்பழ விமர்சனத்தை" வைக்கிறார். பட்டக்காட்டை மகத்தான தமிழ் நாவலான J.D. குருஸின் ஆழிசூழ் உலகோடு ஒப்பிட்டுகிறார்.😁 (ஆழி சூழ் உலகு அளவுக்கு தரமானது இல்லை என்று சொன்னாலும்) 

 தொடர்ந்த கிசோக்கர் பட்டக்காடு மீது மிக நேர்மையாகவும் துணிவாகவும் முறையான மிகக்கடுமையான விமர்சனத்தை வைக்கிறார். 

 "இது ஒரு இலக்கியப் பிரதியோ நாவலோ அல்ல, அதற்கான எத்தனம். இதுவொரு 400 பக்க பேஸ்புக் பதிவு. அவ்வளவுதான். இது வெறும் மூன்றாம்தர C வாசகர்களுக்கான நாவல். அமல்ராஜுடைய மொழி மிகப்பெரிய பிரச்சினை! போதாமை! மொழி விஷயத்தில் இவர் ரொம்ப ரொம்பப் படான். பாத்திரங்கள் தங்களுக்கு நேர்மையில்லாமல் அலைந்துகொண்டிருக்கிறது. இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி மன்னாருக்குரிய மொழியே இல்லை."              - கிசோக்கர் 

                கிசோக்கர் Steals the Show  

சிட்னியில் இது அழகிய மழைக்கால கோடை பரமட்டா பூங்கா மரகதம். மன்னாருக்கென்றே இருக்கிற Authentic தூசணங்களை அது கேட்டது. பரமட்டா ஆறுக்கு தெரியாத தூஷணங்களா? பச்சோந்திகளா? மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலுங்காட்டும் விலாங்கு மீன்தான் பரமட்டா ஆற்றின் சிங்கம். பரமட்டா Rugby League இன் சின்னமும் அதுதான். 

                        விலாங்கு மீன் 


 அந்த விலாங்கு மீனுக்கே பச்சோந்தி ரஞ்சகுமார் படங்காட்ட முயன்றிருக்கிறார். அவர் ஒரு Megalomaniac and Narcissist. கிசோக்கர் பட்டக்காட்டை பிரித்து மேயத் தொடங்கியபோது இந்த பட்டக்காடு Show தனது என்று நம்பிவந்த ரஞ்சகுமாருக்கு தன்னுடைய மகன் வயதான K.S தன்னுடைய Show வை திருடுவதாக நினைத்து ரென்சனாகிவிட்டார். ( வீடியோவை கவனியுங்கள். கிசோக்கரின் உரையை எத்தனை தடவை அவர் இடைமறித்து நாட்டாமை செய்கிறார். ரஞ்சகுமாரின் உடல் மொழியை கவனியுங்கள். ஒரு தடவை கிசோகர் பேசுவதை குறுக்கிட்டு நிறுத்த அவரது கையை சிலகணங்கள் பிடித்து வைத்து குறுக்கிடுகிறார். 

                  உடல்மொழி வன்முறை 


நிலமை கட்டுக்கு மீறிப்போவதை உணர்ந்த நாட்டாமை ஒவ்வொரு முறை குறுக்கிடும்போதும் தனது வண்ணங்களை மாற்றி பச்சோந்தியாகிறார். கிசோக்கரின் வண்ணங்களை சூடி

 " நான் சொல்லவந்த point" 

என்று கிசோக்கரை காப்பி அடிக்க தொடங்குகிறார். கிசோக்கர் நாவலின் கூறுகள் Cliche ஆக இருக்கிறது என்றதும் ரஞ்சகுமார் குறுக்கிட்டு 

“ஒரு கிளிஷேயான காதல் கதை!” 

 என்று Cut/Copy/Paste செய்கிறார்.

 பிரிகேடியர் கட்டையன்                     (கிசோக்கர் ஸ்ரனிஸ்லஸ், மன்னார்) உடைய படையின் Fire Power and Morale are so high. அமல்ராஜை உள்ளே வரவிட்டு Box கட்டி அடிக்கிறார்.

"உண்மையான கரையான் கடலுக்கு                     மட்டுந்தான் பயப்படுவான்"                   பிரிகேடியர் கிசோக்கர்


முன்னதாக பிரிகேடியர் கிசோக்கர் 

 " ஷோபா சக்தியின் இச்சாவே ஒரு திணிக்கப்பட்ட புத்தகம் தான்" 

 என்ற ஆட்டிலறியை அடித்திருந்தார். ஆடிப்போன ரஞ்சகுமாருக்கு வேறு வழியில்லை. இதுவரையும் தன் "வாழைப்பழ விமர்சன" மரபால் சுய தணிக்கை செய்து வைத்திருந்த Missile ஐ எடுத்து பின்வருமாறு ஏவுகிறார்.

 'சயந்தனின் ஆதிரை என்னால் வாசிக்க முடியவில்லை. அது ஒரு தயாரிப்பு"

 அத்தோடு

 “பட்டக்காடு வாசிக்க வேண்டிய புத்தகமல்ல, ஆனால் வாசிக்கக்கூடிய புத்தகம்."

 என்கிறார். இங்கு Collateral damage ஆவது சயந்தனின் ஆதிரை. அதாவது ரஞ்சகுமார் சொல்ல வருவது

 "ஆதிரை வாசிக்க வேண்டாத வாசிக்க முடியாத புத்தகம்" 

என்பதைத்தான். கிசோக்கர் பட்டக்காட்டில் மன்னாருக்குரிய மொழியே இல்லை என்றதும் ரஞ்சகுமார்

 ” ஏன் இலங்கைத் தமிழ்கூட இல்லை.” 

என்று வழிமொழிகிறார். அமல்ராஜ் பிரான்சிஸ்க்கு ரஞ்சகுமாரின் உடல் மொழியின் பகுதிகளான நக்கல் நையாண்டி சிரிப்புக்கள் ரொம்ப காயப்படுத்தியிருக்கிறது. இந்த நாடகத்தில் அது ஏன் அரங்கேறுகிறது என்பது அமல்ராஜுக்கோ கிசோக்கருக்கோ தெய்வீகனுக்கோ புரிந்திருக்க வாய்ப்பில்லை. இதற்கு காரணம் நாட்டாமை ரஞ்சகுமாரின் Megalomania and Narcissistic complex. கிசோக்கர் தன்னுடைய Show வை திருடுவதை சகிக்க முடியாத நாட்டாமை தன் அதிகாரத்தை நிலைநிறுத்த பயன்படுத்தும் செம்பு தான் அந்த நக்கல் நையாண்டி சிரிப்புக்கள்.

    சிரிப்பை செம்பு ஆக்கும் ரஞ்சகுமார் 


Post war ஈழ நாவல்களான பொக்ஸ், இச்சா, ஆதிரை முதலியன  கண்மூடித்தனமாக படிக்கப்படாமல் கொண்டாடப்பட்டன. யார் பூனைக்கு மணிகட்டுவது என்ற சிக்கல் இருந்தது. 2020ல் நட்சத்திரன் செவ்விந்தியன் ஆகிய அடியேன் ஷோபாசக்தியின் பொக்ஸ் நாவலுக்கு எழுதிய விமர்சனம் இதனை முடிவுக்கு கொண்டுவந்தது. அதற்கு முதலே பிரிகேடியர் கிஷோக்கர் இச்சா நாவலை ஆண்டின் தொடக்கத்தில் அம்பலப்படுத்தியிருந்தார்

ஆனால் கிசோக்கருக்கு இரண்டு முகம். உரையாடல்களில் நேர்மையாக விமர்சனம் செய்யும் அவர் முகநூலில் பச்சோந்தியாக மாறுவார். என்னுடைய அகழ் இச்சா விமர்சனத்தை அவர் கிரகித்து படித்திருக்கிறார். ஆனால் முகநூலில் தன் Ratings ஐத் தக்கவைக்க என்னை ஒரு மனநோயாளி என்று தாக்கி ஷோபாசக்தியுடனான தன் வியாபார நலனை பாதுகாத்தார். 

" ஷோபா சக்தியின் இச்சாவே ஒரு திணிக்கப்பட்ட புத்தகம் தான்" என்று சொன்ன கிசோக்கர் என் அகழ் இதழ் இச்சா விமர்சனத்துக்கு போட்ட பின்னூட்டம் 

முன்னதாக கிசோக்கரை நான் சிட்னியில்  சந்திக்கப் போகிறேன் என்று அவரின் கடைசித்தம்பி Kapil  Stanislas இடம் சொன்னபோது கபில் என்னை எச்சரித்தார். தன் அண்ணன் "தீவிர பிரபாகரன் விசுவாசி. உங்களுக்கு செற்றாகாது" என்று சொன்னார். 

கபில் தான் 4 ஆண் சகோதரர் கொண்ட குடும்பத்தில் புனைவு படைப்பாற்றல் கொண்டவன். அவன் என் கர்னலின் காமத்தை படித்து பாராட்டி எனக்கு முகநூலில் கடிதம் அனுப்பியிருந்தான். 

குறித்த நாளில் கிசோக்கருக்கும் எனக்குமான சந்திப்பு இனிதே நடந்தது.  அன்று என் விருந்தாளி கிசோக்கர். பரமட்டா Commercial Hotel ல் தாமதமாகத்தான் கிசோக்கர் வந்தான். ஏற்கெனவே செம்மது அருந்தி வந்தான். பல இடங்கள் அலைந்து கடைசியில் பரமட்டா நீதி மன்றம் முன்னுள்ள Pub ல் செற்றானோம். அவன் வாழ்க்கை வரலாறு ஒக்கம சொன்னான். செம்மது, பியர் எல்லாம் அருந்தினோம். கிசோக்கருக்கு ரொம்ப ஓவர். கஞ்சா அடிப்போம் என்று தன் தங்குமிடத்துக்கு கூட்டிச்சென்றான். 

நான் அவன் வீடடில் செற்ரியில் இருந்தேன். அறைக்குள் போனவன் திரும்பி வரவில்லை. நான் செற்றியில் தூங்கிவிட்டேன். காலையில் எழும்பிய நான் அவன் வீட்டு நண்பர் உதவியுடன் கதவை தட்டினேன். எழுநது வந்து 

"நீங்கள் இங்கேயா இருக்கிறீர்கள்" என்றான். பிறகு வெளியே போனோம். எனக்கு ஒரு கஞ்சா சுற்றித்த்து தானும் ஒன்று சுற்றிப்புகைத்தான்.  அவன் சத்தியெடுத்தான். 

என் வாழ்வில் இரண்டாம் முறையாக அன்று கஞ்சா புகைத்தேன். முதல் முறையாக புகைத்தபோது நான் சத்தி எடுத்திருந்தேன். இந்த இரண்டாம் முறை எனக்கு சத்தியமா ஒரு மயிரும் தெரியவில்லை. குமட்டிக்கொண்டிருந்த கிசோக்கரிடம் அவரின் சப்ளையர் யாரென்று நான் கேட்கவில்லை. 

தொடர்பான கட்டுரைகள்

1. இலக்கிய ரவுடி சாரு நிவேதிதா

2. "விருந்தாளிக்கு பிறந்தவன்" : சாரு நிவேதிதாவின் பாரிஸ் பயணம்


Comments

Popular posts from this blog

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

 யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், விரிவுரையாளர்களின்   கல்வி அறிவு மோசடிகள்

அவந்திகா: ஓர் அவல மனைவியின் வாக்குமூலம்